<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-17041678</id><updated>2012-01-27T05:14:01.403-08:00</updated><title type='text'>நிர்வாணம்</title><subtitle type='html'>இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>72</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-595860514606402537</id><published>2012-01-13T07:07:00.000-08:00</published><updated>2012-01-13T07:11:12.435-08:00</updated><title type='text'>26.12.2004 - ஆழிப்பேரலை</title><content type='html'>(5.5.2006 அன்று நண்பன் கல்வெட்டு பிரேம்குமாருக்காக எழுதியது)&lt;br /&gt;&lt;br /&gt;சாவுக்குப் பயப்படாமல் &lt;br /&gt;வாழ்ந்தவனின் வாழ்க்கையைச்&lt;br /&gt;சாகடித்துப் போன&lt;br /&gt;இயற்கையின் படுகொலை!&lt;br /&gt;&lt;br /&gt;சாவுக்குப் பயந்தே&lt;br /&gt;வாழ்ந்தவனின் வாழ்க்கையை&lt;br /&gt;வாழவைத்துப் போன&lt;br /&gt;இயற்கையின் தடுப்பு மருந்து!&lt;br /&gt;&lt;br /&gt;சாவுக்கும் வேலையில்லை&lt;br /&gt;கலியுலகான் வாழ்க்கையைச்&lt;br /&gt;சந்தோஷங்களில் புதைத்துப்போன&lt;br /&gt;இயற்கையின் எதார்த்தம்!&lt;br /&gt;&lt;br /&gt;சாவுக்குக் காலமில்லை&lt;br /&gt;கவலையற்றவன் வாழ்க்கையை&lt;br /&gt;சற்றே நிறுத்தி நகரவைத்த&lt;br /&gt;இயற்கையின் சிறுவிபத்து!&lt;br /&gt;&lt;br /&gt;சாவுக்குத் தேதிகுறித்து&lt;br /&gt;முடிவறியா வாழ்க்கையைக்&lt;br /&gt;கூட்டிக் கழித்துக் கட்டம் போட்ட&lt;br /&gt;இயற்கையின் இருபத்தியாறு!&lt;br /&gt;&lt;br /&gt;சாவுக்குத் தயாராகும்&lt;br /&gt;மூன்றாம் கோளின் வாழ்க்கையை&lt;br /&gt;அடியில் ஆட்டிவைத்த&lt;br /&gt;இயற்கையின் அறுவைச்சிகிச்சை!&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-595860514606402537?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/595860514606402537/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=595860514606402537' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/595860514606402537'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/595860514606402537'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2012/01/26122004.html' title='26.12.2004 - ஆழிப்பேரலை'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-1614863271871107828</id><published>2011-12-21T07:24:00.000-08:00</published><updated>2011-12-21T07:27:05.276-08:00</updated><title type='text'>அச்ச் சச்ச்சோ</title><content type='html'>சற்றே&lt;br /&gt;நின்று துடிக்கும்&lt;br /&gt;இதய‌ம்&lt;br /&gt;தும்மலுக்கும்&lt;br /&gt;ஆம்புலன்ஸ் சத்தத்திற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;-‍ ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-1614863271871107828?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/1614863271871107828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=1614863271871107828' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1614863271871107828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1614863271871107828'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2011/12/blog-post_1328.html' title='அச்ச் சச்ச்சோ'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-3009007477946187790</id><published>2011-12-21T07:16:00.000-08:00</published><updated>2011-12-21T07:17:09.191-08:00</updated><title type='text'>அடக்கவிலை</title><content type='html'>திருச்சியில் இருந்து&lt;br /&gt;விக்கிரவாண்டி வருவதற்குள்&lt;br /&gt;இரண்டு ரூபாய்&lt;br /&gt;விலையேறி விட்டது&lt;br /&gt;மூத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;‍- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-3009007477946187790?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/3009007477946187790/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=3009007477946187790' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/3009007477946187790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/3009007477946187790'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2011/12/blog-post_21.html' title='அடக்கவிலை'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-553101314133306021</id><published>2011-12-07T08:51:00.001-08:00</published><updated>2011-12-07T08:51:53.494-08:00</updated><title type='text'>க'பாலம்'</title><content type='html'>மேலெல்லாம் ஓடும்&lt;br /&gt;விழித்தே உறங்கும்&lt;br /&gt;நீரிலே மிதக்கும்&lt;br /&gt;சமிக்ஞை செய்யும்&lt;br /&gt;கவசங் கேட்கும்&lt;br /&gt;உயிர்ப் பிடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;பக்க வாதஞ் செய்யும்&lt;br /&gt;கடப்பதற்(கு) கப்பங் கேட்கும்&lt;br /&gt;வேகம் தடை செய்யும்&lt;br /&gt;அடைத்து நிறுத்தும்&lt;br /&gt;ஓடினால் பள்ளமாகும்&lt;br /&gt;ஓடாவிட்டால் குள்ளமாகும்&lt;br /&gt;&lt;br /&gt;மூலையில் முடங்கும்&lt;br /&gt;மூளையன்ன நம்மூர்ச் சாலை!&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-553101314133306021?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/553101314133306021/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=553101314133306021' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/553101314133306021'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/553101314133306021'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2011/12/blog-post_07.html' title='க&apos;பாலம்&apos;'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-8365312246639308811</id><published>2011-12-07T08:36:00.000-08:00</published><updated>2011-12-07T08:37:59.880-08:00</updated><title type='text'>சுவர்க்கடிகாரம்</title><content type='html'>நீ&lt;br /&gt;பிறந்தகாலமே&lt;br /&gt;எப்போதும்&lt;br /&gt;நிகழ்காலமாய்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-8365312246639308811?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/8365312246639308811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=8365312246639308811' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/8365312246639308811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/8365312246639308811'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2011/12/blog-post.html' title='சுவர்க்கடிகாரம்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-3325535766990208236</id><published>2011-10-23T04:28:00.001-07:00</published><updated>2011-10-29T22:28:17.601-07:00</updated><title type='text'>மனுநீதி</title><content type='html'>யாரும் &lt;br /&gt;ஏற்றுக் கொள்வதில்லை யென &lt;br /&gt;யாருமே &lt;br /&gt;ஏற்றுக் கொள்ள‌வில்லை யென்&lt;br /&gt;கைசேர்ந்த‌ நாண‌ய‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-3325535766990208236?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/3325535766990208236/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=3325535766990208236' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/3325535766990208236'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/3325535766990208236'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2011/10/blog-post_23.html' title='மனுநீதி'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-3664504745419085919</id><published>2011-10-14T08:38:00.001-07:00</published><updated>2011-10-14T09:00:11.812-07:00</updated><title type='text'>அக்காவின் அண்ணன்</title><content type='html'>&lt;strong&gt;புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை&lt;br /&gt;அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.&lt;br /&gt;- வள்ளுவம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பிறப்பும் உலகின் ஏதோவொரு காரியத்தை நிறைவேற்றுவதற்காகவே நிகழ்கிறது.&lt;br /&gt;- அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் (அக்னிச் சிறகுகள்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(பெண்ணுக்குப் பெயர் வைக்காத பிடிவாதத்துடன் இன்னுமொரு கதை)&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறை வரவேற்று முடித்திருந்தது ஞாயிற்றுக் கிழமை. வீட்டிற்குப் போன் செய்தேன். பாட்டி எடுத்தாள்.&lt;br /&gt;"பிரண்டோட அக்கா கல்யாணம் முடிஞ்சி நேத்து ராத்திரியே மெட்ராஸ்ல இருந்து கெளம்பியாச்சு. இப்ப திண்டிவனத்துல இருக்கேன். விழுப்புரம் பெரம்பலூர் திருச்சின்னு பஸ் மாறி மாறி வரலாம்னு இருக்கேன். அம்மாட்ட சொல்லிடாதெ. சாயந்த‌ரம் வந்துடுவேன். இன்னக்கி என்ன மட்டனா சிக்கனா?"&lt;br /&gt;"சேகரு இன்னும் ஒரு வாரத்துக்குக் கவுச்செ பொலங்குறது இல்ல. ரோமாபுரி பாப்பரசர் தவறிப் போய்ட்டாரு. ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கிறதா நம்ம ஊரு மக்கள் எல்லாம் முடிவு பண்ணி இருக்கோம்"&lt;br /&gt;கலிலியோவுக்கும் சிலுவைப்போர்க் குற்றங்களுக்கும் உலக மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்ட போப் இரண்டாம் அருள் சின்னப்பர் (ஜான் பால் II) ஞாபக‌த்தில் வந்து போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலுக்குப் போய் அவருக்காக வேண்டிக் கொள்ளும்படி அழப்போகும் குரலில் பாட்டி சொன்னாள். உலகில் அதிகப்படியான மக்களின் தலைவனின் மரணத்தை, மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள கிறித்தவ தேவாலயங்கள் தேடி முதல் முறையாக திண்டிவனத்தினூடே நடக்க ஆரம்பித்தேன். ஞாயிறு காலை என்பதால் தேவாலயங்கள் பற்றி விசாரிக்கத் தேவையிருக்கவில்லை. சிவப்பு அல்லது கருப்பு அட்டைப் புத்தகத்தை வைத்திருப்பவரையோ, முக்காடு இடுவதற்கு வசதியாக சேலை தலைப்பையோ அல்லது துப்பட்டாவையோ வைத்திருக்கும் பெண்களையோ பின் தொடர்ந்தால் எளிதாக தேவாலயம் செல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட காத்திருப்பு மற்றும் சில நிராகரிப்புகளுக்குப் பின், கருப்பு அட்டைப் பைக்குள் விவிலியத்தை வைத்து, ஜிப்பிட்டு, தேவதைகளுக்கான வெள்ளைத் துப்பட்டாவுடன் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கும் என் வயதொத்த மஞ்சள் சுடிதாரைப் பின்தொடர்ந்தேன். வட்டாட்சியர் அலுவலகம் தாண்டி ஒரு தேவாலயத்துள் நுழைந்தாள். அது கத்தோலிக்கத் தேவாலயம் இல்லை. தேவதையின் முகங்கூட பார்க்காத ஏமாற்றத்துடன் கத்தோலிக்கத் தேவாலயம் தேட ஆரம்பித்தேன். பழக்கமில்லாத‌ நகரம் என்பதாலும், ஏற்கனவே திருப்பலி தொடங்கும் நேரமாகிவிட்டதாலும், ஒரு கடையில் விசாரித்தேன். அவர் சொன்ன வீதியில், பிறைவடிவ‌ ஓட்டுவீட்டுப் பாணியில் அக்ரகாரம் போல வீடுகள். இருபக்க வீடுகளையும் பார்த்துக் கொண்டே மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். அத்தெருவில் தொடர்திருட்டுகள் நடந்திருந்தால், கண்டிப்பாக என்னைச் சந்தேகத்தில் விசாரித்திருப்பார்கள். அப்படியொரு சந்தேகம் யாருக்காவது வந்திருப்பின் அதை உறுதிப்படுத்தும் வகையில், ஒருவீட்டின் வாசலில் நின்று ஆச்சரியமாக திண்ணையில் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் ஒரு புகைப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;01.02.1985 - அன்னை ஸ்டுடியோ - வேளாங்கன்னி. மேரிமாதா பின்னணியில், இடது கன்னத்திலும் நெற்றியிலும் விரல்நுனியளவு பொட்டுடன், வெள்ளி அரையான்கயிறு, கட்டம்போட்ட போர்வை மேல் ஒற்றை ஜட்டியுடன் குப்புறப் படுத்துக்கொண்டு, சலங்கை சத்தங்களுக்கு எல்லாம் திரும்பாமல், தாத்தா கூப்பிட்ட 'சேகரு' என்ற வார்த்தைக்குக் கேமராவைக் கருப்பு வெள்ளையில் பார்த்த அந்தத் தருணம்தான், எனது முதல் புகைப்படம். எனக்கு முதல் தலைமுடி எடுக்க வேண்டுதல் இருப்பதாக வேளாங்கன்னி போய், மொட்டை அடிப்பதற்கு முன் எடுக்கப்பட்டது. எங்களுக்குச் சம்மந்தமே இல்லாத திண்டிவனத்தில் பார்த்ததில்தான் ஆச்சரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;டெலிபோன் பூத் தேடி நடந்தேன். வழியில் ஒரு கத்தோலிக்கத் தேவாலயத்தில், தன்னைத் துப்பாக்கியால் சுட்டவனை நேரில் சென்று மன்னித்த போப்பைப் பற்றி பாதிரியார் சொல்லிக் கொண்டிருந்தார். அதையும் கடந்துபோய் ஒரு டெலிபோன் பூத் கண்டுபிடித்தேன். வீட்டில் யாருமே போனை எடுக்கவில்லை. அவர்கள் தேவாலயம் சென்றிருக்கலாம். இரண்டு மூன்று முறை டீ குடித்துவிட்டு, அக்கத்தோலிக்கத் தேவாலயத்தில் இருந்து மக்கள் வெளிவந்தபின் மீண்டும் போன் செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாவது முறை அம்மா எடுத்தாள். திண்டிவனத்தில் என்னைப் பார்த்ததை அதிசயமாக‌ச் சொன்னேன். பதிலே இல்லை. அம்மா எதையோ மெதுவாக எண்ணுவது போல் கேட்டது.&lt;br /&gt;"ஒன்னு... ரெண்டு... ஆறு சின்ன‌ அண்ணி... ஏழு ஒரட்டாங்கையி சிருக்கி... எட்டு பெரியைய்யா... பத்து போடியக்கா... அது போடியக்கா வீடா இருக்கும் சேகரு"&lt;br /&gt;"யாரு?"&lt;br /&gt;"என்னடா மறந்து போயிட்டியா? சின்ன வயசுல அந்த அக்கா சேலையப் புடிச்சுக்கிட்டே சுத்துவே. இப்ப யாபகம் இல்லயா? அந்தப் போட்டோவுல பத்து பிரிண்டுல ஒன்னே, தாத்தா போடியக்காவுக்கும் கொடுத்தாரு. ஓன்மேல அவ்வளவு பாசமா இருந்துச்சு"&lt;br /&gt;தாத்தாவைப் பற்றி பேசும்போது தன் இருப்பைக் காட்டிக்கொள்ள‌, பேசுவது போடியக்காவா என்று பாட்டி அம்மாவிடம் கேட்டது எனக்கும் கேட்டது. கதையெல்லாம் சொல்லாமல் போடியக்கா யாரென்று முதலில் சொல்லச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போடியக்கா. என் அம்மாவின் வயதிருக்கும். நான் மூன்றுமாதக் கைக்குழந்தையாக இருந்தபோது பக்கத்து வீடு. திருமணமாகி ஈராண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் என்மேல் மிகவும் பிரியமாக இருந்திருக்கிறாள். அவளின் அண்ணன் ஒருவரின் பெயர் சேகர் என்பதால் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பாளாம். நடக்க ஆரம்பித்த காலத்தில், தொடர்ந்து 40 நாட்கள் மருத்துவமனை போய் ஊசி போட வேண்டிய நிலை வந்தபோது, ஆரம்பத்தில் அம்மாவுடன் போகாமல் அடம்பிடித்திருக்கிறேன். போடியக்கா கூட்டிப்போக ஆரம்பித்தவுடன், நானே தயாராகி அவள் வீட்டு வாசலில் முன்கூட்டியே போய் நின்று, அழுகை இல்லாமல் ஊசி போட்டு வந்திருக்கிறேன். திருமதி ஒரு வெகுமதி திரைப்படம் பார்த்ததில் இருந்து, 'அக்கா அக்கா நீ அக்கா இல்ல, மாமா மாமா நீ மாமா இல்ல' என்று போடியக்காவையும் அவள் கணவரையும் பார்க்கும்போதெல்லாம் பாடிக்கொண்டு திரிந்திருக்கிறேன். எனது முதல் புகைப்படத்தின் பத்துப் பிரதிகளில் ஒன்றை என் தாத்தாவே தேடிப்போய் கொடுத்த, இரத்த சம்மந்தமில்லாத உறவு என்ற பெருமையைத் தட்டிச் சென்றவள் போடியக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;"அது என்னம்மா இப்புடி ஒரு பேரு? போடியக்கா"&lt;br /&gt;"அது அவுங்க ஊரு பேரு. உண்மையான பேரு டக்குன்னு யாபகத்துக்கு வல்ல‌. ஊரெ எதித்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க போல, அவங்க வீட்டுக்குச் சொந்தக்காரங்க யாருமே வந்ததில்ல. அதுனாலயே அந்த அக்கா நம்ம வீட்டு மேல ரொம்ப பாசமா இருக்கும்"&lt;br /&gt;அவள் வீட்டிற்குச் சென்று அவளைச் சந்திக்கப் போவதாகச் சொன்னேன். புதுக்கோட்டை நகரைவிட்டு வந்தபின் தொடர்பற்று போன போடியக்காவைப் பற்றி தெரிந்துகொள்ள அம்மாவும் ஆர்வமானாள். நான்கு முறைகள் வெறுமனே வைத்துவிட்டாலும், கடைசியில் தொடர்ந்து இரண்டு மணிநேரம் பேசியதால், ஒரு கால் இல்லாத டெலிபோன் பூத் உரிமையாளரும் மகிழ்ச்சியானார். ஒருகை உயர்த்தி உலக மக்களை ஆசீர்வதிக்கும் போப்பின் படம் வழியெங்கும் சுவர்களை ஆக்கிரமித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் ஒரேயொரு அழகுக் குழந்தைதான் உள்ளது. அது ஒவ்வொரு தாயிடம் உள்ளது. அதுமாதிரி திண்டிவனத்திலும் யாரோ ஒருவர் வீட்டில் என்னை மாதிரியே ஓர் அழகுக் குழந்தை இருக்கலாம். குழந்தை இல்லாத ஒருத்தி, பக்கத்துவீட்டுக் குழந்தைகள் மேல் பாசமாக இருப்பதெல்லாம் இயல்புதான். அண்ணன்மேல் மரியாதையுள்ள ஒருத்தி, அதே பெயர் உடையவர்களை வயது வித்தியாசம் இல்லாமல் அண்ணன் என்று சொல்வதில் ஆச்சரியம் இல்லைதான். ஆனாலும் அவ்வீட்டில் கண்டிப்பாக போடியக்கா இருக்க வேண்டும் என்று உள்மனது ஏங்கியது. சிறுவயதில் 40 நாட்கள் ஊசி போட்டுக் கொண்டிருந்த நாட்களில், அவள் வீட்டு வாசலில் நான் நின்று கொண்டிருந்தது போல், அவ்வீதியில் அவ்வீட்டு வாசலில், முன்னர் நின்ற அதே இடத்தில் நின்றேன். சந்தேகமே இல்லை, எனக்கு முன்னால் ஆணியில் தொங்கிக் கொண்டிருப்பது என் தசாவதாரம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"யார் சார் வேணும்?" வீட்டில் இருந்து வெளிவந்து கொண்டே கேட்டது என் வயதுடைய‌ ஒரு பச்சை நைட்டி. என்ன சொல்வதென்று தெரியாமல் நான் நின்று கொண்டிருந்த வேளையில், என் அம்மா வயதுடைய இன்னொருத்தியும் வந்தாள்.&lt;br /&gt;"யாருடி?"&lt;br /&gt;"தெரியல அத்தெ"&lt;br /&gt;"என்ன தம்பி வேணும்?"&lt;br /&gt;"நா... நான்... சே...கர்... ஞானசேகர்".&lt;br /&gt;&lt;br /&gt;என்னையும் என் பார்வையின் திசையில் இருக்கும் புகைப்படத்தையும் பார்த்துவிட்டு, ஏதோ புரிந்து கொண்டவளாய், ஏதோ கண்டெடுத்தவளாய், "சேகர் அண்ணே..." எனக் கத்திவிட்டாள். என்னை நோக்கி ஒடிவந்தவள், அனிச்சையாய் முதலில் என்னைத் தூக்கப் போவது போல் வந்து, நான் வளர்ந்து போனதைப் புரிந்தவளாய், என் கன்னங்கள் இரண்டையும் இரு கைகளால் கிள்ளி அவ‌ள் நெற்றிப் பொட்டில் நெட்டி முறித்துவிட்டு, மீண்டும் கிள்ளி, விரல்களை வாயில் வைத்து முத்தமிட்டுக் கொண்டாள். எனக்கு வயது இருபதா அல்லது இரண்டா என்று அந்நொடிகளில் ஞாபகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டின் உள்ளே கூட்டிப்போய் மின்விசிறி போட்டு பாயில் அமரவைத்து பொருட்களை அங்குமிங்கும் எடுத்துவைத்து சந்தோசத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் ஏதேதோ செய்துகொண்டிருந்தாள். மாமாவை அறிமுகப்படுத்தினாள். சுடிதாருக்கு மாறியிருந்த பச்சை நைட்டி பெண்ணை அண்ணன் மகள் எனவும், 8ம் வகுப்பு சேரப்போகும் மூத்த மகனையும், 6ம் வகுப்பு சேரப்போகும் இளைய மகனையும் அறிமுகப்படுத்தினாள். எனது அறிமுகம் அங்கிருப்பவர்களுக்குத் தேவைப்படவில்லை. மகன்களின் பெயரில் சேகர் இல்லையென்பதை ஏனோ நினைத்துக் கொண்டேன். இரண்டு மணிநேரத்தில் 17 வருடங்களைப் பகிர்ந்து கொண்டோம். விடுகதைப்புலி தாத்தாவின் இறப்பிற்கு மிகவும் வருத்தப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உரையாடல் மிகவும் இயல்பாகப் போய்க்கொண்டிருந்த ஒரு சமயத்தில்,&lt;br /&gt;"17 வருசம் கழிச்சு சேகர் எப்புடி இருப்பான்னே ஒங்களுக்குத் தெரியாது. சேகர்ன்னு சொன்னதுக்காக இப்புடி கவனிக்கிறீங்களே, யாராவது சேகர்ன்னு சொல்லிட்டு வந்து ஏமாத்திரப் போறான்க்கா" என கிண்டல் செய்தேன்.&lt;br /&gt;"சேகரான்னு செக் பண்ணிட்டாப் போகுது" சுடிதார் இரண்டு பையன்களுக்கும் ஏதோ சைகை செய்தாள். மூத்தவன் எனது முதுகுபக்கம் நின்றுகொண்டு என் பின்கழுத்தின் இடதுபக்கம் கைவைத்து கபாலத்தின் அடியில் ஏதோ தேடினான். என் முன்னால் நின்றுகொண்டு என் முடியைக் கலைத்துக் கொண்டே இளையவன் உச்சந்தலையில் ஏதோ தேடினான்.&lt;br /&gt;"அய்ய்ய்யோ... எவ்வ்வ்ளோ பெரிய தழும்பு" என்று இடது காதருகில் என் கபாலத்தில் இருக்கும் தழும்பைத் தொட்டுக் கொண்டே மூத்தவன் சொன்னான்.&lt;br /&gt;"ஒனக்குத் தலையில கட்டி வந்தப்ப எங்க ஊர்லயிருந்து ஒரு நாவிதரக் கூட்டியாந்து வெட்டிவிட்ட தழும்பு அது சேகர் அண்ணே" என்றாள் வெங்காயம் வெட்டும் போடியக்கா. அவள் சொன்னதைப் புரிந்து கொள்வதற்குள் என் உச்சந்தலையில் நறுக்கென்று கொட்டினான் இளையவன். ச்ச்ச் ஆஆஆ என்று கத்தினேன்.&lt;br /&gt;"ய‌ம்மா, தலயில மச்சம் இருந்து கொட்டுனா வலிக்காதுன்னு சொன்னே?"&lt;br /&gt;"அதுக்காக இப்புடியா மாமா மேல கொட்டுறது பாவி? தலக்குள்ள போயி தேடுறானுக பாருடி. கமுக்கட்டு மச்சத்தக் காமிக்கலாம்ல. வலிக்கிதாண்ணே?" என்று அவனுக்கு உருளைக் கிழங்கின் தோலுரிக்கும் தண்டனை தந்தாள். இதற்கு மேல் இதே விசயத்தைப் பேசினால் என் வருங்கால‌ மனைவியை ஆச்சரியப்படுத்துவதற்காக நான் வைத்திருக்கும் மிச்ச மச்சங்கள் எல்லாம் சபையேறும் என அமைதியானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க மட்டும் எப்புடி எங்க அத்தெ மாமாவெக் கண்டுபுடிச்சீங்க? இவங்கதான்னு என்ன அத்தாட்சி?" கேட்டாள் தக்காளி நறுக்கும் சுடிதார்.&lt;br /&gt;"வெளில என்னோட போட்டோ"&lt;br /&gt;"ஆணோ பொண்ணோ சின்னப் புள்ளயில எல்லாருமே ஒரே மாதிரிதான் இருப்போம். அது நீங்கதான்னு நம்புறீங்களா?"&lt;br /&gt;"என் போட்டோ எனக்குத் தெரியாதாங்க" என்று கேள்விக் குறியுடன் நான் நிறுத்தியிருக்க வேண்டும். பழமொழியுடன் காற்புள்ளி இட்டிருக்கக் கூடாது.&lt;br /&gt;"காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சு இல்லையா?"&lt;br /&gt;"அதுவும் சரிதான். நீங்க ஆம்பளப் புள்ள வேற‌. குப்பறவேற படுத்திருக்கீங்க‌" என்றாள் சுடிதார். மற்றவர்கள் யாருக்கும் புரியவில்லை ஆச்சரியக் குறி. மீண்டும் அமைதியானேன் முற்றுப்புள்ளி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டுக்கால் சூப்பு. ஆட்டுத் தலைக்கறி. மதிய உணவு முடித்தபின் நான் பேசத் தொடங்கினேன்.&lt;br /&gt;"எனக்கு மூத்தவங்க யாருமே இல்லன்னு நான் அடிக்கடி வருத்தப் படுவேங்க்கா. அதுவும் அக்கான்னு ஒரு ஒறவு நெருங்கின‌ சொந்தத்துல‌ கூட‌ இல்லையேன்னு ரொம்ப வருத்தப்படுவேன். அண்ணன் இருக்குற பொண்ணும் அக்கா இருக்குற ஆணும் ரொம்ப கொடுத்து வெச்சவங்கன்னு நானே நெனச்சுக்குவேன். இன்னையிலே இருந்து நானும் கொடுத்து வெச்சவன், அதிர்ஷ்டசாலி"&lt;br /&gt;இவ்வளவு உணர்வுப் பூர்வமான வார்த்தைகளை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. சிறிதுநேரம் நீடித்த அமைதியைச் சுடிதார் விரட்டினாள்.&lt;br /&gt;"அத்தைக்கி நீங்க அண்ணன், ஒங்களுக்கு அத்தெ அக்கா. சூப்பர். நீங்க எனக்கு பெரியப்பாவா? சித்தப்பாவா?"&lt;br /&gt;"தெரியலையப்பா" என்றான் இளைய 'நாயகன்'.&lt;br /&gt;சிரிப்புகள் முடித்தபின் நான் சுடிதாரிடம் கேட்டேன்.&lt;br /&gt;"சேகர்ங்கிறது ஒங்க அப்பாவா?"&lt;br /&gt;சற்று நிதானித்து இல்லை என்றாள்.&lt;br /&gt;"எங்க இருக்காரு?"&lt;br /&gt;யாருமே பதில் சொல்லவில்லை. தலை கவிழ்ந்து கொண்டார்கள். சோகத்தைப் பதிலாகக் கொண்ட கேள்வியைக் கேட்டபின், மீண்டுவரத் தெரியாமல் நானும் அமர்ந்திருந்தேன்.&lt;br /&gt;"வா சேகர், காலாட‌ கடவீதி பக்கம் போய்ட்டு வரலாம்" என்றார் மாமா.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் மாமாவும் இளைய‌வனும் நடக்க ஆரம்பித்தோம். அன்று மிதிவண்டியிலேயே செஞ்சிக்கோட்டை போய்வருவதாகத் திட்டம் இருந்ததாகவும், சுற்றுவட்டாரங்களின் அருமை பெருமைகளையும் மாமா சொல்லிக்கொண்டு வந்தார். திண்டிவனம் பாலத்தின் உச்சிக்குக் கூட்டி வந்திருந்தார். ஞாயிறை வழியனுப்பி முடித்திருந்தது ஞாயிற்றுக் கிழமை.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ்நாட்டுப் போக்குவரத்துல ரொம்ப‌ முக்கியமான பாலம் இது. மனசு பாரமா இருக்குறப்ப எல்லாம் இங்க வந்து நின்னுக்கிட்டு கீழ மனுசங்களப் பாத்துக்கிட்டு இருப்பேன். காத்துல பறக்குற மாதிரி மனசு லேசாயிடும்" என்று சொல்லிக் கொண்டே இளையவனைக் கிழக்குப்பக்க பாலத்தின் வழியே கீழிறங்கி மேற்குப்பக்க பாலம் வழியாக திரும்பவும் மேலேறி வரச்சொன்னார். ஏனென்று கேட்காமலேயே அவன் நடந்தான். நான் பாண்டிச்சேரியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;"சந்திரசேகர். அக்காவோட ரெண்டாவது அண்ணன்" என்று திருச்சியைப் பார்த்து பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவின் நிச்சயதார்த்த கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் இரண்டை என் கையில் திணித்தார். முதல் படத்தில் அக்கா மட்டும் அலங்காரத்தில் இருந்தாள். இரண்டாவதில் அக்காவுடன் இருந்த‌ இன்னொரு பெண் அலங்காரத்தில் இருந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.&lt;br /&gt;"அக்காவோட இருக்குறதுதான் சந்திரசேகர்"&lt;br /&gt;அதிர்ச்சியின் உச்சியில் சென்னையை நோக்கி நின்று கொண்டிருந்தேன். புகைப்படத்தை உற்றுக் கவனித்தேன். அக்காவின் பக்கத்தில் நிற்பவர் பெண்ணுடை தரித்த‌ ஆண்.&lt;br /&gt;&lt;br /&gt;"சந்துருவுக்குப் பெண்கள் மாதிரி நடந்துக்கணும், ட்ரஸ் போட்டுக்கணும்ன்னு ஆசைன்னு மொத மொதல்ல அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சப்ப எங்க மாமனாரு கொல்லவே போயிட்டாரு. அதுக்கப்பறம் சந்துரு வீட்டோட ஒட்டியே இருக்கல. ஒங்க அக்கா மட்டும்தான் அவனுக்கு ஆதரவு. அவளும் எவ்வளோ சொல்லிப் பாத்தா. அது ஒரு ம‌னோவியாதி, ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போலாம், அப்புடி இப்புடின்னு. யாருமே கேக்கல. அவளுக்குக் கல்யாணம் நிச்சயமாகி, நிச்சயதார்த்தப்ப, அண்ணன் ஆசப்பட்டார்ன்னு தன்னோட ட்ரஸையும் நகையையும் கொடுத்து, யாருக்கும் தெரியாம அண்ணனும் தங்கச்சியும் எடுத்துக்கிட்ட போட்டோதான் இது" &lt;br /&gt;மாமா என் தோளைத்தட்டி பாலத்தின் கீழ் நிற்கும் இளையவனைக் காட்டினார். கனத்த மனத்துடன் காற்றில் பறக்கிற மாதிரி கையசைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சந்துரு ஆம்பளைன்னு சந்தேகமே அந்தப் போட்டோக்கிராப்பருக்கு இல்ல. அந்த போட்டோவ மட்டும் அக்கா தனியா வாங்கிக்கிட்டா. அந்த போட்டோகிராப்பருக்குக் கல்யாணத்தன்னக்கி உண்ம தெரிஞ்சி ஒளறி கல்யாணம் நின்னுப் போச்சு. சந்துருவ அன்னக்கே கல்யாண வீட்டுலயே அவமானப்படுத்தி வீட்ட விட்டே தொரத்திட்டாங்க‌. பொட்ட விழுந்த வீடுன்னும் கல்யாணம் நின்னு போனவள்னும் யாரும் அக்காவக் கட்டிக்க முன்வரல. ரெண்டு வருசம் கழிச்சு நான் கல்யாணம் பண்ணி ஆறேழு வருசமா கொழந்த பாக்கியம் இல்லாம பொட்ட விழுந்த வீடு பொட்ட விழுந்த வீடுன்னு ஊரே சொல்ல எல்லாரும் அந்த ஊரவிட்டே வந்துட்டோம்"&lt;br /&gt;மாமாவின் கண்ணிமைக் கரைகடக்க கண்ணீர் காத்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அவரு திரும்ப வரவே இல்லயா?"&lt;br /&gt;"மூணு வருசத்துக்கு முன்னாடி... அப்பத்தான் மொதமொதன்னு நேர்ல பாத்தேன். சேல கட்டிருந்தாப்புல. வெறும் என்புதோல் போர்த்த ஒடம்பு. ஒரு ரெண்டு மணிநேர‌ம் பேசுனோம். தான்பட்ட கஷ்டங்கள் பத்தி எதுமே அவரு சொல்லல சேகர். ஆனா நான் கேள்விப்பட்டுருக்கேன். சந்துருவுக்கு என்ன ஆகியிருக்குமுன்னு நான் யூகிக்க விரும்பல. அப்புடி எதுவும் நடந்திருக்கக் கூடாதுன்னும் நெனச்சிக்கிட்டேன். தன்னால கல்யாணம் நின்னுபோன தங்கச்சிக்கு வாழ்க்கை கொடுத்ததுக்காக எனக்கு நன்றி சொல்லி அழுதாரு. பணம் கொடுத்தாரு, நான் வாங்கிக்கலே. ஏன்னா நான் எரக்கப்பட்டு கல்யாணம் பண்ணிக்கல. இன்னொரு ஜீவனுக்கும் என்னெ மாதிரி 300 கிராமுல துடிக்கிற இதயம் இருக்கும்ன்னு ஒரு சின்ன‌ நெனப்புத்தான்"&lt;br /&gt;இனிமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதுபோல் என்னைப் பார்த்தார்.&lt;br /&gt;"அவரு அக்காவப் பாக்கலையா?"&lt;br /&gt;"சந்துரு நம்மலோடல்லாம் வாழ விரும்பல. அவருக்கு எயிட்ஸ். போன வருசம் எறந்து போயிட்டதா எனக்கு போன் மட்டும் வந்திச்சி".&lt;br /&gt;&lt;br /&gt;இளையவன் திரும்பிவிட்டதால் அதற்குமேல் பேசாமல் வீட்டிற்கு அமைதியாக நடக்க ஆரம்பித்தோம். "இன்னக்கி என்னடா சீக்கிரமா வந்துட்டே!" என்று பொய்யாக ஆச்சரியம் காட்டினார் மாமா. வழிநெடுக மனது கனமாயிருந்தது. திரும்ப ஓடிப்போய் பாலத்தின் மேல் நின்றுகொண்டு மனிதத்திரளைப் பார்த்து அழவேண்டும் போலிருந்தது. வீடு திரும்பி கைலிக்கு மாறிக் கொண்டிருந்தபோது மாமா சொன்னார்: "ஓடிப்போன சந்துரு திரும்பவும் வந்துருவார்ன்னு இன்னும் எங்கக் குடும்பம் நம்பிட்டு இருக்கு, அக்காவும்தான்".&lt;br /&gt;&lt;br /&gt;மாமா நடந்துபோய் நாற்காலியில் உட்காரும்போது கீழே படுத்திருந்த பெரியவன் "அய்யா பாத்துட்டேன்" என்று கத்தினான். தனக்கும் காட்டச் சொல்லி இளையவனும் அடம்பிடித்தான். மொத்த வீடும் சிரித்தது. நான் சிரிக்கிறேனா என்று மாமா என்னைத் திரும்பிப் பார்த்தார்.&lt;br /&gt;"அப்புடியே ஒங்கள‌ மாதிரி இந்த சின்னவன், சேகரண்ணே"&lt;br /&gt;"அக்கா... என்ன எதுக்கெடுத்தாலும் நான்தானா?"&lt;br /&gt;"அட சும்மா நடிக்காதீங்க சின்ன பெரியப்பா, இல்ல பெரிய சித்தப்பா. மைதிலி என்னைக் காதலி படத்துக்கு அத்தெ ஒங்களக் கூட்டிட்டுப் போய், தனியா டாய்லெட் போய்ட்டு வந்துருக்காங்க. எங்கடீ போய்ட்டு வந்தே, என்னையும் கூட்டிட்டுப் போடீன்னு கத்தி, படம் பாக்கவிடாம, அப்புறம் எங்க அத்தெ..."&lt;br /&gt;"சும்மா இருடீ... நீ ஒருத்தி... சின்னப்புள்ளயில செஞ்சதெல்லாம் சொல்லிக்கிட்டு..."&lt;br /&gt;மனிதத்திரள் துடிக்கவிடாமல் நசுக்கிய 300 கிராம் இதயம் ஒன்று, என் இதயம் மூலம் துடித்துக் கொண்டிருப்பதாக எண்ணும் அக்காவின் நம்பிக்கை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மனிதத்திரளுக்குள் பின்னிக்கிடக்கும் மர்ம முடிச்சுகள் சிலவற்றை விடுவித்து எனக்கான சில உறவுகளை உண்டாக்கிக் கொண்ட பலத்தை உணரமுடிந்தது. எல்லா உறவுகளும் எல்லாருக்கும் பிறப்பிலேயே அமைந்துவிட்டால் உலகமும் தாங்காது. &lt;br /&gt;&lt;br /&gt;நான்செய்த சேட்டைகளை எல்லாம் தன் பிள்ளைகளுடன் ஒப்பிட்டுக் கொண்டே போடியக்கா இரவு வெகுநேரம் தூங்காமல் பேசிக் கொண்டிருந்தபோது தாத்தாவைப் பற்றி பேச்சு வந்தது. அவர் பதில் சொல்லாமல் போய்விட்ட விடுகதைகளுக்கு எல்லாம் என்னிடம் விடை கேட்டார்கள்.&lt;br /&gt;"கத்தி போல் எலெ இருக்கும். கவரிமான் பூ பூக்கும். தின்னப் பழம் பழுக்கும். தின்னாத காய் காய்கும்" மாமா கேட்டார்.&lt;br /&gt;"வேம்பு"&lt;br /&gt;"கறக்க முடியாத மூணு பால் சொல்ற புத்திசாலியத் தான் கட்டிக்கிவேன்னு சொல்லிட்டு ஒரு எளவரசி மனுசங்களையே பாக்காம கதவச் சாத்திக்கிட்டாளாம். அது என்னென்ன‌ பால் சேகர் அண்ணே?"&lt;br /&gt;"கள்ளிப்பால் எருக்கம்பால் சுண்ணாம்புப்பால்" என்றாள் சுடிதார்.&lt;br /&gt;"ஒடிப்பது குத்துவது கரைப்பது அனைத்தும் கறப்பதே ஔவையே"&lt;br /&gt;"தனபால் ஜெயபால் இக்பால்" என்றாள் சுடிதார்.&lt;br /&gt;"இக்பால். இந்து முஸ்லீம் சீக்கியம் இந்த மூணு மதங்களுக்கும் பொதுவான பேரு. ஆனா விடை தப்பு"&lt;br /&gt;"அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப்பால். சரியா மாமா?" கேட்டான் மூத்தவன். தவறென்று சொல்லி சரியான பதிலைச் சொன்னேன். பல‌ வருடங்கள் விடை தெரியாத புதிர்களுக்கு விடை கிடைத்த திருப்தியில், நான் சொன்ன மூன்று பால்களையும் ஒத்துக் கொண்டார்கள். மனிதத்திரள்தான் இன்னும் ஒத்துக்கொள்ள மறுக்கிறது; ஒதுக்கியே வைக்கிறது; ஒதுங்கியும் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதி மூன்றொழிய வேறில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-3664504745419085919?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/3664504745419085919/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=3664504745419085919' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/3664504745419085919'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/3664504745419085919'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2011/10/blog-post.html' title='அக்காவின் அண்ணன்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-6272360671882212528</id><published>2011-08-17T09:46:00.000-07:00</published><updated>2011-12-09T21:50:58.632-08:00</updated><title type='text'>மனையடி சரித்திரம்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;மிதக்கும் பிணங்கள்&lt;br /&gt;ஆலைக் கழிவுகள்&lt;br /&gt;விலக்கிய கங்கை&lt;br /&gt;தேடிப் பார்க்கிறாள்&lt;br /&gt;பகீரதன் பிணத்தை.&lt;br /&gt;- தி.பரமேஸ்வரி ('எனக்கான வெளிச்சம்' நூலிலிருந்து)&lt;br /&gt;(&lt;a href="http://tparameshwari.blogspot.com/"&gt;http://tparameshwari.blogspot.com/&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருடம் 2010.&lt;br /&gt;சோழையன் என்ற 60 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் களைக்கொத்தியுடன் தனது மிதிவண்டியில் ஊரைவிட்டுப் புறப்பட்டபோது வியாழக்கிழமை காலை 6 மணி. புதுக்கோட்டை - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் ஏறி மச்சுவாடி - ந‌ரிமேடு - அடப்பன்குளம் - திலகர் திடல் - பால்பண்ணை வழியாக புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஓரமாகவே வந்து நகரத்தின் கடைசியில் தண்டவாளங்கள் குறுக்கிட மிதிவண்டியைவிட்டு இறங்கும்போது 7 மணி இருக்கும். மூன்றாள் மட்டத்தில் இருக்கும் அந்த ரெயில்பாதையை மிதிவண்டியைத் தூக்கிக்கொண்டு கடந்து மீண்டும் ஏறி அமர்ந்தால், அழுத்தவே தேவையில்லாமல், சபிக்கப்பட்டதுபோல் வெறும் தரிசுநிலமாக முடிவற்றுக் காட்சியளிக்கும் பரந்த வெளியில் தனியனாய் நிற்கும் ஒரு வேப்பமரத்தடியில் வந்துசேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேப்பமரத்தின் உச்சந்தலை வெயில் பொழுதில், நிழல்படும் இடமெல்லாம் சோழையனுக்குச் சொந்தமானதென கிட்டத்தட்ட நிலப்பரப்பு சொல்லலாம். புதுகை நகரின் வடகிழக்கிலிருந்து தென்மேற்கிலிருக்கும் அந்த மரமுள்ள இடத்திற்குப் புரட்டாசி 14ம் நாள் அவர் வருவதில் ஒரு சோகம் உண்டு. 