புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, April 19, 2020

வீடு வாடகைக்கு: Strictly vegetarian only

அதனால் எகிப்து நாடெங்கும் இதற்கு முன்னும் பின்னும் இருந்திராப் பெரும் கூக்குரல் உண்டாகும். ஆயினும், இஸ்ராயேல் மக்கள் அனைவரிடையேயும், மனிதர் முதல் மிருகங்கள் வரை யாரை நோக்கியும் ஒரு நாய் முதலாய்க் குரைப்பதில்லை. அவ்வித அதிசய அடையாளத்தின் மூலம், ஆண்டவர் எகிப்தியருக்கும் இஸ்ராயேலருக்குமிடையே வேறுபாடு காட்டுகிறாரென்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
- விவிலியம் (யாத்திராகமம் 11:6,7)

புறவினத்தாரின்  வீடுகளும்
நம்மைப் போலவே இருப்பதால்
அடையாளம் தெரியவில்லை என்றார்கள்
கொள்ளை நோயின் தூதர்கள்.

'இது என் கட்டளை
இதுவே அடையாளம்
நம் இனத்தார் வீடுகளில்
வரும் ஞாயிற்றுக் கிழமை கரவொலி'
வாழ்த்துச் சொல்லி அனுப்பினார்
கொள்ளை நோயின் கடவுள்.

எதிரொலி குழப்பிவிட்டதாக
முறையிட்டார்கள்
கொள்ளை நோயின் தூதர்கள்.

'இது என் கட்டளை
இதுவே அடையாளம்
நம் இனத்தார் வீடுகளில்
வரும் ஞாயிற்றுக் கிழமை தீபவொளி'
வாழ்த்துச் சொல்லி அனுப்பினார்
கொள்ளை நோயின் கடவுள்.

புறவினத்தார் சிலரும் ஏற்றிவிட்டதாக
முறையிட்டார்கள்
கொள்ளை நோயின் தூதர்கள்.

'இனி கட்டளையும் இல்லை
இதுவரையானது அடையாளமும்  இல்லை.
செய்யச் சொல்வதைச் செய்யாததும்
செய்யச் சொல்லாததைச் செய்வதும்
புறவினத்தார் புத்தி.
வரும் ஞாயிற்றுக் கிழமை
தீபவொளியோ கரவொலியோ இருக்கும் வீடுகள்
புறவினத்தார் வீடுகள்
இதுவே அடையாளம்'
வாழ்த்துச் சொல்லி அனுப்பினார்
கொள்ளை நோயின் கடவுள்.

துல்லியமான பட்டியலுடன் திரும்பினார்கள்
கொள்ளை நோயின் தூதர்கள்.

– ஞானசேகர்

Friday, April 10, 2020

கடல் தொடா இரு தேசங்கள்

தூங்காத நகரங்கள்
விடிகிற பொழுதின்
எந்தப் பரவசத்தையும் காண்பதில்லை
அதற்குத் தன் செயல்களை
எங்கே நிறுத்தி
எங்கே தொடங்க வேண்டுமென‌
புரிவதேயில்லை
– மனுஷ்யபுத்திரன்

இந்தியா மூன்று பக்கங்கள் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட நாடு. தீபா கர்ப்பம், மன்னிக்கவும், தீபகற்பம் என்று பெயர். இலங்கை மாதிரி எல்லாப் பக்கங்களும் நீரால் சூழப்பட்டு இருந்தால் தீவு என்று பெயர். எல்லாப் பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்ட நாடுகளைப் பற்றி சொல்லித்தர ஒன்றுமே இல்லாதது போல, அதற்கான தமிழ்ப்பெயரைப் பள்ளிப் பாடங்கள் எனக்குச் சொல்லித்தரவில்லை. Peninsula Island என்று சொல்லும் ஆங்கில மொழியிலும் அதற்கென தனி வார்த்தை இல்லை. Land-locked country. தீபகற்ப நாட்டில் மையத்தில் வாழும் என்னைப் போன்றவர்களுக்குக் கடல் ஒரு பேரதிசயம். அப்படியெனில் land-locked காரனுக்குக் கடல் தரும் பிரமிப்பு எப்படி இருக்கும்? செய்தித்தாள்களில் படித்திருக்கிறேன். கஷ்மீரில் இருந்து சுற்றுலா வந்த பள்ளிக் குழந்தைகள், மும்பை நகரில் முதன்முதலில் கடல் பார்த்து வியந்த செய்தி படித்திருக்கிறேன். அதுபோல Land-locked countryகளை, கடல் கண்டிராத அதன் சாமானிய மக்களைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உண்டு. அதை இருமுறை நிறைவேற்றிய கதையே இப்பதிவு.

