நிர்வாணம்
இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள்
புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ -
http://puththakam.wordpress.com/
Friday, May 17, 2013
ஜென்மப்பாவம்
தலைமுறைகளாய்த்
தொடரும் பாவங்களைக்
கழுவி சுத்தமாக்குகிறது
ஞானஸ்நானம்
மதத்தைத் தவிர.
- ஞானசேகர்
Friday, May 10, 2013
மாகதர் போகதர்
குழலினிது யாழினிது என்பர் மானாட
மயிலாட பாரா தவர்.
- ஞானசேகர்
Thursday, May 09, 2013
எல்லாம் நிறைவேறியதும்
எல்லாம் நிறைவேறியதும்
ஒருநாள் ஓய்வெடுக்கிறார்
கடவுள்
சிலுவையில் உயிர்விடுகிறார்
இயேசு
ஏவாளைவிட்டு விலகிப் படுக்கிறார்
ஆதாம்.
- ஞானசேகர்
Sunday, May 05, 2013
புணர்ச்சி
படைத்தல்
காத்தல்
அழித்தல்
மறைத்தல்
அருள்தல்
ஐந்தொழில் செய்வதால்
ஆகுமாம் இறைவன்.
- ஞானசேகர்
Saturday, May 04, 2013
சித்தார்த்தன் பார்க்காத ஐந்தாவது காட்சி
அழகு யுவதிகளின்
ஆபரணங்கள் அகற்றி
ஆடைகள் அவிழ்த்து
அந்தரங்கங்கள் தொட்டு
உடலோடு உரசி
சிகை கோதி
அணைத்து
விளக்கணைத்து
விரசமின்றி விறுவிறுவென
நள்ளிரவில் வீடேகிறான்
நகைக்கடை ஊழியன்.
- ஞானசேகர்
Friday, May 03, 2013
பின்ன்ன்ன்ன்னிட்ட்ட்ட்ட்டடா
தனியறை ஒன்றில்
ஒருவன்
ஒருத்தியின்
அந்த இடங்களை
அப்படித் தொட்டால்
நல்ல பயாலஜி.
தொலைக்காட்சி நடனங்களில்
ஒருவன்
ஒருத்தியின்
அந்த இடங்களை
அப்படித் தொட்டால்
நல்ல கெமிஸ்ட்ரி.
- ஞானசேகர்
Wednesday, May 01, 2013
Non-stop கொண்டாட்டம்
'டெல்லி பேருந்தில்
ஒரு பெண்ணை
ஆறு பேர் உந்த'
என்றார் கவிஞர்.
பலமாகக் கைத்தட்டியது
கவியரங்கக் கூட்டம்.
ஆதரவு சொல்லுக்காகவா
அல்லது பொருளுக்காகவா
எனது குழப்பத்தினூடே
வந்து விழுந்து கொண்டிருக்கின்றன
சொற்களும்
பொருள்களும்
கைத்தட்டல்களும்
குழப்பங்களும்.
- ஞானசேகர்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)