15 வயதில் அந்த வேப்பமரத்தைச் சிறுகன்றாகக் கண்டெடுத்ததும் அய்யாவை விசக்கடிக்குப் பறிகொடுத்ததும் ஒரு புரட்டாசி 14ல் ஒருசேர நடந்திருந்தன. அதே காலகட்டத்தில் மொத்த ஊரும் பஞ்சம் பிழைக்க தூரத்தில் வெவ்வேறு இடங்களில் சிதறிப் போனார்கள். சோழையன் மட்டும் பக்கத்திலேயே பிழைப்பு தேடிக்கொண்டார். வறண்ட பூமியில் சுயம்புவாய் நிமிர்ந்து நிற்கும் அந்த வேம்பு, சோழையனைப் பொறுத்தவரை அய்யாவின் மறுபிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போல் கோவண‌ உடைக்கு மாறிக்கொண்டார். மரத்தடியில் அமர்ந்து பழைய நினைவுகளைக் கொஞ்சம் அசைபோட்டார். இத்தனை காலமாகியும் இந்நிலத்தை நன்செய் ஆக்கிவிடமுடியாத தன் இயலாமையை எண்ணிக்கொண்டே தன் நிலத்தின் ஒரு மூலையிலிருந்து களைக்கொத்தியில் புற்களைச் செதுக்க ஆரம்பித்தார். அமர்ந்துகொண்டே களையெடுக்க வசதியாக, கொத்திக்கு நீளவாக்கில் இருக்கும் கைப்பிடியின் ஒருமுனையை வலதுகையாலும், கொத்தியில் செருகப்பட்டிருக்கும் இன்னொரு முனைக்கருகில் இடதுகையாலும் பிடித்துக்கொண்டே களை செதுக்கிக்கொண்டு நகர்ந்துபோய்க் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ச்சரக்க் ச்சரக்க் ச்சரக்க் என்ற களைக்கொத்தியின் ஒழுங்கான தாளத்தில் பழைய நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக‌ மறந்துகொண்டிருந்த பொழுதில், தூரத்தில் ரெயில்நிலைய திசையில் இருந்து கார் ஒன்று சர்ரென்று வந்து, நாணல் மண்டிய பக்கத்து நிலத்தில் நின்றது. இரண்டு பேன்ட்சட்டைக்காரர்களும் ஒரு வேட்டிக்காரரும் நிழலுக்காக வேப்பமரக் குடைகீழ் வந்தனர். வேட்டிக்காரர் தொடக்கவுரையாற்றினார்.&lt;br /&gt;"என்னய்யா சோழா, இங்கத்தான் இருக்கியா? ரெம்ப‌ சவரியமாப் போச்சுப் போ. களக்கட்டெ வெச்சுக்கிட்டு கோவணத்தோட என்னய்யா பண்ணிக்கிட்டிருக்கெ? வயசான காலத்துல கண்ணுமுன்னு தெரியாம எசக்குப் புசக்கா எங்கையாவது..."&lt;br /&gt;பேன்ட்சட்டைக்காரர்களை வழிநடத்திவரும் அந்த 40 மதிக்கத்தக்க ஆசாமியைச் சோழையனுக்குச் சட்டென அடையாளம் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் வந்ததும் சிறிது ஞாபகம் வந்தது. நிஜாம் நகர். வீடுமனைகள் வாங்க விற்க அணுகவும். தொடர்புக்கு... அதுவரைக்கும் சென்ற‌ ஞாபகத்தால், அதன்பிறகிருந்த பத்திலக்க எண்ணையும் பெயரையும் கண்டெடுக்க முடியவில்லை.&lt;br /&gt;"வாங்க துப்பாக்கி. சடக்குன்னு ஆள்தெரியல"&lt;br /&gt;"இதுக்கு இவ்ளோ நேரமா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி"&lt;br /&gt;துப்பாக்கி என்ற பதத்துக்கும் வள்ளுவனின் 12வது குறளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தாத்தாவுடன் ஒட்டியே வந்த பரம்பரைச் சொத்தில் ஒரு கம்பீரத்துக்காக எடுத்துக்கொண்ட புனைப்பெயர்தான், இந்தப் பொருளாகுபெயர். சுடப்பட்ட குண்டு வேகத்தில் வேலை முடியும் என்ற ராசியில், சமீப காலங்களில் பண்பாகுபெயரும்கூட‌. புல் செதுக்கியிருந்த பகுதியொன்றில், துண்டைப்போட்டு துப்பாக்கி உட்கார்ந்தார். ஒரு பேன்ட்சட்டை துண்டைப் பகிர்ந்துகொண்டார். இன்னொரு பேன்ட்சட்டை தனியே வெறுந்தரையில் அமர்ந்துகொண்டார். கார் ஓட்டுனர் காரிலேயே படுத்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கி பேசினார்.&lt;br /&gt;"இந்த நெலத்தெ யாருக்குமே கொடுக்காமெ, பில்லு செதுக்கிப் பில்லு செதுக்கி, சோடிச்சுச் சிங்காரிச்சு என்னதான்யா பண்ணப்போறெ?"&lt;br /&gt;ஒரு சிறு நகைப்புக்குப் பிறகு ச்சரக்க் ச்சரக்க் ச்சரக்க் தொடர்ந்தது.&lt;br /&gt;"இந்த ஏரியாவுல ஒன்னோடது போக சொச்ச எடமெல்லாம் இந்தத் தம்பியோடது. மெட்ராஸ்ல டாக்டர்" என்று சொல்லி, தன் துண்டைப் பகிர்ந்துகொண்டிருக்கும் டாக்டர் சாரின் நிலஎல்லைகளை வரையறுத்துச் சொன்னார்.&lt;br /&gt;"சோழா, நீ பேப்பர்லாம் படிப்பியா? விழுப்புரத்துல இருந்து மெட்ராஸ் வரைக்கும் ரோட்டோரத்து வெள்ளாமெ நெலமெல்லாம் பிளாட் போட்டாச்சு. நீமட்டுந்தான்யா இந்தப் பொட்டக் காட்ட கொடங்கையிலேயே வெச்சுக்கிட்டுத் திரியுறே. எத்தனக் குழியா இருக்கும்?"&lt;br /&gt;"குழின்னா?" இது டாக்டர் சார்.&lt;br /&gt;தரையில் அமர்ந்துகொண்ட இன்னொரு பேன்ட்சட்டைக்காரர் பேசினார்.&lt;br /&gt;"பாரதியாரு பொறந்த தெக்கிச்சீமையிலே காணிக்கணக்குமாதிரி, இங்கெல்லாம் குழிக்கணக்கு. 100 குழி ஒரு காணி. புதுக்கோட்டே பக்கம் கிட்டத்தட்ட 232 கால் குழி ஒரு சென்ட்டு. தஞ்சாவூர் பக்கம்லாம் வேற கணக்கு. மா வேலி போகம் நெடுகெ இன்னும் நெறையா இருக்கு. ஒரு ஆளு ஒரு நாளைக்கி நாத்து நடமுடிஞ்ச எடத்தளவுக்கு நெடுகென்னு நம்ம முன்னோர்க பேர்வெச்சிருக்காங்க. ஓவ்வொரு ஏரியாவுலையும் பொம்பளைங்க நடவு வேகத்தப் பொறுத்து இதுவும் மாறும். எங்க பக்கம்லாம் 16 அரை சென்ட்டு ஒரு நெடுகெ"&lt;br /&gt;யாருக்கும் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"செவனேன்னு இந்த எடத்தெ தம்பிக்கிட்ட கொடுத்திட்டியன்னா, தம்பி வாடகெ வீடுக கட்டிவிட்டு, ஒனக்கும் ஒரு வீடு கொடுத்துடுவாரு. அதுல வர்ற வருமானம் போதாதா? ராசா மாதிரி கால்மேல கால்போட்டுக்கிட்டு..."&lt;br /&gt;"அட ஏங்கண்ணே..." என்று தனது விருப்பமின்மையைக் காட்டிக்கொண்டார் டாக்டர் சார்.&lt;br /&gt;அந்த வேப்பமரம் நடும்போது சோழையனை மண்ணுளிப்பாம்பு நக்கி, மருத்துவரிடம் போன இடத்தில், அங்கிருந்த நல்லபாம்பு சீண்டி தன் அய்யா இறந்துபோன கதை சொன்னார். சிகிச்சையில் சூடுபோடப்பட்ட காயத்தின் தழும்பைக் கெண்டைக்காலில் காட்டினார். சமீபத்தில் டாடியைப் பறிகொடுத்து பூர்வீகச் சொத்தை விற்க வந்திருக்கும் டாக்டர் சாருக்குச் சோழையன் மேல் கொஞ்சம் அனுதாபம் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;"மண்ணுளிப்பாம்பு ராசியோ என்னவோ, சோழாவுக்குப் புடிவாதம் அதிகம். என்ன அடிச்சாலும் அது சாகாது. இவரு என்னா சொன்னாலும் கேக்குறதில்ல"&lt;br /&gt;தனது நகைச்சுவை யாராலும் அங்கீகரிக்கப்படாததால், துப்பாக்கி குறி மாற்றினார்.&lt;br /&gt;"சரி சோழா, வெட்டிக்கதெய விட்டுட்டு நம்ம விசயத்துக்கு வருவோம். இந்த ஏரியாவுல நிலத்தடி நீரோட்டம் எப்புடி?"&lt;br /&gt;சப்புக்கொட்டிவிட்டு, இயற்கை நீர்வளம் இல்லாத புதுக்கோட்டை இராமநாதபுரம் ஜில்லாக்களின் தண்ணீர்ப்பஞ்சத்தை மனிதர்கள் உண்டாக்கிய ஏரிகளின் வரலாறு சொல்லியும், காவிரி தண்ணீர் குழாய்கள்மூலம் திருச்சியிலிருந்து வருவதையும் சொன்னார்.&lt;br /&gt;"ரெயில்வே டேசன் வழியாத்தானே வந்தீங்க? நிக்கிற ட்ரெயினுல சனங்கெ கக்கூசுல தண்ணிப்புடிச்ச கொடுமையெல்லாம் ஏன் கண்ணால பாத்திருக்கேன்".&lt;br /&gt;&lt;br /&gt;குழிக்கணக்கு சொல்லிவிட்டு அமைதியாய் இருந்த பேன்ட்சட்டைக்காரர் சொன்னார்.&lt;br /&gt;"சோளா அய்யா சொல்றதும் சரிதான். இது என்னோட ரிடயர்மென்ட் வருசம். கடெய்சி கால‌த்துல சொந்த மண்ணுல வேல பாக்கலாம்னு ட்ரான்ஸ்ஃபர் வாங்கியாந்தேன். இதுவரைக்கும் நான் டெஸ்ட்டுக்குப் போன எடமெல்லாம் பெய்யிலு. ரிடயர் ஆவுறதுக்குள்ள ஒரு டெஸ்டுலயாவது தண்ணி கண்டுபுடிச்சாத்தான் என் சர்வீஸ் சாந்தியடையும். சரி நான்போயி ஏன் வேலைய ஆரம்பிக்கிறேன்" என்று வட்டவடிவக் கருவியுடன் ஆயத்தமானார். அவருக்கு அத்து காண்பிக்க துப்பாக்கி உடன் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் சாரும் சோழையனும் அவர்களைப் பார்த்துகொண்டே பேசிக்கொண்டார்கள்.&lt;br /&gt;"இந்த சார் வாட்டர் போர்டுல அரசு அதிகாரி. விஞ்ஞான முறைப்படி கருவியெல்லாம் வெச்சு நீரோட்டம் பாக்குறவரு. இதுமட்டும் இல்லாம நம்ம ஊருல இருக்குற சில கிராமத்து மொறைக்காரங்களையும் வரச்சொல்லி இருக்கேன். அவங்களுக்காகத்தான் வெயிட்டிங்"&lt;br /&gt;"தரைக்கடியில தண்ணி கண்டுபுடிக்க எத்தனெ மொறைகள் இருக்கோ அத்தனையும் இந்த ஏரியா மக்களுக்கு அத்துப்புடி"&lt;br /&gt;சிறுநகை பூத்துவிட்டு டாக்டர் சார் சொன்னார்.&lt;br /&gt;"இன்னக்கி நெலமக்கி நெலந்தானே கிராக்கி. வித்துப்புடலாம்னு துப்பாக்கி சொன்னாரு. இங்கெ வாங்கி அங்கெ நெலத்தெ விக்கிற அவரு அப்புடித்தான் யோசனெ சொல்லுவாரு. ரெண்டு வருசத்துல பத்து லெட்சம் காசு பாத்துட்டாராம்"&lt;br /&gt;சோழையன் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார்.&lt;br /&gt;"உண்மெதான். டாடி ஞாபகமா இங்கெ ஏதாவது அபார்ட்மென்ட் மாதிரி கட்டலாம்னு அய்டியா. தண்ணிதான் இப்ப ஒரே பிரச்சனெ. காவிரித்தண்ணியெ ஊருக்குள்ள இருந்து கொண்டாரலாம்னா இது புதுக்கோட்ட எல்லையில வராதாம். பக்கத்தூர் பஞ்சாயத்துல வருது. சரி அப்புடியே கொண்டாரலாம்னு பாத்தா ரெயில்வே லயனெக் கிராஸ் பண்ணி தண்ணி கொழாய் போட்றதெல்லாம் சுலுவு இல்ல‌. அதான் த‌ண்ணி இருக்கான்னு பாக்கலாம்னு முடிவெடுத்துட்டேன். தண்ணி இருந்தா டாடி ஆசீர்வாதம்னு ஏத்துக்குறது. இல்ல வித்துர்றது".&lt;br /&gt;தன் தகப்பனுடன் தனக்கிருக்கும் வேம்புபோல், டாக்டர் சாருக்கும் தண்ணீர் மூலம் பூர்வீகம் தொடர வேண்டுமென சோழையன் நினைத்துக் கொண்டார். ச்சரக்க் ச்சரக்க் நிறுத்திவிட்டு புற்களை ஓரிடத்தில் குவிக்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுது நேரத்தில் இன்னொரு காரில், மூன்றுபேர் வந்திறங்கினார்கள். பல்வேறு முறைகளில் நீரோட்டம் பார்ப்பவர்கள். எலுமிச்சம்பழம். வேப்பங்குச்சி. தேங்காய். அந்தோனியார் தகடில் பார்ப்பவர் கடைசி நேரத்தில் வரமுடியாத‌தால்தான் இவ்வளவு தாமதம். இருந்தாலும் நான்கு முறைகளில் சோதிப்பதில் டாக்டர் சாருக்கு மகிழ்ச்சிதான். இம்மும்மூர்த்திகளும் களம் புக்கினர். இந்தக் காரின் ஓட்டுனரும் காரிலேயே படுத்துக்கொண்டார். கோவணத்துடன் சோழையனும் தூக்கிவிடப்பட்ட சட்டைக்காலருடன் டாக்டர் சாரும் வேப்பமர நிழலிலிருந்தே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 11 மணியளவில் சாந்தியடையாமல் சர்வீஸ் முடிந்துவிடும் சோகத்தில், அதிகாரி நிழல் திரும்பினார். "கஷ்டம் தம்பி" என்பதுதவிர வேறேதும் பேசாமல் தனது கருவியையும் கைக்கடிகாரத்தையும் செல்பேசியையும் கைப்பைக்குள் வைத்துவிட்டுத் தூங்க ஆரம்பித்தார். ப‌ன்னிரண்டு மணிக்குள் மும்மூர்த்திகளும் கீழுதடு பிதுக்கித் திரும்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிகட்டி மலையிழுக்க வந்திருந்த டாக்டர் சார் முடிபோனாலும் மலைவந்தாலும் கொண்டாடுவதற்கு ஏற்கனவே தயாராக வந்திருந்தார். காரிலிருந்து மதுவகைகள் எடுத்துவரப்பட்டன. தான் கோயில்போல் மதிக்கும் இடத்தில் இப்படி நடப்பது சோழையனுக்கு என்னவோபோல் இருந்தாலும் இருக்கட்டும் என்று காட்டிக்கொள்ளவில்லை. அன்று முழு உண்ணாநோன்பு அனுசரிக்கும் சோழையனையும் வேலை நேரத்தில் குடிக்காத ஒரு கார் ஓட்டுனரையும் தவிர மற்ற 7 பேரும் மதுவருந்தத் தயாரானார்கள். வட்டமிட்டு உண்ணும் தர்மப்படி மதுவைச் சமபங்கிட்டு கைக்கெட்டியதை வாய்க்குக் கொண்டுபோகும் சுபதருணத்தில் அங்கிருக்கும் 9 பேரும் என்றுமே பார்த்திராத‌ ஒரு சம்பவம் நடந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்தில் என்றோ ஒருநாள் குளமாக இருந்து, கொட்டைச்செடிகள் மண்டி வாய்பிளந்து கிடக்கும் நிலத்திலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம்! எடுத்த மதுவை ஒரு மாதுவிற்காகத் துறந்துவிட்டு மும்மூர்த்திகளும் அங்கு ஓடினார்கள். கொட்டைச்செடிகளின் புதர்களுக்கு நடுவே ஒருத்தி தலைவிரி கோலமாய் வெளியேற திணறிக் கொண்டிருந்தாள். அடித்தொண்டையிலிருந்து தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தாள். மூன்று ஆண்கள் அவளின் பின்புறம் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் சட்டை அணியாமல் நீண்ட தலைமுடி வைத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மும்மூர்த்திகள் பக்கத்தில் ஏதாவ‌து தற்காப்பு ஆயுதம் தேடிக்கொண்டிருந்த‌ பொழுதில் அவள் வேப்பமரத்தை நோக்கி ஓடியிருந்தாள். அவளின் சேலை புதர்களுக்கிடையே கைவிடப்பட்டிருந்தது. அவளைத் துரத்தியேவந்த மூவரில், சட்டை போடாதவன் நிழலில் நிற்பவர்களை ஒதுங்கச்சொல்லி சைகை செய்தே ஓடிவந்தான். ஓடிவந்தவள் சோழையன் கழட்டி வைத்திருந்த வேட்டிசட்டைக்கருகில் நின்றாள். அவற்றைத் தூக்கியெறிந்தாள். கால்பரப்பி அமர்ந்தாள். அழுதாள். அழுதாள். அழுதாள். ஐந்து நிமிடங்கள் வேறேதும் சம்பவிக்கவில்லை. அருங்காட்சியகச் சிலைகள் போல் எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள். அழுகை நிறுத்தினாள். வெறிபிடித்துத் தரையை வெறுங்கையால் தோண்டினாள். ஒரு முழம் ஆழம் தோண்டி ஒருகைப்பிடி மண்ணெடுத்து வந்த திசையிலேயே திரும்பி ஓடினாள். அவள் தன் சேலையையும் தாண்டி ஒடியிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி. நீங்க ரெண்டு பேரும் வெரசா கூடவே ஓடுங்க. நான் சாமி வந்திக்கிட்டு இருக்குன்னு அய்யாவுக்குச் செல்போன்ல தகவல் சொல்லிடுறேன்" என அந்த மூவரில் ஒருவன் மற்ற இருவரையும் அனுப்பி வைத்தான். சட்டை போடாத பூசாரியும் இன்னொருவனும் அவளைத் தொடர்ந்தோடினர். மற்றவர்களைச் சட்டை செய்யாமல் தன் செல்பேசியில் யாரையோ தொடர்புகொள்ள முயன்றான்.&lt;br /&gt;"மூணு நாளைக்குச் செல்போன் வேல செய்யாதுன்னு பேப்பர்ல படிச்சேன்" கார் ஓட்டுனர் சொன்னார்.&lt;br /&gt;"அது மெசேஜ் மட்டும்தாம்பா. கால்லாம் பண்ணலாம்" என்றார் டாக்டர் சார். &lt;br /&gt;"தரையிலெ டவர் கெடைக்காது. மரத்துலெ அந்த ரெண்டாவது வாதுலதான் பேசமுடியும்" என்று சோழையன் கிளை காட்டினார். அவன் மரமேறி செல்பேசியில் கத்தினான்.&lt;br /&gt;"அண்ணன் மண்ணெடுத்துக்கிட்டு வர்றாரு. ரெடியா இருங்க..."&lt;br /&gt;அவன் கீழிறங்கி சைகையில் தண்ணீர் வாங்கி முகம் கழுவினான். வீரம்காட்ட வேலை இல்லாததால் மும்மூர்த்திகள் ஆளுக்கொரு திசையில் சிறுநீர் கழிக்கப் போயிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பேய் முத்திடுச்சுப் போல" வேறு யாருமில்லை துப்பாக்கியேதான்.&lt;br /&gt;முகம் துடைத்துக் கொண்டிருந்தவன் சொன்னான்.&lt;br /&gt;"பேயில்ல. ஏன் அண்ணனோட ஆவி. அவங்க ஏன் அண்ணி. சாமிபாக்க ஓடியாந்தோம்"&lt;br /&gt;யாருக்குமே புரிய‌வில்லை. சோழைய‌ன் விள‌க்கினார்.&lt;br /&gt;"எதிர்பாராமெ எறந்துபோனவங்க ஆவிய, சாமியாட்டிய வெச்சு, பிரியமானவங்க ஒடம்புல வரவெச்சு, அவங்க ஆத்மாவெ அவங்களுக்குப் புடிச்ச எடத்துல கொண்டுபோய் அடக்கிவெக்கிறது"&lt;br /&gt;மும்மூர்த்திகள் சிறுநீர் முடித்துவிட்டு அங்கேயே பீடி குடித்துக் கொண்டிருந்தார்கள். அறிவிய‌ல் ரீதியில் டாக்ட‌ர் சார் விள‌க்கினார்.&lt;br /&gt;"நெருக்கமானவரோட திடீர் மரணத்துல நிறைவேறாம போன ஆசைகளத் தன்னால மட்டும்தான் நிவர்த்தி பண்ணமுடியும் அப்புடின்னு ஒருத்தர் நெனச்சா இதுமாதிரி வந்து முடியும்"&lt;br /&gt;யாருக்கும் புரிய‌வில்லை.&lt;br /&gt;"சந்திரமுகி படம் மாதிரி" என்றார் டாக்ட‌ர்.&lt;br /&gt;"அப்புடிச் சொல்லுங்க‌" என்றார் கார் ஓட்டுன‌ர்.&lt;br /&gt;"அப்ப‌ இது உண்மையான‌ பேயில்லையா?" மீண்டும் துப்பாக்கியே.&lt;br /&gt;"அய்யாவோட‌ கோமண‌ம் அவுந்துருந்தா தெரிஞ்சிருக்கும். பொய்ப் பேயின்னா பயந்து போயிருக்கும்ல‌". ஆவியின் த‌ம்பி முறைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி ஆக வேண்டியதப் பாருங்கப்பா. மணி என்ன ஆச்சு?" இதுவும் துப்பாக்கிதான். குழிக்கருகில் மண்ணாராய்ச்சி செய்துகொண்டிருந்த அதிகாரி அவர்கள், கைப்பை திறந்து கடிகாரம் எடுக்கப் போனார். அந்த நொடியில் அவரின் சர்வீஸ் சாந்தியடைந்தது! அவரின் வட்டக்கருவிமுள் சுற்றிக்கொண்டிருந்த‌து! அவரால் பேசக்கூடமுடியவில்லை. என்னவோ ஏதோவென்று அருகில் வந்தவர்களுக்குப் புரிந்துபோனது. சந்தோசத்தின் 'எல்லைதாண்டி' நின்றிருந்த டாக்டர் சார், சோழையனுக்குச் சொந்தமான அந்த இடத்தைவிட்டு எல்லாரையும் விலகிப் போகச்சொன்னார்; சோழையனையும் சேர்த்துத்தான். அதிகாரி மட்டும் தனியேபோய் மீண்டுமொருமுறை சோதித்தார். "கன்பார்ம் தம்பி. நூற‌டிக்குள்ள தண்ணி". குழியை மூடி புல் செதுக்கப்பட்ட தரைபோல் ஆக்கிவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் எல்லாரையும் கார்களுக்கருகில் இருக்கச் செய்தார் டாக்டர் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;மும்மூர்த்திகளை ஒவ்வொருவராக அழைத்தார். முதலில் வேப்பங்குச்சிக்காரன். "இந்த மரத்து நெழல்ல எதாவது ஓட்டம் இருக்கான்னு பாருப்பா" துப்பாக்கி வெடித்தார். தனது வேப்பங்குச்சியை எடுத்து நாக்கு வழிக்கப் போவதுபோல் வளைத்துப் பிடித்து மெதுவாக நடக்க ஆரம்பித்தான். 'அவ்விடத்'திற்கு அருகில் ராட்டனம்போல் சுற்றியது. அடுத்து எலுமிச்சைக்காரன். மந்திரம் சொல்பவன்போல் எலுமிச்சையை விரல்களுக்கிடையே உருட்டிக்கொண்டே நடந்தான். ஏதோ சிலிர்ப்பூட்ட வானத்தில் தூக்கியெறிந்தான். வேறு எங்கேயோ விழப்போகிறதென மற்றவர்கள் எதிர்பார்க்க வளைந்துவந்து 'அதே இடத்தில்' விழுந்தது. கடைசியாக தேங்காய்க்காரன். தேங்காய்க்குடுமியை அவனது வலதுகையின் நடுவிரல்நுனி தொடும்படி உள்ளங்கையில் வைத்துக்கொண்டு நடந்தான். 'அந்த இடத்'திற்கருகே குடுமி தானே எழுந்து நேராக நின்றது. "அட்றா மொளைக்குச்சிய இங்கெ" கத்திச் சொன்னார் டாக்டர் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன் கூடியவர்கள் எல்லாரும் மீண்டும் மதுவருந்த‌‌க் கூடினார்கள். துப்பாக்கியும் டாக்டர் சாரும் ரகசியம் பேச சோழையனை மரத்துக்குப்பின் அழைத்தார்கள். சோழையன் வேட்டிச்சட்டைக்கு மாறிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;"இவரு பேரென்னா? ராஜராஜனா? ராஜேந்திரனா?"&lt;br /&gt;"சோழையன். வெறும் சோழையன்" துப்பினார் துப்பாக்கி. 'வெறும்' என்ற‌ வார்த்தை அழுத்திச்சொல்ல‌ப்ப‌ட்ட‌து.&lt;br /&gt;"எங்க தம்பி, ஆவியோட தம்பியக் காணாம்?" அவர்கள் சுற்றிமுற்றிப் பார்ப்பதற்குள் சோழையன் அங்கு வந்தார்.&lt;br /&gt;"பாத்தியா சோழா. அண்ணன் ஒருத்தன் ஓன் எடத்துல உயிர்விட்டான்னு ஒருத்தன் அடிச்சு சொல்றான். ஓட்டம் பாத்தப்ப இங்கதான் நின்னான். இப்பக் காணாம் பாரு. எனக்கென்னவோ அவன்போய் ஆளுகளக் கூட்டியாந்து, இங்கெ ஒரு மண்டபமோ சமாதியோ கட்டாம விடமாட்டான். நீயே எடத்தத் தரமாட்டேன்னு சொன்னாலும், மத்தவனுக்குப் போகவிடாம பண்ணிடுவானுக. பைபாஸ் ரோடு, ஸ்கூலு, ஃபேக்ட்ரி, ஆஸ்பத்திரி அப்பிடி இப்டி பண்ணி அடிமாட்டுவெலைக்கி அபகரிச்சுப் போயிடுவானுக. அதனாலதான் சொல்றேன்...".&lt;br /&gt;&lt;br /&gt;எச்சரிக்கையாகவும் மிரட்டலாகவும் தாக்கத் தொடங்கிய துப்பாக்கிக் குண்டுகளைச் சோழையன் உதாசீனப்படுத்திவிட்டு நடக்கலானார். ஆர்.கே.பி. தியேட்டர் - புதுக்குளம் - காமராஜர் நகர் வழியாக ஊர்வந்து சேர்ந்தபோது மாலை 6 மணி. பணத்துக்காக பணத்தால் பணத்துக்குக் காரியங்கள் ந‌டக்கும் உலகத்தில் நிகழ்கால எதார்த்தங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாலைவன மழைத்துளியாய்க் காணாமல் போகும் சோழையன் போன்ற அப்பாவிகள் இத்தேசத்தில் அதிகம். இறந்தவனை இருப்பவனாகவும், இருப்பவனை இறந்தவனாகவும், கையெழுத்தைப் பொதுவுடைமையாகவும், கடவுளையும் தனியுடைமையாகவும் மாற்றமுடியும் என்று இந்தச் சோழையன்களுக்குத் தெரிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நீரோட்டம் கண்டுபிடித்து சரியாக 67ம் நாள், திங்கள்கிழமை, மர்மமாக வேப்பமரம் வேரோடு சாய்ந்துகிடந்தது. ஒரு மண்ணுளிப்பாம்புதவிர உயிர்ச்சேதம் வேறெதுவுமில்லை எனத் தகவல்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-6272360671882212528?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/6272360671882212528/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=6272360671882212528' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/6272360671882212528'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/6272360671882212528'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2011/08/blog-post.html' title='மனையடி சரித்திரம்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-6922496497521061146</id><published>2011-04-18T10:22:00.000-07:00</published><updated>2011-04-18T10:24:36.826-07:00</updated><title type='text'>அந்தமாகமம்</title><content type='html'>&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உலகின் கடைசி மனிதன் தனியாக இருக்கும்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கேட்டது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;- உலகின் மிகச்சிறிய சஸ்பென்ஸ் கதையாக சுஜாதா அவர்கள் சொன்னது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விலக்கப்பட்ட கனியைச்&lt;br /&gt;சாத்தானுக்குத் தந்துவிட்டு&lt;br /&gt;கடவுளைக் களிமண்ணாக்கி&lt;br /&gt;நியாயத்தீர்ப்பு நாளில்&lt;br /&gt;ஓய்வெடுத்துக் கொண்டான்&lt;br /&gt;மனிதன்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-6922496497521061146?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/6922496497521061146/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=6922496497521061146' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/6922496497521061146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/6922496497521061146'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2011/04/blog-post_5463.html' title='அந்தமாகமம்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-3655979220155103932</id><published>2011-04-18T10:20:00.000-07:00</published><updated>2011-04-18T10:22:39.196-07:00</updated><title type='text'>அரிவை கூந்தல்</title><content type='html'>&lt;span style="font-size:100%;"&gt;கணினித்திரை  தலையேறி&lt;br /&gt;ஒற்றைக்கால் தவமிருந்து&lt;br /&gt;குளிர்சாதன தண்மையில்&lt;br /&gt;CPU இளஞ்சூட்டில்&lt;br /&gt;வதங்கியும் வாடியும்&lt;br /&gt;சருகாய்ப் போயின&lt;br /&gt;மகளிர்தின ரோஜாக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-3655979220155103932?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/3655979220155103932/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=3655979220155103932' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/3655979220155103932'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/3655979220155103932'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2011/04/blog-post_8237.html' title='அரிவை கூந்தல்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-5770763725615947349</id><published>2011-04-18T10:16:00.000-07:00</published><updated>2011-04-18T10:20:04.234-07:00</updated><title type='text'>தேவதூதர்கள்</title><content type='html'>&lt;span style="font-size:100%;"&gt;தன் அழுகை சபிக்கும்&lt;br /&gt;தியானக் கூடங்களை&lt;br /&gt;மூத்திரத்தால் அபிஷேகிக்கின்றன&lt;br /&gt;பால்நாடும் குழந்தைகள்!&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-5770763725615947349?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/5770763725615947349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=5770763725615947349' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/5770763725615947349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/5770763725615947349'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2011/04/blog-post_6621.html' title='தேவதூதர்கள்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-424926254441627467</id><published>2011-04-18T10:11:00.000-07:00</published><updated>2011-04-18T10:15:58.130-07:00</updated><title type='text'>ரகசியங்களின் பொதி</title><content type='html'>&lt;span style="font-size:100%;"&gt;கனக்கிறது சவம்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-424926254441627467?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/424926254441627467/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=424926254441627467' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/424926254441627467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/424926254441627467'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2011/04/blog-post_18.html' title='ரகசியங்களின் பொதி'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-673726085230653519</id><published>2011-04-11T10:47:00.000-07:00</published><updated>2011-04-14T10:18:10.800-07:00</updated><title type='text'>ஒலிநடனம்</title><content type='html'>&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;சந்தையின் சந்தடியைத் தனிமையிலும் தனிமையின் சாந்தத்தைச் சந்தையிலும் உணரமுடிந்தவனே ஞானி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;- யாரோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் சமூகவியல் பாடத்தில் பார்த்திருந்த அவ்விடத்தின் உருவம் மட்டும் என்நினைவில் அழியாமலேயே தங்கிப் போனது. தரையில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுப்பவனுக்குக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதுபோல் தோற்றமளிக்கும், அக்கட்டிடத்தின் பெயர் கோல்கும்பா (Gol Gumbaz). ஹைதராபாத்தில் ஒருமுறை கோல்கும்பா என்று நினைத்துப் போய், அதேபோல் உச்சரிக்கப்படும் கோல்கொண்டா (Gol Gonda) என்ற இடத்தின் அறிமுகம் கிடைத்தது. நீண்ட நாட்களாக கோல்கொண்டாவைக் கோல்கும்பா என்று சுட்டியும் திரிந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகாவில் பிஜப்பூரில் (Bijapur) இருக்கிறது; ஏதோவொரு மன்னனின் கல்லறை; என்பனதவிர வேறொன்றும் எனக்குத் தெரிந்திருக்கவுமில்லை. மனதில் புதைந்துபோன உருவமொன்றைத் தரிசித்துவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பைத்தவிர வேறேது நோக்கமுமின்றி, உள்ளூர் காலநிலையும் வாழ்க்கையும் வெக்கை வீசிக்கொண்டிருந்த ஒரு பொழுதில், தமிழ் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த இரண்டுபேர் அடங்கிய குழுவொன்று கோல்கும்பா கிளம்பியது. மூன்றுமணிநேர இருப்பில், வாழ்க்கையில் எதையோ சாதித்துவிட்டதாக எனக்கேற்பட்ட பிரமிப்பை உங்களுடன் பகிர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாமினிப் பேரரசுதான் (Bahmani kingdom) தென்னிந்தியாவில் நிறுவப்பட்ட முதல் சுதந்திர மற்றும் ஒரே ஷியா (Shia) இஸ்லாமியப் பேரரசு. மொகலாயப் பேரரசர் முகமது பின் துக்ளக்கிற்கு எதிராகப் புரட்சிசெய்து அலாவுதீன் ஹாசன் பாஹ்மன் ஷா என்பவரால் 1347ல் உருவாக்கப்பட்டது. தக்காணப் பீடபூமியை (Deccan plateau) ஐம்பெரும் மாநிலங்களாகப் பிரித்து ஆண்டுவந்த பாமினிப் பேரரசின் ஒருமாநிலம்தான் கோல்கும்பா இருக்கும் பிஜப்பூர்; இன்னொன்று ஹைதராபாத்தில் இருக்கும் கோல்கொண்டா! அப்பறம் பீதர் பேரர் அகமத்நகர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாமினிப் பேரரசின் ஆளுநராக இருந்த யூசுப் அதில்ஷா என்பவரால்தான் பிஜப்பூர் நகரம் உண்டாக்கப்பட்டிருக்கிறது. 1490 முதல் அதில்ஷா வம்சத்தின் ஒன்பது அரசர்களால் இந்நகரம் ஆளப்பட்டிருக்கிறது. போர்த்துக்கிசியர்கள், மராட்டியர்கள், மொகலாயர்கள் என்ற பல அச்சுறுத்தல்களுக்குட்பட்ட இப்பேரரசை 1686ல் மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் வென்றுபோனார். அதில்ஷா அரசப் பரம்பரையினால் ஆளப்பட்டிருந்த, பதினேழாம் நூற்றாண்டின் பிஜப்பூரைத் தக்காணத்தின் பல்மீரா (Palmyra of Deccan)என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறார்கள். அதில்ஷா அரசவம்சத்தின் ஏழாவது அரசரான முகமது அதில்ஷாவின் கல்லறைதான் கோல்கும்பா.&lt;br /&gt;&lt;br /&gt;பிஜப்பூர் பேருந்து நிலையத்தைக் காலை எட்டு மணியளவில் அடைந்தோம். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில், இரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கிறது கோல்கும்பா. அனுமதிச்சீட்டு வாங்கிக்கொண்டு, நீண்ட பாதையின் முடிவிலிருக்கும் கோல்கும்பா நோக்கி நடந்தோம். அதற்கு முன்னால் அருங்காட்சியம் ஒன்றும் இருக்கிறது. திட்டப்படி முதலில் கோல்கும்பா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-tsRl0yNlC84/TaNAg9mpEHI/AAAAAAAAFJg/1dq0VqXCHWs/s1600/IMG_1801.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5594386097160917106" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-tsRl0yNlC84/TaNAg9mpEHI/AAAAAAAAFJg/1dq0VqXCHWs/s320/IMG_1801.JPG" border="0" /&gt;&lt;/a&gt;(கோல்கும்பா பின்னணியில் அருங்காட்சியகம்)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யானை தடவச் சென்றிருந்த குருடர் கதையாய், ஒரு மன்னனின் கல்லறையென்ற ஒற்றைவரித் தகவலுடன் போயிருந்த எங்களுக்கு, பற்பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. பிடறி பின்னங்காலைத் தொட அண்ணாந்து பார்க்கவைக்கும் அந்த நினைவுச் சின்னத்தின் உயரம், கிட்டத்தட்ட 20தள அடுக்குமாடிக் குடியிருப்பிற்குச் சமம். ஒரு கனசதுரப் (cube) பெட்டகத்தின்மேல் வைக்கப்பட்ட குவிமாடத்தின் (dome) அமைப்பு. தென்கதவுதான் பிரதான வாசல். உள்ளே நுழைந்தால், நான்கு சுவர்களைத்தவிர பிடிமானம் வேறேதுமில்லாத ஒரு பிரம்மாண்டமான சதுர அறை; ஒவ்வொரு பக்கமும் 135 அடி நீளம்; சுவர்களின் தடிமன் 10 அடி; உயரம் 110 அடி.&lt;br /&gt;&lt;br /&gt;கோல்கும்பாவின் நான்கு மூலைகளிலும் கட்டிடத்தோடு ஒட்டியிருக்கும் கோபுரங்கள். இஸ்லாமிய முறையில் அமைக்கப்படும் மினாரெட் (minaret), சீன முறையில் அமைக்கப்படும் பஹோடா (pagoda) என்ற இரண்டு முறைகளின் கலவை. உட்புறப் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்ட எழுதளங்கள். ஏழாவது தளத்தின் வாசல், கனசதுர உச்சியில் (மொட்டைமாடியில்) திறக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-nX6zNq_gGlY/TaNCagn0DSI/AAAAAAAAFJw/0emSgzPLR0M/s1600/IMG_1821.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5594388185325243682" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-nX6zNq_gGlY/TaNCagn0DSI/AAAAAAAAFJw/0emSgzPLR0M/s320/IMG_1821.JPG" border="0" /&gt;&lt;/a&gt;(கோல்கும்பாவின் பிரதான தென்வாசல்)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தென்வாசல் வழியே உள்நுழைந்த இரண்டுபேர் அடங்கிய குழு, தென்கிழக்கு கோபுரம் வழியே படியேற ஆரம்பித்தது. படிகளின் உயரம் அதிகமாக இருந்தபடியாலும், இதமான குளிர்க்காற்று சுகமாய் இருந்தபடியாலும், முன்னேறும் பெண்களின் பிட்டத்தை எழுநிலைகளிலும் பின்தொடர்ந்து ரசித்துக் கொண்டிருந்த இன்னொரு குழுவிலிருந்து சற்று விலகியிருக்க நினைத்தபடியாலும் நாங்கள் கனசதுர உச்சியை அடைய கொஞ்சம் அதிகநேரம் எடுத்துக் கொண்டோம். கோபுரத்தின் ஏழாம்தளத்தைவிட்டு மொட்டைமாடிக்கு வந்தால், கண்ணெதிரே பிரம்மாண்டமாக நிற்கிறது குவிமாடம். இரண்டுபேர் நடக்குமளவிற்குக் குவிமாடத்திற்கும் கனசதுர விளிம்பிற்கும் இடையே இடைவெளி இருக்கிறது. இரண்டு சுற்றுகள் சுற்றினோம். முதல்சுற்று கோல்கும்பாவிற்கு மட்டும். இரண்டாம் சுற்று ஊர்ச்சுற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து குவிமாடத்தின் அடியில் இருக்கும் ஒரு குறுகிய வாசலை அடைந்தோம். இதுபோல் ஆறுவாசல்கள் இருக்கின்றன. குவிமாடத்தின் அடித்தளத்தைச் சுற்றி மூன்றரை மீட்டர் நீளமுடைய, பால்கனி போன்றதொரு நடைபாதை இருந்தது. அங்கிருந்து கீழே இருக்கும் கனசதுர கீழ்த்தளத்தைப் பார்க்கப்போய், எனக்கிருக்கும் acrophobia கொஞ்சம் விழித்துக் கொள்ள ஓரமாக அமர்ந்துவிட்டேன். என்னைப்போல் பலர், உயர பயத்தில் சுவரைப் பார்த்துக் கொண்டு அமர்த்திருந்தார்கள். ஒரு முதியவர் மிகவும் சிரமப்பட்டு கண்களை அகலப்படுத்தி, கால்களை நீட்டி விரித்து, மூச்சை ஆழப்படுத்தி கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் பயந்துபோவீர்கள் என இதுவரை நான் சொல்லாமல் விட்டதை இப்போது சொல்கிறேன். கோல்கும்பா அருகாமையில் முதன்முதலில் வந்தபோது, அதனுள் இருந்து வித்தியாசமான சத்தங்கள் மிக அதிக வீரியத்துடன் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. வாசலிலிருந்த பலகையில் படித்தபிறகுதான், எவ்வளவு மிகப்பெரிய பொக்கிஷத்தைப் பார்க்க வந்திருக்கிறோம் எனப் புரிந்தது. குவிமாடத்தின் அடியைச் சுற்றி உட்புறமாக இருக்கும், பால்கனி போன்ற இந்த வட்டவடிவ சுற்றுப்பாதைக்கு முணுமுணுக்கும் மாடம் (whispering gallery) என்று பெயர். இதன் எந்தவொரு இடத்திலிருந்தும் எழுப்பப்படும் காகித அளவிலான சத்தம்கூட, அதன் நேரெதிர் முனையில் மிகத்துல்லியமாகக் கேட்கும். மன்னர் மனைவியுடன் இம்முறையில்தான் பேசிக் கொண்டாராம். அதைவிட ஆச்சரியம், எந்தவொரு ஒலியும் 26 வினாடிகளுக்குள் 10 முதல் 12 முறைகள் எதிரொலிக்கப்படுகிறது. நாட்டியக் கலைஞர்கள் கீழ்த்தளத்தில் நடனமாட, இசைக்கலைஞர்கள் இங்கிருந்து இசைக்க..... ராஜவாழ்க்கை! ஏதோவொரு சத்தத்தைச் சுமந்தபடி எப்போதும் நகர்ந்தபடியே இருக்கும் காற்றின் மென்தழுவல், அற்புதமான அனுபவம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Uo8NrhUVoIk/TaNBgkOlNPI/AAAAAAAAFJo/WStTVcy7tcc/s1600/IMG_1872.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5594387189860742386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-Uo8NrhUVoIk/TaNBgkOlNPI/AAAAAAAAFJo/WStTVcy7tcc/s320/IMG_1872.JPG" border="0" /&gt;&lt;/a&gt;(முணுமுணுக்கும் மாடம்)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உயர ஒவ்வாமை போனபிறகு, தைரியமாக கீழே குனிந்து பார்த்தேன். கீழ்த்தளத்தில், ஒரு சதுர மேடையில் 7 பேரின் கல்லறைகள். முகமது அதில்ஷா, இரு மனைவிகள், மகன், மகள், மருமகள், நாட்டிய மங்கை ரம்பை. அருங்காட்சியகம் போனோம். புகைக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. அதில்ஷா அரசக்குடும்பத்தின் ஆட்சியாளர்களைத் தவிர, அவர்களின் சகோதர சகோதரிகளின் பெயர்கள் அறியப்படவில்லையென குடும்பமரம் (family tree) சொன்னது. சகோதர்களையும், சகோதரிகளின் கணவர்களையும் கூட அடையாளம் காட்டுகிறது இணையம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோல்கும்பா பற்றிய சாதனைக் குறிப்புகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. துண்களேதும் கிடையாது. எந்தவொரு பிடிமானமுமின்றி (uninterrupted floor spacing), உலகிலேயே அதிக பரப்பளவை (1693 சதுர மீட்டர்) ஆக்கிரமித்திருக்கும் கட்டிட அதிசயம் கோல்கும்பா.&lt;br /&gt;&lt;br /&gt;2. துருக்கியின் ஹாசியா சோஃபியா (Hagia Sophia), வாடிகனின் புனித வளனார் பேராலயம் (Saint Peter's basilica) வரிசையில் கோல்கும்பாவின் குவிமாடம் உலக அளவில் மூன்றாவது பெரியது.&lt;br /&gt;&lt;br /&gt;3. 