2016 கிறிஸ்மஸ். வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பொன்னியின் செல்வன் படித்துக் கொண்டிருந்தேன். தேவாலயத்திற்குப் போனவர்கள், பனியில் படிக்காமல் வீட்டிற்குள் போய் படிக்கச் சொன்னார்கள். திரும்பி வந்தவர்கள் இன்னுமா பனியில் படிப்பதாகக் கேட்டார்கள். 2017 கிறிஸ்மஸ். வீட்டுத் திண்ணையில் அமர்ந்து மகாபாரதம் படித்துக் கொண்டிருந்தேன். தேவாலயத்திற்குப் போனவர்கள், பனியில் படிக்காமல் வீட்டிற்குள் போய் படிக்கச் சொன்னார்கள். திரும்பி வந்தவர்கள் இன்னுமா பனியில் படிப்பதாகக் கேட்டார்கள். அப்போதுதான் முடிவெடுத்தேன், அடுத்த 2018 கிறிஸ்மஸ் பனிமலைக்கருகில் யார் தொல்லையும் இல்லாமல் புத்தகம் படிப்பது என்று! அப்புத்தகம் எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை.

நேபாளம். சில ஆண்டுகளுக்கு முன், உலகின் ஒரே இந்து நாடு. இந்தியாவோடு ஒட்டி இருக்கும் ஒரு land-locked country. இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தப்படி, ஒரு நாட்டவர் அடுத்த நாட்டில் சுதந்திரமாக உலவலாம்; வேலையும் செய்யலாம். இந்தியாவில் இருந்து நேரடி விமானத்தில் அல்லது நிலவழியாக நேபாளம் போனால், பாஸ்போர்ட் கூட தேவையில்லை, தேர்தல் அடையாள அட்டையே போதும். இப்படி எளிதாக போகக்கூடிய நாடென்பதால் எனது உடனடி பட்டியலில் நேபாளம் இல்லை. அப்போது அங்கு அரசியல் குழப்பம் அதிகம். மன்னராட்சியில் இருந்து மதச்சார்பற்ற மக்களாட்சிக்கு அந்நாடு மாறியபோது இங்கிருந்த வாய்பாய் ஆட்சியின் முத்த அமைச்சர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்து மதத்தின் ஐந்து புண்ணிய தளங்களில் ஒன்றை வைத்திருக்கும் நேபாளத்திற்கு மதச்சார்பற்ற மக்களாட்சி எதற்கு என்றார்கள், இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

என் பள்ளி நாட்களில் உலகையே உலுக்கிய, நேபாள அரச குடும்பம் முழுவதும் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி இன்றும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. 2015ல் ஒரு கொடிய பூகம்பமும் அந்நாட்டை உலுக்கியது. பூகம்பத்தில் நேபாளம் எரிய, இந்தியப் பிரதமர் டிவிட்டரில் பீடில் வாசித்தார். அவரின் படத்துடன் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சின. இந்திய ரூபாயும்  நேரடிப் புழக்கத்தில் இருந்த நேபாளத்திற்கு, இங்கு பணமதிப்பிழப்பு செய்தபின் தேங்கிப் போன ரூபாய்த் தாள்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி பதில் சொல்லவேயில்லை எனவும் படித்தேன். இங்கு கர்நாடகா தேர்தல் நடந்தபோது, இந்து மதத்தின் ஐந்தாவது புண்ணிய தளத்திற்குப் போய் மறைமுகப் பிரச்சாரம் செய்தார் இந்தியப் பிரதமர்.

பெங்களூரில் இருந்து நேபாள தலைநகர் காத்மண்டு செல்ல நேரடி விமானம் உண்டு. புது நாட்டில் இரவில் இறங்கக் கூடாது என்ற எனது விதியின்படி அதில் செல்லவில்லை. காத்மண்டுவில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை ஒருவாரமாகத் தாலிபான்கள் கடத்தி வைத்திருந்த நினைவில் ஏர் இந்தியாவில் செல்ல முடிவெடுத்தேன். டெல்லியில் 7 மணிநேரம் காத்திருப்பு. டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில், பாரம்பரியம் என்ற பெயரில் ஏதோ ஓர் ஆணுக்கு மீசையில்லாமல் சுடிதார் போல உடையில், ஆண்கள் கழிவறை வாசலில் ஒட்டியிருக்கிறார்கள். அது பெண் என நினைத்து, நிறைய வெளிநாட்டுப் பெண்கள் உள்நுழைந்த கூத்தைப் பார்த்தேன்.

