புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, March 23, 2010

அந்த 52 வினாடிகள்

முனியாண்டி விலாஸைப்
போன்றதுதான் இந்தியாவும்

முனியாண்டி எவரென்பதும்
இந்தியா எதுவென்பதும்
யாருக்கும் தெரியாது.
- யுகபாரதி (தெப்பக்கட்டை நூலிலிருந்து)


அலறும் அலைபேசியை
அவசரமாக அடக்கி
அழப்போகும் குழந்தையை
அதட்டி வாய்மூடி
ஒட்டிவந்த காதலைத்
தட்டி உதறிவிட்டு
ஒத்திசைக்காத அடுத்தவனை
அஃறிணை வசைசெய்து
இருட்டறையில் அனிச்சையாய்
விறைத்து நிற்கும் நமக்கெல்லாம்
தேசபக்தியை நிரூபிக்க
ஒரு சந்தர்ப்பம்!

சிரமசைத்து
கரமாட்டி
கண்மூடி
அமர்ந்து
நடந்து
பாடி
இசைத்து
நகைத்து
திரை நிழலாடுபவர்க்கெல்லாம்
தொழில் நிமித்தம்
ஒரு சந்திப்பு!

- ஞானசேகர்

Tuesday, March 09, 2010

ஆதிசேசன் படுக்கை


பணக்கார சாமி
விஐபி வரிசைகளில்
உண்டியல் சேர்கிறது
முழங்கு முரசுடைச் செல்வம்!

யார் பெற்ற தெங்கம்பழம்
இந்த உள்ளூர் சாமிகள்?

- ஞானசேகர்