26 வினாடிகளுக்குள் 10 முதல் 12 முறைகள் எதிரொலிகள் தொடர்ச்சி, உலகில் வேறெங்கும் கண்டறியப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;4. வாடிகனின் புனித வளனார் பேராலயத்தின் குவிமாடம், கோல்கும்பாவைவிட 5மீட்டர் அதிக விட்டமுடையதாக இருந்தாலும், கோல்கும்பாவின் குவிமாடத்தைத் தாங்கியிருக்கும் கனசதுரம் பெரிதென்ற முறையில், உலகிலேயே குவிமாடவடிவ கட்டிடங்களில் அதிகப் பரப்பளவுடைய பெருமையும் கோல்கும்பாவையே சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;5. அரைக்கோளவடிவ குவிமாடத்தைச் சதுர அறைமேலோ, நீள்வட்ட குவிமாடத்தைச் செவ்வக அறைமேலோ பொறுத்த,கோளத்தின் முக்கோணத் துண்டு போன்ற pendative என்ற கட்டுமான அமைப்புகள் பயன்படுகின்றன. வெட்டிக்கொள்ளும் pendativeகள் உலகிலேயே இரண்டு இடங்களில் மட்டும்தான் வெற்றிகரமாக கட்டப்பட்டிருக்கின்றன. இன்னொன்றையும் பார்க்க வேண்டுமானால் ஸ்பெயினிலுள்ள கர்டோபா (Mosque of Cordoba) போகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-DToMnVwT3Uw/TaNDIB51wDI/AAAAAAAAFJ4/SHi3NPobScM/s1600/IMG_1844.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5594388967353335858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-DToMnVwT3Uw/TaNDIB51wDI/AAAAAAAAFJ4/SHi3NPobScM/s320/IMG_1844.JPG" border="0" /&gt;&lt;/a&gt;(தரைத்தளத்திலிருந்து குவிமாடத்தின் தோற்றம்; முணுமுணுக்கும் மாடத்தில் மனிதத்தலைகள் தெரிகின்றனவா?)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;முணுமுணுக்கும் மாடத்தில் தள்ளாடும் நான்கு பாட்டிகள், எழுதளங்கள் ஏறிவந்து, எதிரொலிகளைக் உணர்ந்ததில் பிறவிப்பயன் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிப் போனார்கள். அவரவருக்குப் பிடித்த பதங்களைக் கத்திப் பார்த்தார்கள்; கெட்ட வார்த்தைகள், பன்மொழிகளில் I love you, சற்றுமுன் தெரிந்துகொண்ட அழகுப்பெண்பெயர் என எதிரொலி சோதனை செய்துபார்த்தார்கள். எல்லாவற்றையும் நூற்றாண்டுகளாக கேட்டுக்கொண்டு துயில்கின்றன ஏழு உடல்கள். யாரும் இல்லாத பொழுதில் அவர்கள் எழுந்துவந்து, மீயொலியில் பேசிக்கொள்வதாக கற்பனை செய்துகொண்டு விடை பெற்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;Earphoneல் பாடல் கேட்டுக் கொண்டு, நண்பர்கள் பேசுவதுகூட தெரியாமல், தட்டிகேட்டால் மட்டும் அதை எடுத்துவிட்டு பேசிய ஒரு வாலிபனைப் பார்த்தேன். அவன் ஊர் திரும்பியவுடன் சொல்வதற்கேதேனும் செய்திகள் வைத்திருப்பானா என்பதும் ஓர் ஆச்சரியமே! கேட்க மறுக்கும் மனித இனத்திற்கு இன்னும் சில்லாண்டுகளில் காதில்லாமல் போகுமெனும் பரிணாமக் கூற்றில் ஆச்சரியமேதுமில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-673726085230653519?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/673726085230653519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=673726085230653519' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/673726085230653519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/673726085230653519'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2011/04/blog-post.html' title='ஒலிநடனம்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-tsRl0yNlC84/TaNAg9mpEHI/AAAAAAAAFJg/1dq0VqXCHWs/s72-c/IMG_1801.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-1798591077884261140</id><published>2011-01-30T05:51:00.001-08:00</published><updated>2011-02-03T08:03:57.569-08:00</updated><title type='text'>அங்காடி நாய்</title><content type='html'>&lt;strong&gt;செல்வத்தின் உச்சமும்&lt;br /&gt;வறுமையின் எச்சமும்&lt;br /&gt;-வைரமுத்து (பெய்யெனப் பெய்யும் மழை)&lt;br /&gt;&lt;br /&gt;மரணப்படுக்கையில் இருப்பவரின்&lt;br /&gt;ஞாபகத்திலாடும்&lt;br /&gt;கடைசி முகங்களில் ஒன்று&lt;br /&gt;ஒரு வேசியினுடையதாகவும்&lt;br /&gt;இருக்கலாம்.&lt;br /&gt;- மகுடேஸ்வரன் (காமக்கடும்புனல்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(பெண்ணுக்குப் பெயர் வைக்காத பிடிவாதத்துடன் இன்னுமொரு கதை)&lt;br /&gt;&lt;br /&gt;இரகுராமன். 12 வருடங்களாக எனது நண்பன். அவனுக்குத் திருமணமாகி ஒருமாதங்கூட முடிந்திருக்கவில்லை. மூணாறு அந்தமான் டார்ஜிலிங் சிம்லா என்று எங்கேயோ இருப்பார்கள் என்ற நினைப்பில் அவனுக்குப் போன் செய்வதைத் தவிர்த்து வந்தேன். சரியாக 25 நாட்கள் கழித்து ஒரு வெள்ளிக்கிழமையில் அவனே அழைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசலை அடைந்தபோது இரவு 8 மணி. வாட்ச்மேன் அனுமதிக்கவில்லை. ரகு ஏதோவொரு சன்னலில் இருந்து கையசைத்தபின் அனுமதிக்கப்பட்டேன். அங்கிருந்த கார் கண்ணாடி ஒன்றில் தலைமுடி சரிசெய்து, அவனது தளத்தை அடைந்தபின் அங்கிருந்த வீடுகளில் எதுவென்று தெரியாமல், கதவு திறந்திருந்த ஒரு வீட்டின் அருகில் சென்றேன். ரகுவின் மனைவிபோல் ஒருத்தி சோஃபாவில் சம்மணக்காலிட்டு சின்னத்திரைக் குடும்பவிவகாரங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள். ரகுவின் மனைவியேதான். இடதுகைப்பழக்கம். அழைப்புமணி அழுத்த வலதுகை உயர்த்தியபோது பின் வீட்டில் இருந்து ரகு கூப்பிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;'டேய் சேகர். இந்த வீடு. என்ன மறந்திட்டியா?'&lt;br /&gt;உள்ளங்கை குவித்து தோளில் தட்டினான்.&lt;br /&gt;'ஓ..... சரியா ஞாபகம் இல்லை. கல்யாணத்துக் முன்னாடி வீடுதேடி அலஞ்ச்சப்ப வந்தது'&lt;br /&gt;கதவை உள்தாழிட்டான்.&lt;br /&gt;'எதிர்வீட்டுப் பொண்ணு எடது கைல ரிமோட் யூஸ் பண்ணிட்டி இருந்துச்சு. ஒன்னோட மனைவியோன்னு கொழம்பிப் போய்ட்டேன்'&lt;br /&gt;'ஞானசேகர்ட்ட புடிச்சதே யானமாதிரி இந்த ஞாபகசக்திதான்'&lt;br /&gt;ஆள்காட்டிவிரலால் என் இடது நெற்றிப்பொட்டில் குத்தினான்.&lt;br /&gt;'அவதான் என் ஒய்ஃப்'.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு அறையாகச் சுற்றிக்காட்டினான். கல்யாணத்திற்கு முன் இருவரின் வாழ்க்கைகளையும் பிரதிபலிக்கும் புகைப்படங்கள் அலமாரிகளையும் மேசைகளையும் நிரப்பியிருந்தன. எனக்கு நன்கு பரிட்சயப்பட்டிருந்த ரகுவின் பழைய புகைப்படங்களை அவன் மனைவியின் புகைப்படங்களுக்கு இடையே பார்க்கும்போது, ரகு எனக்கு மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தான். இரண்டு தனித்தனி 'என்' விருப்பங்கள், ஓர் 'எங்கள்' விருப்பமாகியிருப்பதை வீடு ரம்மியமாகச் சொல்லியது. எனது அப்போதைய மனநிலையை எப்போதோ அனுபவித்த ஒருவன் சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போயின. 'ஆணால் வீட்டைத்தான் உருவாக்க முடியும்; பெண்ணால்தான் குடும்பத்தை உருவாக்க முடியும்'. ரகு அதிர்ஷ்டசாலி.&lt;br /&gt;&lt;br /&gt;ஹாலில் போர்வை விரித்து அமர வைத்தான். அவன் மட்டும் லுங்கிக்கு மாறிக்கொண்டான். சாப்பாடு பரிமாறினான். சாப்பிட ஆரம்பித்தோம்.&lt;br /&gt;'எப்டி இருக்கு என் மனைவி சமையல்?'&lt;br /&gt;'நல்லாருக்கு'&lt;br /&gt;நண்பனின் புதுவீட்டில் புதுமனைவியின் அறிமுகம்கூட இல்லாமல் அவள் சாப்பாட்டைச் சாப்பிடுவது என்னவோபோல் இருந்தது.&lt;br /&gt;'ஓன்னோட ஒய்ஃப்?'&lt;br /&gt;கேள்வியின் நீளத்தை வைத்தே புரிந்துகொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;'காலையில் எதிர்வீட்டுப் பொண்ணு ஏதோ வந்து சொன்னா. இவளும் இன்னைக்கி நைட்டு மட்டும் அந்தப் பொண்ணுக்குத் தொணையாப் படுத்துக்கிறேன்னா. என்னான்னு கேட்டா பொம்பளைங்க சமாச்சாரம்னு சொல்லமாட்டேன்டா. அந்தப் பொண்ணு ஹஸ்பண்ட் வேற ஊர்ல இல்லை. அந்தப் பொண்ணு தனியா இருக்கும்போல'&lt;br /&gt;சிக்கனின் காலெலும்பில் இருந்து சதையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;'ஒருவாரமா ஒருவிசயம் என்னெ உறுத்திக்கிட்டு இருக்கு. யாருக்கிட்டயாவது மனசுவிட்டுப் பேசுனா பரவாயில்லன்னு தோணிச்சு. நீதான் அதுக்குச் சரியான ஆளு. அதான் ஒன்னக் கூப்டேன்'&lt;br /&gt;ஒரு குடும்பஸ்தன் தனது பிரச்சனைகளுக்கு, தனியாய்த் திரியும் நட்புக்காரனைத் தூண்டில் புழுவாய் உபயோகிக்கப் போவதுபோலத் தோன்றியது. சாப்பாடு இறங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒன்னோட பேரச்சொல்லி மனைவிக்கிட்ட இன்னக்கி ஒருநாள் மட்டும் கெஞ்சிக் கூத்தாடி பெர்மிஷன் வாங்கி வெச்சிருக்கேன் சரக்கடிக்க'&lt;br /&gt;இது வேறயா? எந்தத் தாயாவது தம்புள்ளயக் கெட்டவன்னு ஒத்துக்குவாளா? எந்த மனைவியாவது தம்புருசன விட்டுக்குடுப்பாளா? வீட்டுக்கு வந்த ஒருவனைத் தன் கணவனுடன் மதுவருந்தச் சொல்லிவிட்டு இன்னொருவீட்டில் ஒருபெண் படுத்துக் கொண்டால் என்னைப்பற்றி அவள் எவ்வளவு கீழ்த்தரமான கருத்து வைத்திருப்பாள்! போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும், போகட்டும் சேகருக்கே என்று கைகழுவினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்ட பாத்திரங்களை அப்புறப்படுத்திவிட்டு குளிர்சாதனப்பெட்டியில் இருந்து 4 பியர் பாட்டில்களை எடுத்து வந்தான்.&lt;br /&gt;'சில செல்போன்கள் தானாகவே ஆன் ஆகிடும். நம்ம பேசுறது வெளி ஆட்களுக்குக் தெரியக்கூடாதுன்னு ஒரு முன்ஜாக்கிரதைதான். போதையில எந்த விசயமும் விட்டுப்போகக்கூடாதுன்னு என்னென்ன பேசணும்னு ஏற்கனவே பாய்ண்ட்ஸ் எடுத்து வெச்சிருக்கேன்'&lt;br /&gt;அவனது இடது பக்கத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்த வெள்ளை காகிதத்துண்டை வைத்து அதன்மேல் எங்களது செல்போன்களை வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏதோ முக்கியமான விஷயம், சொல்றதுக்கு நான்தான் சரியான ஆளுன்னு சொன்னியே. சொல்லு, சியர்ஸ்' என்றேன்.&lt;br /&gt;'சியர்ஸ் for ஜெஸ்டினா வாசுதேவன்' என்றான்.&lt;br /&gt;ஒருகனம் திடுக்கிட்டேன். இ-மெய்லில் கல்யாணப் pdf / jpg அனுப்பும் இக்காலத்தில்கூட, நேரில் வந்து என்னை அழைத்த அந்நாளில், இரவு தூங்கும்போது ரகு முனகிய அதேபெயர். மறுநாள் கல்யாணப் பத்திரிக்கை படித்து, அது அவனது வருங்கால மனைவி பெயரில்லை என்று தெரிந்தவுடன், கல்யாண அலைச்சலில் அசதியில் முனகியிருப்பானென்று நானும் சுவாரசியம் காட்டாமல் விட்டுவிட்ட அதேபெயர்! இரண்டு மாதங்களுக்குமுன் பின்னிரவில் ஒருபெண் என் செல்பேசியில் அழைத்து சொன்ன பல பெயர்களின் ஊடே நான் கவனித்த அதேபெயர்! இன்று மூன்றாவது முறையாக கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'யார்டா அது?' வெகு இயல்பாகக் கேட்டுக் கொண்டே பியர் ஒரு மடக்கு.&lt;br /&gt;'தேவ்டியா' வெகு இயல்பாகச் சொல்லிக் கொண்டே பியர் மடக் மடக் மடக்.&lt;br /&gt;எனக்குப் புரையேறியது.&lt;br /&gt;'பாத்து மெதுவா. என்ன ஏறிடுச்சா?'&lt;br /&gt;'Asian flush. அத விடு. நீ சொன்னது புரியல'&lt;br /&gt;'ஜெஸ்டினா வாசுதேவன்னு ஒரு பிராஸ்ட்டிடியூட்'&lt;br /&gt;'ஜெஸ்டினா?' இழுத்தேன்.&lt;br /&gt;'வாசுதேவன்' முடித்தான்.&lt;br /&gt;'ஜெஸ்டினாவும் வாசுதேவனும் சேத்தா?'&lt;br /&gt;'ஆமாடா. புணர்ச்சி விதி பேசுறப்ப, நேர்நிரை புளிமான்னு கேக்காதா ப்ளீஸ்'&lt;br /&gt;சதுரங்கத்தில் Stalemate என்றொரு நிலையுண்டு. அது புரியாதவர்கள் என்னுடைய இப்போதைய நிலையைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'சேகர், நான் ஒரு பொண்ணோட படுத்திருக்கேன்னா நம்புவியா?'&lt;br /&gt;வந்ததில் இருந்தே சென்சார் செய்யப்பட வேண்டிய வார்த்தைகளையே ரகு உபயோகப்படுத்துவது எனக்கு அசௌகரியமாக இருந்தது.&lt;br /&gt;'கண்டிப்பா. ஏன்னா நீ கல்யாணம் ஆனவன். இதுல நம்புறதுக்கு ஒண்ணுமில்ல'&lt;br /&gt;'I mean கல்யாணத்துக்கு முன்னாடி'&lt;br /&gt;அந்நொடி வரை அவனை ஜெஸ்டினா என்ற பெண்ணுடன் சேர்த்து சந்தேகிக்க எனக்கு தோன்றியிருக்கவில்லை. ரகு அப்படிப்பட்டவன் இல்லை. அதெல்லாம் எப்படா செய்தாய் என்ற நோக்கில் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'சின்ன சபலம். அப்டி என்னதான் இருக்குன்னு பாத்துடலாம்னு தோணிச்சு'&lt;br /&gt;No objection Your Honour நிலை எனக்கு.&lt;br /&gt;'இன்டர்நெட்ல தட்டுனா 1000 சைட்ஸ். லெட்சம் பேர். டெய்லி நியூஸ் பேப்பர்லே Classifieds பகுதியில Escortsன்னு ஒரு Columnமே வருது. அப்டி இப்டி ஜெஸ்டினாவப் புடிச்சேன்'&lt;br /&gt;Yes proceed என்று நான் சொல்லவேயில்லை.&lt;br /&gt;'ஜஸ்ட் ஒரு நைட். ஆறுமணிநேரம். அதுலயும் ரெண்டுமணிநேரம் தூங்கிட்டேன். அகரமும் னகரமும் அதுமட்டுந்தான்'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்களுக்குமுன் கை அசைத்துக் காட்டினான்.&lt;br /&gt;'என்னடா நான் பண்ணது தப்பா?'&lt;br /&gt;'மாட்டிக்காத வரைக்கும் யாரும் தப்பே இல்ல'&lt;br /&gt;ஏதோ பேச வேண்டும் என்பதற்காகப் பேசினேன். அதிர்ச்சியில் பேசியதால் முதல் வார்த்தை தொண்டைக்குள் மாட்டிக் கொண்டு குரல் தடுமாறியது. நிமிர்ந்து பார்த்தான்.&lt;br /&gt;'ஒனக்குத்தான் சொன்னேன்'&lt;br /&gt;யாருக்கோ சொன்னதுபோல் குனிந்து கொண்டான்.&lt;br /&gt;'வாய்ப்புக் கெடைக்காத வரைக்கும் எவனும் நல்லவனும் இல்ல. எனக்கு நானே சொல்லிக்கிறேன்' என்றேன்.&lt;br /&gt;'டயலாக்லாம் நல்லாத்தான் இருக்கு'&lt;br /&gt;'உயிர் பிழிஞ்சு சொல்றதெல்லாம் யாரும் கண்டுக்கிறதே இல்ல. யாரோ சொன்னதைச் சொன்னா ஆஹா ஓகோன்னு பாராட்டுக்கள்'&lt;br /&gt;'ஓ சுட்டதா? Customerரத் திருப்திப் படுத்துற மாதிரி நீதான் மசாலா சேத்துச் சொல்லணும்'&lt;br /&gt;'கஸ்டமர் ஸேடிஸ்ஃபேக்ஷன்தான் முக்கியம்னா ஒரு விபச்சாரிக்கும்..... ஓ...... சாரி.... சாரி... தப்பான உதாரணம்'&lt;br /&gt;'பரவாயில்ல சொல்லு'&lt;br /&gt;'ஜெஸ்டினாவப் பத்தி பேசுறப்ப இப்படி ஒரு வார்த்த சொன்னது தப்புதான். In fact அதக்கூட நான் சொல்லல. நடிகர் சிவக்குமார்ன்னு நெனக்கிறேன். Any how, sorry'.&lt;br /&gt;'ஓகே. இனிமே அப்டி சொல்லாதே. கால் கேர்ள்னு சொல்லு'&lt;br /&gt;&lt;br /&gt;விபச்சாரி வேசி அவ்சாரி தேவடியாள் என்ற பதங்களை வெறுப்புக்குள்ளான எப்பெண்ணின்மீதும் தொடுக்கலாம் என்ற இச்சமூகத்தில், உபயோகப்படுத்தபட்ட ஆணுறையென பெண்ணை மிதிக்கும் கீழ்த்தர ஆண்கள் பட்டியலில் ரகுவும் சேர்ந்துவிட்டானோ எனப் பயம் வந்தது. இதுதான் சரியான தருணம், தொடு கணையை!&lt;br /&gt;'சரிடா. அந்த so called கால் கேர்ள்னால இப்ப என்ன? ஏதாவது மஞ்ச நோட்டீஸ் வியாதி கியாதி?'&lt;br /&gt;முதன்முதலாகச் சிரித்துக் காட்டினான். நானும் சிரித்து வைத்தேன்.&lt;br /&gt;'அந்த ஜெஸ்டினா வாசுதேவன் இப்ப என்னோட எதிர்வீட்டுக்காரன் பொண்டாட்டி'&lt;br /&gt;பாதிப்பாட்டிலை ஒரே மடக்கில் குடித்தான். எனக்குக் குடித்ததெல்லாம் பாதியாக இறங்கிப் போனது. இதுக்கு மேலயும் Stalemate புரியாதவர்களுக்கு ஒரு Checkmate.&lt;br /&gt;&lt;br /&gt;(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;சுவர்க்கடிகாரத்தின் வினாடிமுள் மட்டும் சத்தம் போட்டுக் கொண்டே அடிமேல் அடி வைத்துக்கொண்டிருந்தது. இருவருமே அடுத்த அடி எடுத்துவைக்க முன்வராமல் அவரவர் பாத்திரங்களில் கவனம் செலுத்துவதுபோல் பாவனை செய்துகொண்டிருந்தோம். அமைதியைக் கலைக்கும் நோக்கில் எழுந்துபோய் சிறுநீர் கழித்துவிட்டு முகம்கழுவி வந்தேன். முழங்கையால் முட்டுக் கொடுத்து பின்னால் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவன் கண்கள் என்னை நேரே நோக்கின. நான் ரெடி நீ ரெடியா மாதிரி அவன் தோற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;'அந்தப் பொண்ணுக்குத் தொணையாத்தான் ஒன்னோட மனைவி?'&lt;br /&gt;'யெஸ்'&lt;br /&gt;தலையை முன்பின் ஆட்டிக்கொண்டே, 'ஸ்' ஐ ரொம்ப அழுத்தினான்.&lt;br /&gt;'அந்த வீட்டுல வேற யாருமில்லையா?'&lt;br /&gt;'புருஷன் மட்டும். சைதாப்பேட்டையில ஸ்வீட் ஸ்டால் வெச்சிருக்கான்'&lt;br /&gt;'எத்தன நாளா இந்த வீட்ல இருக்காங்க?'&lt;br /&gt;'எங்க கல்யாணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னாடித்தான் அவங்க கல்யாணம். நான் இங்க வந்து மூணுவாரம் ஆகுது. அவங்க அதுக்கு முன்னாடியே வந்துட்டாங்க'&lt;br /&gt;'அந்தப் பொண்ணு blackmail ஏதாவது....?'&lt;br /&gt;'என்னெ அடையாளம் தெரிஞ்சுக்கிட்டாளான்னு கன்ஃபார்மா தெரியல'&lt;br /&gt;'நீ மட்டும் எப்டி அவதான்னு கன்ஃபார்மா சொல்றே?'&lt;br /&gt;நிமிர்ந்து உட்கார்ந்தான்.&lt;br /&gt;'முதல் வெட்கம். முதல் முத்தம். முதல் நிர்வாணம். இப்படி என்னோட பல முதல்கள். கடைசி வரைக்கும் மறக்க முடியாது'&lt;br /&gt;'அதுவும் சரிதான். ஆனா ஒலகத்துல ஒரே மாதிரி பலபேர் முக ஒற்றுமை இருக்க வாய்ப்பிருக்கு இல்லையா?'&lt;br /&gt;'சிங்கப்பல்லு தெத்துப்பல்லு'&lt;br /&gt;'100 வருசத்துக்கு முன்னாடி வங்காளத்துல வாழ்ந்த ரவீந்திரநாத் தாகூருக்கும், கர்நாடகா அனில் கும்ளேக்கும் இளவயதில் ஒரேமாதியான முகத்தோற்றத்தோட வெச்சது இயற்கையோட ஒரு விந்தைனா, nothing unusual in தெத்துப்பல்லு also. Its all about your false memory'&lt;br /&gt;'Agreed. பணத்த கையால எண்ற ஸ்டைல், தரையில கால மடக்கி ஓட்கார்ற மொறை, வெறிச்சுப் பாத்துட்டு படபடன்னு சிமுட்ற கண்ணிமைகள். இந்த மூணு வாரத்துல இப்டி நெறைய ஒற்றுமைகள் கவனிச்சேன். இதுக்குமேல என்ன வேணும்? பச்சையா சொல்லனும்னா, அவ மாரு சைஸ் அப்புடியே.....'&lt;br /&gt;காதுகளுக்கு மட்டும் ஏன் தானாகவே மூடிக்கொள்ளும் சக்தியில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஓரூரில் சட்டவிரோதமான மதுபானநடன விடுதியொன்றில் தமிழன் ஒருவன், 10 வயது மூத்த தமிழ்ப்பெண்ணொருத்தியின் மார்புக்காம்புகளையும் புட்டத்தையும் வருடிக்கொண்டிருந்தபோது, அவளுக்கும் தனது இறந்துபோன தாயின் பெயரென்று தெரிந்தவுடன், முகம்கவிழ்ந்து ஓடிவந்து தேம்பி அழுதபோது,&lt;br /&gt;'பெண்ணின் மார்பென்பது&lt;br /&gt;அயல்நாட்டில் காமக்குறி&lt;br /&gt;தமிழ்நாட்டில் தாய்மை'&lt;br /&gt;என்று எங்கள் நண்பன் சேரலாதன் சொன்னதை, உணர்வுப்பூர்வமான உதாரணமாகச் சொன்ன அதே ரகு, இன்று இப்படிப் பேசுவதை என்னால் சீரணிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'சரிடா. ரெண்டு பேருமே ஒரே ஆளாவே இருக்கட்டும். ஒரு ஆம்பள அவள மனைவியா ஏத்துக்கிட்டான்ல? ஒனக்கு என்ன பிரச்சன?'&lt;br /&gt;'அதான் சந்தேகமே. இவளப்பத்தி எல்லாமே தெரிஞ்சுதான் கல்யாணம் நடந்துச்சான்னு எனக்கு டவுட்டு. அவ கல்யாணமே ஒரு கொளறுபடி கேசு'&lt;br /&gt;'என்னாச்சு?'&lt;br /&gt;'முகூர்த்த நேரத்துல மாப்ள சிங்கப்பூர்ல இருந்து வல்லன்னு, கொழுந்தன் தாலிகட்டி, பின்ன மாப்ள வந்து, மொதத் தாலியப் பிரிச்சுப்புட்டு மறுதாலி'&lt;br /&gt;தாலியெல்லாம் ஊருக்காக; பொண்ணோட மனசவிட வேற வேலியில்லன்னு ரகுவே சொல்லியிருக்கான்னு நான் இப்ப சொன்னா எடுபடாது.பொதுவாக, தான் விருப்பப்பட்ட பெண்ணை இன்னொருவன் கட்டிப்போனால், இல்லாததும் பொல்லாததுமாக அப்பெண்ணைப் பற்றி பரப்பிவிடுவதுதான் தொன்றுதொட்டு வரும் பாரம்பரியம். பிடிக்காத ஒருபெண் பிடித்து செய்த விசயங்களைத் தனக்குப் பிடிக்காமல் ரகு புலம்புவதுதான் எனக்குப் பிடிபடவில்லை. மொத்தத்தில் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு கலாச்சாரத்தைக் குறைசொல்லிக் கொண்டிருக்கிறான் ரகு. ரகு மட்டுமல்ல, இது ஒரு சமூகத்தின் புலம்பல். நமக்குப் போதிக்கப்பட்டவைகள் அப்படி!&lt;br /&gt;&lt;br /&gt;'ஓகே. அவளப்பத்தி எல்லாம் தெரிஞ்சுதான் கல்யாணம் நடந்துச்சுன்னு வெச்சுக்க. இப்பவும் ஒனக்கு ஏதாவது பிரச்சனையாடா?'&lt;br /&gt;'லிஃப்ட் படிக்கட்டு பார்க்கிங் ஏரியா கடைத்தெரு எங்க பாத்தாலும் சிரிக்கிறா. என் மனைவியோட உடன்பிறவா மக்க மாதிரி கூடவே திரியுறா'&lt;br /&gt;'அவனவன் பக்கத்து வீட்டுப் பொண்ணு கடைக்கண் பார்வை கெடைக்கலையேன்னு மலையளவு ஏங்குறான். நீ ஏன்டா இப்புடி? வேலைக்குப் போகாத பக்கத்து வீட்டுப் பொம்பளங்க பேசிக்கிறதெல்லாம் சகஜம்டா'&lt;br /&gt;'அவங்க புருஷன் பொண்டாட்டி ஒரு சினிமாவுக்குப் போனா எங்களையும் கூப்புட்றா'&lt;br /&gt;'கோழிலருந்து முட்ட வந்துச்சு'&lt;br /&gt;'அவங்க ஊட்டி பிக்னிக் போறதுக்கு நாங்களும் வரணுமாம்'&lt;br /&gt;'முட்டைலருந்து கோழி வந்துச்சு'&lt;br /&gt;'அவளோட ஒவ்வொரு நடவடிக்கையும் பார்வையும் சிரிப்பும் என்னெ காட்டிக் கொடுத்துருமோன்னு பயமா இருக்கு. இப்புடி பயந்து பயந்தே என்னையே நானே காட்டிக் கொடுத்துக்குவேனோன்னு வேற பயமா இருக்கு. வாழ்க்கையத் தொடங்க வேண்டிய நேரத்துல இப்புடி பூச்சாண்டி காட்றா'&lt;br /&gt;'மனைவிக்கு ஜெஸ்டினா விஷயம் தெரியாது?'&lt;br /&gt;'No. Never by my mouth'&lt;br /&gt;'சூப்பர். இவ்வளவு நேரம் பேசுனதுக்கு ஒரு நல்ல கேள்வி, ஒரு நல்ல பதில்'.&lt;br /&gt;&lt;br /&gt;'என் ஒய்ஃபோட நீ பேசினதில்ல. அவ அப்பாவிடா, வெகுளிடா. கண்மூடித்தனமா என்னெ நம்புறா. நம்பியே இருக்கா. அவளுக்கும் ஒரு காதல் அப்புடி இப்புடின்னு ஏதாவது இருந்திருந்தா என்னோட கதையையும் சொல்லி மைனஸ் இன்ட்டு மைனஸ் கிவ்ஸ் பிளஸ், அப்புடின்னு சின்னவீடு ஹீரோயின் மாதிரி அவ வாயாலையே இன்னொரு பொம்பளையப் பாக்கச் சொல்ற ஒரு கேவலமான புருசனா என்னால வாழமுடியும். Company of womenன்னு குஷ்வந்த் சிங் புத்தகத்துல படிச்சப்ப சிரிக்கவெச்ச முதலிரவு, என்னோட வாழ்க்கையில அதே மாதிரி ஒரு பொண்டாட்டியோட நடக்குறப்ப சிரிக்கமுடியல. அவள ஏமாத்துற மாதிரி என்னெ நானே ஏமாத்திக்கிற மாதிரி தெரியுது. I feel guilty before her innocence'. ரகுவின் கண்களில் முண்டியடித்துக் கொண்டு நீர்த்துளிகள் நின்று கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் என்பது உயர்ந்து வளர்ந்த கோட்டை. வெளியே இருப்பவர்கள் உள்ளேபோகத் துடிக்கிறார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியேற முடியாமல் துடிக்கிறார்கள். இப்படிப்பட்ட வார்த்தை ஜாலங்கள் எல்லாம் உண்மையோ என்று தோன்றியது. மோகப்பித்து முப்பதுநாள் காலக்கட்டத்திற்குள்ளேயே புத்திப்பித்து பிடித்தவன்போல் பேசுகிறான். டென்னிஸில் மட்டும் லவ் பூச்சியமாக இருக்கட்டும், தனது இல்லறத்தில் வேண்டாமெனத் தவிக்கிறான் ரகு.&lt;br /&gt;&lt;br /&gt;'எவனெவனோ என்னென்னமோ பண்றான். நான் தப்பேதும் செய்யல. ஜெஸ்டினா விருப்பத்தோடத்தான் பண்ணினேன். I paid too'&lt;br /&gt;பெண்ணை ஆக்கிரமிக்கும் எல்லாரும் சொல்லும் பண்டைகால தர்க்கம். ஆதித்தொழில் என்று சேர்த்துச் சொல்லாமல் விட்டுவிட்டான். இப்போது ரகு எழுந்துபோய் சிறுநீர் கழித்துவிட்டு முகம்கழுவி வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'மணி 11 :45. Let me bury this topic with this day. ஒன்ன மாதிரி ஏதோ ஒரு குழந்தையத் தூக்கி, அதுக்கிட்ட பிரச்சனைகளைச் சொல்லி அழுது, குழந்தையோட பல முகபாவங்களப் பாத்து, அதுல அமைதிதேடுற பக்குவம் எனக்குக் கெடையாது. பாவங்களைக் காதுகொடுத்து கேக்குற சாமியும் எங்கள்ல கெடையாது. ஆனா இன்னொரு மனுசன்ட தன் மனப்பாரத்தை வெளிப்படையா சொல்லும்போது மனசு லேசாகிடும்னு எனக்குப் பலமான நம்பிக்கை இருக்கு. இதுவரைக்கும் எங்க அண்ணன் செத்ததப் பத்தி ஒனக்கிட்ட மட்டும்தான் சொல்லியிருக்கேன். 11 வருசத்துக்கு முன்ன அதக் கேட்ட நீ, இப்பவும் கேப்பங்கிற நம்பிக்கையில்தான் ஓங்கிட்ட சொன்னேன்'.&lt;br /&gt;ரகுவின் அண்ணனின் ஞாபகத்தில் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டக்கென்று இடதுபக்கம் திருப்பி சட்டைக்காலரில் தொடைத்துக் கொண்டேன். அவனும் அழுதுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;தூங்கும்போது சொன்னான்.&lt;br /&gt;'I feel completely free now. இந்த நொடியில இருந்து ஜெஸ்டினா வாசுதேவன்னு யாரையும் எனக்குத் தெரியாது. ஒருவேள என் மனைவிக்குத் தெரிய வந்தா, அவளச் சமாளிக்கிற பெரும்பொறுப்பு என் நண்பன் சேகருடையது'&lt;br /&gt;'கன்ஃபார்மா அந்தப் பொண்ணுதான்னு தெரியாம நீயே ஒரு பிரச்சனைய உண்டாக்கிக்கிற. அதனால பல பயங்கள்; பல கேள்விகள்; எல்லாத்துக்கும் ஒங்கிட்டே தெளிவான பதில்களும் இருக்கு. இதெல்லாம் பாக்குறப்ப கெல்வின் கார்டரோட தற்கொலைக் குறிப்புதான் ஞாபகம் வருது'&lt;br /&gt;'என்னடா அது?'&lt;br /&gt;'சரியான வாக்கியம் ஞாபகம் இல்ல. நெட்ல பாத்துக்க'&lt;br /&gt;தேடினான்.&lt;br /&gt;'ஸ்பெல்லிங்?'&lt;br /&gt;'Kelvin Carter'&lt;br /&gt;'ok'.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப் படித்துவிட்டு வெள்ளைக்காகிதக் குறிப்புகள் எல்லாம் சொல்லப்பட்டுவிட்டனவா என்று சரிபார்த்தான். ஒருவிசயம் விட்டுப்போய்விட்டதென என்னை எழுப்பினான்.&lt;br /&gt;'அதான் பொதைக்கப் போறேன்னு சொன்னியே, திரும்ப ஏன்டா எழுப்புற?'&lt;br /&gt;அவன் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு தூங்கிப்போன அவ்விசயம், எனது எல்லா செல்களையும் எழுப்பிவிட்டு அதன்பிறகு தூங்கவிடவேயில்லை.&lt;br /&gt;'அன்னைக்கி ஜெஸ்டினா கெளம்புறப்ப என்னோட மொபைல் நம்பர் கேட்டா. எனக்குப் பயம். எனக்கு மனப்பாடமா தெரிஞ்ச ஒன்னோட நம்பர சொல்லிட்டேன். தூக்கத்துல எழுப்பிக் கேட்டாலும் சொல்லுவோம்ல. ஹா ஹா ஹா ஹா'&lt;br /&gt;சரியான ஆள் என்று அவன் என்னைச் சொன்னதன் அர்த்தம் அப்போதுதான் உறைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ரகு தூங்கிவிட்டான். இருட்டுக்குள் ஆந்தைபோல் விழித்திருந்தேன். ஜெஸ்டினா வாசுதேவன் என்ற பெயரை இரண்டாம் முறை நான் கேட்டிருந்த நிகழ்ச்சி நினைவில் வந்தது. அந்நிகழ்ச்சியுடன் ரகுவைச் சம்மந்தப்படுத்தி பார்க்கும் அளவிற்கு, அவ்வளவு நேரம் ரகு என்னிலிருந்து தூரப்பட்டுவிடவில்லை. இப்போது கட்டாயம் சந்தேகப்பட வேண்டிய தருணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மாதங்களுக்கு முன் பின்னிரவு மூன்று மணிக்கு ஒரு பெண்குரல் என் செல்பேசியில் அழைத்தது.&lt;br /&gt;'சார் இது ஒங்க செல்போனா இருந்தா தொடர்ந்து கேளுங்க. இல்ல கட் பண்ணிடுங்க'&lt;br /&gt;நடுங்கும் குரல். மதுவாடை குரலிலேயே வீசியது.&lt;br /&gt;'ஒங்களை எனக்குத் தெரியாது. ஒங்களுக்கு என்னெ தெரிய வாய்ப்பிருக்கு. ஐஸ்வர்யா, அர்ச்சனா, சுகப்ப்ரியா, ஜமுனா, ...... ஜெஸ்டினா வாசுதேவன், ..... இந்த 15 பேர்கள்ல ஏதாவது ஒரு பேர்ல நான் ஒங்கள சந்திச்சிருக்கலாம்.....'&lt;br /&gt;எழுதிவைத்துப் படிக்கிறாள். அவள் சொல்ல வரும் விஷயம் சரியான ஆளுக்குத்தான் போய்ச் சேரவேண்டும் என்பதில், அவளின் வார்த்தைகள் படுகவனமாய் இருந்தன. தள்ளாடும் குரல் தள்ளாடாத நோக்கம். என்னிடமிருந்து ஒரு பதிலும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு நிமிடங்கள் வாசித்துவிட்டு கட் செய்துவிட்டாள். யாரோ விளையாட்டுத்தனமாக wrong number என்று நினைத்து, வழக்கம் போல் Call Logஐச் சுத்தமாக Delete செய்துவிட்டு தூங்கிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் விழித்தவுடன்தான் எனக்கு விசயத்தின் வீரியம் புரிந்தது. எனக்குத் தெரிந்த ஒரு மனநல ஆலோசனை மையத்தைத் தொடர்பு கொண்டேன்.&lt;br /&gt;'அந்தப் பொண்ணு இன்னும் ஒரு ரெண்டு வாரத்துல கல்யாணம் செய்யப்போதாம் மேடம். அதுக்குள்ளே, தலையே வெடிச்சுரும் போல இருக்காம். கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல மொத பிளாட்பார்ம்ல நாளைக்கி நிக்குமாம். பணம் தரத் தயார்னு சொன்னிச்சு மேடம்'&lt;br /&gt;அவளைக் கண்டுபிடித்து, கவுன்சிலிங் செய்தார்கள். அவள் கதையை மேடம் சொன்னபோது பயமாக இருந்தது.&lt;br /&gt;'கப்பல் மாலுமிகள் தரைக்கு அடியில் விபச்சாரம் செய்த மண். பெயர் மறைத்து வாழும் ஜெஸ்டினா வாசுதேவன்கள், சமுதாயத்துல இயல்பா வாழணும்னு நெனச்சா அவர்களின் பழைய பெயர்களை ஞாபகப்படுத்த பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள்' என்றார் மேடம்.&lt;br /&gt;&lt;br /&gt;தூங்கவே முடியாமல் அதிகாலை ஐந்து மணியளவில், ரகுவிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட்டேன். வாட்ச்மேன் தடுக்கவில்லை. 11 மணியளவில் ரகு போன் செய்தான்.&lt;br /&gt;'ரகு, பச்சையா சொல்லணும்னா இடது மாருக்குக் கீழ மச்சம்; அப்பெண்டிசைடிஸ் தழும்பு. டீசண்டா சொல்லணும்னா ஒன்னோட எதிர் வீட்டுப் பொண்ணுக்குக் கண்டிப்பா வலது கண்ல மச்சம் இருக்காது'&lt;br /&gt;ரகு பேசவேயில்லை.&lt;br /&gt;கட் செய்துவிட்டு நேரில் வந்தான்.&lt;br /&gt;'நீ எப்டிடா சேகர்?'&lt;br /&gt;'இதுல என்னாடா ஆச்சர்யம் ரகு. நீ பிம்ப்ட (pimp) ஒரு 6000 ரூவா கொடுத்துட்டு, ரெண்டு பேர்டயும் என் நம்பர வேற கொடுத்துட்டு வந்திருக்க. அந்தக் காசு எங்க எங்கெல்லாம் போனுச்சோ? ஏதோ ஒரு மார்க்கெட்டுல வெடிக்கிற குண்டுல ஒன்னோட பங்களிப்பு கூட இருக்கலாம். ஒருவேள அந்தப் பொண்ணு இறந்துபோய் என்னையும் சந்தேகத்துல விசாரிச்சிருக்கலாம். இல்ல, வாடிக்கையாளரே இல்லாதப்ப என்னக் கேட்டிருக்கலாம். இப்புடி நெறைய options'&lt;br /&gt;'சாரிடா. வார்த்தையால கொல்லாதடா'&lt;br /&gt;'போடா வீட்டுக்குப் போ. ஜெஸ்டினா வாசுதேவன்னு ஒருத்தி இருப்பாளோன்னு அரைகொறை மனசோட வாழாத. இப்ப திருப்தியா? அப்படி ஒருத்தி இல்லவே இல்ல. சந்தோசமா வீட்டுக்குப் போடா'&lt;br /&gt;'உண்மையிலேயே கோவம் இல்லையே?'&lt;br /&gt;'ஒனக்கிட்ட கோவப்படாம வேற யாருக்கிட்ட கோவப்பட முடியும்?'&lt;br /&gt;'உண்மையிலேயே கோவம் இல்லையே?'&lt;br /&gt;'இல்ல நம்பு'&lt;br /&gt;'எப்புடி நம்புறது?'&lt;br /&gt;'ஆஊன்னா நெட்டுல தேடுவியே. போய்த் தேடு. அப்பத் தெரியும் எனக்குக் கோவம் இல்லன்னு. உலகத்திலேயே சின்ன உயில் என்னன்னு போய்த் தேடு'&lt;br /&gt;போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரகுவின் கதை போல், சமூகத்தில் இதுபோன்ற பல பிரச்சனைகள் வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்து சனிக்கிழமை மதியம் முடிந்துவிடுவதில்லை. ஒருவேளை ஜெஸ்டினா வாசுதேவன் என்றொருத்தியை ரகுவின் மனதில் இருந்து நீக்கமுடியாமல் போயிருந்தால், எதிர் வீட்டுப் பெண் ரகுவால் கொல்லப்பட்டிருக்கலாம். ஒருவேளை ஜெஸ்டினா விஷயம் மனைவிக்குத் தெரிய வந்தால், அவளும் நானும் கொல்லப்படலாம். ரகுவும் தற்கொலை செய்து கொள்ளலாம். மறுநாள் தினசரியில் என்னையும் ரகுவின் மனைவியையும் கள்ளக்காதலர்களாகச் சித்தரித்து, ரகுவின் திருமணத்தில் நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் கருப்பு வெள்ளையில் மூன்றாம் பக்கத்தில் வரலாம். மீனவர்கள் தமிழகத்திலும் தமிழர்கள் ஈழத்திலும் கொல்லப்படுவது போல வாடிக்கையாகிப் போன இதுபோன்ற செய்திகளில் சுவாரசியம் காட்டாமல், சப்புக்கொட்டிவிட்டு ஜெஸ்டினா வாசுதேவன்களை உண்டாக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையில் சமூகம் மும்மரமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரகுவிடம் இருந்து குறுந்தகவல். உலகின் மிகச் சிறிய உயிலைக் கண்டுபிடித்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;All to wife - எல்லாம் மனைவிக்கே!&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-1798591077884261140?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/1798591077884261140/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=1798591077884261140' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1798591077884261140'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1798591077884261140'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2011/01/blog-post.html' title='அங்காடி நாய்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-4999060392675476037</id><published>2010-03-23T10:16:00.000-07:00</published><updated>2010-03-23T10:34:39.979-07:00</updated><title type='text'>அந்த 52 வினாடிகள்</title><content type='html'>&lt;strong&gt;முனியாண்டி விலாஸைப்&lt;br /&gt;போன்றதுதான் இந்தியாவும்&lt;br /&gt;&lt;br /&gt;முனியாண்டி எவரென்பதும்&lt;br /&gt;இந்தியா எதுவென்பதும்&lt;br /&gt;யாருக்கும் தெரியாது.&lt;br /&gt;- யுகபாரதி (தெப்பக்கட்டை நூலிலிருந்து)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலறும் அலைபேசியை&lt;br /&gt;அவசரமாக அடக்கி&lt;br /&gt;அழப்போகும் குழந்தையை&lt;br /&gt;அதட்டி வாய்மூடி&lt;br /&gt;ஒட்டிவந்த காதலைத்&lt;br /&gt;தட்டி உதறிவிட்டு&lt;br /&gt;ஒத்திசைக்காத அடுத்தவனை&lt;br /&gt;அஃறிணை வசைசெய்து&lt;br /&gt;இருட்டறையில் அனிச்சையாய்&lt;br /&gt;விறைத்து நிற்கும் நமக்கெல்லாம்&lt;br /&gt;தேசபக்தியை நிரூபிக்க&lt;br /&gt;ஒரு சந்தர்ப்பம்!&lt;br /&gt;&lt;br /&gt;சிரமசைத்து&lt;br /&gt;கரமாட்டி&lt;br /&gt;கண்மூடி&lt;br /&gt;அமர்ந்து&lt;br /&gt;நடந்து&lt;br /&gt;பாடி&lt;br /&gt;இசைத்து&lt;br /&gt;நகைத்து&lt;br /&gt;திரை நிழலாடுபவர்க்கெல்லாம்&lt;br /&gt;தொழில் நிமித்தம்&lt;br /&gt;ஒரு சந்திப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-4999060392675476037?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/4999060392675476037/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=4999060392675476037' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/4999060392675476037'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/4999060392675476037'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2010/03/52.html' title='அந்த 52 வினாடிகள்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-2154674969044052427</id><published>2010-03-09T08:13:00.000-08:00</published><updated>2010-03-09T08:48:05.374-08:00</updated><title type='text'>ஆதிசேசன் படுக்கை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_XAsKAwlHIGY/S5Z7nyKqtqI/AAAAAAAAEn0/qFnaihtZyJI/s1600-h/IMG_0754.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 180px;" src="http://2.bp.blogspot.com/_XAsKAwlHIGY/S5Z7nyKqtqI/AAAAAAAAEn0/qFnaihtZyJI/s320/IMG_0754.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5446676722762823330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணக்கார சாமி&lt;br /&gt;விஐபி வரிசைகளில்&lt;br /&gt;உண்டியல் சேர்கிறது&lt;br /&gt;முழங்கு முரசுடைச் செல்வம்!&lt;br /&gt;&lt;br /&gt;யார் பெற்ற தெங்கம்பழம்&lt;br /&gt;இந்த உள்ளூர் சாமிகள்?&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-2154674969044052427?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/2154674969044052427/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=2154674969044052427' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/2154674969044052427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/2154674969044052427'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2010/03/blog-post.html' title='ஆதிசேசன் படுக்கை'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_XAsKAwlHIGY/S5Z7nyKqtqI/AAAAAAAAEn0/qFnaihtZyJI/s72-c/IMG_0754.