5  நாட்கள்பயணம். காத்மண்டு பொகாரா என்ற இரு நகரங்களுக்குச் சென்றேன். பொகாராவிற்குச் சாலை வழியாக, வலப்பக்க இருக்கையில் இமயமலையின் மடியில் தூங்காமல் 8 மணிநேரம் பயணம். அந்நகரில் தான் கிறிஸ்மஸ் அன்று அன்னப்பூர்ணா மலைத்தொடர்களில் முதன்முதலில் பனியைப் பார்த்தேன். நடிகை மனிஷா கொய்ராலாவை நேரில் பார்த்தேன். இடப்பக்க இருக்கையில் இமயமலை உச்சிகளைக் கோதியபடி பொகாராவில் இருந்து காத்மண்டிற்கு 30 நிமிடத்திற்கும் குறைவான விமானப்பயணம். பனிமூட்டம் இல்லாதபோது எவரெஸ்ட் தெரியும் ஒரு கிராமத்திற்குப் போனேன். 4 உலகப் பாரம்பரியச் சின்னங்கள். மக்களாட்சி நாட்டில் மாட்டுக்கறி கிடைக்கிறது.

ஆறாம் நாள் கண்டிப்பாக நான் எனது தாய்மாமன் வீட்டில்  இருக்க வேண்டும் என்பதால், இதுவரையான எனது பயணங்களில் அதிக செலவான விமானத்தைத் தேர்ந்தெடுத்தேன். பக்கத்தில் இருக்கும் இந்தியாவிற்கு மலேசியா வழியாக செல்லும் என்னை நேபாள அதிகாரி சந்தேகமாகப் பார்த்தார். தென்கோடி இந்தியா மலேசியாவில் இருந்து பக்கம் என்றேன். பெங்களூர் டெல்லி காத்மண்டு கோலாலம்பூர் திருச்சி என்பது வட்டச்சுற்று. நான் பரவாயில்லை. என் பக்கத்து இருக்கையில் இருந்த நேபாளக்காரன் பர்மா போக வேண்டும். காத்மண்டு கோலாலம்பூர் ரங்கூன் என்பது அவனுக்குப் 'ப' சுற்று.

உங்களின் பார்வைக்கு எனது புகைப்படங்கள்:

https://photos.app.goo.gl/KoYo2KQD71kq45yCA

https://photos.app.goo.gl/yV6oAU17YMB6LALe7

https://photos.app.goo.gl/fY8NsU2N5i8wdsjZ9

https://photos.app.goo.gl/xMKACektxbqgor8H6

https://photos.app.goo.gl/qBHh3QJqVPRwmpQE8

https://photos.app.goo.gl/fZ7N8fbecmqj7n1j6

https://photos.app.goo.gl/5faF722YuaJ1r8SZ9

https://photos.app.goo.gl/eGuRgFpzP1ejWq9w9

https://photos.app.goo.gl/NT5rRfvEPUt98PfB6

https://photos.app.goo.gl/27FyKLHTUUDU2KdF9

https://photos.app.goo.gl/SHEnKujvDQLyMtuT6

https://photos.app.goo.gl/TnrnfWHobKSeufin8

https://photos.app.goo.gl/Kc6ozTgQoUqFYpny5

https://photos.app.goo.gl/WFKKD7CL76pLwRnq9

https://photos.app.goo.gl/m1C5KTD7hDTXma7Z9

https://photos.app.goo.gl/YqQXpMrCztnogH548

https://photos.app.goo.gl/YJp7EgFg699qcWwX6

https://photos.app.goo.gl/5G25K4yjvP75DPRQA

https://photos.app.goo.gl/1i2G1Mtp8QMcuk1R9

https://photos.app.goo.gl/hFgftSBJjrvaRXcp6

லாவோஸ். இப்படியொரு நாடு இருப்பதே பலருக்குத் தெரியாது.  தென்கிழக்கு ஆசியாவின் ஒரே land-locked country. உலகிலேயே குண்டுகளால் அதிகமாக துளைக்கப்பட்ட நிலமுடைய நாடும் கூட. வியான்டியன் அதன் தலைநகரம். வலதுபக்க போக்குவரத்து நாடு. 5  நாட்கள் பயணம். வியாண்டியன், லுவாங் பிரபாங் என்ற இரு நகரங்களுக்குச் சென்றேன். வியான்டியன் விமான நிலையத்தில் பெண்கள் நலனுக்காக ஒரு கண்ணாடி உண்டியல் வைத்திருந்தார்கள். பணமதிப்பிழப்பிற்கு முந்தைய 500 ரூபாய் தாள் மேலாக மிதந்தது. உண்டியல் நிரம்பி இருந்ததாலும், பணமதிப்பிழப்பாகி 2 வருடங்களுக்கு மேலாகி விட்டதாலும், யாரோ தான் சமீபத்தில் அதைப் போட்டிருக்கிறார்கள். செல்லாக்காசைப் பெண்கள் நலம் போன்ற செல்லாத விடயங்களுக்கென கககபோ! இன்னொரு நாட்டிற்குள் நிலவழியாக நுழையும் அனுபவத்தை முதன்முதலில் பெற்றேன். பதிவு செய்த விமானங்களைக் கேன்சல் செய்யும் நிலைமையும் இதே பயணத்தில் தான் முதன்முதலில் அமைந்தது. அதுவொரு தனிப்பதிவுக்கான கதை.

