வழிவிடு முருகன் திருக்கோவில்.
- ஞானசேகர்
- ஞானசேகர்
I am (have) become Death, the destroyer of worlds.
- Robert Oppenheimer (பகவத் கீதையில் இருந்து)
ஆயுதம் செய்தலால்
தூண்டிவிடக் கருவைச் சீண்டிவிடுதலால்
கருவில் வகை பிரித்தலால்
இயற்கை மீறி பிறத்தலால்
செயற்கையாய்ச் சாதலால்
செத்தும் கெடுத்தலால்
கெடுத்தும் கட்டிக் காத்தலால்
தோண்டி எடுக்கப்படுவதால்
எரித்துப் புதைக்கப்படுவதால்
புதைத்துத் தோண்டப்படுவதால்
அட்டவணையில் அடங்குவதால்
கட்டுக்குள் அடங்காததால்
அந்நியரால் மட்டுமே பிளக்க முடிவதால்
தம்மவரால் தற்கொலை செய்வதால்
பட்டென பற்றிக் கொள்வதால்
அகப்பட்டவரைச் சுட்டெரித்தலால்
தூரக் கிடப்பவர் குளிர்காய்தலால்
தலைமுறைகளைத் துரத்திப் போவதால்
முதலாளிகளுக்கு முக்கியம் ஆதலால்
இந்தியாவில் அபரிதம் ஆதலால்
சிலர் பீடில் வாசிக்க
பலர் எரிவதால்
பலர் உயிர்த்தெழ
சிலர் சிலுவை சுமப்பதால்
கூடங்குளமோ தர்மபுரியோ
சகலரும் மாயவலைக்குள் சிக்கிக் கொள்வதால்
தனிமம் மனிதம் எரிக்கும்
தோரியம் ஆகுமாம் சாதியும்.
- ஞானசேகர்