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-1275178626485319260</id><published>2010-02-14T09:15:00.000-08:00</published><updated>2010-02-18T06:29:34.862-08:00</updated><title type='text'>உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போது</title><content type='html'>'மரத்துக்கு அடியில் யாரும் இல்லாத போதுதான் தென்னை மட்டையைக்கூட கடவுள் கீழே விழவைக்கிறார்'. இப்படி ஒரு பழமொழி உண்டு. தென்னைமட்டைக்கே இப்படி ஒரு நம்பிக்கை என்றால், அண்டவெளியில் இருந்து திடீரென விழும் விண்கற்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சகமனிதன் உண்டாக்கிய அணுவாயுதங்களுக்கிடையே வாழும் மக்களுக்கு, வலிக்காமல் சாகடிக்கத் தெரிந்த இயற்கையின் இந்த யுத்திகள் எல்லாம் சொற்பம்! அப்படியொரு விண்கல்லின் தாக்குதலால் உண்டான ஏரி ஒன்று, மகாராஷ்டிராவில் இருப்பதாகக் கேள்விப்பட்டு பயணிக்கத் தயாரானேன். புனே (Pune) - அவுரங்காபாத் (Aurangabad) - ஜால்னா (Jalna) - லோனார் (Lonar) கிராமம் - Lonar crater lake.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து நிலையத்தில் இருந்து எந்த ஒரு சிரமமும் இல்லாமல் ஏரியைச் சென்றடைய பெயர்ப்பலகைகள் இருந்தன. விண்கல் உண்டாக்கிய பள்ளத்தின் மாபெரும் கரையின், உடைந்தோ அல்லது அரிக்கப்பட்டோ சிதிலமடைந்திருந்த ஒரு பகுதியில் பெயர்ப்பலகைகள் கொண்டுபோய்ச் சேர்த்தன. சிவன், ஹனுமான், பிள்ளையார் உருவம் தாங்கிய சில இந்துமதக் கோவில்கள் இருந்தன. அதற்கு அடுத்தபடியாக என்ன மதம் என்று ஊகிக்க முடியாதபடி சிலமடைந்திருத்த இன்னொரு கோவில். சிவன் கோவிலின் நேரெதிர்புறமுள்ள மலையிலிருந்து எடுக்கப்பட்ட அக்கோவிலின் புகைப்படம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A href="http://2.bp.blogspot.com/_XAsKAwlHIGY/S3hG40qcpZI/AAAAAAAAElQ/rolqfEcH980/s1600-h/IMG_0458.JPG"&gt;&lt;IMG style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id=BLOGGER_PHOTO_ID_5438174492073174418 border=0 alt="" src="http://2.bp.blogspot.com/_XAsKAwlHIGY/S3hG40qcpZI/AAAAAAAAElQ/rolqfEcH980/s400/IMG_0458.JPG"&gt;&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவன் கோவில் வாசலில் ஒரு நீருற்று இருந்தது. உள்ளூர்மக்கள் சிலபேர் அதிலிருத்து குடிநீர் எடுத்துச் சென்றனர். அவ்விடத்திற்கு வரும் மக்கள் எல்லாரும் அந்நீரில் குளித்தனர். அந்நீரில் குளிப்பதற்காகவே மக்கள் பலபேர் வந்தனர். குளிப்பவர்களின் ஈர அங்கங்களைப் பார்ப்பதற்காக சிலபேர் உயரமான இடங்களில் நின்றிருந்தனர். நீரூற்றின் பிறப்பிடம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், ஓர் ஆராய்ச்சியாளர் அதனுள் நுழைத்த கம்பி முடிவற்றுப் போய்க்கொண்டே இருந்தது எனவும் விசாரித்ததில் தெரிந்தன. சிவன் கோவிலுக்கு இடமிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A href="http://3.bp.blogspot.com/_XAsKAwlHIGY/S3hKWOJMg4I/AAAAAAAAElY/UssbZyZYfJs/s1600-h/IMG_0489.JPG"&gt;&lt;IMG style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id=BLOGGER_PHOTO_ID_5438178295664116610 border=0 alt="" src="http://3.bp.blogspot.com/_XAsKAwlHIGY/S3hKWOJMg4I/AAAAAAAAElY/UssbZyZYfJs/s400/IMG_0489.JPG"&gt;&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவன் கோவிலில் இருந்து ஏரியின் புகைப்படம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A href="http://1.bp.blogspot.com/_XAsKAwlHIGY/S3hMZya768I/AAAAAAAAElg/MU_GyYUq2n0/s1600-h/IMG_0479.JPG"&gt;&lt;IMG style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id=BLOGGER_PHOTO_ID_5438180555965066178 border=0 alt="" src="http://1.bp.blogspot.com/_XAsKAwlHIGY/S3hMZya768I/AAAAAAAAElg/MU_GyYUq2n0/s400/IMG_0479.JPG"&gt;&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவன் கோவிலிலிருந்து நீரின் பாதையில் ஏரியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இந்த நீருடன், ஒரு குகை நீரும், இன்னொரு சிறுகோவிலிலிருந்து வடியும் நீரும் சேர்ந்து ஒரே நீராக ஏரியை நோக்கிப் போயின. கரடுமுரடான பாதையையும், மரஞ்செடிகளையும், விளைநிலங்களையும் தாண்டி ஏரியை அடைந்தோம். நட்சத்திரங்களில் இருந்து வந்த நீரென மக்கள் நம்பும் அந்த ஏரி, கரைகளில் பாசிபடர்ந்திருந்தது. ஒரு பேரரக்கனின் இரத்தத்தை நீராகவும், சதையை உப்பாகவும் கொண்டிருப்பதாகப் சொல்லப்படும் அந்த ஏரி, பல பறவைகளைத் தாங்கிக் கொண்டிருந்தது. ஏரியைச் சுற்றி, விண்கல் உண்டாக்கிய பெருங்கரைவரை முடிந்தவரையில் அகழப்பட்டிருந்த விவசாயநிலங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏரிக்கரையோரம் விவசாயம் செய்து கொண்டிருந்த மக்களிடம் பேசினோம். விவசாய நிலங்களின் மொத்த பரப்பு 25 ஏக்கர். 10 பேர்களுக்குச் சொந்தமான நிலங்கள். அவர்கள் சொன்ன ஆச்சரியமான விசயம் என்னவென்றால், சிவன் கோவில் நீருடன் சேர்ந்துவரும் மொத்த தண்ணீரையும் 10 நாட்களுக்கு ஒருவர் என்றமுறையில் விவசாயத்திற்கு உபயோகித்துவிடுவார்களாம். அப்படியென்றால் ஏரித்தண்ணீர்? விவசாய நிலங்களின் கசிவுநீர் (Seepage water) ஏரியை அடைகிறது என்பது எனது கருத்து. ஏரிநீர் மனித உபயோகங்களுக்கு உகர்ந்ததல்ல எனவும், சில தோல்வியாதிகள் குணமடைய சிலபேர் அதில் குளிப்பதாகவும் சொன்னார்கள். நீரில் மிதக்கும் சில கற்கள் ஏரிக்கரையோரம் உண்டென்றும், அவை நட்சத்திரங்களில் இருந்து வந்ததென்றும் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_XAsKAwlHIGY/S3hjueBNRWI/AAAAAAAAElo/hzQFhnr7cRM/s1600-h/IMG_0457.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_XAsKAwlHIGY/S3hjueBNRWI/AAAAAAAAElo/hzQFhnr7cRM/s400/IMG_0457.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5438206200033133922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் கிடைத்த சில அறிவியல் பூர்வமான தகவல்கள் உங்களின் வாசிப்பிற்கு:&lt;br /&gt;&lt;br /&gt;1. உலகின் முன்றாவது பெரிய விண்கல் பள்ளம் (crater).&lt;br /&gt;&lt;br /&gt;2. 90000 km/h வேகத்தில் பயணித்த 2 மில்லியன் டன் நிறையும் 60மீட்டர் அகலமுள்ள விண்கல் மோதி, பாசால்ட் பாறைகளின் மேல் உண்டான ஒரே ஏரி.&lt;br /&gt;&lt;br /&gt;3. வயது 52000க்கு மேல்.&lt;br /&gt;&lt;br /&gt;4. இன்றைய தேதியில் செயற்கையாக உருவாக்க 6 மெகா டன் அணுகுண்டு தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;5. பள்ளத்தின் விட்டம் 1.8 km. பள்ளத்தின் வாயிற்குக்கீழ் 137 மீட்டர் ஆழத்திற்குக்கீழ் இருக்கும் ஏரியின் சராசரி விட்டம் 1.2 km. ஏரியின் ஆழம் 150 மீட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;6. ஏரியின் மையநீர் காரத்தன்மையும் (ph 11), அதைச் சுற்றி நன்னீரும் (ph 7) என இரண்டு மாறுபட்ட அடுக்குகள் உண்டு. இவ்விரண்டு அடுக்களிலும் வாழும் உயிரினங்களும் மாறுபடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;7. ஏரிக்கு நீர் தரும் சிவன்கோவில் ஊற்றுக் கூட்டணிகளும், மழைநீரும் நன்நீர் உடையவை. மையநீரீன் காரத்தன்மையின் ஆதிமூலம் இதுவரை மர்மம்.&lt;br /&gt;&lt;br /&gt;8. பள்ளத்தின் கரையின் சாய்வு (slope) 75 டிகிரி.&lt;br /&gt;&lt;br /&gt;9. பள்ளத்தின் சரிவுகளில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவுக்குத் தேக்கு, புளியம் என ஒரு குறிப்பிட்ட மரங்களின் வரிசை இருக்குமெனப் படித்தேன். தேக்கு மரங்களை வெட்டுபவர்களைப் பார்த்தேன். ஆனால் மரங்களின் அப்படியொரு ஒழுங்கு வரிசையைக் காணமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;10. ஒரேயொருமுறை இவ்வேரி வற்றியதாகவும் மின்னும் படிகங்கள் தென்பட்டதாகவும் தகவல் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்நீரில் சோப்பென்ற நச்சு கலத்தல், காக்கும் வனம் அழிக்கப்படுதல், விவசாயம் என்ற பெயரில் முகம் கிழிக்கப்படுதல் என்று கொல்லப்படும் இந்த ஏரியைக் குரங்கு, பாம்பு, மொழி, தூரம் எல்லாத் தடைகளையும் தாண்டிப் பார்த்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'52000க்கு முன் ஓர் 26' என்ற அற்ப சந்தோசம் தேடும் சொற்ப ஆயுள் கொண்ட சாதாரண மனிதன்! &lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-1275178626485319260?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/1275178626485319260/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=1275178626485319260' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1275178626485319260'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1275178626485319260'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2010/02/blog-post.html' title='உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போது'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_XAsKAwlHIGY/S3hG40qcpZI/AAAAAAAAElQ/rolqfEcH980/s72-c/IMG_0458.JPG' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-408795604962056083</id><published>2010-01-13T07:12:00.000-08:00</published><updated>2010-01-13T07:23:33.883-08:00</updated><title type='text'>வட்டத்துள் குவியங்கள்</title><content type='html'>(எழுமகளிர், ஆறறிவு என்ற எல்லைகளுக்குள் அனுமதிக்கப்படாத இருவரின் தீண்டப்படாத எல்லை பற்றிய சிறுகுறிப்பிது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இவ்வுலகில்&lt;br /&gt;நீ யாரோ ஒருத்தி.&lt;br /&gt;யாரோ ஒருவனுக்கு&lt;br /&gt;நீதான் உலகம்.&lt;br /&gt;- யாரோ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயரும்&lt;br /&gt;ஓர் அகதியின் வலியுடன்&lt;br /&gt;ஈன்று புறந்தள்ளி&lt;br /&gt;தலைக்கடன் முடித்ததில்&lt;br /&gt;தவறேது மில்லையென&lt;br /&gt;அம்மா சொல்வாள்.&lt;br /&gt; &lt;br /&gt;உரக்குழியில் தலைபுகுத்தி&lt;br /&gt;கால்பிடித்துத் தலைகீழாக்கி&lt;br /&gt;இடவலம் சுற்றிச்சுற்றி&lt;br /&gt;ஒரு குயவனின் நேர்த்தியுடன்&lt;br /&gt;கபாலம் குழைத்ததில்&lt;br /&gt;சறுக்கலெல்லாம் சாமானியம்&lt;br /&gt;சாமிமேல சத்தியம்&lt;br /&gt;சட்டையில்லாப் பாட்டி சொல்வாள். &lt;br /&gt;&lt;br /&gt;வழியில் நின்ன முனி&lt;br /&gt;கவட்டிக்குள்ள நடந்ததால&lt;br /&gt;வயுத்துப் புள்ளய வாட்டிருச்சு&lt;br /&gt;அகலாது அஞ்சு வருசம்;&lt;br /&gt;அப்பிக மாசம் அம்மாவாச&lt;br /&gt;ஐநூத்தியொண்ணு பரிகாரம்;&lt;br /&gt;மின்சாரம் தொட்ட அதிர்வோடு&lt;br /&gt;பவுர்ணமிபொட்டு சோசியக்காரி சொன்னாள். &lt;br /&gt;&lt;br /&gt;நரம்புக்குள் சிக்கல்&lt;br /&gt;மூளைக்குள் மறியல்&lt;br /&gt;உலகமே நிர்வாணம்&lt;br /&gt;சாகும்வரை குழந்தை&lt;br /&gt;சங்கிலிக்குள் வட்டம்;&lt;br /&gt;உணர்ச்சியின்றி உண்மையை&lt;br /&gt;இழவு சொல்லும் தொனியுடன்&lt;br /&gt;பட்டணத்து டாக்டர் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;என் அம்மணத்து உரோமங்கள்&lt;br /&gt;மனிதரெல்லாம் விமர்சிக்க,&lt;br /&gt;என்னுறுப்பின் மேல்தோல் வரை&lt;br /&gt;சோப்புபோட்டு சுத்தம் செய்து,&lt;br /&gt;பொட்டுவைத்து கண்ணாடிகாட்டி&lt;br /&gt;சாமி ஒருத்தன் இருக்கானென&lt;br /&gt;கதை அக்கா சொல்வாள். &lt;br /&gt;&lt;br /&gt;ஊனப்பட்ட இயற்கை போல்&lt;br /&gt;பருவம் மறைத்து&lt;br /&gt;பட்டம்விட்ட புத்தன் போல்&lt;br /&gt;ஆசை விடுத்து&lt;br /&gt;நூலைவிட்ட பட்டம் போல்&lt;br /&gt;காலம் மறுத்து&lt;br /&gt;என் சங்கிலியில்&lt;br /&gt;அக்காவையும் கட்டிப்போடும்&lt;br /&gt;விதியின் பேடித்தனம்&lt;br /&gt;நிறுத்தும்படி யார் சொல்வார்?&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர் &lt;br /&gt;  (பெண் பிரம்மச்சாரிகளுக்குச் சமர்ப்பணம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://naayakan.blogspot.com/2009/11/blog-post_25.html"&gt;&lt;strong&gt;உரையாடல் கவிதைப்போட்டிக்காக&lt;/strong&gt;....&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil.blogkut.com/uraiyaadal.php"&gt;&lt;strong&gt;போட்டிக்கான எல்லாக் கவிதைகளும் இங்கே&lt;/strong&gt;....&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-408795604962056083?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/408795604962056083/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=408795604962056083' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/408795604962056083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/408795604962056083'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2010/01/blog-post.html' title='வட்டத்துள் குவியங்கள்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-1439365357532966457</id><published>2009-10-04T07:26:00.000-07:00</published><updated>2009-10-04T08:43:10.836-07:00</updated><title type='text'>வையத் தலைமை கொள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SsjBGbn6dmI/AAAAAAAAEjE/wYFQc-OwmDo/s1600-h/murudu-sekar+071.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 180px;" src="http://2.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SsjBGbn6dmI/AAAAAAAAEjE/wYFQc-OwmDo/s320/murudu-sekar+071.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5388769270387340898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'வன்முறை எதிர்ப்பு தினம்' என்று பிறந்தநாளை உலகமே மரியாதைப்படுத்தும் அளவிற்கு ஒரு தலைவனைத் தந்த இந்திய நாட்டின் முதல் தேசியக்கட்சி உடைந்துபோன புனே (Pune) நகரில் இருந்து இதை எழுதுகிறேன். பாரதம், இந்திய யூனியன், இந்தியா, ஹிந்துஸ்தான் போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் உங்களுக்கு அர்த்தம் புரியுமென நினைக்கிறேன். இன்றைய இந்தியா என்ற நாட்டைப் புவியியல் ரீதியில் சொல்ல வேண்டுமானால், பாகிஸ்தானையும் பங்களாதேசத்தையும் கூட்டி இந்திய யூனியனில் இருந்து கழிக்கக் கிடைப்பது. இதே சமன்பாட்டைக் கழித்தல்கள் மட்டுமே வரும்படி எழுதி சிரில் ராட்கிளிப் அவர்கள் கிழித்த கோடுதான் இன்றையதேதிவரை உலகின் மிகப்பெரிய Genocide என்று கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியையும், நேருவையும், அஹிம்சையையும் சாடுபவர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு அச்சமன்பாடு அமையக் காரணமான நூற்றாண்டுக் காரணிகள் அத்துப்பிடியாகக்கூட இருக்கலாம். ஏனெனில் ஓர் உண்மை நாத்திகன், ஆத்திகனைவிட கடவுளை அதிகம் தெரிந்திருக்க் வேண்டும். சரி என் தலைப்புக்கு வருகிறேன். உங்களுக்கு ஒரு பொது அறிவு கேள்வி. இந்திய யூனியனில் இருந்திராத ஒரு பகுதி இந்தியாவில் இருக்க வாய்ப்பிருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கிறது. 22 ஏக்கர் தீவு. கேள்விப்பட்டதும் பயணத்திட்டம் தயாரானாது. ரோஜாக்களின் நகரம் புனேயில் இருந்து, இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்ததாக - தென்னிந்தியாவில் ஈரப்பதமான லோனாவாலா (Lonavala) வழியாக (எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி புத்தகத்தில் ஒரு கதையுண்டு), எனது ஒரு கவிதைக்கு MH - 06 என்ற தலைப்பு தந்த பென் (Pen) என்ற ஊர் வழியாக அலிபாக் (Alibaug) நகரம் வரை பேருந்து பயணம். அங்கிருந்து ராஜ்புரி (Rajpuri) கிராமத்திற்கு ஷேர் ஆட்டோ. பாய்மரப்படகில் மூன்று கிலோ மீட்டர் கடலுக்குள் போனால், ஜன்ஜிரா கோட்டை (Janjira Fort). பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு சுதந்திரத்திற்குப் பின்னால் இந்தியர்களால் நுழையமுடிந்த இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இரண்டு நாட்களாக வெள்ளத்தில் மிதக்கும் ரத்னகிரி (Ratnagiri) என்ற மராட்டிய மாவட்டத்தைப் பற்றி செய்திகளில் நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். அதன் வடஎல்லையிலுள்ள ராய்காட் (Raigad) மாவட்டத்தின் முருடு (Murud) என்ற கிராம எல்லைக்குட்பட்டது இக்கோட்டை. மேற்படி தகவல்களுக்கு இணையம். மும்பையின் Gate Way of Indiaல் இருந்து அலிபாக் அருகாமை வரை கடல்வழியாககூட செல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SsjAJpRhgFI/AAAAAAAAEi0/NkmN1sdQpUQ/s1600-h/murudu-sekar+057.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 180px;" src="http://2.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SsjAJpRhgFI/AAAAAAAAEi0/NkmN1sdQpUQ/s320/murudu-sekar+057.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5388768226079506514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜன்ஜிராவை அடைய அரபிக்கடலின்மேல் காற்றின்விசையில் செல்லும் பாய்மரப்படகுகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. மராத்தி கலந்த ஹிந்தி பேசும் கெய்டைத் தவிர்த்து, கோட்டையின் இடுக்குகளெல்லாம் சுற்றி சமாதிகளையும் வழிபாட்டுத் தலங்களையும் சிதிலமடைந்த சுவர்களையும் சுற்றிப் பார்த்தேன். கோட்டைக்கு நடுவில் 20 மீட்டர் விட்டத்தில் கடலின் உப்பு நீருக்கு நடுவே ஒரு நன்னீர் ஏரியும் இருக்கிறது. இன்னமும் தண்ணீர் இனிப்பாக இருக்கிறது என கெய்டு சொல்ல ஒவ்வொருவரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். நன்கு படித்தவர்கள் போல் தோற்றத்தில் இருந்த சிலர் அதை நம்பாமல் நின்றுகொண்டிருந்தனர். நிலத்தடி நீர் தத்துவம் தெரிந்திருந்தால், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதுமில்லாமல் மூன்று பக்கம் கடலுக்கு நடுவில் தனுஷ்கோடி ஊர்மக்களோடு நண்பன் கல்வெட்டு பிரேம்குமாருடன் கையாலேயே குழிதோண்டி நல்ல தண்ணீர் குடித்த நான் ஆச்சரியப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SsjAvYDAWhI/AAAAAAAAEi8/uLbjP0p-mdM/s1600-h/murudu-sekar+020.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 180px;" src="http://4.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SsjAvYDAWhI/AAAAAAAAEi8/uLbjP0p-mdM/s320/murudu-sekar+020.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5388768874290240018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காற்றின் சீற்றத்திற்கு ஏற்ப மேலும் கீழும் ஏறி இறங்கி வயிறு குலுங்க பாய்மரப்படகு சவாரி நல்ல அனுபவமாக இருந்தாலும், தக்க பாதுகாப்பு இல்லை. கோட்டைக்குள்ளும் ஆங்கிலத்தில் பேசும் சரியான கெய்டுகள் இல்லை. ASIம், சுற்றுலாத்துறையும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால், கோட்டைக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு உயிரும் நூற்றாண்டுகள் பின்னால்போய், தண்ணீருக்குள் இருந்துகொண்டு மிகப்பெரிய சாம்ராச்சியங்களை மிரட்டிப் பார்த்த தைரியத்தைத் தலைகோதும் உப்புக் காற்றுடன் உணரமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அனுபவம் எனக்குக் கிடைத்தபோது சத்தம்போட்டு சொன்னேன்:&lt;br /&gt;&lt;br /&gt;"காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்&lt;br /&gt;காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்".&lt;br /&gt;&lt;br /&gt;Incredible India!&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-1439365357532966457?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/1439365357532966457/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=1439365357532966457' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1439365357532966457'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1439365357532966457'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/10/blog-post.html' title='வையத் தலைமை கொள்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SsjBGbn6dmI/AAAAAAAAEjE/wYFQc-OwmDo/s72-c/murudu-sekar+071.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-6397916589566952075</id><published>2009-09-25T06:19:00.000-07:00</published><updated>2009-09-25T06:50:33.362-07:00</updated><title type='text'>கோழை</title><content type='html'>(Ella Thorp Ellis எழுதிய The Year of My Indian Prince புத்தகம் படித்தபோது பிறந்த கரு இது. இப்போது பிரசவிக்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;சூரியனின் பாதைக்குத் தடை போடாமல், இருபக்கங்களிலும் வரிசையாக வீடுகள் அமைந்த குக்கிராமம் எங்கள் ஊர். கிழக்கு கடைசியில் பஞ்சாயத்து பைப்புக்குப் பக்கத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டுவீடுதான் எனது வாழ்விடம். மேற்கு ஆரம்பத்தில் தந்திக் கம்பத்திற்கு அருகில் பனையோலை வேயப்பட்ட கூரைவீடுதான் வசந்தியின் இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தி என்னைவிட ஒருவாரம் மூத்தவள். எங்கள் வயதொத்தவர்கள் ஊரில் யாரும் இல்லாததாலோ என்னவோ, இருவரின் வாழ்க்கைகளும் ஒரே பாதையில் பயணித்தன. பக்கத்துக் கிராமத்தின் ஆரம்பப் பள்ளிக்குப் பிறகு, எங்களின் கல்விப்பயணங்களை அருகிலுள்ள ஒரு பேரூராட்சி ஊரின் ஓர் உயர்நிலைப் பள்ளிக்கு இலக்காக்கிக் கொண்டிருந்த காலம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பேரூராட்சி பள்ளியின் எங்கள் வகுப்பில், முதல் இரண்டு ரேங்குகளை நானும் வசந்தியும் தக்கவைத்துக் கொண்டிருந்தோம். நன்றாகப் படிப்பதாலும், இன்றைய வகுப்புத் தலைவன் - நாளைய மாணவத் தலைவன் என்ற காரணத்தாலும் மாணவர்கள் மத்தியில் எனக்கு மதிப்பிருந்ததெனவும், வசந்திக்கும் சேர்த்தே எனவும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். குக்கிராமவாசிகள் தங்களூர் பள்ளியில் ஆதிக்கம் செலுத்துவதை உள்ளூரின் சில மாணவர்கள் விரும்பாததையும், அப்பொறாமை உணர்வு புற்றுநோய்க்கட்டி போல் சேகர் - வசந்தி நட்பைக் கொச்சைப்படுத்தி வளர்ந்து கொண்டிருந்தது எனவும் எனக்கு அப்போது தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து வருடங்கள் என்னோடு முழங்காலுரச படித்தவளும், முன்றரை வருடங்களாக தினமும் தோளுரச பஸ்ஸில் பயணிப்பவளுமான வசந்தி என்னிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டவள் என்று அந்த 19ம் தேதியன்றுதான் தெரிந்தது. முதல்நாள் இரவு என்னோடு தந்திக் கம்பத்திற்கடியில் இடதுகால் மடக்கி வலதுகால் நீட்டி குவியதூரமும் கானல்நீரும் படித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீர் குடிக்கப் போனவள் திரும்பவேயில்லை. புத்தகங்களை அவளின் அம்மா வந்து எடுத்துப் போனாள். நான் சிறுவனா என்று தெரியவில்லை; ஆனால் அன்றிலிருந்து வசந்தி சிறுமியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தி இல்லாத முதல் வாழ்நாள் அது. பஸ்ஸில் சாந்து சட்டியுடன் ஒரு பாட்டி தோள் சாய்ந்தாள். வசந்தியைப்பற்றி வகுப்பாசிரியர் கேட்டது முதல், அன்றைய எல்லாக் கேள்விகளுக்கும் தெரியாதென பதில் சொன்னேன். தமிழாசிரியை சலசலத்தது எல்லாம் இரட்டைக்கிளவியாகவே கேட்டன. இங்கிலிஷ் டீச்சர் கோர்த்தெழுதியதெல்லாம் நேர்மறையும் எதிர்மறையும் சேர்ந்தே திரியும் Cleave ஆகவே தெரிந்தன. நாண்களெல்லாம் இணைகோடுகளாயின. புத்திரனாய் போர்தொடுத்த அவுரங்கசிப்,புத்தமாகி போர்தடுத்த அசோகரானார். ஓர் எலக்ட்ரானுக்காக அலையும் குளோரினுக்கு, ஹீலியத்தின் அஹிம்சை போதித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தி இல்லாமல் இரண்டு நாட்களாகத் தனியனாய்ப் படித்துக் கொண்டிருந்த எனக்காக தந்தி மரத்தின் டியூப்லைட் தலைகுனிந்து வருத்தப்பட்டது. தவிர்க்க முயலும் பார்வைச் சந்திப்புடன் என்னை வசந்தி சந்தித்தாள். எச்சலனமும் இல்லாமல் என்தலைமேல் இருந்த பூச்சியைத் தட்டிவிட்டு அதே பழைய இடைவெளியில் இடதுகால் மடக்கி வலதுகால் நீட்டி நடத்தப்பட்ட பாடங்கள் கேட்டாள். ஒற்று மிகும் இடங்கள் பற்றியும், தாலஸ் என்றால் தலைகால் புரியாதது எனவும், ஷாஜகானுக்கு மும்தாஜ் முதல்மனைவி இல்லை எனவும் சொன்னேன். மறுநாள் அதே பஸ்ஸில் ஒரே சீட்டில் அமர்ந்து என்னைச் சிறுவன் என நிரூபித்தாள். அவளும் சிறுமியில்லாமல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்களை நிமிட நேரத்தில் புரிந்துகொள்ளும் வசந்திக்கே புரியாமல், கண்ணுக்குத் தெரியாமல் அவள் வீட்டினுள் அப்படியொன்று இருப்பது அன்றுவரை யாருக்குமே தெரியாது. படித்துக் கொண்டிருக்கையில் தண்ணீர் குடிக்க எழுந்தவளைப் போனமாதம் இதே தேதியில் தண்ணீர் குடிக்கப்போய் திரும்ப வராததைக் கிண்டல் செய்தேன். முன்பற்கள் கடிந்து, புருவம் சுருக்கி, தலைதாழ்த்தி முறைத்துவிட்டுப் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும்கூட வசந்தி சீக்கிரம் திரும்பவில்லை. Direct - Indirect Voiceகளை மூடிவிட்டு அவள் வீட்டிற்குச் சென்றேன். நிலைப்படியில் குனிந்து தலைநிமிர்ந்தபோது நான் கண்ட காட்சி என்னை உலுக்கிப் பார்த்தது. சட்டென திரும்பப்போய் நெற்றியில் இடித்துக்கொண்டேன். நான் சிறிதுநேரம் அங்கேயே நின்றும்கூட வசந்தி ஒன்றுமே பேசாததிலிருந்து, எனக்கு அங்கு வேலையில்லை என்று உணர்ந்து கொண்டவனாய்த் தந்திமரத்தடியில் தஞ்சம் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தி வந்தாள். அதே பழைய இடைவெளியில் சம்மணக் காலிட்டு அமர்ந்தாள். பேரமைதி. ஓர் அந்நிய மொழி வாக்கியங்களை Simple-Compound-Complex எனப் பிரித்துப் போடவும், இடதுபக்கங்கள் எல்லாம் வலதுபக்கங்களுக்குச் சமமென நிரூபித்துக் காட்டவும் சொல்லித்தந்த கல்வி, அறிவு, அது, இது எல்லாமும் சேர்ந்தும்கூட, எனக்குப் பக்கத்தில் இருப்பவளின் தாய் வெற்று மார்புடன் படுத்துக் கிடந்த காரணத்தை நேரிடையாக கேட்கும் பக்குவத்தைத் தந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மாவுக்கு ஒரு வாரமா ரொம்ப முடியல. திடீர்னு இன்னக்கி இருமல் சாஸ்தியாயிடிச்சு. நெஞ்சு கரிக்குதுன்னு சொல்லி அமர்த்தான்ஜனம் (Amrutanjan) தடவச் சொன்னுச்சு ".&lt;br /&gt;வசந்தி சிறுமியில்லை.&lt;br /&gt;"அப்பா சனிக்கெழம ராத்திரிதான் வருவாரு. நான் அம்மாவ நாளைக்கிப் புதுக்கோட்ட பெரியாஸ்பத்திரி கூட்டிட்டுப் போய்த்து வரேன். லீவு சொல்லிடு. எதுவும் மனசில வெச்சிக்கிடாதே".&lt;br /&gt;நான் சிறுவனில்லை.&lt;br /&gt;"ஸ்கூல்ல யாராவது கேட்டா எனக்கு ஒடம்பு சரியில்லன்னு சொல்லு. அம்மாவப் பத்தி ஏதும் சொல்லாதே".&lt;br /&gt;எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் திரும்பிப் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தி இல்லாத இரண்டாவது 19ம் தேதி அது. இருட்டிய பிறகே வசந்தி தனது தாயுடன் திரும்பினாள். தந்திக்கம்பத்தில் சாய்ந்துகொண்டிருந்த என்னைத் தவிர எல்லாரும் வசந்தி வீட்டில் கூடினார்கள். TB, நெஞ்சுருக்கி, காசம், எலும்புருக்கி, Tuberculosis என்ற வார்த்தைகள் அடங்கிய வாக்கியங்களுடன் பேசி, தனது தாயுடன் யாரும் பழகவேண்டாம் என் சொல்லி அனுப்பிவைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தி வந்தாள். அதே பழைய இடைவெளியைவிட இன்னும் கொஞ்சம் தூரத்தில் சம்மணக் காலிட்டு அமர்ந்தாள். அன்றைய பாடம் கேட்டாள். நான் எந்தவொரு சலனமும் காட்டிக்கொள்ளவில்லை. ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விளக்குமென காந்தவியல் சொன்னேன். ஒற்று மிகா இடங்கள் சொன்னேன். ஆசையாய்க் கட்டிய தாஜ்மகாலை ஷாஜகான் தூரப்பார்த்தே இறந்துபோனதைச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செங்கிப்பட்டி மகாத்மா காந்தி சானடோரியத்தில் மாதாமாதம் பரிசோதனை செய்யப்பட வேண்டுமென வசந்தியின் அம்மாவுக்கு டாக்டர்கள் சொல்லியிருந்தனர். ஒவ்வொரு மாதமும் 19ம் தேதி என்பது வசந்திக்கு எழுதப்படாத விடுமுறை நாளானது. என்னையும் வசந்தியையும் பிடிக்காத மாணவர்கள் உண்மைநிலை தெரியாமல், எல்லா 19யும் முதல் 19தோடு முடிச்சுபோட்டு, வசந்திக்குக் கர்ப்பப்பையில் ஏதோ பிரச்சனையென கதைகட்டிவிட்டார்கள். மாதவிலக்குச் சரியாக வருவதில்லை எனவும், அதைச் சரிசெய்யத்தான் தஞ்சாவூர் பக்கம் ஏதோவொரு லாட்ஜ் டாக்டரிடம் பிரதிமாதம் இன்ன தேதி இன்ன நேரத்திற்குப் போய்வருவதாகவும் வசந்தியின் பெயரில் வதந்தி. இதெல்லாம் எங்களுக்கு அப்போது தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 19. மார்கழிப்பனி நோயைத் தீவிரப்படுத்தி இருந்ததால், அன்று சானடோரியம் செல்லவில்லை. வேல்ஸ் என்ற இடம் எங்கு இருக்கிறதென்று கண்டுபிடிப்பதற்காக நண்பன் ஒருவனிடமிருந்து அட்லஸ் புத்தகம் வாங்கி வந்திருந்தேன். நான் இடதுபக்கங்களிலும், வசந்தி வலதுபக்கங்களிலும் இந்தியாவிற்கு வெளியே தேடினோம். ஏதோ உணர்ந்தவளாய்ச் சட்டென வசந்தி வீடு புகுந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ வேல்ஸ் இங்க இருக்கு பாரு". மெய்மறந்து சொன்ன பொழுதில் வசந்தி அருகிலில்லை. உலகம் தூக்கிய அட்லஸ் தூக்கிக்கொண்டு அவள் வீட்டிற்குப் போனேன். நிலைப்படியின் மேல் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள். வீட்டை இருள் பூட்டி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஆச்சு வசந்தி? இங்க பாரு வேல்ஸ். நீ பாத்த பக்கத்துலதான் இருந்துச்சு"&lt;br /&gt;"ஒண்ணுல்ல. ஒண்ணுல்ல. அந்த சன்னல்ல டார்ச் லைட் இருக்கு. கொஞ்சம் எடு"&lt;br /&gt;எடுத்துக் கொடுத்தேன்.&lt;br /&gt;"கத்தி பிளேடு அருவா எல்லாத்தையும் பூட்டி வெச்சேன்"&lt;br /&gt;பின்பக்க மூடி திறந்தாள்.&lt;br /&gt;"மண்ணென்ன வாங்குறத நிப்பாட்டுனேன்"&lt;br /&gt;பேட்டரியைத் திருப்பிப் போட்டாள்.&lt;br /&gt;"பூச்சி மருந்து அரளி வெத சாமானியமா கெடைக்காதுன்னு நெனச்சேன்"&lt;br /&gt;பின்பக்க மூடியை மூடினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பனியில நனையிதுன்னு தாவணிய வீட்டுக்குள்ள காயப்போட்டது என்னோட விதியா?"&lt;br /&gt;"என்ன ஆச்சு வசந்தி?"&lt;br /&gt;"தாவணியில என்னப் பாக்கனும்னு சொல்லுவியே. நான் கட்டுன மொத தாவணிப் பாரு"&lt;br /&gt;வீட்டுக்குள் டார்ச் அடித்தாள்.&lt;br /&gt;தாவணி உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. 'அது' தாவணியில் தொங்கிக்கொண்டிருந்தது. அட்லஸ் நழுவியது. உலக நாடுகள் காலடியில் சிதறின. உதவிக்குக் கூப்பிடக்கூட யாருமில்லை. பஞ்சாயத்து தலைவர் சபரிமலை குருசாமியாகி பதினெட்டாம் வருஷ மலைக்குப் போகும் விஷேசத்திற்கு ஊர் சென்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு நேரம் அழுதோம் எனத் தெரியவில்லை. இந்தியப் பெருங்கடல் நனைந்திருந்தது. கொஞ்சம் தைரியம் வரவழைத்து டார்ச் எடுத்து உள்ளேபோக எத்தனித்தேன். டார்ச்சைப் பிடுங்கினாள். அழுகை பீறிட சொன்னாள்.&lt;br /&gt;"நீ பாக்க வேணாம் சேகரு. ஒத்த சேலமட்டுந்தான் கட்டியிருக்கு".&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வெளிச்சமும் இல்லாமல் அரிவாள்மனையால் தாவணியை நான் அறுக்க, வசந்தி தன் தாயைச் சுமந்து இறக்கினாள். முத்திரக் கவுச்சையும், கட்டில்லாமல் வடிந்திருக்கும் உடல் திரவங்களையும் காலடியின் பிசுபிசுப்பில் உணர்ந்தேன். நடுவீதியில் அமர்ந்து எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஷோடனை செய்து தற்கொலையை மறைத்தாள் வசந்தி. மூன்று மணிநேரம் பிணத்துடன் அமர்ந்திருந்தோம். ஊர் திரும்பியது. நோய் தொற்றும் பயத்தில் யாரும் நெருங்கவில்லை. அதன்பிறகு எல்லா நாட்களும் வசந்தி பள்ளி வந்தாள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருவதற்குள், ஒரு செருப்புக் கடைக்காரருக்கு இரண்டாம் தாரமாகியிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தி இல்லாமல் போனபோதுதான் அவள் என்னிலிருந்து நிறைய வித்தியாசப்பட்டிருக்கிறாள் எனப் புரிந்தது. அவள் இறந்தால் எரிப்பார்கள்; நான் இறந்தால் புதைப்பார்கள். சமூகத்தில் அவள் வினைச்சொல்; நான் பெயர்ச்சொல். வாழ்க்கை என்னைத் தசமப்புள்ளிக்கு இடதுபுறம் பயணிக்கச் சொல்கிறது; அவளை வலதுபுறம் அனுப்புகிறது. சுருக்கமாக என்னை ஆண் என்கிறது; அவளைப் பெண் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தியின் தாய்க்குப் பிறகு எனக்குத் தெரிந்து இதே காரணத்திற்காக இதே போல் ஆறுபேர் இறந்துகொண்டார்கள். இந்தியா முழுவதும் இதே காரணத்திற்காக நான்கு லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் இறக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்த போது கூட ஏறத்தாழ இதே எண்ணிக்கைதான். பெரியம்மை ஒழித்தோம்; போலியோவைக் காலியாக்கினோம்; விமானமேறி வரும் வியாதிகளைச் செய்தியாக்கி பக்கத்தில் இருமுபவனையும் தும்முபவனையும் மறந்துபோனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கோ ஒருவன் இருமினால், இன்னொருவன் பதறவேண்டுமென்பதெல்லாம் பாரதியார் பாடலில்தான் என உதாசீனப்படுத்தினால், வரலாறு இன்னொருமுறையும் சிரிக்கும். ஒருவன் காறித் துப்பியதை உதாசீனப்படுத்தியதால் வந்ததுதான் முதல் உலகப் போர்!&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-6397916589566952075?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/6397916589566952075/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=6397916589566952075' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/6397916589566952075'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/6397916589566952075'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/09/blog-post.html' title='கோழை'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-5613745073978329317</id><published>2009-08-23T03:40:00.000-07:00</published><updated>2010-05-10T09:12:27.481-07:00</updated><title type='text'>மதுரை காந்தி மியூஸியம்</title><content type='html'>ஆகஸ்ட் 14, 2009. பாகிஸ்தான் சுதந்திர தினம். இரண்டு கிராமங்களை இலக்காக வைத்து, அதிகாலை 5 மணிக்குத் திருச்சியில் இருந்து பயணத்தை ஆரம்பித்தேன். ஒன்று மதுரையின் தெற்கே உள்ளது; இன்னொன்று வடக்கே. திண்டுக்கலில் இருந்து மதுரை செல்லும் வழியில் பாதியிலேயே இறங்கி, அந்த மலையடிவாரக் கிராமத்தைப் பார்த்துவிட்டு, ஆரப்பாளையம், ஆயிரம் கால் மண்டபம், மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், இன்னொரு கிராமத்தையும் பார்த்துவிட்டு பெரியார் பேருந்து நிலையம். தந்தி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மாநகராட்சி பெயர்பலகை சொன்ன திசையில் நடந்து அந்த வெள்ளை மாளிகையை அடைந்தேன். காந்தி மியூஸியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SpElHaa3AmI/AAAAAAAAEhU/Ta0zuzVaVkA/s1600-h/DSC02189.