உங்களின் பார்வைக்கு எனது புகைப்படங்கள்:

https://photos.app.goo.gl/rX5NC3Zr7UJaG6h49

https://photos.app.goo.gl/7drsYtCsJ5AZVdtt8

https://photos.app.goo.gl/n2E8tA4yBj4j2VN69

https://photos.app.goo.gl/RTAK3gy7G8fxD5Sq6

https://photos.app.goo.gl/YD3J4RVfLaBNdrHS7

https://photos.app.goo.gl/iq5aN1Gz6tBgChei7

https://photos.app.goo.gl/g5g38UTMiEKdRQCG8

https://photos.app.goo.gl/uT6ry1LFBebfYEab6

https://photos.app.goo.gl/idwTqREY5ExGGbaZ9

ஜான் மில்டன் என்ற ஆங்கிலக் கவிஞர் தனது இன்பக் காலத்தில் Paradise Lost என்றும், துன்பக் காலத்தில் Paradise Regained என்றும் கவிதைகள் எழுதினார். கொரோனா வைரஸினால் வீட்டுச்  சிறைகளில் இருக்கும் இவ்வுலகத்திற்கு, விட்டு விடுதலையாகி நிற்போம் என்று நான் சொல்வதாக இப்பதிவு அமையட்டும்.

– ஞானசேகர்

Friday, March 13, 2020

பேதங்களே வேதங்களாய்

மூன்றுபேர் குதித்தால்தான்
மற்றவர்கள் பத்திரமாக
தரையிறங்க முடியுமென
விமானி அறிவித்தபின்
அந்த மூவரைக்
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தார்கள்.

வாழ்க மன்னர் என
காற்றில் கரையும் முத்தமிட்டு 
முதலாமவன் குதித்தான்.

ஓங்குக புரட்சி என
இரத்தத் துளியில் திலகமிட்டு
இரண்டாமவன் குதித்தான்.

ஜெய் ஸ்ரீ ராம் என
வானூர்தி அதிரக் கத்திவிட்டு
பாகிஸ்தான்காரனைத் தள்ளிவிட்டான் மூன்றாமவன்.

- ஞானசேகர்

Thursday, July 25, 2019

தொல்லுலகில்

அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழையில்
நல்லார் பலரின் மரணங்கள்.

- ஞானசேகர்

Monday, July 22, 2019

கர் வாப்ஸி

மீண்டும் பிறந்து
வா தலைவா

நம்ம சாதியிலேயே!

- ஞானசேகர்

Monday, June 17, 2019

எதைப் பார்த்து வளர்கிறோமோ அதுவே வாழ்க்கையாகிப் போகிறது

டிவியில் கிரிக்கெட்
இடையில் விளம்பரம்
அதில் ஒருவன் டிவி பார்க்கிறான்
தமிழ்ப்பாடல் ஒலிக்கிறது
தலை வலிக்கிறது
ஆன்லைனில் மாத்திரை
10% தள்ளுபடி

- ஞானசேகர்

Wednesday, June 05, 2019

மனதின் குரல்

555
சமர்
சத்யா
திரைப்படங்களின் வில்லன்கள்
மிகவும் ஆபத்தானவர்கள்

நாயகர்களை அவர்கள்
உடலில் உதைப்பதுமில்லை
வெட்டிக் கொல்வதுமில்லை
அண்டி வருவதுமில்லை

சீசரின் மனைவி போல‌
சந்தேகத்திற்கு அப்பால்
இருந்து கொள்கிறார்கள்

நாயகர்கள்
எப்போது சிரிக்க வேண்டும்
எவ்வளவு கண்ணீர் வடிக்க வேண்டும்
யாரைச் சிநேகிக்க வேண்டும்
யார்யாரை வெறுக்க வேண்டும்
எதை நுகர வேண்டும்
எதைப் புசிக்க வேண்டும்
எதைப் புணர‌ வேண்டும்
யாரை அடிக்க வேண்டும்

எந்த வரிசையில்
எத்தனை கொடுத்து
எவ்வளவு நேரம் நிற்க வேண்டும்

யார் கதாநாயகன்
யார் வில்லன்
எல்லாவற்றையும் வில்லன்களே தீர்மானிக்கிறார்கள்
நாயகர்களின் புத்தியில் அமர்ந்தபடி

நம் அன்றாட வாழ்விலும்
அவர்களைக் காணலாம்

மஞ்சள்நிற உடையுடன்
விசில் போடச் சொல்லியபடி

நீலநிறச் சட்டையுடன்
யூடியூப் வீடியோவில் பேசியபடி

பிரதமர் அலுவலகத்தில் இருந்து
ஆல் இந்தியா ரேடியோவில் பேசியபடி

உங்கள் கையடக்கச்
செல்பேசியில் எங்கும் நிறைந்தபடி

- ஞானசேகர்

Tuesday, June 04, 2019

ஆன்டி இண்டியன்

சந்தையின் சந்தடியில்
திருடன் என முதலில் கத்துவது
திருடர்கள் இயல்பு.

