புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, July 09, 2013

உண்மை விசுவாசி

(அகப்பாடலைப் புறப்பாடல் ஆக்கியமைக்கு அடியேனை அம்மூவனார் மன்னிப்பாராக‌)

தாய் உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு
அம்மா என்னுங் குழவி போல
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும்
நின் வரைப்பினன் இத்தொண்டன்
தன் உறு விழுமங் கலைஞரும் உளரே.

- ஞானசேகர்

Wednesday, July 03, 2013

சோழப் பரம்பரையில் ஒரு MLA

எங்கும் இல்லை
என் மூதாதையின் பெயர்
நீ எழுதிய வரலாறு.
- கவிஞர் மகுடேசுவரன் ('மண்ணே மலர்ந்து மணக்கிறது' நூலிலிருந்து)


ஆண்ட பெருமை மீட்கக்
கூடும் பரம்பரைகளின்
வாசல்களுக்கு வெளியே
இராமனுக்காக ஆண்ட
சோடிப் பாதுகைகளின்
பரம்பரைப் பாதுகைகள்.

‍- ஞானசேகர்