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5373116639711003234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SpElHaa3AmI/AAAAAAAAEhU/Ta0zuzVaVkA/s320/DSC02189.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விவேக்கும், சுந்தர் சியும் சிறைக்கைதிகளாக வந்து காமெடி செய்வதாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் அதே இடம்தான். ஆனால் எனக்கு அறிமுகம் செய்தது மணா அவர்களின் தமிழகத் தடங்கள் (உயிர்மை பதிப்பகம்) புத்தகம். சுதந்திர இந்தியாவில் காந்தியின் மறைவுக்குப்பின் உருவான முதல் மியூஸியம்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியின் தோற்றத்தையே மாற்றிய மதுரை; பாரிஸ்டரை அரைநிர்வாணப் பக்கிரியாக மாற்றிய மதுரை; தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படாத மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழையாமல் காந்தி திரும்பிப்போன அதே மதுரை; அரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தபோது அதே கோவிலுக்குள் காந்தியையும் நுழையவைத்த மாமதுரை. இப்படி காந்தியின் வாழ்வில் முக்கியபங்கு வகித்த மதுரைநகரில், பரிசீலிக்கப்பட்ட ஏழு இடங்களில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காந்திக்கான முதல் மியூஸியம் அமைக்கப்பட்டது. இதன்பிறகே போர்பந்தர், ராஜ்கோட், சபர்மதி, தண்டி, வார்தா, நவகாளி போன்ற இடங்களிலும் மியூஸியங்கள் அமைக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;1. மியூஸியம் அமைந்துள்ள தமுக்கம் அரண்மனை பற்றி,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SpEmKzYgSqI/AAAAAAAAEhc/0AJ6agtBE9w/s1600-h/DSC02148.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5373117797463247522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 214px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SpEmKzYgSqI/AAAAAAAAEhc/0AJ6agtBE9w/s320/DSC02148.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. கொல்லப்பட்டபோது காந்தி அணிந்திருந்த வேட்டி இரத்தக்கறையுடன்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SpEncHxPYmI/AAAAAAAAEhk/WJhHS8lxNwI/s1600-h/DSC02175.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5373119194505110114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SpEncHxPYmI/AAAAAAAAEhk/WJhHS8lxNwI/s320/DSC02175.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. மூன்று காந்தியக் குரங்குகள். மிசாரு மசாரு மிகசாரு. மஹாராஸ்ட்ராவின் மேற்குத் தொடச்சி மலையில் உயரமான இடமான மஹாபலேஸ்வரில், இயற்கையிலேயே இக்குரங்குகளின் தோற்றத்தில் அமைந்த மூன்று பாறைகள் ஒரு பள்ளத்தாக்கில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;4. பிப்ரவரி 23, 1946 அன்று தாழ்த்தப்பட்டவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டபோது, முதல்முறையாக காந்தி அக்கோவிலுக்குள் செல்லும்காட்சி. இப்புகைப்படம் ஆயிரம்கால் மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SpEplMWHd5I/AAAAAAAAEh0/9lQIaBchzC4/s1600-h/DSC02078.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5373121549375600530" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 214px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SpEplMWHd5I/AAAAAAAAEh0/9lQIaBchzC4/s320/DSC02078.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹிட்லருக்குக் காந்தி எழுதிய கடிதத்தின் நகல், வட்டமேசை மாநாட்டில் காந்தி உடுத்தியிருந்த சால்வை, காந்தியின் அஸ்தி, அவர் படித்த புத்தகங்கள் போன்ற காந்திய அம்சங்கள் ஏராளம். இவற்றைத்தவிர இன்றைய இந்திய தேசியகொடி தோன்றிய வரலாறு, தொற்றுநோய் காலத்திலும் மக்களைத் தொட்டுப்பார்த்த ஒரு மனிதன், பூகம்பப் பூமியின் இடுக்குகளில் பிரயாணித்த ஒரு தலைவன், தலைமையையும் காலணியையும் தூக்கியெறிந்துவிட்டு நாடுமுழுவதும் நடந்துதிரிந்த ஒரு சாமானியன். இந்தியாவில்தான், தமிழ்நாட்டில் காண ஓர் இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியின் ரத்தக்கறைபடிந்த கடைசி ஆடை வைக்கப்பட்டிருக்கும், உட்புறம் கருப்பு வர்ணம் பூசப்பட்ட அந்த தனியறையில் வாலிபக் கூட்டமொன்று அடித்த கிண்டல்; நேதாஜியின் புகைப்படத்தைக் கிழித்து கிறுக்கித் திட்டவும் பாராட்டவும் உபயோகப்படுத்தப்பட்ட தமிழ்மொழி. இப்படி சில கெட்ட அனுபவங்கள் கிடைத்தாலும், பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளைப் பார்த்து வருத்தப்பட்ட ஓர் ஆங்கிலேயக் குடும்பத்தைப் பார்த்த திருப்தியும் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மணா; யாருக்கோ நான் என்ற நம்பிக்கையில்....&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;br /&gt;(சத்திய சோதனையால் மகாத்மா, உங்களில் பலரைப் போலவே)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-5613745073978329317?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/5613745073978329317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=5613745073978329317' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/5613745073978329317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/5613745073978329317'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/08/blog-post_23.html' title='மதுரை காந்தி மியூஸியம்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_XAsKAwlHIGY/SpElHaa3AmI/AAAAAAAAEhU/Ta0zuzVaVkA/s72-c/DSC02189.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-2421593687555213418</id><published>2009-08-20T08:54:00.000-07:00</published><updated>2009-08-20T09:52:33.809-07:00</updated><title type='text'>தாய்மாமன் கதை</title><content type='html'>&lt;strong&gt;ஆடு கனவுகண்டா&lt;br /&gt;அருவா அறியாது&lt;br /&gt;&lt;br /&gt;புழுவெல்லாம் கனவுகண்டா&lt;br /&gt;கொழுவுக்குப் புரியாது&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ பிரிவானோம்&lt;br /&gt;இடிவிழுந்த ஓடானோம்&lt;br /&gt;&lt;br /&gt;- வைரமுத்து (தோழிமார் கதை - பெய்யெனப் பெய்யும் மழை)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தனது சகோதரியின் தாயிழந்த பிள்ளைகளுக்காகக் கல்யாணம் தவிர்த்து வாழும் மகாத்மாக்களுக்காக - அங்கிள் மாம்ஸ் காலத்தில்கூட மாமன் சித்தப்பன் வித்தியாசப்படுத்தும் உண்மைத் தமிழர்களுக்காக - பருத்திவீரனின் முடிவுக்குப் பின் சித்தப்புவின் எதிர்காலம் சிந்தித்தவர்களுக்காக,)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_XAsKAwlHIGY/So169QAhhrI/AAAAAAAAEg0/kzQ37mRZXSo/s1600-h/DSC02181.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/_XAsKAwlHIGY/So169QAhhrI/AAAAAAAAEg0/kzQ37mRZXSo/s320/DSC02181.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5372085123210643122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வயலோரம் வளந்த மலை&lt;br /&gt;வானரமும் வாழும் மலை&lt;br /&gt;இடுக்கெல்லாம் அடைகட்டி&lt;br /&gt;தேனடையும் குன்னமலை.&lt;br /&gt;&lt;br /&gt;குன்னமலை முகத்தில்&lt;br /&gt;வெயில் பொசுக்கும் ஒரு முகட்டில்&lt;br /&gt;ரயில் பாத்த சிறுவயசு&lt;br /&gt;மகனே நெனவிருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருகை முட்டுதந்து&lt;br /&gt;அக்காவ நான் நிறுத்த&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சு வெரலும்&lt;br /&gt;அடுத்தடுத்து கொடுத்துனக்குப்&lt;br /&gt;பால் அழுக நான் நிறுத்த&lt;br /&gt;&lt;br /&gt;போலீசுக்குப் பயந்துபோய்&lt;br /&gt;என் அழுக நான் நிறுத்த&lt;br /&gt;&lt;br /&gt;எறப்பும் பொறப்பும்&lt;br /&gt;எங் கூடவந்த&lt;br /&gt;சாமத்துக் கார்சவாரி&lt;br /&gt;மருமகனே நெனவிருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா போத்து&lt;br /&gt;நான் படுக்க&lt;br /&gt;பாழாப் போன&lt;br /&gt;கொப்பளமும் தான்வலிக்க&lt;br /&gt;அம்மாவப் போலநீயி&lt;br /&gt;அங்கமெல்லாம் கழுவுனியே&lt;br /&gt;அய்யா நெனவிருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;காலைக்கடன் தொடச்ச கல்லப்&lt;br /&gt;பொதருக்குள்ள நாமெறிய&lt;br /&gt;கலவிய ரெண்டு பாம்பு&lt;br /&gt;சர்ர்ர்ருன்னு சீறிவர&lt;br /&gt;&lt;br /&gt;டவுசர விட்டுப்புட்டு&lt;br /&gt;தல தெறிக்க நீயோட&lt;br /&gt;கைலிய கழட்டிப்புட்டு&lt;br /&gt;காலால நான் பறக்க&lt;br /&gt;&lt;br /&gt;செத்தபாம்பு சட்டைதுக்கி&lt;br /&gt;வீராப்பா வீதியில&lt;br /&gt;உலா போனோம் நெனவிருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணா திரிஞ்சோம்&lt;br /&gt;ஒரே துண்டில் துயில் கண்டோம்&lt;br /&gt;ஒண்ணாவே இருக்க&lt;br /&gt;ரெண்டுபேரும் யோசிச்சோம்&lt;br /&gt;&lt;br /&gt;மகளப் பெத்த&lt;br /&gt;வாழாவெட்டி நாங்கட்டி&lt;br /&gt;மகள நீ கட்டி&lt;br /&gt;மாமன் மருமகனா&lt;br /&gt;ஒரேவீட்டில் வாழச்&lt;br /&gt;சம்மதிச்சோம் நெனவிருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாவது பீசாகி&lt;br /&gt;கல்லொடைக்க நான்போக&lt;br /&gt;வாத்தியார அடிச்சிப்புட்டு&lt;br /&gt;வீட்டவிட்டு நீ ஓட&lt;br /&gt;&lt;br /&gt;சோசியஞ் சொன்ன&lt;br /&gt;சாமியெல்லாம் தேடிப்போனேன்&lt;br /&gt;ஏஞ் சாமி நெனவிருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;தாராபுரம் தாண்டிப்போயி&lt;br /&gt;தாரங்கட்டி நீதிரும்ப&lt;br /&gt;ஆசிர்வாதம் கேக்கயில&lt;br /&gt;ஆயுசுக்கும் மொததடவ&lt;br /&gt;மாமானியே நெனவிருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;திருமதியக் கூட்டிக்கிட்டு&lt;br /&gt;திருப்பூரு நீபோக&lt;br /&gt;வான்மதியும் புடிக்காம&lt;br /&gt;மதியிழந்து நான்போக&lt;br /&gt;&lt;br /&gt;ஓங்குடும்பம் ஓம்புள்ள&lt;br /&gt;ஓம்பொழப்பு ஒன்னோட&lt;br /&gt;எங்கக்கா அவபுள்ள&lt;br /&gt;பழந்நெனப்பு என்னோட.&lt;br /&gt;&lt;br /&gt;நாளும் நழுவிடுச்சு&lt;br /&gt;நரம்பெல்லாம் சுண்டிருச்சு&lt;br /&gt;உன் தோளேறி தேர்பாக்க&lt;br /&gt;மகன்கூட வளந்திருச்சு&lt;br /&gt;&lt;br /&gt;வயலோரம் வளந்த மலை&lt;br /&gt;வானரமும் வாழ்ந்த மலை&lt;br /&gt;டவுன்காரன் வீடுகட்ட&lt;br /&gt;லாரியேறிப் போயிருச்சு!&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர் &lt;br /&gt;(அம்மா என்று இருமுறை சொல்லி மாமா என்ற வார்த்தையைப் பழகியவன், உங்களில் பலரைப் போல)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-2421593687555213418?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/2421593687555213418/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=2421593687555213418' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/2421593687555213418'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/2421593687555213418'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/08/blog-post_20.html' title='தாய்மாமன் கதை'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_XAsKAwlHIGY/So169QAhhrI/AAAAAAAAEg0/kzQ37mRZXSo/s72-c/DSC02181.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-797964660126171782</id><published>2009-08-06T10:24:00.000-07:00</published><updated>2009-08-06T10:25:44.510-07:00</updated><title type='text'>உறுபசி</title><content type='html'>இதே இடத்தில்&lt;br /&gt;மகனை இழந்தவள்&lt;br /&gt;தூக்கியெறிந்த தேங்காய்ப்பழம்&lt;br /&gt;திரும்பி வந்தது&lt;br /&gt;அடுத்த அலையில்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-797964660126171782?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/797964660126171782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=797964660126171782' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/797964660126171782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/797964660126171782'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/08/blog-post_06.html' title='உறுபசி'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-413834652953525466</id><published>2009-08-03T09:45:00.001-07:00</published><updated>2009-08-03T09:45:53.108-07:00</updated><title type='text'>பெய்யெனப் பெய்யாத மழை</title><content type='html'>&lt;strong&gt;கடிதம் போட்டு&lt;br /&gt;திருடன் வந்தான்&lt;br /&gt;அனுப்புநர்: மாப்பிள்ளை.&lt;br /&gt;- யாரோ&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டு போட்ட மாப்பிள்ளைக்கு&lt;br /&gt;ரேட்டு கொஞ்சம் சாஸ்தியின்னா&lt;br /&gt;இதுக்குப் பேரு என்ன?&lt;br /&gt;ஆண்  விபச்சாரம்.&lt;br /&gt;- ABCD திரைப்படத்தில் பாரதியின் அறிமுகப் பாடல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொர்க்கத்தின் மனுமகன்&lt;br /&gt;தொழுகிறாள்&lt;br /&gt;ரொக்கத்தின் மணமகன்&lt;br /&gt;தழுவாதவள்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-413834652953525466?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/413834652953525466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=413834652953525466' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/413834652953525466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/413834652953525466'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/08/blog-post.html' title='பெய்யெனப் பெய்யாத மழை'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-8440519823046990530</id><published>2009-07-31T10:06:00.000-07:00</published><updated>2009-08-01T11:57:37.021-07:00</updated><title type='text'>சேவல் கூவிய பொழுது</title><content type='html'>அதிகாலையொன்றில்&lt;br /&gt;அடிவயிறு வலிக்க&lt;br /&gt;உயிர்போக அலறி&lt;br /&gt;வியர்த்துக் கொட்டி&lt;br /&gt;வெந்தயம் மென்னு&lt;br /&gt;தொப்புளில் சுண்ணாம்புதடவி&lt;br /&gt;காளீஸ்வரி&lt;br /&gt;கருப்பு கலரில்&lt;br /&gt;வலியடங்கி&lt;br /&gt;கைலி சுருட்டி&lt;br /&gt;மீண்டும் துங்கிப்போன&lt;br /&gt;அந்த நிமிடங்கள்&lt;br /&gt;நான் வயசுக்குவந்த&lt;br /&gt;தருணமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-8440519823046990530?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/8440519823046990530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=8440519823046990530' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/8440519823046990530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/8440519823046990530'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/07/blog-post_31.html' title='சேவல் கூவிய பொழுது'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-8928909622827563172</id><published>2009-07-29T09:21:00.001-07:00</published><updated>2009-07-31T09:57:39.151-07:00</updated><title type='text'>அணையும்யா நெருப்பு</title><content type='html'>&lt;strong&gt;காதல், சிகரெட் போல. உதட்டில் வைத்து ஆயிரம் முத்தம். கடைசியில் காலில் போட்டு ஒரே மிதி.&lt;br /&gt;- யாரோ&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;பற்ற வைத்தேன்&lt;br /&gt;பார்த்துவிட்டாள்&lt;br /&gt;அணைத்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-8928909622827563172?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/8928909622827563172/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=8928909622827563172' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/8928909622827563172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/8928909622827563172'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/07/blog-post_7698.html' title='அணையும்யா நெருப்பு'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-1846379006505221126</id><published>2009-07-29T08:54:00.000-07:00</published><updated>2009-07-29T08:57:48.288-07:00</updated><title type='text'>உலகியற்றியான்</title><content type='html'>&lt;strong&gt;தாழ்வாரம் இல்லை&lt;br /&gt;தனக்கொரு வீடில்லை&lt;br /&gt;தேவாரம் எதற்கடி?&lt;br /&gt;- யாரோ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்லினுள் வாழும் தேரைக்கும்&lt;br /&gt;கருப்பை உயிருக்கும்&lt;br /&gt;சோறு போட்டு&lt;br /&gt;விதர்பா விவசாயியைத்&lt;br /&gt;தூக்கில் போட்டவன்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-1846379006505221126?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/1846379006505221126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=1846379006505221126' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1846379006505221126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1846379006505221126'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/07/blog-post_29.html' title='உலகியற்றியான்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-4189088994334303068</id><published>2009-07-18T10:34:00.000-07:00</published><updated>2009-07-18T10:40:41.255-07:00</updated><title type='text'>ஒத்திகை</title><content type='html'>பரிட்சயமில்லாதவர்கள்&lt;br /&gt;சந்தித்துக் கொண்டதொரு கூட்டத்தில்&lt;br /&gt;எனக்கு முன்னால்&lt;br /&gt;அறிமுகம் செய்தவனின்&lt;br /&gt;முகம்கூட நினைவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-4189088994334303068?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/4189088994334303068/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=4189088994334303068' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/4189088994334303068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/4189088994334303068'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/07/blog-post.html' title='ஒத்திகை'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-1653135321833704868</id><published>2009-06-26T23:09:00.000-07:00</published><updated>2009-06-28T02:08:22.154-07:00</updated><title type='text'>திசைதொலைக்கும் கடலோடிகள்</title><content type='html'>&lt;strong&gt;மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்&lt;br /&gt;பழித்தது ஒழித்து விடின்.&lt;br /&gt;- வள்ளுவம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகம், ஒரு யானை மாதிரிங்க. பிறவிக்குருடர்கள் போல, நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களைத் தொட்டுப்பார்த்து எப்படிஎப்படியோ புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். யாருக்கும் இல்லாத தும்பிக்கைதான் உலகம் எனத் தூக்கிவிடுகிறாள் தாய் ஒருத்தி. எல்லாவற்றையும் தாங்குகிற கால்கள்தான் உலகம் என இறக்கிவிடுகிறான் தந்தை ஒருவன். எதிர்த்து நிற்கும் தந்தம்தான் உலகம் என உசுப்பிவிடுகிறார் ஒரு குரு. வாலைப் பிடித்திழுத்து மதமடக்கும் நட்புதான் உலகம் என ஆசைகாட்டித் தந்தம் கடத்துகிறான் ஒரு சுயநலக்காரன். திடீரென ஒருவன், "கண்டுபிடிச்சிட்டேன்! காதுக்குள்ள எறும்பு போனா யானக்கிக் கோவம் வருது. எல்லாரும் நான் சொல்றதக் கேளுங்க. இல்லாட்டி எறும்பக் காதுக்குள்ள விட்டுடுவேன்". அவன் காட்டும் திசையில் ஓட ஆரம்பிக்கிறோம். எறும்பு என்று ஒன்று உண்மையிலேயே இருந்திருந்தால்கூட, யானையே புரியாத குருடர்கள் நெரிசலில் செத்தேபோயிருக்கும். வயிறருகில் வழுக்கி விழுபவர்கள் யானையைப் பழிக்கிறார்கள். எதையும் கண்டுகொள்ளாமல் நின்றுகொண்டே தூங்குகிறது யானை.&lt;br /&gt;&lt;br /&gt;அமர்ந்த உடனேயே தூங்குவதற்குத் தயாரானேன். டிக்கட் எடுக்க வேண்டும். கடைசி நிறுத்தத்திற்கு டிக்கட் கேட்டு ஒரு தீர்மானம் கொண்டுவந்தேன். பஸ்ஸக் கடத்தப்போறதா சந்தேகப்பட்ட நடத்துனர் அதிகம்பேச, இருக்கையில் இருந்து ஓட்டுனர் எழுந்திரிக்க, தூக்கமயக்கத்தில் சகபயணிகள் எதிர்க்க, வெளிநடப்பு செய்தேன். இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையில், என்னை இறக்கிவிட வேற நல்ல இடமே கெடைக்கலையா? பழக்கப்படாத பாதை; சுற்றி இருள்; கடந்து செல்லும் வாகனங்களின் ஹாரன் சத்தம்கூட எரிச்சலூட்டும் தனிமை; அதிகாலை இரண்டுமணியின் மார்கழிக்குளிர்.&lt;br /&gt;&lt;br /&gt;வெகுநேரமாக ஒருசிந்தனையும் இல்லாமல் ஒரு பாலத்தின் சுவரில் நான் அமர்ந்திருந்தபோது, சாலையின் மறுபுறம் முட்புதர்களுக்கு இடையே ஒரு சிறு விளக்கொளி. அருகில் சென்றபோதுதான் தெரிந்தது, அது ஒரு கல்லறை. சிலுவைகளை எண்ணினேன். சத்தம்போட்டு "இருவத்தி ஆறு" எனக் கத்தினேன். சரிசொல்லிப் போனது ஒரு லாரியின் ஹாரன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ பாட்டு முனகினேன். அரிப்பாரைத் தாங்கும் நிலம் என்னையும் தாங்கிக்கொண்டு இருந்தது. சிறுநீரின் சத்தத்தில் இரட்டைக்கிளவி பார்க்கும் அளவிற்குத் தனிமை. அதையும் கலைத்தது இன்னொரு கிளவி. தடதட கடகட சலசல. சரியாக கேட்கவில்லை. நீர் முடித்து, கண்காதுகள் துரிதப்படுத்தினேன். கடகட தான். கல் எறியப்பட்ட சத்தம். மீண்டும் கடகட. கடகட. கடகட. கற்கள் வரும் திசை நோக்கி நடந்தேன். அது ஒரு குழி. பத்துக்குப் பத்து நீளஅகலம் இருக்கும். ஆழமெல்லாம் இருள்மூடிக் கிடந்தது. இரண்டடி வரை கொஞ்சம் சுவர்மட்டும் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;யாரென்று கேட்டேன். கல் வந்தது. யாரது. கல். அமைதியாக நின்றேன். கல். எல்லாக் கற்களும் நான் நிற்கும் இடத்தின், எதிர்ப்பக்க வலதுமூலையில் இருந்து வந்தன. கல். இருகைகளின் விரல் நுனிகளில் சட்டென்று ஆரம்பித்து, ஜிவ்வென்று மேலேறி, காதுகளுக்கு அருகில் சில்லென்று சிலிர்த்துவிட்டு, நடுமண்டையின் உச்சியில் பட்டென்று தாக்கியது ஒரு மின்சாரம். பின்னங்கால்கள் பிடறியில் அடிபடாமல் ஓடி, நுரையீரல் கேட்டுக்கொண்டதற்கிணங்க நின்றேன். எதிரில் சிமிட்டிக்கொண்டிருந்தது ஒரு கிராமம். மெதுவேகமாக நடந்தோடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மராட்டிய மாநிலம் சனிசிங்னாபூருக்குள் நுழைந்துவிட்ட ஒரு பிரமை. பூட்டப்படாத வீடுகள். யாரும் இல் உள் இல்லை. ஆறுதல் பரிசாகச் சற்று தூரத்தில் மனிதக்குரல்கள். ஆங்காங்கே கிறிஸ்மஸ் ஸ்டார் கட்டப்பட்ட வீடுகள்; இரண்டு நாட்களுக்குமுன் நினைவுநாள் அனுசரிக்கப்பட்ட எம்ஜிஆர் நிழற்படம். அஞ்சாமை என்ற திராவிடர் உடைமையைத் தூக்கிக்கொண்டு நகர்ந்தேன். கடந்துபோனபிறகு நாயொன்றுக்கு மனதார  நன்றி சொன்னேன். மொத்த ஊரும் அச்சிறுகோவிலில் கிறிஸ்மஸ் கொண்டாடிக்கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரின் மொத்தப் பேச்சுரிமையையும் சிறைவைத்துப் பேசினேன்: "எம்பேரு சேகர். வழிதவறி பஸ்ஸவிட்டு எறங்கிட்டேன். ரோட்டுப் பக்கத்துல ஒரு கல்லறை இருந்துச்சு; அது பக்கத்துல ஒரு பள்ளங்க; அதுக்குள்ள இருந்து கல்லா வருது; பயந்து உடியாந்துட்டேன்".&lt;br /&gt;&lt;br /&gt;யாருமே பேசவில்லை. ஒரு பதினைந்து ஆண்கள் என்னைத் தனியாக ஒருவீட்டுக்குக் கூட்டிவந்து, முகம்கழுவச் சொன்னார்கள். இரண்டு நாட்களுக்குமுன் நினைவுநாள் அனுசரிக்கப்பட்ட தந்தை பெரியாரின் படம் அவ்வீட்டில் இருந்தது. தொட்டி நீருக்குள் தலையைவிட்டு கண்களை நன்றாகத் திறந்து பார்த்து, தலைதுவட்டினேன். எனக்குக் கதை சொன்னார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;"அதுவந்து தம்பி, போனமாசம் கல்லறத் திருநா அன்னிக்கி வெங்காய  வெடி வெடிக்க,  கல்லற பக்கத்துல ஒரு சின்ன குழி வெட்டுனோம்.  ஒக்காந்த மனியமா மூணு எலும்புக்கூடுக தம்பி"&lt;br /&gt;"நாங்களும் சுத்துவட்டாரமல்லாம் விசாரிச்சுப் பாத்தோம். ஒண்ணும் தண்டுப்படல. ஊர் பெரிய மனுசங்க எல்லாம் அவுங்கவுங்க வகையறாவுல ஒக்காரவெச்சு பொதக்கிற வழக்கமில்லனு அடிச்சு சொல்லிட்டாங்க"&lt;br /&gt;"மதுர பக்கத்துல செல வடநாட்டுக்காரங்க இருக்காங்க. அவங்களுக்குள்ளயும் இப்டியாப்பட்ட சடங்கு கெடையாதாம். மண்ணுவேற கெட்டி மண்ணா இருந்ததால எங்களாலையும் ஒருமுடிவுக்கு வரமுடியல"&lt;br /&gt;"இப்ப போலீசுதான் ஒன்ற ஆளுமட்டத்துக்குப் பள்ளந்தோண்டி விசாரிச்சுகிட்டு இருக்குது". பலவிசயங்கள் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பவே மதுரயில குறிசொல்றவன் ஒருத்தன் சொன்னான். ஒரு இருவது அறிகுறிகள் இருக்காம். அது எல்லாம் நடந்து முடிஞ்சவொடனேயே ஒலகம் அழிஞ்சிடுமாம். இரும்பு பறக்குமாம்; செவுரு பேசுமாம். பிளைட்டு பறக்குதா? பஞ்சாயத்து டிவி பேசுதா?" &lt;br /&gt;"அந்தப் பிளைட்டையும் கடத்திட்டிப் போயிடுறாய்ங்க. அதையும் டிவிதான் சொல்லுது. இன்னும் அஞ்சே நாளுதான்; ரெண்டாயிரத்துல ஒலகம் அழியிறது நிச்சயம்".&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814, சம்மந்தமில்லாத ஒரு கிராமத்திற்குள் புகுந்துவிட்டதாக உணர்ந்தேன். கந்தகார் என்ற ஏதோ ஓரூரில் இதே நேரத்தில் அந்த விமானத்திற்குள் 200௦௦க்கு மேற்பட்ட பணயக்கைதிகள். அவர்களுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசமில்லை. பயணத்தால் கைதிகள். உச்சந்தலை மின்சாரத்தை அணைத்துவிட்டு, இயல்பாகப் பேச ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"பெரியார் படமெல்லாம் வெச்சு இருக்குறதுனால கேக்குறேன். ஒண்ணுமே பண்ணாம, ஒரு கல்லு நகருமுன்னு நம்புறிங்களா? ஏம்மேல கல்லெறிய எந்தப் பேய்ப்பிசாசுக்கும் தைரியம் கெடையாதுன்னு நம்புறவன் நான். நாளைக்கிக் காலையில அந்தக் குழிக்குள்ள ஒரு பொணமிருந்தா, கொன்னது பேயில்ல. நீங்களும் நானும்தான்".&lt;br /&gt;&lt;br /&gt;சபரிமலைக்கு மாலைபோட்டிருந்தவரின் மகன் ஒருவன். பெரியார் படவீட்டின் ஒரு மகன். கோவில்பிள்ள கடைசிமகன். விருந்தாளியாக வந்த ஒருவர். நான்கு பேர் தயாரானார்கள். ஆளுக்கொரு டார்ச் லைட். ஒற்றை ஏணியுடன் ஐந்துபேர் குழிநோக்கிக் குவிந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குழிக்குக் கொஞ்சம் தூரத்திலேயே நின்றுகொண்டு, எனக்கு நடந்ததை விளக்கினேன்.&lt;br /&gt;"நான் வடக்கால நின்னேன். தெக்கால மூலையில இருந்துதான் கல்லு வந்திச்சு. ஒண்ணரை ஆளுமட்டம் ஆழம்னா, கண்டிப்பா ஆளு படுத்துக்கிட்டோ இல்ல ஒக்காந்துகிட்டோ இருக்கணும். ஏந் நெஞ்சு மட்டத்துக்குக் கல்லு போச்சு. நின்னுக்கிட்டு எறிஞ்சிருந்தா கண்டிப்பா கையசைவு தெரிஞ்சிருக்கும். படுத்திக்கிட்டலாம் இவ்வளவு ஒயரத்துக்கு எறியமுடியாது. அப்படியே எறிஞ்சாலும், ஒடம்பு அசையுற சத்தம் கேக்கும்". எல்லாரும் ஒருமனதாக ஒத்துக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"குழிக்குள்ள இருந்து பிட்டு சத்தம் வரல. நான் கொரல் கொடுத்தும்கூட கல்லுமட்டும்தான் வந்திச்சு. ஊமையாவோ இல்ல வாய் கட்டி இருந்தாவோ, கத்த முயற்சி பண்ணியிருக்கலாம்.  இல்லாட்டி ஒடம்ப தேச்சு சத்தம் உண்டாக்கி இருக்கலாம். அதுனால நான் என்ன சந்தேகப்படுறேன்னா, தென்மேற்கு மூலையில ஒரு உயிர் ஒக்காந்து இருக்கு; அது சத்தம் போடுற நெலமையில இல்ல. ஆனா சத்தமில்லாம கல் எறியறதுதான் புடிபடல".&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து மூளைகள் யோசித்தும், ஒரு முடிவும் இல்லை. என்ன வேண்டுமானாலும்  இருக்கலாம்; நடக்கலாம்; இல்லாமலும் போகலாம். திட்டம் தயாரானது. மூன்றுபேர் ஆளுக்கொரு திசையில் படுத்துக்கொண்டு, குழியின் எதிர்ப்பக்கம் தெரியும்வரை ஊர்ந்து முன்னேறினார்கள். நானும், இன்னொரு நண்பனும், வடக்குப்பக்கமும் மிச்சம். திட்டமிட்டபடி, இப்போதைக்கு அவ்வுயிரின் தோராய இடம் கண்டுபிடிக்க வேண்டும். எனது முதல் அனுபவத்தை மீண்டும் உண்டாக்கும் முயற்சி அது.&lt;br /&gt;&lt;br /&gt;இருவத்தி ஆறு. தேவையில்லை என்றாலும், அவசரத்துக்காக சர்சர் எனும் இரட்டைக்கிளவி. பேதமை நிறைந்தது என் வாழ்வு அதில் பேதையும் வரைந்தது சில கோ.... அதோ கடகட! வடக்குப்பக்கம் சென்று நின்றேன். யாரது. கல். கல். கல். திரும்பிவந்துவிட்டேன். கல் ல் ல் ல். கல் ல். தெற்குப்பக்க வலதுமூலையில், அதாவது தென்மேற்கு மூலையில் ஓர் உயிர் இருப்பது உறுதியானது. எதிர்பார்த்தபடியே நடந்ததால், திட்டமும் மறுபரிசீலனை இல்லாமல் தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்குப்பக்கம் ஊர்ந்தேபோய், என்னுடம்பு குழிக்குள் முடிந்தமட்டும் தெரியாமல், என் பார்வையைத் தென்மேற்கு மூலையில் நிறுத்திவைத்தேன். தெற்குப்பக்க நண்பனும் அதே செய்தான். திட்டமிட்டபடி அவன் சட்டென டார்ச்சை ஆன்செய்து, தெற்குப்பக்க ஆழத்தில் வெளிச்சம் காட்டினான். பார்த்துவிட்டேன். உச்சந்தலை மின்சாரம் உடம்பெல்லாம் பாய்ந்து துக்கிவாரிப்போட்டது எனக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பித்த இடத்திலிலேயே மீண்டும் கூடினோம். எனக்கு வார்த்தைகள் தடுமாறின.&lt;br /&gt;"ஒரு பொண்ணு ஒக்காந்துருக்குங்க"&lt;br /&gt;"பொண்ணா?"&lt;br /&gt;"நம்ம வயசிருக்கும் போல தெரியுது. தாவணி. கண் முழிச்சிருக்கு. தலைய மேலத் தூக்கி வடக்கப் பாத்து ஒக்காந்திருக்கு".&lt;br /&gt;&lt;br /&gt;புதுத்திட்டம் தயாரானது. நான்குபேர் திசைக்கொரு பக்கம் படுத்துக் கொண்டோம். நான் திரும்பவும் வடக்கு. எனக்குப் பின்னால் இன்னொரு நண்பன் சற்று தூரத்தில் நின்றுகொண்டான். கிழக்குப்பக்க நண்பன் டார்ச்சை ஆன்செய்து, தெற்குப்பக்கச் சுவரில் இருந்து ஓரடி இடைவெளிவிட்டு, மேற்குச் சுவரில் வெளிச்சம் காட்டினான். என் இடதுகை சைகைப்படி, கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தைக் கீழிறக்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பார்வைமட்டம் வந்தவுடன் நிறுத்த சைகை காட்டினேன். அவள்மேல் வெளிச்சம்படாமல், நான்மட்டும் அவளைப் பார்ப்பதற்கான ஏற்பாடு. புத்தம்புது தாவணி. தலைக்கு மல்லிகைப்பூ வைத்திருக்க வேண்டும். இரண்டின் மணங்களையும் என்னால் உணர முடிந்தது. கண்கள் அகல விரிந்திருந்தன. மேலும் கீழும் ஏறி இறங்கின. மூச்சுவிடும் வேகம் அப்படி இருக்கலாம். திட்டமிட்டபடியே, ஆளாளுக்கு எதிர்ச்சுவர்களில் வெளிச்சம் செய்தோம். அவளைத்தவிர யாருமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் கூடினோம். நன்கு உடையணிந்த ஒரு பெண், வேறுயாரும் இல்லாத குழிக்குள் நகராமல் இருப்பது இன்னும் மர்மமாகத்தான் பட்டது. அவளுடன் பேசமுடிவெடுத்து மீண்டும் பழைய நிலைகளுக்குத் திரும்பினோம். பழையபடி கிழக்குநண்பன், அவள் பார்வை மட்டத்தில் ஒளிநிறுத்தினான். நான் பேசினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்க ஒங்களக் காப்பாத்தத்தான் வந்துருக்கோம். நான் கேள்வி கேக்குறேன். ஆமான்னா கண்ண சிமுட்டுங்க. இல்லன்னா ஒண்ணும் செய்ய வேண்டாம்.          தமிழா?"&lt;br /&gt;முதல் அடியே நல்ல அடிதான். கண்ணடித்தாள்.&lt;br /&gt;"நாங்க குழிக்குள்ள எறங்கி ஒங்களக் காப்பாத்தலாமா?"&lt;br /&gt;அடி சறுக்கியது. அதாவது ஆம், இல்லை என்ற இருபதில்களைத் தவிர வேறொரு பதில் சொன்னாள். கண்களைக் கீழ்நோக்கிச் சுழற்றிக் காட்டினாள். என் சைகைப்படி கிழக்குநண்பன் கீழிறக்கித் தரையில் அடித்தான். சடாலென தெற்குநண்பன் குழியைவிட்டு நகர்ந்தான்; எங்களையும் வரச்சொல்லி சைகை செய்தான். &lt;br /&gt;&lt;br /&gt;"என்னாச்சு?"&lt;br /&gt;"அந்தப் பொண்ணு 'உடும'ன்னு சின்னச்சின்ன கல்லாலயே எழுதி இருக்குடா. உள்ள உடும்பு இருக்குமோ?". இறுதித்திட்டம் தயாரானது. பழைய நிலைகளில் ஒரு சின்ன மாற்றம். தெற்கு நண்பனும், எனக்குப் பின்னால் நின்ற நண்பனும் வடமேற்கு மூலைக்கு வந்தார்கள். &lt;br /&gt;"குழிக்குள்ள உடும்பு இருக்கா?" அவளிடம் கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;எரியத்துடிக்கும் மெழுகுவர்த்தி, கழுத்தறுபட்ட கோழி, சூடுபட்ட குழந்தை, எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திப் படபடத்தன அந்தப் பட்டாம்பூச்சி இமைகள். நாடுகடத்தப்பட்டவன் தனதுமொழி கேட்டுத் திரும்பும் ஒரு பரபரப்பு. தென்னைமரத்தில் காய்பறிப்பவன் முதலில் பார்க்கும் ஆழிப்பேரலை தரும் மரணபயம். நீண்டநாள் நீரருந்தா பாலைவனப் பயணி, தண்ணீர் குடிக்கும் ஒருவனின் தொண்டையைப் பார்க்கும் எதிர்பார்ப்பு. எல்லாவற்றையும் ஒருசேரக் காட்டின அந்த சோடிப் பட்டாம்பூச்சி விழிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;திட்டப்படி, வடமேற்கு சந்திப்பில் மேலும் கீழும் வெளிச்சம்போட்டுப் பார்த்துவிட்டு, அப்பகுதியில் உடும்பில்லாததை உறுதிசெய்தோம். &lt;br /&gt;"கவலப்படாதீங்க. எங்கள்ட்ட ஏணி இருக்கு. இப்ப ஒங்க காலடியில ஏணிய வெக்கிறோம். எங்கள்ல ஒருத்தர் ஏணியில மல்லாக்கப் படுத்திருப்பாரு. ஒண்ணுமில்ல, ஏணிய நல்லா வெச்சதுக்கப்பறம் ஒங்க மொழங்க்கைய அவரு புடிச்சிக்கிவாரு. நீங்க ஒண்ணுமே பண்ணத் தேவையில்ல; ஒங்க ஒடம்ப மட்டும் ஏணிக்கு மேலயே வெச்சுக்குங்க. அப்பறம் எல்லாமே நாங்க பாத்துக்குறோம்". &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் தயங்கி யோசித்த பிறகு, தன் முழங்கையைத் தொடும் அனுமதியை முகம் தெரியாத ஓர் ஆணுக்குத் தந்தாள். புத்தம் புது தாவணியுடன், கசங்காத மல்லிகையுடன் ஏணிமேல் படுக்கவைத்தே ஊர்கொண்டுவந்து சேர்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிற்றுக் கிழமை என்பதால் அதிகாலையிலேயே கிறிஸ்தவக் குடும்பங்கள் பக்கத்து ஊர் பெரிய கோவிலுக்குப் பூசைக்குச் செல்லத் தயாரானார்கள். நானும் பஸ் ஸ்டாண்ட் வரை உடன் சென்றேன். &lt;br /&gt;"நீங்க எந்த ஊரு தம்பி?"&lt;br /&gt;வசமாக மாட்டிக்கொள்ளாமல் இருக்க, கைவசம் இருந்த ஒருபதில் சொன்னேன்.&lt;br /&gt;"நான் ஒரு மதத்தோட குரு. ஊர் ஊராப் போயி மக்களோடப் பழகி அவங்கள நெறிப்படுத்துறதுதான் எங்களோட வேல. எங்களப் பத்திய உண்மைகள யாருக்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு எங்க மடத்தோட கட்டளை. தெரிஞ்சா மக்களால சகஜமா பழகமுடியாதுள்ள. நான் ஒங்க ஊரவிட்டுப் போறதுனால சொன்னேன்".