- ஞானசேகர்

Sunday, June 02, 2019

தாய்லாந்து

'ஒரு கையில் மதுவும், ஒரு கையில் மாதுவும் இருக்கும்போது என் உயிர் பிரிய வேண்டும். இல்லை என்றால்? இல்லை என்றால், என்ன வாழ்க்கை வாழ்ந்தாய் என்று என்னைப் படைத்த இறைவன் கேட்பான்' என்று கண்ணதாசன் சொல்வார். ஒரு கையில் மதுவும் இன்னொரு கையில் மாதுவும் என்ற கண்ணதாசன் கனவையும், கொஞ்சும் மாதரும் கூட்டுண்ணும் கள்ளும் இச்சகத்தினுள் இன்பங்களன்றோ என்று பாரதி பாடிய போகியின் கனவையும் இந்தியர்களுக்கு மிக அருகில் நனவாக்கிக் காட்டும் தேசம் தாய்லாந்து! நாட்கணக்கில் விரும்பிய பெண்ணை வாடகைக்கு எடுத்து, வேண்டியதை எல்லாம் செய்து கொள்ளும் வசதியும் உண்டு. கடற்கரை, மது, இரவாட்டங்கள், மசாஜ், மாது அல்லது திருநங்கை, இன்னபிற இன்னபிற தான் தாய்லாந்து. எனது பயணம் இவை எல்லாம் அற்றது. அதாவது 'என்ன வாழ்க்கை வாழ்ந்தாய்?' வகை. தாய்லாந்து பற்றி தமிழில் வந்திருக்கும் சில பயணப் புத்தகங்களும், 'தேவதைகளின் தேசம்' என்பது போன்ற தலைப்புகளில் தான் இருக்கின்றன. உள்ளுக்குள் சொல்லப்படும் கருத்துகள் எல்லாம் ஒன்றுதான். 'தேவிடியாக்களின் தேசம்' என்று தலைப்பு வைக்க முடியாது இல்லையா! அறிவுடை மாந்தர் இந்த சாதியில் தான் பிறப்பர், தீவிரவாதிகள் இம்மதத்தில் தான் இருப்பர் என்பது எவ்வளவு அறீவினமோ, அப்படிப்பட்டது தாய்லாந்தைப் பற்றிய இந்தியர்களின் பார்வை!

பிரிந்த (பிறந்த அல்ல‌) நாள் ஒன்றில் தோழி ஒருத்தி எனக்கு மூன்று ஆங்கிலப் புத்தகங்கள் பரிசளித்தாள். அதில் ஒன்று தாய்லாந்து சுற்றுலா புத்தகம். தூக்கம் இல்லாமல் புரண்டு புரண்டு படுத்த இரவுகளில், பலமுறை அப்புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். எந்த இடமும் என்னை ஈர்க்கவில்லை. கபாலி படமெல்லாம் வந்துபோன பிறகு, ஒரு சென்னை புத்தகத் திருவிழாவில், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு அடிமையாக தாய்லாந்தில் இரயில்பாதை அமைக்கப் போன மலேசியத் தமிழர்கள் பற்றி இரு புத்தகங்கள் கண்டேன். ஒன்றை வாங்கி வந்து படித்தால் (சயாம் - பர்மா மரண இரயில்பாதை: மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு by சீ. அருண்), தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இவ்வளவு பெரிய கொடுமைகள் எப்படி இத்தனை நாள் எனக்குத் தெரியாமல் போனது? இவ்விரண்டு புத்தகங்களையும் சேர்த்து, இன்னும் கொஞ்சம் இணையத்திலும் தேடி தாய்லாந்து பயணம் அமைத்துக் கொண்டேன். http://thulasidhalam.blogspot.com/ ல் மாரியம்மன் கோவில் பற்றி தெரிந்து கொண்டேன். https://www.solobackpacker.com/ ல் சதூர்ச்சக் சந்தை பற்றி தெரிந்து கொண்டேன். தேடுகிறவன் தான் கண்டடைகிறான் என்பதற்கேற்ப, தாய்லாந்தின் அதீத வெளிச்சத்தில் மங்கிப் போன சுகோதாய் நகரம், என் தேடல்களில் வந்தது.

