அதிகாலையொன்றில்
அடிவயிறு வலிக்க
உயிர்போக அலறி
வியர்த்துக் கொட்டி
வெந்தயம் மென்னு
தொப்புளில் சுண்ணாம்புதடவி
காளீஸ்வரி
கருப்பு கலரில்
வலியடங்கி
கைலி சுருட்டி
மீண்டும் துங்கிப்போன
அந்த நிமிடங்கள்
நான் வயசுக்குவந்த
தருணமாக இருக்கலாம்.
- ஞானசேகர்
Friday, July 31, 2009
Wednesday, July 29, 2009
அணையும்யா நெருப்பு
காதல், சிகரெட் போல. உதட்டில் வைத்து ஆயிரம் முத்தம். கடைசியில் காலில் போட்டு ஒரே மிதி.
- யாரோ
பற்ற வைத்தேன்
பார்த்துவிட்டாள்
அணைத்து விட்டேன்.
- ஞானசேகர்
- யாரோ
பற்ற வைத்தேன்
பார்த்துவிட்டாள்
அணைத்து விட்டேன்.
- ஞானசேகர்
உலகியற்றியான்
தாழ்வாரம் இல்லை
தனக்கொரு வீடில்லை
தேவாரம் எதற்கடி?
- யாரோ
கல்லினுள் வாழும் தேரைக்கும்
கருப்பை உயிருக்கும்
சோறு போட்டு
விதர்பா விவசாயியைத்
தூக்கில் போட்டவன்.
- ஞானசேகர்
தனக்கொரு வீடில்லை
தேவாரம் எதற்கடி?
- யாரோ
கல்லினுள் வாழும் தேரைக்கும்
கருப்பை உயிருக்கும்
சோறு போட்டு
விதர்பா விவசாயியைத்
தூக்கில் போட்டவன்.
- ஞானசேகர்
Saturday, July 18, 2009
ஒத்திகை
பரிட்சயமில்லாதவர்கள்
சந்தித்துக் கொண்டதொரு கூட்டத்தில்
எனக்கு முன்னால்
அறிமுகம் செய்தவனின்
முகம்கூட நினைவில்லை.
- ஞானசேகர்
சந்தித்துக் கொண்டதொரு கூட்டத்தில்
எனக்கு முன்னால்
அறிமுகம் செய்தவனின்
முகம்கூட நினைவில்லை.
- ஞானசேகர்
Subscribe to:
Posts (Atom)