&lt;br /&gt;&lt;br /&gt;வருகிற சனிக்கிழமை, கன்னியாக்குமரியில கடல் நடுவுல திருவள்ளுவருக்குச் சிலை திறக்கப்படப் போவதாகவும், மாமா வரச்சொன்னதாகவும் ஒரு சிறுமி சொல்லிக்கொண்டு வந்தாள்.&lt;br /&gt;"அன்னக்கி எல்லாரும் கடலுக்குள்ள இருப்பமோ, மண்ணுக்குள்ள இருப்பமோ, இல்ல நெருப்புக்குள்ள இருப்பமோ யாருக்குத் திரியும்?". சிரித்தேன்.&lt;br /&gt;கடைசி நிறுத்தத்திற்கு டிக்கட் தரும் ஒரு பேருந்தில் ஏறிக்கொண்டேன். கடந்த ஆறுமணிநேரத்தில் நடந்த பெரும்பாலான விசயங்கள் எனக்குப் புரியவில்லை.&lt;br /&gt;"பகலில் அவள்பார்த்த உடும்பு, உண்மையிலேயே அந்த நேரத்திலும் குழிக்குள் இருந்ததா?"&lt;br /&gt;"இந்த ஊர் கிறிஸ்மஸ்க்கு மறுநாள், அதுவும் ராத்திரி 3 மணிக்கு ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறது?"&lt;br /&gt;"வடக்கப் போகுமுனு ஏறுனா இந்தப் பஸ் ஏன் தெக்கப் போகுது?".&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ வீடுவந்து சேர்ந்தேன். வெள்ளிக்கிழமை, IC 814 மீட்கப்பட்டது. சனிக்கிழமை கடல் நடுவில் எழுந்து நின்று தமிழ்மக்களைப் பார்த்தார் வள்ளுவர். நியூஸிலாந்தில் ஏதோ ஒரு தீவில் சூரியன் முதல்கதிரை கைதுசெய்ய சில பேர் போயிருந்தனர். சோழமன்னனின் தாயொருத்தியைப் போல் சிலபேர், பிரசவத்தைக் காலந்தள்ளி நிகழ்த்திக் கொண்டார்கள். மண்ணுக்குள், கடலுக்குள், நெருப்புக்குள் நான் எங்கும் போகவில்லை; வீட்டில்தான் இருந்தேன். ஒண்ணுமே இல்லாததில் இருந்து வந்த இந்த உலகம், ஒண்ணுமே இல்லாமல் போகாமல் இருக்க, நான் ஒண்ணுமே செய்யாமல் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாலுகால் பாய்ச்சலில் ஓடிய காலம், அந்தப் பட்டாம்பூச்சி விழிகளைச் சானூரப்பட்டி சானடோரியத்தில் சந்திக்கும் வாய்ப்பும் தந்தது. பெயர்கூட தெரியாத அவளிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பாமல், விலகிப்போய்விட்டேன். சில நாட்களுக்கு முன், பிறவியிலேயே பார்வை இல்லாத இருவர் மணந்துகொண்ட ஒரு திருமணத்திற்கு அழைக்கப்படாமல் சென்றிருந்தேன். மணப்பெண்ணருகில் நின்றுகொண்டிருந்த பட்டாம்பூச்சியிடம் என்னை அறிமுகப்படுத்தி, மணமக்களிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டேன். சிறகடித்த கண்கள் அழுதுகாட்டின.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பணிபுரியும் பள்ளிக்கூடத்திற்கு ஒருமுறை கூட்டிப் போனாள். குளத்துக்கரையில் கருவேலங்காட்டுக்குள் அந்த ஓட்டுப் பள்ளிக்கூடம். சுற்றி 3 கிலோமீட்டருக்கு வீடே கிடையாது. பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ இல்லாத குழந்தைகளுக்கான பள்ளி அது. யாரோ ஒரு பையனைக் கூட்டிவரச் சொல்லிவிட்டு, என்னை அவள் அறைக்கு அழைத்துப் போனாள். &lt;br /&gt;"நான் அந்தப் பள்ளத்துக்குள்ள எப்படி வந்தேன்னு கேக்காமலேயே போய்ட்டீங்களே! அன்னக்கி கிறிஸ்மஸ்சுக்காக எங்க அக்காவீட்டுக்குப் போனப்பதான் அப்டி விழுந்திட்டேன். அடுத்த வெள்ளிகிழம ராத்திரி, ஓலகம் அழியப்போற பயத்துல குடிச்சுகுடிச்சே எங்க மாமாவும் தவறிட்டாரு. ஒருபயலப் பெத்துப் போட்டுட்டு அதே ராத்திரி அக்காவும் போய்டா". &lt;br /&gt;எனது கண்கள் சிமிட்டப்படவில்லை. "என்னங்க அம்மா?" என்று கேட்டுக் கொண்டே ஒரு சிறுவன் அறையினுள் நுழைந்தான். &lt;br /&gt;"என்ன ஆச்சரியமாப் பாக்குறீங்க? அக்கா பையன்தான். ஸ்கூல் லீவுநாள் அன்னக்கி மட்டும் அம்மான்னு கூப்புடுவான். இவன் பொறந்த நேரம், பக்கத்து ஊரு கோயில்ல மணியடிச்சுச்சு. புதுவருசம்ல". இந்த நூற்றாண்டின் முதல் தமிழ்க்குழந்தை என்வலதுகரம் பிடித்துக்கொண்டு பக்கத்தில் அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நின்றுகொண்டே யானை இன்னமும் தூங்கிக்கொண்டிருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் தொட்டுப்பார்க்கலாம். எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம். எல்லாமே யானை தூங்கும்வரைதான். மதம்பிடிக்கும் யானைக்குத் தெரிவதில்லை பாகனுக்கும், பிறவிக்குருடனுக்கும் வித்தியாசம். மதம்பிடிக்காதவரை நடக்கும் சேதாரங்களுக்கு எல்லாம் யானை பொறுப்பல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html"&gt;இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது&lt;/a&gt;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-1653135321833704868?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/1653135321833704868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=1653135321833704868' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1653135321833704868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1653135321833704868'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/06/blog-post_26.html' title='திசைதொலைக்கும் கடலோடிகள்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-2035876871418353728</id><published>2009-06-10T03:36:00.000-07:00</published><updated>2009-06-10T09:02:22.619-07:00</updated><title type='text'>துருத்தி</title><content type='html'>&lt;strong&gt;வாசலில் போடப்பட்டிருக்கும் பால்பையை எடுத்துப்போய் அம்மாவிடமும், செய்தித்தாளை அப்பாவிடமும் கொடுக்க குழந்தைக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்.&lt;br /&gt;- வெண்ணிலா (நெருப்பு மலர்கள், ஞாநி)&lt;br /&gt;&lt;br /&gt;இங்குதான் இவள்&lt;br /&gt;தனியாக&lt;br /&gt;உறங்குகிறாள்.&lt;br /&gt;- யாரோ சொன்னதாக, பால்வினை தொழிலாளி பற்றி, வைரமுத்து சொன்னது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது நடப்பதுமில்லை&lt;br /&gt;அது விழிப்பதுமில்லை&lt;br /&gt;அது புசிப்பதுமில்லை&lt;br /&gt;அது பிரசவிப்பதுமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அது அதுவாகவே இருப்பதுமில்லை&lt;br /&gt;அதாவது&lt;br /&gt;அது 24 * 7 அது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாரமொருநாள்&lt;br /&gt;நள்ளிரவில் ஒருமணிநேரம்&lt;br /&gt;அது அவளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் என்றால்&lt;br /&gt;முழுவதும் அவள் இல்லை&lt;br /&gt;மூச்சு மட்டும் விடுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றோ ஒருநாள்&lt;br /&gt;இதுபோதும் என&lt;br /&gt;நிறுத்திக்கொண்ட&lt;br /&gt;சராசரி வாழையுயர&lt;br /&gt;ஆலத்தின் அடியில்&lt;br /&gt;ஒரு மண்மேட்டின்&lt;br /&gt;ஆழத்தில் அது இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் படைத்த கடவுளின்&lt;br /&gt;ஏழாம் நாள் ஓய்வின்&lt;br /&gt;உதாசீனம் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே&lt;br /&gt;அதுவா? இல்லை அவளா?&lt;br /&gt;யாருக்கும் தெளிவில்லை.&lt;br /&gt;தெளியாத பலகதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறுநில மன்னனின்&lt;br /&gt;காமவேட்டைக்குத் தப்புகையில்&lt;br /&gt;யானைவேட்டை குழியில்&lt;br /&gt;விழுந்து இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்த்மா நோய்கள்&lt;br /&gt;அறியப்படாத காலத்தில்&lt;br /&gt;பெரும்பாடுபட்டு&lt;br /&gt;இறந்து இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எது என்னவாக&lt;br /&gt;இருந்ததால் என்ன?&lt;br /&gt;அது அவள்தான் என&lt;br /&gt;நள்ளிரவு பெண்கள் கூட்டம்&lt;br /&gt;அந்த மூச்சுவிடும்&lt;br /&gt;கல்லறை சுற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அதோ&lt;br /&gt;அது அவளாகிறாள்.&lt;br /&gt;அவள் அதுவாவதற்குள்&lt;br /&gt;வேண்டுதல்கள் கூறியபடி&lt;br /&gt;ஆங்காங்கே சிலர். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருமணி நேரத்தில்&lt;br /&gt;அவளும் அதுவானது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவந்த கண்களின் கறைகளை&lt;br /&gt;முந்தானையின் கரைகள் துடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குத்துப்பட்ட மார்புகள்&lt;br /&gt;சரியாக மூடப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கடைபோன சிறார்கள்&lt;br /&gt;தேடப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நனைந்த ஆணுறைகள்&lt;br /&gt;கருவேலமரத்தில் பூக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெருமூச்சு விட்டபடி&lt;br /&gt;அவர்கள் புறப்படுகிறார்கள்.&lt;br /&gt;அவர்களின் அடுத்த&lt;br /&gt;இரவு எப்படியோ?&lt;br /&gt;&lt;br /&gt;பீடியில் இருந்து&lt;br /&gt;சிகரெட் மாறிய ஒருவன்&lt;br /&gt;ஒருத்தியின் மர்ம உறுப்பில்&lt;br /&gt;தூபம் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாமிக்கு மாலைபோட்ட&lt;br /&gt;ஆசாமி ஒருவன்&lt;br /&gt;நிர்வாணமாய் நிற்கச்செய்து&lt;br /&gt;பார்வையால் குத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி ஒருத்தியின் கள்ளக்காதலால்&lt;br /&gt;வரதட்சணை வழக்கில்&lt;br /&gt;பத்தாவது முறை ஒருவன்&lt;br /&gt;தலைநகரம் செல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேஸ் அடுப்பு திறந்து வைத்து&lt;br /&gt;மருமகளைப் பூட்டிவைது&lt;br /&gt;திருப்தியாக மாமியார் ஒருத்தி&lt;br /&gt;திருப்பதி போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே நேரத்தில்&lt;br /&gt;வீட்டில் தனியே இருக்கும் மகள்&lt;br /&gt;பூப்பெய்தி இருக்கலாம்.&lt;br /&gt;போனவாரம்வரை&lt;br /&gt;மொட்டைக் கிள்ளிய&lt;br /&gt;பக்கத்துவீட்டு அண்ணா&lt;br /&gt;அந்தப் பூவையும் பறித்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒரு திருப்தியில்&lt;br /&gt;அவர்கள் போகிறார்கள்.&lt;br /&gt;ஏதோ ஒரு நம்பிக்கையில்&lt;br /&gt;மீண்டும் வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவாகவோ இதுவாகவோ&lt;br /&gt;உயிர் மதிக்கப்படாமல்&lt;br /&gt;வாழ்ந்துவிட்டு &lt;br /&gt;அவளாகவோ இவளாகவோ&lt;br /&gt;திரும்பி வந்து&lt;br /&gt;அவள் மூச்சு கேட்கும்வரை&lt;br /&gt;அவளும் அதுவாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும்&lt;br /&gt;அடுத்த வாரம்&lt;br /&gt;சந்திக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-2035876871418353728?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/2035876871418353728/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=2035876871418353728' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/2035876871418353728'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/2035876871418353728'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/06/blog-post.html' title='துருத்தி'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-7394941207733308242</id><published>2009-05-11T08:23:00.000-07:00</published><updated>2009-05-12T01:02:34.818-07:00</updated><title type='text'>முதல்காலை</title><content type='html'>&lt;strong&gt;&lt;br /&gt;எல்லா பெண்களை போலவே அவளும் இனி தன் உடல் தன்னுடையதில்லை என்று ஒத்துக் கொண்டவளை போல அவன் இச்சையின் போக்கில் தன்னை ஒப்படைத்துக் கொள்ள துவங்கினாள்.&lt;br /&gt;- எஸ்.ராமகிருஷ்ணன்&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று வாங்கிய&lt;br /&gt;முதல் எழுத்தைக்&lt;br /&gt;கிடைக்கும் பொருளெல்லாம்&lt;br /&gt;கிறுக்கிப் பார்க்கிறாள்&lt;br /&gt;பெயர் மட்டும்&lt;br /&gt;எழுதத் தெரிந்தவள்.&lt;br /&gt;&lt;br /&gt;சீரா கேட்டிக சீருன்னு&lt;br /&gt;ஆயி அப்பன்மேல&lt;br /&gt;சீறு சீறுன்னு சீறுறான்&lt;br /&gt;இராவோடு rawவா&lt;br /&gt;முதல் எழுத்தறிவித்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-7394941207733308242?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/7394941207733308242/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=7394941207733308242' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/7394941207733308242'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/7394941207733308242'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/05/blog-post_11.html' title='முதல்காலை'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-3661824047147113479</id><published>2009-05-10T01:13:00.000-07:00</published><updated>2009-05-10T01:57:58.855-07:00</updated><title type='text'>கால்காசு</title><content type='html'>சகமனிதன் ஒருவனைக்&lt;br /&gt;குனிய வைத்து&lt;br /&gt;செருப்பெடுக்கச் செய்வதில்&lt;br /&gt;ஆரம்பமாகிறது&lt;br /&gt;கோயில் புகுந்து&lt;br /&gt;தெய்வநிலை தேடல்.&lt;br /&gt;&lt;br /&gt;-ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-3661824047147113479?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/3661824047147113479/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=3661824047147113479' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/3661824047147113479'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/3661824047147113479'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/05/blog-post.html' title='கால்காசு'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-7278841019939156437</id><published>2009-04-15T09:02:00.000-07:00</published><updated>2009-04-15T23:53:36.605-07:00</updated><title type='text'>MH - 06</title><content type='html'>&lt;strong&gt;முப்பத்தி மூன்றுகூட&lt;br /&gt;பெற முடியாத&lt;br /&gt;நூற்றுக்கு நூறு&lt;br /&gt;மதிப்'பெண்'.&lt;br /&gt;- யாரோ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேல்மூடி இருக்கும்; வெண்மைக் குயிர்தரும் &lt;br /&gt;திரவம் சுமக்கும்; அழுது புறந்தள்ளும்;&lt;br /&gt;கத்திப்பதம் காணும்; நெஞ்சில் சுமக்கும்&lt;br /&gt;ஆங்கிலப் பென்னன்ன பருவப்பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-7278841019939156437?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/7278841019939156437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=7278841019939156437' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/7278841019939156437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/7278841019939156437'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/04/402107.html' title='MH - 06'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-1901646468735762926</id><published>2009-03-19T21:59:00.000-07:00</published><updated>2009-03-19T22:02:20.941-07:00</updated><title type='text'>கெரகம் புடிச்சவன்</title><content type='html'>சுற்றுகளை&lt;br /&gt;எண்ணிக் கொண்டே&lt;br /&gt;சாமிகளை மறந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-1901646468735762926?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/1901646468735762926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=1901646468735762926' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1901646468735762926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1901646468735762926'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/03/blog-post_19.html' title='கெரகம் புடிச்சவன்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-5590745001810841918</id><published>2009-03-15T03:30:00.000-07:00</published><updated>2009-03-15T03:33:44.231-07:00</updated><title type='text'>தழல்வீரம்</title><content type='html'>திருடர் வாசல் திறவுகோல் இருக்கும்&lt;br /&gt;இருவகை குற்றஞ் செய்யும் - பலமறியா&lt;br /&gt;சீசேம் குகையின் அடிமையும் ஒன்றே&lt;br /&gt;வாக்குச்சாவடி வரிசையும் ஒன்றே.&lt;br /&gt;&lt;br /&gt;-ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-5590745001810841918?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/5590745001810841918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=5590745001810841918' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/5590745001810841918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/5590745001810841918'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/03/blog-post.html' title='தழல்வீரம்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-7781292837277481924</id><published>2009-02-25T10:00:00.000-08:00</published><updated>2009-02-25T10:09:25.808-08:00</updated><title type='text'>ஐம்பொறி ஆட்சிகொள்</title><content type='html'>&lt;strong&gt;மறைத்தேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்&lt;br /&gt;தும்மல்போல் தோன்றி விடும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அச்சம் தவிர்த்தான்&lt;br /&gt;ஆண்மை தவறினான்&lt;br /&gt;இளைத்து இகழப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;-ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-7781292837277481924?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/7781292837277481924/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=7781292837277481924' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/7781292837277481924'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/7781292837277481924'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/02/blog-post_25.html' title='ஐம்பொறி ஆட்சிகொள்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-4752096722985755233</id><published>2009-02-17T11:56:00.001-08:00</published><updated>2009-02-17T21:32:19.324-08:00</updated><title type='text'>பிற(ழ்)ந்தவை</title><content type='html'>(தனது வயிற்றில்தான் கடவுள் பிறக்கப் போகிறார் என்று தெரிந்திருந்தும் கூட, ஒவ்வொரு குழந்தையும் கொல்லப்படும்போது, சொட்டுக் கண்ணீராவது விட்டிருப்பாள் கடவுளின் தாய். அப்பேற்பட்ட தாய் - சேய் உறவு துண்டிக்கப்படும்போது சேய் பேசுவதாய் இக்கவிதை) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரையரங்கின் முக்கிய காட்சிகளில்&lt;br /&gt;அழுது சத்தம் போட்டு&lt;br /&gt;உன்னை வெளியே கூட்டிவர&lt;br /&gt;நானிருக்கப் போவதில்லை&lt;br /&gt;என் தடித்த உதடு தொட்டுப்பார்!&lt;br /&gt; &lt;br /&gt;எனக்கு பசி எடுக்கும்&lt;br /&gt;உனது சங்கட சந்தர்ப்பங்களில்&lt;br /&gt;உன் மார்திறந்து பால்குடிக்க&lt;br /&gt;நானிருக்கப் போவதில்லை&lt;br /&gt;தொப்புள்கொடி தொட்டுப்பார்!&lt;br /&gt;&lt;br /&gt;மாதக் கணக்கில்&lt;br /&gt;நாள் தவறாமல்&lt;br /&gt;தடுப்பூசி வரிசைகளில் &lt;br /&gt;உன்னை நிற்கவைக்க&lt;br /&gt;நானிருக்கப் போவதில்லை&lt;br /&gt;உச்சந்தலையின் இளகிய கபாலம்&lt;br /&gt;முகர்ந்து பார்!&lt;br /&gt; &lt;br /&gt;என் பால்குடி மறக்கவைக்க&lt;br /&gt;ஒரு வீட்டில் என்னையும்&lt;br /&gt;ஒரு வீட்டில் உன்னையும்&lt;br /&gt;சிறைபிடித்து தவிக்கவைக்க&lt;br /&gt;நானிருக்கப் போவதில்லை&lt;br /&gt;என் துடிக்காத மார்பை&lt;br /&gt;ஒருமுறை தொட்டுப்பார்!&lt;br /&gt; &lt;br /&gt;தாத்தாவைப் போல உயரமா&lt;br /&gt;அப்பாவைப் போல கோபமா&lt;br /&gt;உன்னைப் போல மாநிறமா&lt;br /&gt;ரசித்து வளர்ந்துகாட்ட&lt;br /&gt;நானிருக்கப் போவதில்லை&lt;br /&gt;என் உள்ளங்கை தொட்டுப் பார்!&lt;br /&gt; &lt;br /&gt;உணவு கழிவு காற்று&lt;br /&gt;இரத்தம் சதை உயிர்&lt;br /&gt;எல்லாம் என்னுடன்&lt;br /&gt;கருமூடி பத்து மாதம் &lt;br /&gt;பகிர்ந்து கொண்டவளே&lt;br /&gt;புழுதி மண்மூட தயாராகிறேன்&lt;br /&gt;மூடிய கண்கள் திறந்து &lt;br /&gt;ஒருமுறை என்னைப் பார்!&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு தாய்மாமன்&lt;br /&gt;ஒரு குறவன்&lt;br /&gt;எனக்கான ஊர்வலம் தயாராகிறது&lt;br /&gt;நான்குபேர் கூட இல்லாமல்!&lt;br /&gt; &lt;br /&gt;எனக்கே எனக்கான&lt;br /&gt;சான்றிதழ் தயாராகிறது&lt;br /&gt;என் பெயர் கூட இல்லாமல்!&lt;br /&gt;&lt;br /&gt;நீ கண்விழிக்கும்போது&lt;br /&gt;என்னைப் பற்றிய &lt;br /&gt;தகவல்கள் சொல்லப்படும்.&lt;br /&gt;நீ அழுது முடிக்கும்போது&lt;br /&gt;ஏதாவது ஒரு குரல்&lt;br /&gt;சோகமாகச் சொல்லும்&lt;br /&gt;நான் வானம் நோக்கி பி(இ)றந்ததை!&lt;br /&gt; &lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-4752096722985755233?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/4752096722985755233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=4752096722985755233' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/4752096722985755233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/4752096722985755233'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/02/blog-post_17.html' title='பிற(ழ்)ந்தவை'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-6965345178451043183</id><published>2009-02-12T01:00:00.000-08:00</published><updated>2009-02-14T01:52:09.684-08:00</updated><title type='text'>*கெ ள ரி*</title><content type='html'>அந்தப் புதுமணப்பையனின்&lt;br /&gt;புது பைக்கில் இருந்த&lt;br /&gt;புது மனைவியின் பெயரைச்&lt;br /&gt;சரியாகத்தான் படித்தேன்&lt;br /&gt;டௌரி என்று.&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-6965345178451043183?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/6965345178451043183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=6965345178451043183' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/6965345178451043183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/6965345178451043183'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/02/blog-post_12.html' title='*கெ ள ரி*'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-6341665450024367400</id><published>2009-02-10T07:55:00.000-08:00</published><updated>2009-02-10T08:11:32.440-08:00</updated><title type='text'>இருக்குதடி பாப்பா</title><content type='html'>ஆறாம் வகுப்பு&lt;br /&gt;சேர்க்கை படிவத்தில்&lt;br /&gt;மகற்குத் தெரியாமல்&lt;br /&gt;தந்தை ஆற்றும் உதவிக்கு&lt;br /&gt;சாதி என்று பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-6341665450024367400?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/6341665450024367400/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=6341665450024367400' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/6341665450024367400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/6341665450024367400'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/02/blog-post_10.html' title='இருக்குதடி பாப்பா'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-5208745857695460273</id><published>2009-02-05T23:26:00.001-08:00</published><updated>2009-02-05T23:40:57.958-08:00</updated><title type='text'>நீத்தார் மேடு</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;ஏதோ ஒரு பாதம்&lt;br /&gt;என்றோ சிந்திய &lt;br /&gt;ஒருதுளி ரத்தம்&lt;br /&gt;இன்று ஓர் ஒற்றையடிப்பாதை!&lt;br /&gt;-இரகுமித்ரன் (எனது பல ஒருநாள் நண்பர்களில் ஒருவன்)&lt;br /&gt;&lt;br /&gt;மன்னனின் தலைமகனையும், ஓவ்வொர் எகிப்தியரின் தலைமகனையும்,எகிப்தியர்களுடைய கால்நடைகள் ஈன்ற முதல் ஆண் குட்டிகளையும், கன்றுகளையும் கொள்ளை நோய்தாக்கி இறக்கச் செய்வேன்.&lt;br /&gt;- விவிலியம் (பழைய ஏற்பாட்டில் மோசேயிடம் கர்த்தர்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;("நான்" என்ற கதாபாத்திரம் இல்லாத எனது முதல் சிறுகதை இது. பெண் கதாபாத்திரத்திற்குப் பெயர் உள்ள இரண்டாம் சிறுகதையும் கூட. பள்ளத்தைப் பற்றிய மேட்டின் கதையிது. பள்ளத்தில் கிடக்கும் தத்தம் மக்களை மேடேற்ற துடித்த இருவேறு மனிதர்களின் கதையிது. அதில் ஒருவனை, இக்கதையின் கடைசியில் ஒரு மேட்டில் கொண்டுபோய் நிறுத்துகிறேன். அங்கிருந்து நீங்கள் பள்ளத்தைப் பார்க்கும்போது, இன்னொருவனின் கதை உங்கள் மனக்கண்ணில் தொடங்கலாம்; தொடங்க வேண்டும்!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேப்பமரங்களின் (44+16)+(8+2)+(7+1)+(2+1)+(1+2)=84 கிளைநுனிகள் ஒடிபட்டன. குளங்களின் pH அளவு பூச்சியத்தை நோக்கி சற்று முன்னேறியது. அவ்வூரின் இரண்டு தெருக்களிலும், ஒரு மருதநில கிராமத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் என்றும்போல அன்றும் நடந்துகொண்டிருந்தன. அவ்விரு தெருக்களுக்கு இடையே வில்லின் முதுகுபோல் தரிசுமேடு;அதன் முனைகளில் கட்டப்பட்டு இருந்தன சாதிகள். பல நாட்களாக முறுக்கிக் கொண்டிருக்கிற நாணில் அம்புதான் அம்புடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கீழத்தெரு மக்களைக் கீழோர் என்றும், மேலத்தெரு மக்களை மேலோர் என்றும் மனிதன் பிரித்துக்கொண்டான். என்றோ ஒருநாளில் திசைகளை வைத்து பெயர் சூட்டப்பட்ட அத்தெருக்களின் மேல்-கீழ் வித்தியாசம் தெரியாமல், என்றும்போல அன்றும் கீழத்தெரு மக்களை முதலில் தொட்டுவிட்டு, மேலத்தெருவிற்கு மெதுவாக நகர்ந்துபோனான் சூரியன். அவனுக்கு முன்னால் மூன்று அம்புகள் ஏற்கனவே புறப்பட்டுவிட்டன, விடியலைத் தேடி சூரியனுக்கு எதிர்திசையில்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழத்தெருவைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள், மேலத்தெருவின் குருசடி அருகே சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருவதை யாரும் கவனிக்கவில்லை. அதில் ஒருவன் மணி அடிக்கவும், கோலம் போட்டவர் - சாணி சுமந்தவர் - கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தவர் - தாய்மார்பில் பால் குடித்துக்கொண்டு இருந்த ஒரு குழந்தையைத் தவிர, வீதியோரம் இருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர். கோலம் போட்ட ஒருத்திக்காக அடிக்கப்பட்ட அந்த மணி, அவளைத் திண்ணைக்குத் துரத்தியது. கோவிலுக்கு அருகில், அந்த மூவரையும் மேலத்தெரு இளைஞர்கள் நான்கு பேர் மறித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை நாள், தனக்கு முன்னால் செருப்பு போடாத - வேட்டியைத் தூக்கிக் கட்டாத ஒரு கூட்டம், இன்று சைக்கிளில் வந்ததால், வாய்த்தகராறு ஆரம்பித்தது. கூட்டம் அதிகமாவதைக் கண்டு, பாப்பாத்தியின் அய்யா அங்கு ஒடிவந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் டேய் டேய் விடுங்கடா. கோயிலுக்கு முன்னாடி நின்னு பேசுற பேச்சாடா இது. அம்மா அக்கானுட்டு. அவன் சைக்கிள அவன் ஒட்டுறான். ஒங்களுக்கு ஏன்டா இந்தக் கோவம்? அவனுக மூத்தரம் ஆத்தடோ போன என்ன? கொளத்தோட போன என்ன? போயி சோலியப் பாருங்கடா".&lt;br /&gt;"இவங்கள இப்புடியே விட்டா, நம்மல மேச்சிட்டுப் போயிடுவாங்க மாமா. அப்பறம் நம்ம வீட்டுக்குகுள்ளே வெந்தலபாக்கு தட்டோட வந்து பொண்ணு கேப்பானுங்க"&lt;br /&gt;"ஆமாடா, சும்மா சைக்கிள் ஓட்டிக்கிட்டுப் போறவனுக்கு அடியெடுத்து குடுங்க".&lt;br /&gt;&lt;br /&gt;மேலத்தெருவில் கொஞ்சம் படித்திருத்த பாப்பாத்தியின் அய்யா, கீழத்தெரு சைக்கிள்காரர்களுக்கு ஆதரவாகத்தான் பேசினார். அவர்மேல் இருசாரரும் வைத்திருந்த மரியாதையில், சொற்கள் மட்டும் மோதிக்கொண்டிருத்தன. அந்த மோதலையும் ஒரே ஒரு அலறல் சொல், முடித்து வைத்தது. அந்த சொல் "யய்ய்ய்யா"; சொன்னவள் பாப்பாத்தி. மொத்த ஊரும் பாப்பாத்தியின் வீடு நோக்கி ஓடியது. அகவிக்கொண்டிருந்த மயில்கள் அமைதியாயின. இந்நிகழ்ச்சிகள் எதிலும் சுவாரசியம் காட்டாமல், சூரியன் நகர்ந்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தாயில்லாத பாப்பாத்தி, முதன்முதலில் தாயாகப் போவதற்காகப் போட்ட சத்தம் அது. தன் ஒரே மகளான பாப்பாத்தியின் பேறுகாலத்திற்கு முன்னேற்பாடாக, சுற்றுவட்டாரத்தில் பிரசவத்திற்குப் பிரபலமான நான்கு கிழவிகளை ஒரு மாதமாக வீட்டில் தங்கவைத்துக்கொண்டுருந்தார் அய்யா. நான்கு கிழவிகளாலும் முடியவில்லை; பாப்பாத்தியின் தலச்சம்பிள்ளை இறந்தே பிறந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள்காரர்கள் மூன்றுபேரும், தங்கள் இயலாமையைக் காட்டிக் கொள்ளாமல், வயலுக்குச் சென்றனர். ஆர்ப்பரித்து ஆரம்பமான மேலத்தெரு அமைதியாய்ப் போனது. ஆளாளுக்கு எதையெதையோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இருத்தாலும் மாமாவுக்கு இப்படி கர்த்தர் பண்ணக்கூடாதுய்யா. மருமகன் இப்பதான் சைனாகாரன் சுட்டு செத்தாரு; வருஷம் திரும்பல; அதுக்குள்ள இன்னொரு பெரியகாரியம். மாதாதான் காப்பாத்தணும்"&lt;br /&gt;"எந்த நேரம் இந்த **** ** பயலுக சைக்கிள்ல ஏறுனானுகளோ?"&lt;br /&gt;"இனாம் கிராமம் மொறைய சர்க்காரு தடை செஞ்சுருச்சுல்ல. அதான், அவனவனுக்கு வெள்ளாம நெலம் கெடைக்கவும், ரொம்ப ஆடுறானுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;தலச்சம்பிள்ளையை வீட்டின் கொள்ளைப்புறத்தில் புதைத்து ஒரு மரம் நட்டுவைப்பதுதான் வழக்கம். பாப்பாத்தியின் அய்யா அப்படி செய்யவில்லை. தனது வேட்டியை உருவி, பேரனைச் சுற்றினார். யாரையும் துணைக்கு அழைக்காமல், தனியாகவே சென்று தனது பூர்வீக வயலின் ஏதோ ஓர் இடத்தில் புதைத்தார். புதைத்த இடம் தெரியாமல் இருக்க, வயல் முழுவதும், ஒருமுறை உழுதுபோட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யா வீடு திரும்பினார். சைக்கிள்காரர்களை எதிர்பார்த்து, சாயங்காலம் இளைஞர்களின் கூட்டம் ஒன்று மேலத்தெருவில் கூடி இருந்தது. அய்யா வீட்டில் நடந்திருந்த துக்ககாரியத்துக்காக, அவர்கள் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே சென்றார்கள். என்றோ ஒருநாளில் திசைகளை வைத்து பெயர் சூட்டப்பட்ட அத்தெருக்களின் மேல்-கீழ் வித்தியாசம் தெரியாமல், என்றும்போல அன்றும் கீழத்தெரு மக்களை முதலில் விட்டுவிட்டு, மேலத்தெருவிற்கு மெதுவாக நகர்ந்துபோனான் சூரியன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுமணம் வேண்டாம் என்று தகப்பனோடே தங்கிவிட்டாள் பாப்பாத்தி. இந்த ஆறுமாதங்களுக்குள், கீழத்தெரு மக்களின் சைக்கிள் பயணம், மேலத்தெருவில் அன்றாடமாகிப் போனது. சர்க்கார் தனது தெருவிற்குக் கரண்ட் கொடுத்தபொழுது, கீழத்தெருவிற்கும் வாங்கிக் கொடுத்தார் அய்யா. சைக்கிள், கரண்டு, பள்ளிக்கூடம், மண்ரோடு, பட்டா இப்படி பல விஷயங்களில் கீழத்தெரு மக்களுக்கு உதவிக்கொண்டு இருத்த அய்யாவை, மேலத்தெரு கவனித்துக் கொண்டுதான் இருத்தது. நாண் அப்படியேதான் இருக்கிறது; அம்புகள்தான் மேலதெருவிற்கு இடம்பெயர்ந்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தன் வம்சத்திற்கு ஓர் ஆண், ஒரு பெண் என மிச்சமிருத்த பாப்பாத்தி குடும்பத்தில், ஒரு நச்சுப்பாம்பு கடிக்க பாப்பாத்தியும் இறந்துபோனாள். ஒரே வருடத்தில் மூன்று பெரிய காரியங்கள். ஆனால் அந்த பெரிய மனுஷர், அய்யா, மனம் தளரவில்லை. மகளைக் கல்லறையில் புதைத்துவிட்டு வந்த கையோடு, தனது வயலில் ஒரு குண்டை ஒரு கீழத்தெரு குடும்பத்திற்குக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி எழவு விழுந்த அன்றே பிரச்சனை செய்யக்கூடாது என்று மேலத்தெருவும் விட்டுப்பிடித்தது. பாப்பாத்தி இறந்த மறுநாள் அதிகாலையில், மேலத்தெரு வாலிபன் ஒருவன் தலைதெறிக்க ஓடிவந்தான். அவன் சொல்வதைக் கேட்டு, பாப்பாத்தியின் கல்லறை நோக்கி ஊரே ஓடியது. அய்யாவும் ஓடினார். கூட்டத்தை விலக்கிப் பார்த்தார். அவர் அருகில் போகாமல் இருக்க, சிலபேர் அவர் அருகில் தயாராக இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பாத்தியின் கல்லறை, தலைமாட்டில் தோண்டப்பட்டு இருந்தது. ஒருபக்கம் கழுத்தில் கத்தி குத்துப்பட்டு, ஒரு நரி செத்து கிடந்தது. மறுபக்கம், கையில் கத்தியுடன் வெறித்த விழிகளுடன் மண்ணைப் பார்த்துக்கொண்டு ஒருவன் உட்கார்ந்து இருந்தான். மேலத்தெரு பேச ஆரம்பித்தது.&lt;br /&gt;"பொதச்சதுக்கப்பறம் முள்ளு போட்டிகளா இல்லையாப்பா?"&lt;br /&gt;"பச்சமண்ணு வாசனக்கி நரி தோண்டிருக்கு பாருய்யா!"&lt;br /&gt;"ஆளு புதுசா இருக்கான்; பாக்குறதுக்குக் குடுகுடுப்பன் மாதிரி இருக்கான்"&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் போக எத்தனித்த அய்யாவைத் தடுத்தனர். "கொள்ளி போட்ட ஆளு, மொகத்த திரும்ப பாக்கக் கூடாது மாமா". ஒருவன் அருகில் போய், கல்லறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டு, முகமெல்லாம் தெரியவில்லை என்றான். அய்யா அருகில் சென்றார். தனி ஆளாகக் கல்லறையை மூடினார். கத்திக்காரனை வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். முன்னர் இவ்வூருக்கு வந்துகொண்டிருந்த குடுகுடுப்பனின் மகன் என்றும், அவர் இறந்துவிட்டதால் தான் தொழிலுக்கு வந்ததாகவும் சொன்னான். வேறு எதுவும் அவனிடம் கேட்கப்படவில்லை. அவனும் சாயங்காலம் ஊரைவிட்டுப் போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யாவுக்குத்தான் இப்பொழுது யாருமே இல்லை. நின்றுபோன சந்ததியின் கடைசி சாட்சியாக, தினமும் தனது மகளின் கல்லறையில் உட்கார்ந்துகொண்டு தனியாக பேசிக்கொண்டு இருப்பார். தனது அய்யா, ஆயா (அம்மா), செத்தேபிறந்த தனது அண்ணன், மனைவி, மகள் எல்லாருடனும் அய்யா இப்படிதான் பேசிக்கொண்டு இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் என் கூடவே நீங்களும் சத்தம் போடாம வாங்க. அவர் பக்கத்துல போய் கொஞ்சநேரம் நிற்போம். "இந்தா தெரியுறது மேலத்தெரு. இந்த மேட்ட தாண்டி அந்தப்பக்கம் போனா கீழத்தெரு. ஒருகாலத்துல சண்டை போட இருந்த இந்த ரெண்டு ஊர்களையும் அய்யாதான் சமாதானமா வெச்சிக்கிட்டு இருக்காரு. இனிமே சண்ட வரவும் வாய்ப்பில்ல. இந்த ஊர்களுக்கு எடையில இருக்க இந்த மேட்ட, வருங்காலத்துல கவர்மெண்டு தூத்துப்புட்டு ரோடுகூட போடலாம். அப்ப ஊர்காரங்க சம்மததோட இந்தக் கல்லறையும் எடம் மாத்தப்படலாம். அதெல்லாம் நடக்கறப்ப, பாப்பாத்தி கல்லறைக்குள்ள, அவ தலக்கிப் பக்கத்துல ஒரு நைத்துபோன துணி இருக்கலாம். அதுக்குள்ள அவளோட தலச்சம்பிள்ளையோட மண்டஓடு இருக்கலாம். அத வெச்சவன தடுக்கப் போனதுக்காக, ஒருவன் அந்த எடத்துல கழுத்துல கத்தி குத்துப்பட்டு செத்துப்போய் இருக்கலாம்".