மொத்தம் ஒன்பது பகல்கள். எட்டு இரவுகள். நான்கு இரவுகளில் ஓரிடத்தில் தங்காமல் இரயில்களில் பயணித்துக் கொண்டேன். நான்கு தொலைதூர இரயில்கள். நான்கு குறுந்தூர இரயில்கள். இரண்டு வாடகை சைக்கிள்கள். பேருந்து, ஆற்றுப் படகு, கால்வாய்ப் படகு, பறக்கும் இரயில், பாதாள இரயில் போன்றவற்றில் பயணித்தவற்றை எண்ணிக் கொள்ளவில்லை. கார் மற்றும் டாக்சிகளைப் பயன்படுத்தவே இல்லை. இயல்பிற்கு அதிகமாகவே நடந்திருக்கிறேன். ஏழு ஊர்கள். அதில் ஓர் ஊரில் ஒரேயொரு இந்தியத் தெலுங்குப் பயணியைக் கண்டேன். நான்கு ஊர்களில் இந்தியர்களையே கண்டிலேன். என்னுடன் பயணிக்க நான் எடுத்து சென்ற புத்தகம் - வால்காவிலிருந்து கங்கை வரை.

மே 17 ஒட்டிய நாட்களில் மெரினா கடற்கரையில் கருப்புச் சட்டையுடன் சென்றால் தமிழ்நாட்டில் எப்படி அரசுக்கு எதிராக அர்த்தம் உள்ளதோ, அதே போல் தாய்லாந்தில் இருக்கும் அரசுக்கு எதிரான சில நிறங்கள் பற்றிய தகவல்களை, இணையத்தில் இன்றுவரை நான் படித்தறியாத அந்நிறங்கள் பற்றி எனது பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் நண்பன் குமரன் சொன்னான். இரயில்களில் கழிவறையில் தண்ணீர் பீச்ச, கைகளில் அழுத்துவதற்குப் பதிலாக கால்களில் அழுத்துவது போல் அமைத்திருப்பது சுகாதாரமான யோசனை. சில இரயில்களின் சன்னல்கள் மேலிருந்து கீழ் நோக்கித் திறப்பது போல் அமைத்திருப்பது புரியவில்லை. 750 ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத நம்மூர் லாரிகள், முன்னால் தொங்கும் எலுமிச்சம் பழத்தில் ஓடுவது போல, தாய்லாந்தில் சில‌ லாரிகளுக்குப் பின் செம்மறியாட்டு விதைப்பை போல் ஒன்றைக் கட்டி இருக்கிறார்கள். அரண்மனைக்கு எதிரில் ஒரு ரோட்டுக் கடையில் போளி நன்றாக இருக்கும். மேற்குக் கரையில் இருக்கும் புத்த கோவிலில் யானை மேல் அமர்ந்திருக்கும் உருவம், சாட்சாத் இந்திரன் தான். சுராசக் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் தமிழ்ச் சாப்பாடு கிடைக்கும். நாம் டாக் நகரத்திற்கு எப்படி செல்வது? ஆற்றுப் படகு போக்குவரத்தில் வெளிநாட்டவர்களிடம் எப்படி கொள்ளையடிக்கிறார்கள்? இப்படி உங்களுக்குத் தேவையில்லாத தகவல்களைச் சொல்லி பதிவை நீட்டப் போவதில்லை. தேவைப்பட்டால் என்னிடம் கேட்கலாம். சில அனுபவங்கள் மட்டும் சொல்கிறேன்.

1. தாய்லாந்தில் முதல் நாள். கொடிய வெயில். நான் செல்ல வேண்டிய இரயில் எட்டு மணிக்குத் தான். நான்கு மணிக்கே இரயில் நிலையம் வந்துவிட்டேன். ஒரு மூதாட்டி தனியாக அமர்ந்திருந்த ஓர் இருக்கையில் நானும் அமர்ந்து கொஞ்சம் தூங்கிவிட்டேன். விழித்த பிறகு அம்மூதாட்டி ஏதோ சொன்னாள். புரியவில்லை. மற்றவர்களும் என்னை அடிக்கடி பார்த்துக் கொண்டார்கள். குழப்பத்துடன் எழுந்து போய், சிறுநீர் கழித்துவிட்டு, வேறொரு இருக்கையில் அமர்ந்தேன். அப்போது தான், நான் முன்னர் அமர்ந்திருந்த இருக்கையின் மேலிருந்த பலகையைக் கவனித்தேன். அது புத்தத் துறவிகளுக்கான இருக்கை. அப்போது ஒரு துறவியும் அங்கு அமர்ந்திருந்தார். தெரியாமல் செய்த தவறுக்காக அதிகம் யோசிக்காமல், கையில் இருந்த புத்தகத்தைத் தொடர்ந்து படித்தேன். இரயில் நிலையங்களில் ஆறு மணிக்குத் தேசிய கீதம் ஒலிபரப்பும் வழக்கம் தாய்லாந்தில் உண்டு. அன்றும் ஒலிபரப்பினார்கள். தாய்லாந்து மக்களுடன் நானும் எழுந்து நின்றேன். புரியாத கீதம் என்றாலும், சக மனிதனின் நம்பிக்கைக்கு மரியாதை கொடுக்க பெரியார் சொல்லி இருக்கிறார். எல்லாரும் எழுந்து நின்றோம், அந்தத் தனி இருக்கையில் அமர்ந்திருந்த‌ துறவி தவிர. தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்கள் துறவிகள்!

