Monday, May 11, 2009
முதல்காலை
எல்லா பெண்களை போலவே அவளும் இனி தன் உடல் தன்னுடையதில்லை என்று ஒத்துக் கொண்டவளை போல அவன் இச்சையின் போக்கில் தன்னை ஒப்படைத்துக் கொள்ள துவங்கினாள்.
- எஸ்.ராமகிருஷ்ணன்
நேற்று வாங்கிய
முதல் எழுத்தைக்
கிடைக்கும் பொருளெல்லாம்
கிறுக்கிப் பார்க்கிறாள்
பெயர் மட்டும்
எழுதத் தெரிந்தவள்.
சீரா கேட்டிக சீருன்னு
ஆயி அப்பன்மேல
சீறு சீறுன்னு சீறுறான்
இராவோடு rawவா
முதல் எழுத்தறிவித்தவன்.
- ஞானசேகர்
Sunday, May 10, 2009
கால்காசு
சகமனிதன் ஒருவனைக்
குனிய வைத்து
செருப்பெடுக்கச் செய்வதில்
ஆரம்பமாகிறது
கோயில் புகுந்து
தெய்வநிலை தேடல்.
-ஞானசேகர்
குனிய வைத்து
செருப்பெடுக்கச் செய்வதில்
ஆரம்பமாகிறது
கோயில் புகுந்து
தெய்வநிலை தேடல்.
-ஞானசேகர்
Subscribe to:
Posts (Atom)