&lt;br /&gt;&lt;br /&gt;நாணில்லாமல் ஒரு வில்!&lt;br /&gt;&lt;br /&gt;- ஞானசேகர்&lt;br /&gt;(என் தாய்க்குத் தலைமகன்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-5208745857695460273?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/5208745857695460273/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=5208745857695460273' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/5208745857695460273'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/5208745857695460273'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2009/02/blog-post.html' title='நீத்தார் மேடு'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-3430100486747969685</id><published>2008-09-09T10:13:00.000-07:00</published><updated>2009-05-02T08:21:40.477-07:00</updated><title type='text'>மனிதக்கோயில்</title><content type='html'>&lt;strong&gt;மதமென்னும் மதமோயட்டும் - வைரமுத்து&lt;br /&gt;&lt;br /&gt;This world would never be at peace until the last Priest is strangled by the entrails of the last King - George Bernard Shaw&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(என்றைக்கு நான்கு பேர் ஒருவனின் எழுத்தைப் படிக்கிறார்களோ, எதைச் சொல்லவேண்டும் எதைச் சொல்லக்கூடாது என்ற மிகப்பெரிய பொறுப்பு அவனுக்கு அன்றுமுதல் வந்துவிடுகிறது. அப்பொறுப்புள்ள ஒரு மனிதனாக, எந்தக் காலத்திலும் இறந்து தொலைக்காத ஒரு கருவை உங்கள் முன் வைக்கிறேன். எல்லா விஷயங்களையும் உள்ளது உள்ளபடி சொல்ல, எனது பெரும்பொறுப்பு என்னை அனுமதிக்கவில்லை. அதனால், இக்கவிதையின் தலைப்பு, கவிதைக்குள் வரும் இடத்தில் மட்டும், அதை ஆங்கிலப்படுத்திப் படிக்கவும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;காலம்: அடுத்த கவிதையில் உள்ளவர்கள் இறப்பதற்கு முன் 15 ஆண்டுகள்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசிக்கு அழுகும்&lt;br /&gt;பச்சைக் குழந்தை.&lt;br /&gt;ஆண்பெண் வித்தியாசம்&lt;br /&gt;பின்னிரவில் அறிமுகமான&lt;br /&gt;புதுமணத் தம்பதிகள்.&lt;br /&gt;இடப்பக்கம் வளர்த்தவர்கள்&lt;br /&gt;வலப்பக்கம் வளர்ப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நேரத்தில்&lt;br /&gt;பாசம் பார்த்தால்&lt;br /&gt;ஒரே இடத்தில்&lt;br /&gt;918 பேர் விஷம் குடித்து&lt;br /&gt;வரலாறு படைக்க முடியமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;காலம்: போன மற்றும் அடுத்த கவிதைகளில் இறந்தவர்களுக்கு இடைப்பட்ட காலம்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றை மயிரிழையில்&lt;br /&gt;3 கிலோகிராம்&lt;br /&gt;சுமக்கும் அற்புத மனிதன்!&lt;br /&gt;சுமக்கும் பூமியைச்&lt;br /&gt;சொற்பமாய் மிதித்து&lt;br /&gt;துப்பாக்கிக் குழலுக்குள்&lt;br /&gt;53 கிராமங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டுச் செத்தால்&lt;br /&gt;சொர்க்கம் கிட்டும்&lt;br /&gt;அற்ப நம்பிக்கை!&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே ஆவதானாலும்&lt;br /&gt;கைப்பிடி களிமண்&lt;br /&gt;ஒருவனின் விலாவெலும்பு&lt;br /&gt;கடவுளுக்குக் காலவிரயம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;காலம்: போன கவிதையில் உள்ளவர்கள் இறந்தபின் ஓர் ஆண்டு&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நொடிக்கு ஒருமுறை&lt;br /&gt;15 மில்லியன் செல்கள்&lt;br /&gt;அழித்து போகும்&lt;br /&gt;அற்புத மனித உடலை&lt;br /&gt;அனலுக்கு அர்ப்பணித்தனர்&lt;br /&gt;அற்பமாய் 48 பேர்!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பிறவியில்&lt;br /&gt;அற்புத வாழ்வை&lt;br /&gt;அடையும் நம்பிக்கை!&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே அடைந்தாலும்&lt;br /&gt;அவ்வுடலுக்கும்&lt;br /&gt;100 டிரில்லியன் அற்புதங்கள்&lt;br /&gt;நொடிக்கொருமுறை 15 மில்லியன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;காலம்: ஒரிசா முதல் காஸா வரை பூமியை எப்படி சுற்றினாலும் மதம் நம்மைச் சுற்றும் காலம்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோயிலுக்குள் மனிதனோ&lt;br /&gt;மனிதனுக்குள் கோயிலோ&lt;br /&gt;கும்பிடத் தவறில்லை&lt;br /&gt;மனிதக்கோயில்கள்&lt;br /&gt;மறுபடியும் தோன்றாதவரை!&lt;br /&gt;&lt;br /&gt;சொர்க்கம் காட்டுவது&lt;br /&gt;கடவுள் காட்டுவது&lt;br /&gt;என்பதெல்லாம் பழைய கதைகள்!&lt;br /&gt;நீயே சொர்க்கம்&lt;br /&gt;நீயே கடவுள்&lt;br /&gt;என்பதுதான் புத்திலக்கியம்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம்&lt;br /&gt;உயிருக்கு உத்திரவாதம்&lt;br /&gt;பெரும்பாலும் இருப்பதாகப்படுகிறது.&lt;br /&gt;உறுபொருள்&lt;br /&gt;கன்னிமை&lt;br /&gt;காலம்&lt;br /&gt;சுயமரியாதை&lt;br /&gt;ஆறாம் அறிவு&lt;br /&gt;இவை பத்திரம்!&lt;br /&gt;&lt;br /&gt;-ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-3430100486747969685?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/3430100486747969685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=3430100486747969685' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/3430100486747969685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/3430100486747969685'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2008/09/blog-post_09.html' title='மனிதக்கோயில்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-1706034048827441703</id><published>2008-09-05T11:17:00.000-07:00</published><updated>2008-09-05T20:17:32.366-07:00</updated><title type='text'>ஆண்சிசுக்கொலை</title><content type='html'>எனது சுதந்திர எல்லைக்குள் எனது உரிமைகளின் எல்லையை மீறாமல் இதோ கடவுளுக்கான எனது இலக்கணக்குறிப்பு. இது நமக்கான இலக்கணக்குறிப்பு என ஏற்றுக்கொள்ளப்படும்போது, ஆயிரக்கணக்கான ஆண்களின் மூலம் தொலைந்துபோன தலைமுறைகளின் மதமற்ற ஆதரவு நமக்குண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;காலம்: கிறிஸ்து பிறப்பிற்கு முன் 3ம் ஆண்டு, கிறிஸ்து பிறந்தபின் 33ம் நாள்&lt;br /&gt;&lt;br /&gt;(இரண்டு மாதக்குழந்தை முதன்முதலாய்ப் பேச முடியாமல் அழுத வார்த்தைகள் இவை. மறு பிறப்பென்று ஒன்று இருக்குமெனில், நம்மில் ஒருவரின் குரலாகக்கூட இது இருந்திருக்கலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;மார் முட்டி&lt;br /&gt;பால் குடிக்கிறேன்&lt;br /&gt;வெடுக்கென பிடுங்குகிறான்&lt;br /&gt;மன்னனின் படைவீரன்.&lt;br /&gt;&lt;br /&gt;கச்சை கழட்டி&lt;br /&gt;பாலினம் பார்க்கிறான்&lt;br /&gt;பொக்கை வாயில் &lt;br /&gt;சிரிப்பைப் பார்க்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;துள்ளிக் குதிக்குமுடல்&lt;br /&gt;செஞ்சூடு உணர்கிறான்&lt;br /&gt;கட்டற்று ஊற்றும்&lt;br /&gt;சிறுநீர் உணர்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும்&lt;br /&gt;கழுத்தில் கீறினான்&lt;br /&gt;எனக்கு மட்டும்&lt;br /&gt;குறியில் கீறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணில் நீர் நிற்க,&lt;br /&gt;வாயில் பால் நிற்க,&lt;br /&gt;குறியில் குருதி நிற்க,&lt;br /&gt;எனக்கான சந்ததி நிற்க,&lt;br /&gt;தாயின் இதயம் நிற்க&lt;br /&gt;அவன் நடக்கலானான்&lt;br /&gt;அடுத்த ஆண்குறிதேடி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டு ஆயிரம் &lt;br /&gt;காலம் ஓடியது.&lt;br /&gt;ஆண்டு நூறு&lt;br /&gt;போர் ஓடியது.&lt;br /&gt;வயிற்றுக்கடுப்பில்&lt;br /&gt;மலம் ஓடியது.&lt;br /&gt;நூறு ஆயிரம்&lt;br /&gt;உயிர் ஓடியது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் காக்க&lt;br /&gt;கடவுள் வந்ததாய்&lt;br /&gt;மதம் வந்தது.&lt;br /&gt;மதம் காக்க&lt;br /&gt;ஆண்டு நூறாய்ப்&lt;br /&gt;போர் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணாய் மட்டுமே&lt;br /&gt;பிறப்பவன் கடவுளா?&lt;br /&gt;ஆணாய்ப் பிறந்ததற்காக&lt;br /&gt;கத்திமுனையில் கொல்லப்பட்டு&lt;br /&gt;கடவுள் எனப்பட்டவனையும் காத்த&lt;br /&gt;நாங்கள் கடவுளா?&lt;br /&gt;&lt;br /&gt;அறிவு ஆறெனில்&lt;br /&gt;கடவுள் யாரென &lt;br /&gt;கட்டாயம் கண்டிருப்பீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;-ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-1706034048827441703?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/1706034048827441703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=1706034048827441703' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1706034048827441703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1706034048827441703'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2008/09/blog-post.html' title='ஆண்சிசுக்கொலை'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-7148547296986817118</id><published>2008-03-29T08:15:00.000-07:00</published><updated>2008-03-29T10:02:09.351-07:00</updated><title type='text'>ஹோமோசெப்பியன்ஸ்</title><content type='html'>&lt;strong&gt;புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்&lt;br /&gt;ஏறுபோல் பீடு நடை.&lt;br /&gt;- திருவள்ளுவர்&lt;br /&gt;&lt;br /&gt;இனி&lt;br /&gt;மிருகநேயம் என்றொரு&lt;br /&gt;வார்த்தை தேவைப்படலாம்&lt;br /&gt;- பிரேம்குமார்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(வழக்கம்போல் ஒருதேதி - ஓர் இடம்- பெயரில்லாத ஒரு பெண் கதாபாத்திரம் - இவற்றுடன் இன்னொரு கதை. அர்த்தத்தையே மாற்றிவிடும் அளவிற்கு எழுத்துப்பிழைகள் எதுவும் இக்கதையில் இல்லை)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னக்கி தைமாசம் ரெண்டாந் தேதி. மாட்டுப் பொங்க. எனக்கு தெரிஞ்சி மாட்டுப்பொங்க அன்னக்கெ மாட்டுவேடிக்க நடக்குறது சோசன் அண்ணனோட அக்கா ஊர்ல மட்டுந்தான். வருசக்கடேசில மாசிபோயி பங்குனிமாசம் மாடுவுட்ற ஊரெல்லாங்கூட இருக்கு. ஆனா மொத நாளே மாட்டுவேடிக்கை பாக்குறதுங்குறது ஒரு தனிசொகங்க. மாட்டுவேடிக்கங்கறது உசுருல கலந்துபோயிட்ட ஒண்ணு. பொங்கலுக்கு ரிலீஸான ரஜினிபடமானாலும் சரி, செத்துப்போன ஊர்ப்பெருசானாலும் சரி, வயசுக்குவந்த மொறப்பொண்ணானாலும் - எல்லாம் தை மூணாந்தேதிதான். மாட்டுவேடிக்க டிவியில பாக்குறவங்களுக்கு அது ஒரு கொடுரமாத்தான் தெரியும். எனக்கும் மொத ரெண்டு வருசம் பாக்குறப்ப அதே நெனப்புதான். அப்பறம் பழகிடுச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;மார்கழி மாசமே மாட்டுவேடிக்க நடக்கப்போறதுக்கு ஒத்திக பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. நாயித்துகெழம நாயித்துக்கெழம ஒரு அரமணிநேரத்துக்குச் சும்மா சாத்ரப்புக்கு ஒரு ரெண்டு மாட்ட விட்டு எறிப் பாப்பாக. பொதுவா மாடு ஓட்டிக்கிட்டு வர்ற ஆளு, தொணையாளு ரெண்டு பேத்தோடத்தான் வருவாப்புள்ள. மால, கயிறு, கொம்பு ஜோடன,  பெயிண்ட்டு, கலருபொடி இவ்வளவுதான் மாட்டுக்குன்னு செலவு ஆகும். ஆனா தொணையாளுக்கு ஆகுற செலவுல இன்னொரு மாடே வாங்கிடலாம். காலச்சாப்பாடு, சாராயம், மத்தியானச் சாப்பாடு, கைக்காசு. இருந்தாலும் தலச்சம்புள்ள பெத்த தம்பதிக மாதிரி, நம்மாளு நம்பிக்கைய தளரவிடாம ஒவ்வொரு வருசமும் கூட்டணியத் தொடருவாப்புள்ள.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா வருசமும், சோசன் வீட்டுக்குப் போயி வண்டியில அவரக் கூட்டிக்கிட்டுத்தான் வேடிக்க பாக்கப் போறது. சோசனோட போகலன்னா எங்க வீட்டுல விட மாட்டாக. தொணயாளு இல்லன்னா சோசன அவரு பொண்டாட்டி விடாது. ஆமாங்க, சோசன் கல்யாணம் ஆனவரு. அவருல பாதி வயசுதான் எனக்கு. ஓடிக்கிட்டு இருந்த ஒராளுதண்டி பாம்பு வாலப் புடிச்சி, வரப்புல அடிச்செ கொன்னாரு. அதுல இருந்து சோசன் என்ற அர்ச்சுனனுக்கு, சேகர் என்ற கிருஷ்ணன் தான் தைமாசம் ரெண்டாம் தேதியன்னக்கி டிரைவரு.நான் வார் டவுசரு போட்டுருந்த காலத்துல, சோசன் அண்ணனும் ஒரு மொரட்டு பாச்சமாடு வச்சுருந்தாரு. அந்த மாட்டுக்குச் சினிமா சான்ஸெல்லாம் வந்துச்சு. சேரன் பாண்டியன் படத்துக்குத்தான். மாட்டக் கொல்லுற சீனமட்டும் எடுக்காத, என் மாடு கண்டிஷனா நடிக்குமுன்னு ஒரே பேச்சா சொல்லிடாரு. அப்புடி வளத்த மாட்ட, வெவசாயமுல்லாம் பாக்கமாட்டேன்னுட்டு சிங்கப்பூரு போறதுக்கு அந்தக்காலத்துலேயே 5 ரூவாக்கி வித்துட்டாரு. போன ஆறே மாசத்துல, ஏஜெண்டு பண்ணுல பிராடுல, சிங்கப்பூரு கவர்மண்டு சோசனோட சேத்து பத்துபேத்த திருப்பி அனுப்பிருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;சோசன் வீட்ல இல்ல. அந்த அக்கா, எனக்கு டீ போட்டு கொடுத்தாங்க. மாட்டுமடி, அடுப்படி, ஏன் வயிறு இப்புடி எங்கையும் தண்ணியத் தொடாம பாலு பாழ போச்சு. மாட்டுக்காரா ஆளும், தொணையாளுகளும் தண்ணிப்போடுல இன்னக்கிப் பண்ணப்போற கூத்த நெனச்சி சிரிச்சிக்கிட்டு இருந்தேன். நேரந்தான் போகுது சோசனக் காணாம். கீழத்தெரு தம்பிராசோட பசுமாடு ஒண்ணு செனையா இருக்காம். குட்டி தல பொறண்டு வலியில துடிக்கிதுன்னு வெள்ளனா விடியக்காலையில போனவரு இன்னும் வல்லையாம். வண்டிய எடுத்துக்கிட்டு தம்பிராசு வீட்டுக்கே போயிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாடு தரையில படுத்து இருக்கு. வாயிக்குள்ள சோசன் கையி. பின்னங்காலு ரெண்டும் தம்பிராசு கையி. முன்னங்காலு ரெண்டும் இன்னொரு ஆளு கை. இருங்க இருங்க. கொஞ்சம் இருங்க. அந்த மாட்டோட கண்ண நீங்க பாக்ககலல்ல. கொஞ்சம் இருங்க. சோசன் மாட்டோட கழுத்த, என்ன புடிக்க சொல்றாரு.&lt;br /&gt;&lt;br /&gt;(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா ஊருலயும் பொறக்குற வழியும், பொறுக்குற வலியும் ஒண்ணுதாங்க. பாஷ மாறலாம்; படைப்பாளி மாறலாம்; ஜீவராசி மாறலாம்; காயீனப் பெத்த பொண்ணுல இருந்து, வருசப்பொறப்புக்கு டைம் வெச்சு பெத்துக்குற பொண்ணுவரைக்கும் வலிங்கிறது ஒண்ணுதான். கள்ளிக்காட்டு இதிகாசத்துல வைரமுத்து சொல்லாததையா நான் புதுசா சொல்லப் போறேன். வேடிக்கலுக்கு நேரமாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;"சோசா, ஒனக்கு வேற தனியா சொல்லணுமா? வேடிக்கலுக்கு நேரமாச்சுயா. ரொம்ப சாப்புடாதையா, அப்பறம் மத்தியானம் கரிச்சோறு எறங்காது".&lt;br /&gt;மாட்டு வேடிக்கலுக்குப் போற புருஷனுக்கு பொண்டாட்டி, சொல்ற அதே பாரம்பரிய டயலாக்க இந்த அக்கா வருசாவருசம் ஒலிபரப்பிறும். ஒரு பிரசவத்தின் காரணமாக அவ்வொலிபரப்பு இரண்டு மணிநேரங்கள் தாமதமாகியது. என்னைத்தவிர வேறு யாரும் தடங்கலுக்கு வருந்தியதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;"அந்தச் சட்டய வெய்ங்க. நேத்துதான் தொவச்சேன். வேடிக்க முடிஞ்சோடன நேரா பொழுது சாயிறதுக்குள்ள வீடுவந்து சேந்துடுங்க. சேகரு, ஒன்ன நம்பிதான் அனுப்புறேன். மந்தைக்குள்ள போகாதீக. கண்டது கடையத தின்னு வயித்த கெடுத்துக்காதீக". ஒவ்வொரு பித்தானுக்கும் ஒரு அட்வைஸ்.&lt;br /&gt;"யக்கா, நாங்க என்ன சின்னபுள்ளயா. சீக்கரம் அனுப்புக்கா"&lt;br /&gt;"இவரு பையில பத்தாயரம் ரூவா வெச்சுருக்காரு. இவரு அக்கா வீடு போன ஒடன, அவங்ககிட்ட அத மறந்துடாம கொடுக்கச் சொல்லு"&lt;br /&gt;"யோவ், ஏன்யா கும்பல்ல பணமெல்லாம் எடுத்துக்கிட்டு?"&lt;br /&gt;"விட்றா சேகரு. இவ சொன்னா கேக்க மாட்டா"&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியா கெழம்பியாச்சு. இப்புடி நாங்க போன ஒடனயே, பதுனோரு மணி பஸ்ஸீக்குப் பொம்பள ஆளுகளோட சோசன் பொண்டாட்டியும் வந்துடும். அதே நெனப்புலதான், நானும் ஒண்ணும் சொல்லிக்காம போனேன். ஆனா,....&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா,"யோவ், வண்டிய ஏன்யா அடப்பங்கொளத்துக்குள்ள விட்ற. சாராயமா? கிழிஞ்சது. கீழு கீழப்பா கீழ விட்டு ராயப்பாங்குற கதயா, இன்னிக்கி வேடிக்க பாத்தது மாதிரிதான்". கர்ணனப் பாடினவங்களும், அடப்பங்கொளத்துக்குக்குள்ள போனவங்களும் வெறுங்கையா திரும்பினதுல்ல. சோசனும் அதுக்குத் தப்பல. இந்த வருசம் கொஞ்ச அதிகந்தான். ஆலமரத்திடில ஒக்காந்து, ஒரே மடக்குல எல்லாத்துலயும் முடிச்சுட்டாரு.&lt;br /&gt;"ஒரு பொண்டாட்டி எப்ப வீட்டுக்குத் தூரமுன்னு தெரியாதவன் ஒரு புருசனா? சின்னப் பையனா இருந்தாலும், நீயே ஞாயம் சொல்லுடா சேகரு"&lt;br /&gt;ஏதோ ஒரு விபரீதத்த அடப்பங்கொளத்து வெடிச்ச சகதில வெதக்கிறது புரிஞ்சது. சில நேரங்கள்ல உண்மையான சாட்சிகள மறக்கிறதே உத்தமுன்னு, செல்லாத சாட்சிகள்ன்னு ஊருக்கே கத சொன்னவன் நானு. வாயத் தொறப்பனா? மூச்.&lt;br /&gt;&lt;br /&gt;"வேடிக்கலுக்கு வரமாட்டாளாம். கேட்டா வீட்டுக்குத் தூரமாம். எங்க அக்கா மூஞ்சில முழிக்க மாட்டாளாம்; நானும் முழிக்கக்கூடாதாம். நேத்து வந்தவடா இவ. எச்சிப்பாலு சொந்தத்தப் பிரிக்கிறதுக்கு இவ யாருடா?"&lt;br /&gt;சோசனுக்குத் தலகாலு தெரியல. எனக்குத் தலகாலு புரியல. ஊசிப்போன கடலைய விரும்பிச் சாப்டேன்.&lt;br /&gt;"சொல்றா சேகரு? பொண்டாட்டி எப்ப வீட்டுக்குத் தூரமுன்னு தெரியாதவன் ஒரு புருசனா"&lt;br /&gt;தப்பிக்க வழி கெடச்ச மாதிரி, அந்த வழியா வேடிக்க மாட்ட ஓட்டிக்கிட்டு போயிக்கிட்டு இருந்த, சின்னதம்பியப் பார்த்து கத்தினேன்.&lt;br /&gt;"என்னண்ணெ, இந்த வருஷம் எவ்ளொ பந்தயம்?"&lt;br /&gt;"ஐனூறு ரூவா. கொம்புல முடிஞ்சிருக்கேன். எந்தக் கொம்பன் எடுக்குறான்னு பாப்போம்"&lt;br /&gt;"பாப்போம்டா கெம்புளி". சோசன் ஏந்திருச்சாச்சு. வண்டிய ஒர்ர்ரே தட்டு, சோசன் அக்கா வீட்டு வாசப்படில தட்டிக்கி முன்னாடிதான் நிப்பாட்டுனேன். நாலு வயசு பேரன் தட்டியத் தொறந்தான். கறிக்கொளம்பு வாசனை, தட்டிய திரும்ப சாத்திடுச்சு. வண்டிய வீட்டு ஓரத்துல வழக்கம்போல நிப்பாட்டிட்டு, திரும்பிப் பாத்தா, சோசன் இன்னும் வெளியவே நின்னுக்குட்டு இருக்காரு. சோசனுக்கு நேராத்தான், அவரு அக்கா குடும்பம் முழுசுமே பொணய ஓட்டிக்கிட்டு இருந்துச்சு. யாரும் சோசனக் கண்டுக்கல. செல சொந்தக்காரங்க, சோசன போயி கூப்புட்டாக. அவரு அசஞ்ச பாடில்ல. செல மாதிரி நிக்கிறாரு.&lt;br /&gt;&lt;br /&gt;(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;தரயெல்லாம் சோதன போடுறவ மாதிரி, மண்ணப் பாத்துக்கிட்டே சோசனுக்கிட்ட போனா அக்கா. தட்டியத் தொறந்தா.&lt;br /&gt;"உள்ள வா சோசா"&lt;br /&gt;"நான் வர்றது இருக்கட்டுங்க்கா. நீங்க கேட்ட பணத்தக் கொண்டாந்து இருக்கேன். ஏன் மாட்டக் குடுத்துடுங்க. பாத்து ரெண்டு நாளாச்சு"&lt;br /&gt;"மொதல்ல உள்ள வா. திருவிழா கூட்டமுல்லாம் ரோட்டுல வரப்போக இருக்கு. சாப்டுட்டு பொறுமையாப் பேசுவோம்"&lt;br /&gt;"வாயில்லா சீவன...."&lt;br /&gt;"என்னா சோசப்பு. வம்புழுக்க வந்துருக்கியா?" இதுதாங்க அக்கா புருசன் - சோசன் மாமா. பொணய ஓட்டிக்கிட்டு இருந்தவரு, சட்டுனு மாட்ட விட்டுட்டு, சோசனப் பாத்தாரு. அவரு பையன், மாட்டுக்கயிறு தரையில விழுறதுக்குள்ள, அதப் புடிச்சு பொணயலத் தொடந்து ஓட்டுனாரு.கண்ணசைவுக்கு வேல பாக்குறது ரெண்டு ஆம்பள சிங்கக்குட்டிகளப் பெத்து இருக்குறதுனால, எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு சல்லிவேரு இவருதான். ஒரு பொம்பள சிங்கக்குட்டியும் இருக்கு. அதுக்குக் கல்யாணமாயி, ஒரு சிங்கக்குட்டி முக்கா தயாரிப்புல இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"சோசா..." மருதூரு பெருசு ஞாயம் சொல்ல &lt;br /&gt;த            ருச்சுச்சு.&lt;br /&gt;  ள்        தி     &lt;br /&gt;   ளா    ந் &lt;br /&gt;      டி ஏ&lt;br /&gt;ச்சே. என்ன மட்டமான சரக்குய்யா இது? வாய் இந்த நாத்தம் நாறுது.&lt;br /&gt;"சோசா, மாமாவும் அக்காவும் எல்லா விசயத்தையும் ஏற்கனவே எனக்கிட்ட சொல்லிட்டாக. நல்ல நாளும் பெரிய நாளுமா, அதப்பத்தி இப்பப் பேச வேணாம். வேடிக்க முடியட்டும். ரெண்டு பெரிய மனுசங்கள வெச்சு ஞாயம் பேசுவோம்"&lt;br /&gt;"இந்த ஆளுக்கிட்ட என்ன மாமா ஞாயம் பேச வேண்டி இருக்கு"&lt;br /&gt;"இந்த ஆளு". இந்த வார்த்தக்கிப் பலவெதமான பின்விளைவுகள். அக்கா மண்பரிசோதனையை விட்டுவிட்டு, சோசனைப் பார்த்தாள். நல்லவேள! அவளுக்கும் ரெண்டு கண்ணுதான். நெத்தில பொட்டுமட்டும்தான் இருந்துச்சு. அக்காவிட்ட வேலைய மாமா தொடர்ந்தார். வேறென்ன? மண்பரிசோதனை. பொணய ஓட்டுற மகன், ஒரு மாட்டை ஓங்கி அடித்தான். இன்னொரு மகன் எழுந்திரிக்கையில், கட்டில் கம்பியில் மாட்டி, கைலி கிழிந்தது. பாம்ப்புக்கறி திங்கிற ஊர்ல வாக்கப்பட்டா, நடுமுண்டம் எனக்குத்தான்னு எனக்கு லேச ஒறக்க ஆரம்பிச்சிச்சு. தட்டிக்கி வெளில வண்டியோட வந்தேன். சோசனுக்குப் பின்னாடி, லேசா அவரப் புடிச்சிக்கிட்டு நின்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சோசா, ஓன் பக்கமே ஞாயம் இருக்குறதா வெச்சுக்குவோம். பொண்ணக் குடுத்துருக்கியல்ல? நீதான் பணிஞ்சு போகனும்" மருதூரு பெருசு.&lt;br /&gt;"எத்தன வருசம் மாமா பணிஞ்சு போறது? பொண்ணக் கட்டி குடுத்துருக்கோம்; தாய்மாமன் இல்லாத எனக்கு தாய்மாமன் மொற எடுத்து சீரெல்லாம் செஞ்சாரு. அதுக்காக எத்தனநாளுதான் பணிஞ்சு போறது?"&lt;br /&gt;சோசன் தோளப் புடிச்சு சட்டென ஏன் பக்கம் திருப்புனேன். யாருக்குமே அடங்காத மாடு, தொத்த எசமானுக்கு மடங்குற மாதிரி, சோசனுக்கு ஒறக்கிற மாதிரி எனக்குப் பேசத் தெரியும்.  சோசனத் தனியாக் கூட்டிக்கிட்டுபோய் அமைதிப்படுத்துனேன். என்ன சொன்னேன்னு எல்லாம் கேக்காதீங்க? &lt;br /&gt;&lt;br /&gt;"சரி மருதூரு மாமா. நல்ல நாளும் பெரிய நாளுமா, ஞாயம் பேச வேண்டாம். வேடிக்க முடிஞ்ச கையோட, இதெ எடத்துல பஞ்சாயம் பண்ணாம நான் போறதில்ல"&lt;br /&gt;"நானே பண்ணி வெக்கிறேன்யா. இந்தாம்மா, ரெண்டு தம்பிக்கும் எல போடு"&lt;br /&gt;"நீங்க இதுல தலயிட வேண்டாம் மாமா. சொந்தங்கெறதே சொதப்பல்ன்னு ஏன் ஒடன்பெறப்பு எனக்கு கத்துக் கொடுத்துருச்சு. இதெ ஊர்ல இருந்து, ஒடயாத்தெருல ஒரு பெரிய மனுசன், வெள்ளாளத்தெருல ஒரு பெரிய மனுசன், குடியானத்தெருவுல ஒரு பெரிய மனுசன் நீங்களே கூட்டிக்கிட்டு வாங்க. ஞாயம் பேசுவோம்".&lt;br /&gt;&lt;br /&gt;சோசன் சொன்னதுக்கு யாருமே சரின்னு சொல்லல. ஆனா, அதுதான் முடிவுன்னு நாங்க ரெண்டு பேரும் வண்டிய எடுத்துக்கிட்டு, மந்தக்கிப் போய்ட்டோம். ரெண்டு மணிக்கு மொத தொழு தொறக்குறது. ஒரு மணிக்கெல்லாம் சனங்களும், போலீஸும், ஐஸ்காரனும் கூட ஆரம்பிச்சாச்சு. வண்டிய ஏதோ ஒரு வீட்டு வாசப்படில நிப்பாட்டிட்டு, மந்தைக் கடலில் இரு மழைத்துளிகள் கலந்தன. அதுல ஒண்ணு அமிலமழை.&lt;br /&gt;&lt;br /&gt;(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க ரெண்டுபேரும் வேடிக்கலுக்குன்னே தனிசட்டயும், கைலியும் வெச்சிருப்போம். அந்த ஒருநாள் மட்டும்தான் அதப் போடுறது. தொழு தொறக்குறதுக்கு, அரமணி நேரத்துக்கு முன்னாடியே, மொத தொழுவோட வாசல்ல மொத ஆளா நிப்போம். அடப்பாவிகளா, அவுத்துவிட்ட மாடு, மொதல்ல ஒங்களத் தாண்டித்தானே போகணும். குத்திக்கித்தித் தொலக்காது? இப்படியெல்லாம் எங்களப் பாக்குறவங்க பயப்படலாம். எங்களுக்குப் பயங்கெடையாது. வளத்தியான வாத்தியாரு வகுப்புல மொத பெஞ்சு பய தூங்குறது மாதிரி, வெளில வர்ற மாடு தொணையாளுக தொந்தரவுல இருந்து தப்பிசோம்டான்னு நேராத்தான் ஓடும். அப்புடி போற எல்லா மாட்டயும் தொட்டுப் பாக்குறது. செல சமயம் மாடு எங்கள நெருங்குனா, தென்னாப்பிரிக்காவுல குதிரங்களுக்குக் காந்தி செஞ்ச அதெ டெக்னிக்குதான்; கீழ படுத்துக்க வேண்டியது. இதுமாதிரி பல விஷயம் இருக்குதுங்க. ஜீவரசிகளுக்குப் பயந்துபோய், வீட்டுல அடஞ்சு கெடக்காம, மந்தையில வந்து நின்னுபாத்தா, காலா ஏன் கவட்டிக்கிக் கீழ வாடா, இப்புடி தைரியமா சொல்லலாம். இதத்தவர எங்க எங்க தாவணி போட்ட தீபாவளி நிக்கிதுன்னு பாத்து வெச்சுக்கிறது. ஒவ்வொரு மாட்டையும் தட்டிவிட்டுட்டு, ஒரு சிரிப்பு சிரிக்கிறது. தொழு மாறுரப்ப, துண்ட உருவி தலக்கிமேல சுத்துறது. தீபாவளி ஐஸ் வாங்குனா, நாங்களும் வாங்குறது. வேணும்னே மைக்குகாரங்கிட்ட போயி, பத்துரூவா குடுத்து, ராமராஜன் ரசிகர் மன்றமுன்னு சொல்லச் சொல்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இது எதுவுமே இந்த வருசம் நாங்க பண்ணல. மடியில கணம், வழியில பயம். 10000 ரூவா. ரெண்டு மணில இருந்து, அஞ்சு மணிவர ஒரு கோயிலு கோபுரத்து சாமிமேல ஒக்காந்துகிட்டு, மாடு பாத்தோம். மந்தக்குள்ள நின்ன குடிகாரப் புருசன, ஒரு பொம்பள அடிச்சு இழுத்து வந்துச்சு. மந்தைக்குள் ஒரு பெண் என நாங்கள் வெட்கப்பட்டோம். போன வருசம் கைலியோட மாடு புடிச்சவன் ஒருத்தன், புதுப் பொண்டாட்டியோட கொடக்கிக் கீழ பஞ்சாயத்து ஆபீஸ் மொட்ட மாடில நின்னான். அடக்கியவன் அடக்கப்பட்டான் என நாங்கள் சிரித்தோம். ஒருவருக்கு மாடு முட்டி, குடல் சரிந்தது. நாங்கள் வருத்தப்பட்டோம். மூன்று யுகங்கள் சோகமாக முடிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சோசன் அக்கா வீட்டுக்குத் திருப்புனோம். கட்டில்ல நாலஞ்சு கெழடுக. ரெண்டு காப்பி சாப்புட்டுச்சு. ரெண்டு எற்கனவே சரக்கு சாப்புட்ட சாயல். யாரும் சோசனை வாயால் அழைக்கவில்லை. மண்ணப் பாத்துக்கிட்டே கைகூப்பினார்கள். சோசனும். பஞ்சாயத்து ஆரம்பமானது. சோசப் என்ற மீசை வைத்த ஆண், சேகர் என்ற மீசை வழித்த ஆண். மற்ற எல்லா ஆண்களுக்கும் அமர இருக்கை இருந்தது. என்ன பிரச்சனை என்று எனக்குப் புடிபடவே இல்ல. ஆனா சோசனுக்கு யாருமே ஞாயம் பேசவில்லை என்று மட்டும் புரிந்தது. ஒரு பாக்யராஜ் படத்தில் வருவதுபோல், முடிவு எடுக்கப்பட்ட ஒரு விவாதம் அது. பஞ்சாயம் புரியாததாலா, அங்கிட்டும் இங்கிட்டும் பிராக்கு பாத்துக்கிட்டு இருந்தேன். சண்டைக்கு நடுவே, போதிமரம்போல ஓர் அழகான காட்சி கண்ணில் பட்டது. அழகான தமிழிலேயே சொல்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;சோசப்பின் அக்காவின் மூத்த பையனுக்கு இரண்டு பிள்ளைகள்; இளையவனுக்கு ஒன்று. மூன்றும் மாடிப்படியின் கடைசி படிக்கட்டில் நின்றுகொண்டிருந்தன. கீழ் படிக்கட்டில் அமர்ந்துகொண்டு அக்காபேரப்பிள்ளைகளையும், பஞ்சாயத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மூத்தவனின் மூத்த மகனை, இளையவனின் மகன் மாடிப் படிகளில் தள்ளிவிட்டான். யார் தள்ளியது என்று நான்கு பேருக்குத்தான் தெரியும். எனக்கு, சோசப்பின் அக்காவுக்கு, மற்ற இரண்டு குழந்தைகளுக்கு. என்னாச்சு என்று சில மைக்ரோ வினாடிகள் வித்தியாசத்தில் வெவ்வேறு வாய்களில் இருந்து வார்த்தை வந்து, பிறகு பஞ்சாயத்து தொடர்ந்தது. மூத்த மருமகள் யார் தள்ளியதென்று விசாரித்தாள். சோசப்பின் அக்கா, மூத்தவனின் இரண்டாவது மகனென்று சொன்னாள். எனக்குத் தூக்குவாரி போட்டது. அக்குழந்தை எவ்வளவோ மறுத்தும், அடி தவிர்க்கப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு நேரம் அமைதியாகவும், பித்துக்குளி போல சிரித்துக்கொண்டும் இருந்த சேகர் நேராய் சோசப்பின் அக்காவிடம் சென்றேன். அவளுக்கு மட்டும் கேட்கும்படி, "சின்னப்புள்ளகிட்ட ஓரவஞ்சன காட்டுறியே, என்ன மாதிரி பொம்பள நீ? ச்ச்சீ" வந்துவிட்டேன். அவள் என்னிடம் வந்து தண்ணீர் கொடுப்பதுபோல் சொன்னாள், "புருசனும் தம்பியும் அடிச்சிக்கையில நான் அமைதியா இருக்கேன். இதே மாதிரி நான் அமைதியா இருந்திருந்தா நாளக்கி ஏன் மகனுங்க ரெண்டுபேரும் அடிச்சிக்க இந்தமாடிப்படியே காரணமா இருக்கலாம்". தனது தவறுகளுக்கும், ஒருசார்புக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் மனிதன் கொடுக்கும் நியாயத்தீர்ப்பு மற்றவர்களுக்குச் சுறுக் என்றால், அந்த மற்றவர்களும் அவன் சார்பு. இந்நிகழ்வை இப்படி மறுப்பதா? இல்லை, ஒரு பெண்ணின் பிறந்த வீடு - புகுந்த வீடு இருதலைக்கொள்ளி எறும்பு வாழ்க்கை என்று ஏற்பதா? சீரணிப்பதற்குள், வீட்டுக்குத் தூரமுன்னு சொன்ன சோசப்பின் மனைவி வந்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் யாரைப்பற்றியும் கவலைப்படவில்லை,&lt;br /&gt;"வேடிக்கலுக்குப் போன மனுசன் இருட்டியும் வீடு வல்லான்னா, ஒண்டியா இருக்குற பொம்பள என்னய்யா நெனப்பா?"&lt;br /&gt;"நீ எதுக்கு வந்த? நம்ம மாட்டத்தான் திரும்பக் கேட்டுக்கிட்டு இருக்கேன்"&lt;br /&gt;"என்ன பேச்சு வேண்டிக்கெடக்குது. பத்தாயர ரூவாய மூஞ்சில வீசிட்டு மாட்ட மகாராசன் மாதிரி ஓட்டிக்கிட்டு வரவேண்டியதுதானே?"&lt;br /&gt;"இந்தாம்மா, சபைக்கி மரியாத குடு" மருதூரு பெருசு.&lt;br /&gt;"நீயெல்லாம் பெரிய மனுசங்களாய்யா? ஒங்களுக்கு எல்லாம் மகளுக இருக்கா இல்லையா?"&lt;br /&gt;த்தூ என்று துப்பினாள். சோசனின் மாமாவுக்கு ஒரு ஸ்பெஷல் துப்பு. சோசனின் மாமா என்ற பெரிய மனுசனுக்கும், 10000 ரூவாய்க்குமான கதையை அவள் சொன்னாள். அப்படியே அவள் சொன்னால் குழப்பும். நான் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அஞ்சாறு தலமொறைக்கி முன்னாடி ரெண்டு குடும்பம் குடியேறி, இன்னக்கி ஒரு பத்து தலக்கட்டு இருக்குற ஊருதான் சோசன் ஊரு. அந்த ஊருல பொறந்த கொழந்தங்க எல்லாத்துக்கும், தாய் தகப்பன் வயல்ல எறங்கி வெள்ளாம பாக்குறப்ப, தொட்டில்ல தூங்குறதுக்குத் தாய்மடியா இருக்குறது ஒரு மரம். குரும்ப மரம். அந்த சுத்துவட்டாரத்துல வேற எங்கயும் கெடையாது. சோசனோட கெணத்து மேட்டுல இருக்கு. அது நடவுநேரம். பக்கத்து வயக்காரங்காரங்க எல்லாம் கடல போட்டு இருந்ததால, மத்தியானச் சாப்பாட்டுக்கு வேற யாரும் குரும்ப மரத்தடியில கூடல. சோசனும் சோசன் பொண்டாட்டியும் மட்டும், ரெண்டு நாளக்கி முன்னாடி பாம்புகடிபட்ட ரஞ்சிதத்தப் பத்தி பேசிக்கிட்டு இருந்தாக.&lt;br /&gt;&lt;br /&gt;"ரஞ்சிதம் புருசன ஆடுதின்னாபால ஒடிச்சிட்டு வரச்சொல்லி வைத்தியரு சொல்லி இருக்காரு. அந்தக் குடிகார முண்ட, ஆடுதின்னு மிச்சமிருக்குற பாலைன்னு போயி விசாரிச்சு இருக்கான்"&lt;br /&gt;கருவாட்டு இடைவெளி.&lt;br /&gt;"ஊரு பெருசு ஒண்ணு, தமிழே மறக்குற அளவுக்கு குடிச்சிருக்கான்னு அவனுக்கு வெளக்கம் ஒண்ணு சொன்னுச்சாம். அது ஆடுதின்னுன பாலை இல்ல. ஆடுதின்னாபாலை. அப்புடின்னா, ஆடு திங்காததுன்னு அர்த்தம்"&lt;br /&gt;பழயசோறு இடைவெளி.&lt;br /&gt;"கடைசியில வெறுங்கையோட வந்த அவனப்பாத்து, வைத்தியரு சொன்னாராம்: அட குடிக்காரக் குப்பா, ஆடு கடிச்சதுமில்ல; கடிக்காததுமில்ல. அது ஒரு தனி மூலிகடா. அப்புடின்னாராம்"&lt;br /&gt;"அட சண்டாலா. பொண்டாட்டியக் கொல்லப்பாத்தான் பாருங்க"&lt;br /&gt;"ரஞ்சிதம் வீடுதிரும்புறப்ப வைத்தியரு சொன்னாராம்: ஓம் புசனுக்கிட்ட ஒரு வேல தர்றதும், எலக்ட்ரிக்க நம்பி எல போட்றதும் ஒண்ணுதான். தெளிவா இருந்தாத்தான் உண்டு. இல்லன்னா, மைசூர் பாக்கு வாங்க, மைசூரே போயிருவாப்புள்ள".&lt;br /&gt;சோசன் மனைவிக்குப் பொறையேர்ற அளவுக்குச் சிரிப்பு. வயக்காட்டுத் தனிமையில், சோசனும் சேர்ந்து சிரிச்சாரு. தனிமை என்ற நிலைமை அவசரமாக விடைபெற்றுக் கொண்டது. &lt;br /&gt;"குடுத்த காசத் திருப்பித் தரத் வக்கில்ல. என்ன சல்லாபம் வேண்டிக் கெடக்கு?" சோசனின் அக்கா புருசன்.&lt;br /&gt;மாமா என்ற உறவிடம் இருந்து முதல்முறையாக கரடுமுரடான வார்த்தைகள், அறிமுகம்கூட இல்லாமல். இருவரும் நிதானமாக சுதாரித்தார்கள். &lt;br /&gt;"என்ன மாமா வந்ததும் வராததுமா காசுப்பத்தி பேசுறீங்க"&lt;br /&gt;"தோள்ல தூக்கிவளத்த புள்ள நல்லா இருக்கட்டுமேன்னுதான், அன்னக்கி நீ சிங்கப்பூரு போகனும்னு கேட்ட ஒடனேயெ, 10000 ரூவா குடுத்தேன். அத வச்சி பொழக்கத் தெரியல. ஒன்ன எப்புடி நம்புறது?"&lt;br /&gt;"மாமா, ஒங்களுக்கு அவசரமா பணம் தேவன்னா, இன்னும் ரெண்டு நாளக்குள்ள தந்துடுறேன்"&lt;br /&gt;எதுவும் பேசாமல், தென்னமரத்தடியில் கட்டி இருந்த ரெண்டு ஒழவு மாடுகளைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்..&lt;br /&gt;"பணத்தக் குடுத்துட்டு மாட்ட வாங்கிக்க"&lt;br /&gt;"மாமா இது ஞாயம் இல்ல மாமா"&lt;br /&gt;"எனக்கு ஞாயம் சொல்லித் தர்றியா?"&lt;br /&gt;அதுக்கப்பறம் சோசன் பேசவில்லை. சோசனின் மனைவி பேச்சை நிறுத்தவில்லை.&lt;br /&gt;"அப்பா அப்பா மாட்ட விட்டுருங்க. எங்க தலய வீட்ட வயல எதையாவது அடமானம் வெச்சு சாயந்தரத்துக்குள்ள ..."&lt;br /&gt;"ரெண்டு நாள்ல பொங்க வர்து தெரியுமுல்ல"&lt;br /&gt;ஊரார் பார்க்கும் கோலம், உடையவன் பார்க்காத கோலத்தைச் சோசனின் மனைவி சோசனுக்குக் காட்டினாள். தங்கத்தாலியக் கலட்டி, சோசனின் மாமா காலடியில் வைத்தாள். சோசன் மனதால் செத்தார். ஊதாரி புருசனைவிட மாடே மேல். &lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிளின் பின்னால் மாடுகளைக் கட்டிக்கொண்டு 15 கிமீ தொலைவில் இருக்கும் தனது ஊருக்குச் சோசனின் மாமா, எதையும் கண்டுகொள்ளாமல் புறப்பட்டு போய்விட்டார். அடிக்கடி சோசன் வீட்டுக்கு வந்து பழக்கப்பட்ட ஆள் என்பதால், அடம்பிடிக்காமல் மாடுகளும் பின்சென்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மதிய ஒழவு இல்லாம, பொழுது கருக்குற வரைக்கும், குரும்ப மரத்துக்குக் கீழ வழக்கம்போல அழுகை சத்தம். ஆனால், அந்த பிற்பகலில் மட்டும் அழுகைகளுக்குச் சொந்தமானவர்கள் குழந்தைகள் அல்ல. மறுநாள் காலை குரும்பமரம் அழுதது. யாருக்கும் கேட்கவில்லை. அந்த அழுகையின் விலை 10000 ரூவா.&lt;br /&gt;&lt;br /&gt;சோசபின் மாமா திடீரென மாடுகளைக் கண்வைத்து பிடித்துக்கொண்டு போனதன் காரணம் - அந்த மாடுகள் இப்போது எங்கே - இப்போது நடக்கும் பஞ்சாயத்தில் சோசப்பிற்கு நியாயம் கிடைக்குமா - சோசப்பின் அக்கா தலையிட்டால் சுமூகமாகும் இப்பிரச்சினையில் அவள் மௌனமாய் இருப்பதேன் - இப்படி நான் நினைத்துக்கொண்டு இருக்கும்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் சோசப் 10000 ரூபாயை அவர் மாமாமேல் வீசி எறிந்தார். &lt;br /&gt;"நாளக்கிக் காலையில ஏன் செவக்காட்டுல நடவு. கண்மாதிரி என்னோட ரெண்டு மாடுகளும், காலையில் ஆறுமணிக்கி அங்க இருக்கணும். சேகரு வண்டிய எட்ற"&lt;br /&gt;மூன்றுபேரும் வெளியேறினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் சோசன் வீட்டிலேயே தங்கிவிட்டேன். சோசன் சொன்னபடியே மாடுகள் வந்துசேர்ந்தன. மூத்தமகன், சைக்கிளில் கொண்டுவந்து விட்டுப்போனார். சோசனுக்கு மாமன் பயந்துவிட்டார்; நெசம் ஜெயிக்கும்; அவனும் ஒரு வெவசாயிதானே; அவனுக்கும் ஒரு பொம்பளப்புள்ள இருக்குல்ல. இப்படி பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நான் நினைத்த ஒரே காரணம், "சோசனின் அக்கா பேசி இருப்பாள்".