2. For Country, Religions, Monarchy and People என்பதுதான் தாய்லாந்து அரசின் கொள்கை. வரிசையைக் கவனிக்கவும். மக்கள் கடைசி. தாய்லாந்தில் மன்னர், புத்தர், துறவிகளுக்கு மரியாதை அதிகம். நான் சென்ற நேரத்தில் தான் அடுத்த மன்னர் முடி சூட்டிக் கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மறுவாரம் இன்னொரு திருமணம் செய்து கொண்டு முடி சூட்டிக் கொண்டார். முடி சூட்டிய நாளில் பேருந்து, நகர்ப்புற இரயில்களில் இலவசமாக பயணிக்க முடிந்ததாக அன்று அங்கு இருந்த ஒரு நண்பன் சொன்னான். நான் வாசித்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தைத் தாய்லாந்து போவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் பாதியிலேயே நிறுத்திக் கொண்டேன். அப்புத்தகத்தில் வரும் ஆட்சியாளனின் பல போக்குகளில் நமது காவி பிரதமர்தான் அடிக்கடி நினைவில் வந்து போனார். அத்தாக்கம் தாய்லாந்து மன்னர் மேல் வந்து, எனது பயணத்தில் இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக அப்படி ஒரு முடிவு. அப்புத்தகம் பற்றி புத்தகம் தளத்தில் விரிவாகப் பேசலாம்.

3. இரட்டைகிளவிகள் உலகமெங்கும் இரட்டை அர்ததங்களுக்கே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, குபுகுபு என்றால் இந்தோனேசியாவிலும், பூம்பூம் என்றால் தாய்லாந்திலும் கசமுசா; அதாவது கில்மா = மேட்டர். அதனால் இரட்டைக்கிளவிகளை நான் தவிர்ப்பதுண்டு. தாய்லாந்தில் train, rail, railway, station, gate, entrace போன்ற வார்த்தைகள் அவர்களுக்குப் புரியவே இல்லை. சிக்குபுக்கு, கூக்கூ என்று நம்மூரில் சொல்லி புரிய வைக்கலாம். ஒரு நல்லுள்ளம் எவ்வளவு தடுமாறியது என்று புரிகிறதா?

4. ஓர் அனுபவம் என்னை இப்படி ஒரு சிறுகதையை தொடங்க வைத்தது:
தாய்நாடு போல் இருந்தாலும், அது என் தாய்நாடு இல்லை. மலை நகரத்தில் அக்கோவில் இருந்தாலும், அது சபரிமலை இல்லை. அக்கோவில் சாமியும் அமர்ந்திருந்தாலும், அச்சாமி அய்யப்பன் இல்லை. அச்சாமிக்கும் சரணம் சொன்னாலும் அச்சாமி அய்யப்பனே இல்லை. அச்சாமி இல்லாமல் அய்யப்பனும் இல்லை.

மனிதத்திரளில் பாதியான பெண்ணைக் கோவிலுக்குள் அனுப்பச் சொல்லி நானும் இப்படி ஒரு சிறுகதை எழுத வேண்டுமா? இதுவரை சொன்னவைகள் போதாதா?
'சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்,
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்,
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்,
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட  தூமையே'
என்று அக்கால சிவவாக்கியம் சொல்கிறது.
'தீட்டென்பவனை
நாப்கின் கழற்றி
அவன் வாயில் அடி
நினைவிற்கு வரட்டும்
அவன் பிறப்பு'
என்று தற்கால புதுக்கவிதை சொல்கிறது. மையல், சமையல் அறைகளை விட்டு பெண்கள் வெளிவந்து தமக்கானதைத் தானே பெற்றுக் கொள்ளாத வரை, எங்கோவொரு மலையுச்சியில் இருக்கும் ஒரு சாமியை வைத்து, டெல்லியில் இருந்தும் கூட‌ யார் வேண்டுமானாலும் அரசியல் செய்ய முடியும்!

5. தாய்லாந்தில் இருந்து தாய்நாட்டிற்குத் திரும்பும்போது, விமான நிலையத்தில் என் பாஸ்போர்ட்டைப் பரிசோதித்த இமிக்கிரேஷன் காவல் அதிகாரி கிண்டலாகக் கேட்டார்: 'From India? hmm hmm பூம் பூம்  ha?' . தன் நாட்டுப் பெண்களை ஒரு நாடு வேசிகளாகப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு என்ன பெருமை என்று தெரியவில்லை!

நான் எடுத்த புகைப்படங்கள்:

https://photos.app.goo.gl/ffTAgneQWwG9ppMk6

https://photos.app.goo.gl/ThQA4XMWf6kQSxfA9

https://photos.app.goo.gl/ByiZMTqXaLMWNNsk6

https://photos.app.goo.gl/6PJRN1EQmiCBHVB78

https://photos.app.goo.gl/3BPCfgdCjcNS1NMm9

https://photos.app.goo.gl/PExxJPtzJLFHgbje7

https://photos.app.goo.gl/KZ2PdQafYiwQkJQV8

https://photos.app.goo.gl/eqktgU4nF16sa4zJ9

https://photos.app.goo.gl/7ARvqSQWMPmkLzFR8

https://photos.app.goo.gl/Qcavp6YMBG7KaMKf7

https://photos.app.goo.gl/fWX6gquDu6KNA49u7

https://photos.app.goo.gl/XS8eNHnzD2teY9ML7

https://photos.app.goo.gl/Bcn2wBzy7s9HyGVa9

https://photos.app.goo.gl/hCkpJ7jxBxhJcVc78

https://photos.app.goo.gl/BU3LgdzJGkY2zciJA

https://photos.app.goo.gl/Vcqxuod8K1TkjJZL6

https://photos.app.goo.gl/298psDXKW3hnJ2eu7

https://photos.app.goo.gl/ARPD6LsQ4ErRdfXe8

https://photos.app.goo.gl/WqSWk1vihiTUUDB16

https://photos.app.goo.gl/b9kYRGsT977YhCP79

https://photos.app.goo.gl/mkF6KG4JkVaXKnUo7

https://photos.app.goo.gl/gW6nHNTyGLjmZ1SM7

https://photos.app.goo.gl/Rv831GSXv11kGiieA

https://photos.app.goo.gl/HNBgcrpG3aN1nL4g6

https://photos.app.goo.gl/naaW6t2GgdPSV7gA6

https://photos.app.goo.gl/DYgicP5R9qGXoceMA

https://photos.app.goo.gl/JQkQNw6C6JobL2Kz5

https://photos.app.goo.gl/xt4v2VtdyB6dKfvC9

https://photos.app.goo.gl/BPEpEBCFqYHgoQJT6

https://photos.app.goo.gl/bdQ3Er7wfrCBCBCEA

https://photos.app.goo.gl/KhUbrq1Fwm4YGqTM6

https://photos.app.goo.gl/1qpdove6kVzo1iEz5

https://photos.app.goo.gl/DXpL2EYuDi7BH45w6

https://photos.app.goo.gl/VYtoRtDBfDuavAPb9

https://photos.app.goo.gl/8QS35G9Dpu9zgZWs5

https://photos.app.goo.gl/dt4pjtc3w4Un3N9t8

https://photos.app.goo.gl/3MVBMBtMgTxwkww19

https://photos.app.goo.gl/6AzYaLT5YjfmSN3RA

https://photos.app.goo.gl/iRv22VuAQ2pTMnbCA

https://photos.app.goo.gl/74WNqrHYc5HBtXJz8

https://photos.app.goo.gl/CDH1MThmAG1FdcEF9

எனது ஒவ்வொரு பயணத்தையும் முன்னதை விட கொஞ்சம் கடினமாக அமைத்துப் பார்ப்பவன் நான். இரவுகளில் தங்காமல் இரயில்களில் பயணித்ததும், பாஸ்போர்டை அடமானமாக வைத்து வாக்கி-டாக்கி போன்ற பாதுகாப்பு சாதனங்களுடன் காட்டிற்குள் தனியாகப் பயணித்ததும், மிக நீண்ட நாட்கள் ஓர் அந்நிய தேசத்தில் தனியனாய்த் திரிந்தும் இத்தாய்லாந்து பயணத்தில் அமைந்தன. உயர்சாதி இந்துக்களைத் தவிர மற்றவர்கள் இயல்பாகச் சுற்றித் திரிய முடியாத அரசு இருப்பதால் இந்தியப் பயணங்களைக் கொஞ்ச காலம் நிறுத்தி வைத்து, இதைவிடக் கடினமான அடுத்த அயல்நாட்டுப் பயணத்துடன் விரைவில் சந்திக்கிறேன்.

- ஞானசேகர்

Tuesday, January 08, 2019

ஆண்டவர்

கோயம்புத்தூர் பொன்ராசை விட‌
எல்லாம் தெரிந்தவர் பிக் பாஸ்.

எங்கு அரிக்கிறது விருமாண்டிக்கு
என்பதும் கூட.

– ஞானசேகர்