&lt;br /&gt;&lt;br /&gt;மாடுகள் வந்ததில் பெருமகிழ்ச்சி; பச்சைமிளகாய் பூத்திருப்பதில் மகிழ்ச்சி; இன்றைக்குக் காலை கரண்ட் வந்ததில் மகிழ்ச்சி; செவ்வெளநீர் மரம் குருத்துவிட்டதில் மகிழ்ச்சி; கெட்ட ரத்த சம்மந்தம் ஒன்றை வெட்டிவிட்டதில் மகிழ்ச்சி. இப்படி சின்னச்சின்ன விசயங்களுக்கு எல்லாம் சோசப் சந்தோசப்பட்டார். எல்லாம் சரிதான். மத்தியானச் சோற்றுக்குக் பந்தல்தந்த  - குழந்தைகளைத் தாயைவிட அதிகநேரம் தாலாட்டிய - மழை பயிர்களின் மூச்சடைத்தபோதும், வெயில் பயிர்களின் வேர்நுனி பிளந்தபோதும் மக்களுக்குக் குடைபிடித்த குரும்பைமரம் இன்று இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் சந்தோசத்திலும், துயரத்திலும், ஆத்திரத்திலும் மரங்களின் மேலும், மிருகங்களின் மேலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி பீடுநடை போட்டுக் கொள்ளலாம். தக்கன பிழைத்தல் மட்டும் பரிணாமம் என்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_XAsKAwlHIGY/R-5jDW2L9nI/AAAAAAAABGA/cvD3qt6F3Fs/s1600-h/DSC00665.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_XAsKAwlHIGY/R-5jDW2L9nI/AAAAAAAABGA/cvD3qt6F3Fs/s200/DSC00665.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5183189130473633394" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-7148547296986817118?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/7148547296986817118/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=7148547296986817118' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/7148547296986817118'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/7148547296986817118'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2008/03/blog-post.html' title='ஹோமோசெப்பியன்ஸ்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_XAsKAwlHIGY/R-5jDW2L9nI/AAAAAAAABGA/cvD3qt6F3Fs/s72-c/DSC00665.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-1051147740059317163</id><published>2007-10-20T02:43:00.000-07:00</published><updated>2007-10-20T03:02:00.592-07:00</updated><title type='text'>ஒரு வாசகத்திற்கும் உருகான்</title><content type='html'>(Santhara என்று ராஜஸ்தானில் சில மாதங்களுக்கு முன்னர் பிரபலமாகப் பேசப்பட்ட, ஆங்கில Euthanasia வை இதுவரை நெதர்லாந்தைத் தவிர வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. தமிழில் கருணைக்கொலை என்ற இச்சித்தாந்தத்தை அஹிம்சைக்காரர் மோகன்தாஸ் காந்தி அவர்களே அங்கீகரித்திருக்கிறார்! "இனிமேல் இவன் தேறமாட்டான்" என்ற அவநம்பிக்கையில் தூக்குத்தண்டனைகளை ஆதரிக்கும் நாடுகள்கூட, "இனிமேல் இவன் தேறமாட்டான்" என்ற நம்பிக்கை வார்த்தைகளைக் கருணைக்கொலை யாசிப்பவர்களுக்குத் தருவதில்லை. நாகரீகத் தொட்டிலில் இப்போது ஆடிக்கொண்டிருக்கும் இச்சிறுபிரச்சனைப் பற்றி நான் கருத்துகள் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால்,,,) &lt;br /&gt;&lt;br /&gt;தன்மை:&lt;br /&gt;-------&lt;br /&gt;சங்கூதி நீர்வெழாவி&lt;br /&gt;சாஞ்சாராம் பண்டாரம்&lt;br /&gt;வெடி விடி&lt;br /&gt;போட்ட காலங்க&lt;br /&gt;கண்ணோட சேந்து&lt;br /&gt;பாழாப் போச்சு&lt;br /&gt;&lt;br /&gt;நுனியில நூலுகட்டி&lt;br /&gt;பொடனியில முட்டுகுடுத்து&lt;br /&gt;காதுல சொருகின&lt;br /&gt;கண்ணாடியுங் கூட&lt;br /&gt;ஆடுற உசிருபோல &lt;br /&gt;நெலச்ச பாடில்ல&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளங்கை எடுத்து&lt;br /&gt;கமுக்கட்டி சொருகி&lt;br /&gt;யாருக்குந் தெரியாம&lt;br /&gt;நான் எழுப்பும் சத்தங்க&lt;br /&gt;காதோட விழாம&lt;br /&gt;கேக்காம போச்சு&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணுக்குப் போகவே&lt;br /&gt;தொணையாளு கேட்டுப்பாத்தேன்&lt;br /&gt;வெரல்தண்டி மொளக்குச்சி&lt;br /&gt;யாருக்கிட்ட கேப்பேன்?&lt;br /&gt;கண்ணில்லா சென்மம்&lt;br /&gt;கர்த்தரே ஏனய்யா?&lt;br /&gt;&lt;br /&gt;அடங்கி இருந்தா&lt;br /&gt;ஆயிரங்காலமுன்னு&lt;br /&gt;நல்லதக் கேட்டு&lt;br /&gt;வாழ்ந்த நாராயஞ்சாதி&lt;br /&gt;நாஞ் சொன்னாப்புல&lt;br /&gt;அருந்த நோனி நானு.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னிலை:&lt;br /&gt;----------&lt;br /&gt;ஒருமுறை ஜென்மப்பாவங்கள் கழுவப்பட்டு&lt;br /&gt;எழுமுறை நோயில் பூசிய &lt;br /&gt;இவரின் பிணிகள் எல்லாம்&lt;br /&gt;லாசரைப் போல&lt;br /&gt;பூரண குணமடைந்து&lt;br /&gt;பரலோகப் பிதாவில்&lt;br /&gt;நித்திய ஜீவனை அடையும்படிக்குப்&lt;br /&gt;பரிசுத்த ஆவியின் துணையோடு&lt;br /&gt;எல்லாம்வல்ல பரமபிதாவிடம்&lt;br /&gt;பிரார்த்திப்போம். ஆமென்.&lt;br /&gt;&lt;br /&gt;படர்கை:&lt;br /&gt;-------&lt;br /&gt;வேதனை கரைக்கும்&lt;br /&gt;நெற்றியில் கிறிஸ்துமா தைலம்&lt;br /&gt;வயிற்றில் தீர்த்தம்&lt;br /&gt;இது ஆன்மீகம்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லையும் கரைக்கும்&lt;br /&gt;வயிற்றில் HCl&lt;br /&gt;இது அறிவியல்.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கப்போற காலம்&lt;br /&gt;இல்லாமலே இருக்கலாம்&lt;br /&gt;இப்படி இக்காலம் ஆனபின்பு&lt;br /&gt;அடங்கி இருக்கவும் வேணாம்&lt;br /&gt;ஆயிரங்காலமும் வேணாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் ஆன்மீகம்&lt;br /&gt;யாருக்கும் தெரியாம சேத்தாச்சு&lt;br /&gt;இது ரகசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாஞ்சாரு பண்டாரம்.&lt;br /&gt;நீர் வெழாவினாங்க.&lt;br /&gt;சங்கூதுனாங்க.&lt;br /&gt;ஊரே சொன்னது&lt;br /&gt;"மண்ணுக்குப் போகையிலையும்&lt;br /&gt;மண்ணாச விடல".&lt;br /&gt;&lt;br /&gt;நோர மூடிக்கிட்டு&lt;br /&gt;அமைதியா யோசிச்சேன்&lt;br /&gt;"என் மண்ணாச தீத்துவெக்க&lt;br /&gt;எனக்காக ஒரு உசுரு வேணும்",,,&lt;br /&gt;&lt;br /&gt;-ஞானசேகர்&lt;br /&gt;(என்றுமே முன்னிலைக்கு வராமல், என்றோ ஒருநாள் தன்மையாகப் போகும், இன்றைய படர்கை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-1051147740059317163?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/1051147740059317163/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=1051147740059317163' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1051147740059317163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/1051147740059317163'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2007/10/blog-post.html' title='ஒரு வாசகத்திற்கும் உருகான்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-3591429539673657226</id><published>2007-07-26T22:19:00.000-07:00</published><updated>2007-07-26T22:27:12.243-07:00</updated><title type='text'>செத்தாலும் வேணாம் செவ்வாக்கெழம</title><content type='html'>&lt;strong&gt;"ஐயோ போய்விட்டாரே" என்று சவப்பெட்டி செய்பவன்கூட வருந்தும் அளவிற்கு வாழ்வதே வாழ்க்கை.&lt;br /&gt;- சாமுவேல் கிளமென்ஸ் (மார்க் ட்வைன்)&lt;br /&gt;&lt;br /&gt;கொடுப்பதற்கு இனிப்பு இல்லாவிட்டால், இனிப்பாகப் பேசுங்கள்.&lt;br /&gt;-மேற்கத்திய பழமொழி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"மண்ணெண்ணையவிட சீக்கரமா சீனி தீந்துபோயிடுது சீனம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"ரேஷன்ல சீனி கொஞ்சம் அதிகமா போட்டா தேவல போலருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க வீட்டுல மட்டும் வித்தியாசமா எலிகிலி, எறும்புகிறும்பு ஏதாவது இருக்கான்னு தெரியல செல்லக்கண்ணு அக்கா"&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற வசனங்களை அம்மா பேசும்போதெல்லாம், ஒன்றுமே தெரியாதவன்போல் அமைதியாக அமர்ந்திருப்பேன். ஒருநாள் கடையில் இருந்து சீனி மடித்து வாங்கி வந்தபோது, கையில் கொட்டியதை வாயில் போட்டு பார்த்தேன். நாக்கின் இனிப்புச்ச் சுவை அரும்புகளின் அதிஉன்னத அருமை அன்றுதான் புரிந்தது. அன்றில் இருந்து, அடுப்படியில் அடுத்த சில கணங்களுக்கு யாரும்வர வாய்ப்பில்லை என்று தோன்றும் போதெல்லாம், சீனிடப்பா கதவு தட்டப்படும்; அரும்புகள் வாசல் திறக்கப்படும். நடுராத்திரியில் விழிப்பு வரும்போதெல்லாம் அரும்புகள் வாசல் திறந்த கதைகள் ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் யாரும் இல்லாதபோது, சீனியை வாயில் போட்டு, கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு, கன்னம் குறுக்கி, உதடு குவித்து, நாக்கிற்கும் மேல் அன்னத்திற்கும் இடையில் சீனியைவைத்து இழுக்கும்போது, கண்ணாடி முன்னால் நின்றாலும் தானாகவே கண்கள் மூடுமே, அந்த ஒரு தருணத்தை மூன்று ஆண்டுகள் அப்ப அப்ப அனுபவித்து இருக்கிறேன். சுட வைத்த சீனியின் சுவைக்காகவே, தேங்காய் மிட்டாய் போடும் ஒரு பாட்டியைப் பழக்கம் செய்து, விடுமுறை நாட்களில் தேங்காய் மிட்டாய் போடும்போது எல்லா வேலைகளும் பார்ப்பேன். கடைசியாக சட்டத்தைவைத்து, மிட்டாய்களை அறுத்துவிட்டு, சுடச்சுட சில துண்டுகள். 'பச்சை நிறமே' பாடலை மட்டும் நான் எழுதி இருந்தால், சீனி கரைந்த அடுத்த சில நிமிடங்களில் நாக்கின் நிறத்தைச் சிவப்பிற்கு எழுதியிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது சீனிகாண்டத்திற்கும் ஒரு பெரிய கண்டம் வந்தது. அன்று இரவு, இல்லை இல்லை அன்றிற்கு அடுத்த நாள் அதிகாலை, மூன்று மணியளவில் சேது எக்ஸ்பிரஸ் சத்தத்தில் விழித்துக் கொண்டேன். வழக்கம்போல் அடுப்படி. வழக்கம்போல் பச்சைநிற சீனிடப்பா. மஞ்சள்நிற ஸ்பூன். வெள்ளைநிற சீனி. சிவப்புநிற நாக்கு. எல்லாமே கருப்புநிற இருட்டில் எனக்கு அத்துப்பிடி. ஆனால் வித்தியாசமாக ஒன்று ஸ்பூனிற்கு இடையில் பிடிபட்டது. அது ஒரு காகிதம். டவுசர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, படுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விடிந்து பார்த்தால், அக்காகிதத்தை வைத்திருப்பவருக்கு அம்பது ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தரச்சொல்லி மன்மோகன்சிங் கையெழுத்து போட்டிருந்தார். 'ஐம்பது ரூபாய்' என்ற தமிழ் வார்த்தைகளுக்குப் பாராளுமன்றக் கொடி முகம் திருப்பிக்கொண்டிருந்தது. சீனியில் சுட்ட பணம், சீனி வாடை இருக்கிறதா என மூக்கில் வைத்துப் பார்த்தேன். சீனிகாண்டமே ஒரு திருட்டுப் புராணம் என்று உணர்த்தாத 10 வயது, பத்தும் செய்யும் ஐம்பது என்று அப்போது உணர்த்தவில்லை. பத்தோடு ஒன்று பதினொன்றாக அந்த ஐம்பது ரூபாயையும் வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போய்விட்டேன். ஆனால் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்றோ, எடுத்த இடத்தில் வைக்கலாம் என்றோ, பத்து எனக்குப் பரிந்துரைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு திரும்புகையில், காலையில் பார்த்த சாலை, சுவடே இல்லாமல், அதாவது நடக்கவே வழியில்லாமல் மாறியிருந்தது. சாலையின் குறுக்கே ஒரு பந்தல். அதைத்தாண்டி சாலையோரத்தில், ராட்டினம். சில தற்காலிக கடைகள். உலகமே சுற்றிவரும் பணம், என்னையும் ராட்டினத்தில் சுற்றவைத்தது. ராட்டினக்காரன் மீதியாக நான்கு காகிதங்கள் கொடுத்தான். நான்கிலும் மீண்டும் மன்மோகன் சிங். ஆனால், நான்கிலும் 'பத்து ரூபாய்' என்ற தமிழ் வார்த்தைகளைக் கண்டாமிருகம் ஒன்று முகர்ந்து பார்த்தது. நான் முகரவில்லை. ஒரு காகிதம் வைத்து நான்கு காகிதம் சம்பாதித்துவிட்டாலும், ஒன்றை வைத்தே ஒன்றும் தெரியாமல் இருந்த நான் நான்கை வைத்து என்ன செய்யப் போகிறேன் என்று தெரியாமல் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்கு நான் வந்ததும், பானவகைகளில் எனக்குப் பிடித்த கொள்ளுரசம் தயாரானது. குடித்து முடித்தவுடன், அருகில் இருந்த பக்கத்துவீட்டு யாமினி என்னைக் கேட்டாள்:&lt;br /&gt;"சேகரு, சீனிடப்பாவுல இருந்த அம்பது ரூவாய எடுத்தியாடா?"&lt;br /&gt;எனது மூளை, முதன்முதலில் பதறாமல் ஒரு பொய் சொல்ல, எனது கற்பனைவளத்தைத் திறந்து வைத்தது.&lt;br /&gt;"நானா? சீனிடப்பாவ தொட்டதே இல்ல. நாம ரெண்டுபேரும்தானே காலையில எழுந்திருச்ச ஒடனேயே கேரம்போர்டு வெளையாண்டம்?"&lt;br /&gt;மூளை என்னைத் தட்டிக்கொடுப்பதற்குள், அம்மா என் கன்னத்தைத் தட்டியாயிற்று.&lt;br /&gt;"பொய் பேசிறியாடா?"&lt;br /&gt;பளிச்சென்று என்னைச் சுவர் பக்கம் இழுத்து, யாமினி என்னை முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொண்டாள்.&lt;br /&gt;"நீ ஒதுங்கு யாமினி" என்று அம்மா சொல்லும்போது, என் கன்னத்தை யாமினி தேய்த்துவிட்டுக்கொண்டு இருந்தாள்.&lt;br /&gt;"ரொம்ப செல்லம் கொடுத்து...."&lt;br /&gt;"இப்பவே இப்புடின்னா, இன்னும் சொச்ச காலத்துக்கு...."&lt;br /&gt;"அப்பா வரட்டும்...."&lt;br /&gt;"ஸ்கூல்ல இதுதான் சொல்லித்தாராங்களா?...."&lt;br /&gt;என வாக்கியங்கள் ஆரம்பித்தன. பிறகு அம்மா காபி தயார் செய்தாள்.&lt;br /&gt;யாமினி கேட்டாள்:&lt;br /&gt;"உண்மையச் சொன்னா அம்மா அடிக்க மாட்டாங்கடா? சொல்லு? அப்பறம் கேரம்போர்டு வெளையாட எங்க வீட்டுக்குள்ள விடமாட்டேன்"&lt;br /&gt;சீனிடப்பா திறக்கும் சத்தம் கேட்டது.&lt;br /&gt;"இன்னும் மங்குனி மாதிரி இருக்கான் பாத்தியா? உண்மைய ஒத்துக்கிற வரைக்கும் சோறு கெடையாது"&lt;br /&gt;காபி குடிக்காமல், சீனிடப்பாவை எடுத்துவந்து அவர்கள் முன்னால், சீனிதின்ன ஆரம்பித்தேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை.&lt;br /&gt;"ரொம்ப தின்னாத. பல்லு போயிடும்" என்று வெடுக்கென்று டப்பாவை யாமினி எடுத்துக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்திரித்து நேராக மாடிக்குப் போய்விட்டேன். அப்பா வருவதற்குள் ஒரு சூரியனும், மூன்று ரயில்களும் மறைந்து போயிருந்தன. கீழே நின்றுகொண்டு, Little Hearts பிஸ்கெட்டைக் காட்டி அப்பா கூப்பிட்டார். அவரின் இன்னொரு கையில் இருக்கும் Lion Dates சிங்கத்தின் கம்பீரத்துடன் நான் மேலேயே நின்றுகொண்டு இருந்தேன். விடுமுறையில் என்னை அழைத்துச் செல்ல அம்மாச்சியும் வந்திருந்தாள். கொஞ்சநேரம் கழித்து, மாடிக்கு அப்பா வந்தார். ஒரு குடத்துத் தண்ணிரை ஊற்றிவிட்டு,&lt;br /&gt;"அனல் போனதுக்கப்பறம் இங்கேயே படுத்துக்க. பயம், பசி ரெண்டுல எது வந்தாலும் வீட்டுக்கு வா. கதவு தெறந்துதான் இருக்கும். நான் அடிக்க மாட்டேன். பயப்படாதே"&lt;br /&gt;ஒரு பாய். இரண்டு போர்வைகள். ஒரு டார்ச் லைட். Little Hearts. Lion Dates.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது இருந்த மனநிலையில் வானத்து நட்சத்திரங்களையோ, டைல்ஸ்களையோ எண்ணிக்கை செய்ய தோன்றவில்லை. சீனி விசயத்தில் மாட்டிக்கொள்ளவில்லை என பெருமைப்பட்டேன். ஆனால், இத்தனைநாள் தின்ன சீனியால், பல்லில் ஏதாவது கிருமி வந்திருக்குமோ என புதுப்பயம் வந்தது? அடுத்த வருடத்திற்குள் பல்லெல்லாம் கொட்டி, செத்துவிடுவேனோ எனவும் தோன்றியது. "இங்கே இருந்து அடிவாங்குறதுக்குப் பதிலா சாகப்போற வரைக்கும் எங்கையாவது போயி சந்தோசமா இருக்கலாம்" என நான்கு காகிதங்களும் ஒருசேர சொல்லின. காலம் அது, இன்னும் சில மணிநேரங்களில் பங்குனி முடிந்து சித்திரை ஆரம்பிக்கப் போகிறது. சேகர் நான், பள்ளிச் சீருடையுடன் வீட்டுமாடியை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். வாழ்க்கை அது, சீனிகாண்டத்தில் இருந்து பெயர் வைக்கப்படாத அடுத்த காண்டத்திற்கு நடக்க ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;நன்கு பழக்கப்பட்ட பள்ளிகூடப் பாதையிலேயே நடக்க ஆரம்பித்தேன். பகலில் அமர்க்களப்படுத்திய ராட்டினம், அமைதியாக நின்று கொண்டிருந்தது. ஏதோ ஒரு தமிழ் ஆண்டின் பிறப்பை முன்னிட்டு, ஏதோ ஒரு குழுவினரின் பாட்டுக்கச்சேரி மேடையில் நடந்து கொண்டிருந்தது. நடுராத்திரியில் சுறுசுறுப்பாக எல்லாரும் அமர்ந்து பார்த்துகொண்டிருந்தார்கள். ஒருவர் மேடையில் ஏறி, அம்பது ரூபாய் பரிசளித்தார். சுக்குக்காபி குடித்தேன். ஆடும் ரசிகர்களுடன் நானும் ஆடினேன். அடுத்தநாள், இல்லை இல்லை இன்று ரிலீஸாகும் புதுப்படத்தின் முதல் காட்சியை நேற்று பார்த்துவிட்டு, போதையுடன்வந்த பரமரசிகர்களுடன் சேர்ந்து சந்தோசமாக ஆடினேன். ஒரு நான்கு மணியைப்போல் சட்டையைக் கழட்டி தலைமாட்டில் வைத்துக்கொண்டு, கட்டடமணலில் தூங்கினேன். ஒரு ஐந்து மணியளவில் ஒரு கை என்னைத்தட்டி எழுப்பியது.&lt;br /&gt;"என்ன தம்பி இந்த ஊரா?"&lt;br /&gt;"இல்ல இல்ல". தூக்கத்திலும் தெளிவாகச் சொன்னேன்.&lt;br /&gt;என் முழியைப் பார்த்தே கண்டுபிடித்துவிட்டார். அவர் வேறு கேள்வி கேட்டிருந்தால், வேறு பதில் சொல்லி இருப்பேன். "என்ன? வீட்டவிட்டு ஓடியாந்துட்டியா?" என்று கேட்டதால், "ஆமா" என்று ஏனோ சொல்லிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி வா. டீயக் குடி" நடக்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;சட்டையக் காணவில்லை. சொல்ல மறந்துவிட்டேன். சுக்குக்காபி குடித்துவிட்டு, மீதிபணத்தைச் சட்டையில்தான் வைத்திருந்தேன். அப்படியே வீட்டிற்குப் போகலாமா என்று தோன்றியது. அப்பெரியவர் கையசைத்துக் கூப்பிட்டார்.&lt;br /&gt;"சட்ட போடாம ஓடி வர்ற அளவுக்கு என்னடாப்பா கோவம்"&lt;br /&gt;வார் டவுசருடன் நின்ற என்னிடம் கேட்டார்.&lt;br /&gt;"காசுகீசு எதாவது வெச்சிருக்கியா?"&lt;br /&gt;"பயங்கரக் கோவக்காரன் போலருக்கே"&lt;br /&gt;"சரி அடுத்து எங்க போறதா உத்தேசம்"&lt;br /&gt;அவர் கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் சரியென்று பதில் சொன்னேன். அது,&lt;br /&gt;"பேசாம என்னோட வந்துட்றியா?"&lt;br /&gt;என்னை யாரென்றே தெரியாமல் ஏறத்தாழ முந்நூறு நாட்கள் வயிற்றில் சுமந்த தாயைப் பற்றி கவலைப்படாமல், யாரென்றே தெரியாத ஒரு கிழவனின் பின்னால், அவன் தந்த பச்சை துண்டைப் போர்த்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செங்கோல் வாடகை சைக்கிள் கடை. அடையாளம் தெரியாதென சைக்கிள் தரமறுத்தவரிடம், ஏதோ சொல்லி கேரியர் வைத்த சைக்கிள் வாங்கினார். சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டேன். வயதுக்கு மீறிய வேகத்தில் சைக்கிள் ஓட்டினார்.&lt;br /&gt;"சைக்கிள் ஓட்டத் தெரியுமா?"&lt;br /&gt;"தெரியாது"&lt;br /&gt;"எத்தனாவது படிக்கிற?"&lt;br /&gt;"நேத்துதான் அஞ்சாவதுல கடசி பரிச்ச எழுதுனேன்"&lt;br /&gt;"எதுக்காக வீட்டவிட்டு ஓடியாந்தே?"&lt;br /&gt;"அந்தப் பேச்ச விடுங்க. இப்ப எங்க போறீங்க?"&lt;br /&gt;"எங்க போறம்னே தெரியாம போற ஒருத்தருக்காக, தெரிஞ்ச ஒருத்தரப் பாக்கப் போறேன்"&lt;br /&gt;நிஜமாக நான் அர்த்தம் கேட்கவில்லை. எனக்குப் புரியக் கூடதென்று வேண்டுமென்றே சொன்ன பதிலது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றைச் சிம்னி விளக்கொளியுடன் ஒரு கிராமத்து டீக்கடை தயாராக இருந்தது. சூரியனின் மங்கலான வெளிச்சம் மட்டும், இன்னும் தூங்குபவர்களைப் பார்வையிட்டது. சைக்கிளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, "இந்தா வர்றேன்" என்று டீயுடன் என்னைக் கைவிட்டார். மீண்டும் சைக்கிள் பயணம்.&lt;br /&gt;"இதெல்லாம் ஒரு காலத்துல பெரிய கொளமா இருந்துச்சு. சர்க்காரு ஆரஸ்பதி எல்லாம் நட்டுச்சு. இப்ப பாத்தா பொட்டக்காடா கெடக்குது. கா....லம்"&lt;br /&gt;அவர் ஊரைப்பற்றிக் கேட்டால், மீண்டும் என்னைப் பற்றி ஆரம்பிப்பார் என ஒன்றும் பேசவில்லை.&lt;br /&gt;"வழிப்பறி, கொலையெல்லாம் ரொம்ப நடக்குதுன்னு சர்க்காரே மரத்த வெட்டிடிச்சு. ஒனக்கிட்ட சொல்லக் கூடாத பல கெட்ட காரியங்களும் இங்கதான்"&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றைச் சிம்னி விளக்கொளியுடன் அடுத்த கிராமத்து டீக்கடை தயாராக இருந்தது. அந்த ஊரிலும் சைக்கிளைப் பாதுகாத்துக் கொண்டு, ஒரு டீ. அடுத்து ஒரு வயல்காட்டு வழியே சைக்கிளைத் தள்ளிகொண்டே, அடுத்த ஊர். அங்கே சிம்னியை விரட்ட சூரியன் தயாராகிக்கொண்டு இருந்தான். அடுத்த டீ சைக்கிளுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள் பயணம். பொறுமையை முழுவதும் இழந்தவனாய்,&lt;br /&gt;"என்னங்க ஒவ்வொரு ஊராப் போயி, என்னமட்டும் விட்டுப்புட்டு ஊருக்குள்ள போயிட்டு திரும்ப வர்றீங்க?"&lt;br /&gt;"ஒனக்குப் புரியாது தம்பி"&lt;br /&gt;"சொல்லுங்க. இல்ல எறங்கி ஓடிடுவேன்"&lt;br /&gt;சைக்கிளை நிறுத்திவிட்டு சொன்னார்.&lt;br /&gt;"நான் கேதம் சொல்லி போயிக்கிட்டு இருக்கேன்"&lt;br /&gt;புரியாமல் விழித்தேன்.&lt;br /&gt;"ஒருத்தர் எறந்து போனதுக்கு எழவு சொல்லிப் போறேன்"&lt;br /&gt;யாரோ ஒருவரின் சாவுக்கு நானும் இறக்கப்பட்டேன்.&lt;br /&gt;"நீங்க என்னத் தொட்டு டீ கொடுத்தீங்க. ஒங்க போர்வைய நான் போத்தி இருக்கேன். தீட்டுதானே?"&lt;br /&gt;"என்னத் தொட்டா தீட்டு இல்ல. ஒனக்கு சொன்னாலும் புரியாது"&lt;br /&gt;"அப்ப எழவு சொல்றது எப்புடின்னு எனக்கும் காட்டுங்க"&lt;br /&gt;சந்தோசமிகுதியில் சட்டென வெளிவந்தான், சூரியன்.&lt;br /&gt;&lt;br /&gt;(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;டீக்கடையைத் தாண்டி சைக்கிளுடன் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தோம்.&lt;br /&gt;"என்ன ஊசி? ஏதாவுது பெரிய காரியமா?" கோவணத்துடன் ஒரு பெருசு கருவேள மரத்தின் பின்னிருந்து கேட்டார்.&lt;br /&gt;"இல்ல சின்ராசு. வேற வெசயமா"&lt;br /&gt;"ஊசியா?"&lt;br /&gt;"ஏன் பேருதான்"&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் ஓர் ஆள் முண்டாசுடன், போர்வையைச் சுற்றிக்கொண்டு வந்துகொண்டு இருந்தார்.&lt;br /&gt;"கட்டக்கலப்ப வீடு எதுங்க?"&lt;br /&gt;"யாரு?"&lt;br /&gt;"கட்டக்கலப்ப"&lt;br /&gt;"அப்புடி யாரும் இல்லேங்கலே... நெசப் பேரே அதானா?"&lt;br /&gt;"அவர கட்டக்கலப்பந்தான் கூப்புட்றது. தெக்கிச் சீமையில பொண்ணெடுத்தாரு"&lt;br /&gt;"நான்கூடத்தான் தெக்கிச் சீமையில பொண்ணெடுத்தேன். என்ன சங்கதியா பக்கணும்?"&lt;br /&gt;"ட்ராக்டரவிட்டு உழுவ மாட்டேன்னு, கலப்பயிலேயே உழுவுவாரே அவருயா"&lt;br /&gt;"என்னய்யா இது? எனக்குத் தெரியாமா?"&lt;br /&gt;"நீ எத்தன வருசமாய்யா இந்த ஊர்ல இருக்க?"&lt;br /&gt;"பொறந்ததுல இருந்து இங்கதான் இருக்கேன்"&lt;br /&gt;"கட்டக்கலப்பயத் தெரியாது?"&lt;br /&gt;"எனக்குத் தெரியாம இங்க ஒன்னுமே நடக்காது"&lt;br /&gt;&lt;br /&gt;விருட்டென்று சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். ஒரு வீட்டின் முன்னால் வாசல் தெளிக்கும் ஒரு பெண்ணை அடையாளம் கண்டு கொண்டவராய்,&lt;br /&gt;"ஏம்மா? இதுதான் கட்டக்கலப்ப வீடா?"&lt;br /&gt;"ஆமாங்க? என்ன விசயம்? டேய் ஆங்ஞான கூப்புடுடா"&lt;br /&gt;"இல்ல செங்களூரு காயங்கோட்டையாரு தவறிப்போயிட்டாரு"&lt;br /&gt;கட்டக்கலப்ப பதறினார்.&lt;br /&gt;"போனவாரந்தான்யா பாத்தேன். மகளுக்கு ஒரு நல்ல எடமா பாக்கச் சொன்னாரு"&lt;br /&gt;"சரிங்க. நான் செல்லுகுடி வேற போகணும்"&lt;br /&gt;சைக்கிள் எடுக்கையில் பக்கத்துவீட்டு எளசு கேட்டது: "எங்களுக்குன்னு எதாவது தனி எழவு சொல்லி வருவாகலா? இல்ல இது ஊருக்கின்னு சொன்னதா?"&lt;br /&gt;"சொல்லாம போகுற சாவுக்குக் கூப்புடாமப் போறதே உத்தமங்க"&lt;br /&gt;சைக்கிள் பறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போகும் வழியில். எழவு சொல்லிப் போகும்போது தெரியாத ஒரு ஆளை எப்படி கண்டுபிடிப்பது என சொல்லிக்கொண்டு வந்தார். அவரின் துணையில்லாமல், திம்மியம்பட்டி என்ற ஊரில் துப்பாக்கிக்காரர் வீட்டைக் கண்டுபிடித்து எழவு சொன்னேன். தட்டிக் கொடுத்தார்.&lt;br /&gt;"இப்ப நீயும்தான் எழவு சொன்னே. நீ திட்டா?" என்று அவர் கேட்டிருக்கலாம். இல்லை.&lt;br /&gt;இப்படி ஒரு ஏழெட்டு ஊர்கள். பசி தெரியவில்லை. வெயில் தெரியவில்லை. சைக்கிளில் போகும்போது, சுருங்கி விரியும் அவர் முதுகைப் பார்த்துக் கொண்டும், நடந்து போகும்போது, கட்டை விரலாலும், அதற்கடுத்த விரலாலும் நிலத்தை நன்கு அழுத்தி இருகோடுகள் போட்டுச் செல்லும் அவரின் பாதங்களை ரசித்தவாறும் சென்றேன். வேகமாக நடக்க என் கால்கள் பழகின.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா ஊர்களும் முடிந்தபிறகு, திரும்பும் வழியில் ஒரு சவுக்குக் காட்டுக்குள் புகுந்து கள் குடித்தார். எனக்கு இளநீர். என்னைப் பார்த்ததில் இருந்து தேக்கி வைத்ததோ என்னவோ, கண்களில் நீருடன் பேச ஆரம்பித்தார். சிறுவயதில் தந்தையை இழந்த அவர், தாயுடன் பஞ்சம் பிழைக்க கண்டி, மலேசியா என்று கடல்தாண்டிபோய், தாயும் இறந்தவுடன் சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். ஒண்டிக்கட்டையான இவர் யார் என்னா வேலை கொடுத்தாலும் செய்திருக்கிறார். நல்லதோ கெட்டதோ, எல்லா காரியத்தையும் எல்லாருக்கும் இவர்தான். இப்படியே அம்பது வருட வாழ்க்கையில், யார் யாருக்குச் சொந்தம், எங்கே எப்படி போகணும் என்ற பலவிஷயங்கள் இவருக்கு அத்துப்பிடி. உதாரணமாக, ஒரு பெருங்கெழடு இறந்தபோது, அவரது தாய்வீட்டுப் பூர்வீகம் இவரைத்தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை. தூரத்து ஊர்களுக்கு எழவு சொல்வதும், இன்னபிற வேலைகளும் இவர் வேலைகள். சுருக்கமா சொன்னால், தரைவழி கொலம்பஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பேசியதில் இரண்டு வாக்கியங்கள் என்பசுமரத்தில் ஆணியடித்தன.&lt;br /&gt;"என் ஆதி வேற. என் சாதி வேற. இருந்தாலும் ஏன் எழவு சொல்றேன்னா, பணம் சம்புடிக்கத் தெரிஞ்ச மனுசனுக்கு, பாசத்த சம்புடிக்கத் தெரியல. என்னால பாசமோ, பணமோ தேடமுடியாம போச்சு. எவனும் பொண்ணுகூடத் தரல. ஒருத்தனோட கடைசி பாசத்த ஒருத்தனுக்குக் காட்டச் சொல்ற இந்தவேலைய வருத்தப்பட்டு நான் பாரம் சொமக்கல"&lt;br /&gt;"ஒனக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம்தான். நான் பெத்தவளக் காப்பாத்த ஊரவிட்டுப் போனேன். நீ...."&lt;br /&gt;&lt;br /&gt;செங்கோல் வாடகை சைக்கிள் கடை. சைக்கிள்விட்ட பிறகு, பந்தலைக் காணவில்லை; ராட்டினம் தரையில் கழட்டிக் கிடந்தது. இன்னும் அவருக்குப் பஸ் வர அரைமணிநேரம் இருந்தது. வார் டவுசருடன் பேசாமல் அமர்ந்திருந்தேன். டீ. பஸ். வீடு திரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு பூட்டி இருந்தது. தொடியில் காய்ந்துகொண்டிருந்த ஒரு சட்டையை மாட்டிகொண்டு யாமினி வீட்டுக்குப் போனேன்.&lt;br /&gt;"எங்கடா போனே?"&lt;br /&gt;"அம்மா எங்க?"&lt;br /&gt;"காலையில ஒரு ஆறு மணி இருக்கும்டா. ஒங்க சின்ன அம்மாச்சி இறந்து போயிட்டாங்கன்னு எழவு வந்திச்சி. ஒங்க அம்மாவும், அம்மாச்சியும்.... எப்பா அப்புடி ஒரு அழுகடா. அழுதுக்கிட்டே ஒடினாங்க. ஒங்க அம்மா அழுது நான் இன்னிக்குத்தான்டா பாத்தேன்"&lt;br /&gt;நான் பார்த்ததே இல்லை.&lt;br /&gt;"ஒங்க அப்பாவும் சைக்கிள எடுத்துக்கிட்டு பின்னாடியே போயிட்டாரு. இந்தா வீட்டுச்சாவி. எங்க வீட்டுலேயே பத்தரமா இருக்கச் சொன்னாரு. இன்னிக்கி முழுக்க ஒனக்கு எங்கவிட்டூ தயிர்சாதம்தான்" என்றாள் யாமினி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவே அப்பாவும், அடுத்தநாள் மதியம் அம்மாவும் திரும்பிவிட்டார்கள். ஒரு உயிரின் பிரிவு, நான் பிரியப் பார்த்ததை மொத்தமாக மறைத்துவிட்டது. சீனிகதையும், எழவுகதையும் யாருக்கும் தெரியாமல் வைத்து, காலம் என்னை வைத்து விளையாடிய கதை, வெளியே எதுவும் சொல்லாமல் மனதிற்குள்ளே திட்டங்கள் போட்டு, தக்க நேரத்தில் செயலால் வெளிப்படுத்தும் அதிஉன்னத தத்துவத்தை, ஊசி என்ற கிழவன் மூலம் கற்றுக்கொடுத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் யாமினி வீட்டில் கேரம்போர்டு. இரண்டு நாட்கள் கழித்து, சோகம் கொஞ்சம் விலக அம்மா என்னிடம் பேசினாள்:&lt;br /&gt;"சேகரு, இந்தா அம்பது ரூவா. பத்து மணியப் போல யாமினி ரேஷன் கடக்கிப் போவா. அவளோட நீயும் போயி, சீனி வாங்கிட்டு வந்துடு. சீனிடப்பாவுல முக்காவாசி வரும். சின்னப்பயன்னு ஏமாத்திடுவாங்க. பாத்து&lt;br /&gt;யாமினி, இவனக் கொஞ்சம் பாத்துக்க. இன்னக்கிச் சின்னம்மாவுக்குப் பாலு. சாயந்தரம் வந்துட்றேன்"&lt;br /&gt;அதே மன்மோகன் சிங். ஐம்பது ரூபாய். சீனிடப்பா. சேகர். ஆனால் ஏதோ சொல்லமுடியாத் ஒரு மிகப் பெரிய வித்தியாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஏப்ரல் 14, என்னைவிட்டுப் போய் 14 வருடங்கள் ஆகிவிட்டது. மன்மோகன் சிங், ரங்கராஜன், பிமால் ஜலான், ஒய்.வி.ரெட்டி என்று பலபேர் கையெழுத்துப் போட்டு பரிந்துரைக்கும் காகிதங்களும், நானே கையெழுத்துப் போட்டு பரிந்துரை செய்துகொள்ளும் கார்டுகளும் என்னிடம் நிறைய இருந்தாலும், ராட்டினத்தில் கீழிறங்கும்போது வயிற்றில் தோன்றும் அந்த சுகம் எனக்கு மறந்துபோய்விட்டது; யாரோ ஒருவன் என்னை ஒரு பகல் முழுவதும் சுமந்துகொண்டு, பசி-கவலை-அறியாமை எதுவும் தெரியாமல் டீக்கடைகளில் கற்றுக்கொடுத்த வாழ்க்கை மறக்கும்போது நானிருக்க மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாம் சொல்லாமல் செல்லும்போது, அழையாமல் வரப்போகும் உறவுகளுக்காக அலைவோம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-3591429539673657226?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/3591429539673657226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=3591429539673657226' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/3591429539673657226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/3591429539673657226'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2007/07/blog-post.html' title='செத்தாலும் வேணாம் செவ்வாக்கெழம'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-116469891892344918</id><published>2006-11-27T23:25:00.000-08:00</published><updated>2006-12-04T01:08:18.476-08:00</updated><title type='text'>இயற்கை எய்தியது இயற்கை</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/377/1633/1600/Draught.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/377/1633/320/Draught.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மெதுவாக உலகம் &lt;br /&gt;செத்துக்கொண்டு இருக்கிறது&lt;br /&gt;யாருக்கும் தெரியாமல்!&lt;br /&gt;-யாரோ&lt;br /&gt;&lt;br /&gt;வரங்களே சாபங்களானால்&lt;br /&gt;இங்கு&lt;br /&gt;தவங்கள் எதற்காக?&lt;br /&gt;-அறிவுமதி (என நினைக்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;மரம் கேட்டது:&lt;br /&gt;"எங்களில் முடியும்&lt;br /&gt;ஒரு போதிமரம்&lt;br /&gt;ஒரு சிலுவைமரம்.&lt;br /&gt;உங்களால் முடியுமா&lt;br /&gt;ஒரு புத்தனோ&lt;br /&gt;ஓர் இயேசுவோ?"&lt;br /&gt;-யாரோ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொழி புரியாத மலை.&lt;br /&gt;புரிய வைக்க&lt;br /&gt;250 INRக்கு ஒரு கிழவன்.&lt;br /&gt;போரிஸ் எல்ட்சின் போல்&lt;br /&gt;அவனுக்கு மூன்று விரல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்கும் இடமே&lt;br /&gt;மலைத் தொடரின்&lt;br /&gt;உயரமான இடம் என்றான்.&lt;br /&gt;முதுகுக்குப் பின்னால்&lt;br /&gt;ஒரு மவுண்ட் ரஷ்மூர்.&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்துப் பாறைகாட்டி&lt;br /&gt;மிசாரு மசாரு&lt;br /&gt;மிகசாரு என்றான்.&lt;br /&gt;காந்திக்கு இன்னொரு&lt;br /&gt;சத்திய சோதனை.&lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலை முனை என்று&lt;br /&gt;ஒரு ரூபாயைக் கைவிட்டான்.&lt;br /&gt;சில விநாடிகள் கழித்து&lt;br /&gt;சத்தம் கேட்டது&lt;br /&gt;அவனுக்கு மட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;புண்ணிய நதியின்&lt;br /&gt;பிறப்பிடம் இதுதான் என&lt;br /&gt;காலடியில் காட்டினான்.&lt;br /&gt;சதுர அடி கருப்பைவிட்டு&lt;br /&gt;பிரசவிக்கவில்லை புண்ணியநதி.&lt;br /&gt;&lt;br /&gt;4000 அடி பள்ளத்தில்&lt;br /&gt;புண்ணிய நதிகள் ஐந்தில்&lt;br /&gt;இரண்டைக் காட்டினான்.&lt;br /&gt;தண்ணீர் இல்லை.&lt;br /&gt;தடம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற இரண்டு &lt;br /&gt;நதிகள் காட்டினான்&lt;br /&gt;அதே பள்ளத்தில்.&lt;br /&gt;கரை இல்லை.&lt;br /&gt;கட்டடம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து அரபைவிட்டு&lt;br /&gt;தூரத்து வங்கம் சேரும்&lt;br /&gt;அந்த ஒற்றை நதியின்&lt;br /&gt;கடைசி உயிர்த்திரவத்தை&lt;br /&gt;அணையின் அடிவயிறு கைது செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கோவில் புகுத்தினான்.&lt;br /&gt;ஒரு வாய்க்காலில் இருந்து&lt;br /&gt;தண்ணீர் பெற்றது&lt;br /&gt;ஒரு சிறுகுளம்.&lt;br /&gt;அதன் வெப்பநிலை&lt;br /&gt;0 டிகிரிக்கும் கொஞ்சம் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுத்தம் ஏதும் பாராமல்&lt;br /&gt;குளத்துத் தண்ணீரில் சிலர்&lt;br /&gt;குடல் நனைத்தனர்&lt;br /&gt;தலை நனைத்தனர்&lt;br /&gt;வியாதி கழுவினர்&lt;br /&gt;அங்கம் காட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாய்க்காலின் பிறப்பிடம் பார்த்தேன்.&lt;br /&gt;ஐந்து வாய்க்கால் தண்ணீர்&lt;br /&gt;சேர்ந்து உருவானது&lt;br /&gt;அந்த ஒற்றை வாய்க்கால்.&lt;br /&gt;ஒவ்வொன்றின் மேலேயும்&lt;br /&gt;புண்ணிய நதிகளின் பெயர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;-ஞானசேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17041678-116469891892344918?l=jssekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jssekar.blogspot.com/feeds/116469891892344918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17041678&amp;postID=116469891892344918' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/116469891892344918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17041678/posts/default/116469891892344918'/><link rel='alternate' type='text/html' href='http://jssekar.blogspot.com/2006/11/blog-post.html' title='இயற்கை எய்தியது இயற்கை'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17041678.post-115207578154626535</id><published>2006-07-04T21:52:00.000-07:00</published><updated>2006-11-09T03:43:16.300-08:00</updated><title type='text'>சுயப்பிரசவம்</title><content type='html'>(டாக்டரான தனது சொந்த அண்ணன் தனக்குப் பிரசவம் பார்த்ததால், சேலையில் தூக்கில் தொங்கினாள் ஒரு தமிழச்சி, போன நூற்றாண்டின் கடைசியில். மகன் பிறக்கப் போகும் நேரம் கெட்ட நேரம் என்று ஜோசியர் சொன்னதற்காக, தன்னைத் தலைகீழாய்த் தொங்கவிட்டு, சில நிமிடங்கள் பிரசவத்தைத் தள்ளிப் போட்டாள் இன்னொரு தமிழச்சி, சங்க காலத்தில் ஒரு சோழ
