புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, October 13, 2012

42 பிரம்மச்சாரிகள்

உயிர் ம வில் ஆறும், தபநவில் ஐந்தும் கவசவில் நாலும், 
யவ்வில் ஒன்றும், ஆகும் நெடில், நொ,து ஆம் குறில் 
இரண்டோடு ஓர் எழுத்து இயல்பதம் ஆறேழ் சிறப்பின 
- நன்னூல் 

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது 
தாதிதூ தொத்தித்த தூததே-தாதொத்த 
துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது 
தித்தித்த தோதித் திதி
- காளமேகப் புலவர்

ஓரெழுத்து ஒருமொழி பற்றி எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்களின் கட்டுரை ஒன்றைச் சமீபத்தில் படித்தேன். நன்னூல் வரையறுக்கும் அந்த‌ 42 எழுத்துகளும் மனதில் பதிந்து போயின. முதன்முறையாக‌ சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றிருந்தபோது வீரமா முனிவரின் சதுரகராதி கண்ணில்பட்டது. படிக்கும் போது அங்குமிங்கும் வழக்கமாக சிதறிப் போகும் மனதில் இருந்து திடீரென ஒரு சிந்தனை உதித்தது. காளமேகப் புலவர் பாடிய தகர வரிசைக் கவிதையும் நினைவில் வந்தது. அந்த 42 எழுத்துகளை மட்டும் பயன்படுத்தும் வார்த்தைகளைத் தேடினேன். விளைவு இக்கவிதைகள். பிழை இருப்பின் சொல்லுங்கள். கண்டிப்பாகச் சந்திகளைத் தவிர்த்து விட்டதால், வலிமிகாது படியுங்கள்.
என்னைத் தூண்டிய சுட்டிகள்:
1. ஓரெழுத்து ஒருமொழி பற்றி எழுத்தாளர் பெருமாள்முருகன்
2. நன்னூல் பா 128

இராமர் பாலம்
-------------
தேவை சீமூதை சீதை
பூதை தேவை
தீ தீவை
தீநா பாதை
சாது சேவை
சேது காதை.

சாமியார்
--------
மாது மீது சாயாது
பாவை பூவை கோதாது
காது மீதே ஊதாது
பைசா நைசா வௌவாது
சீமை போகாது
கைதாகாது
தீது யாது ஏது
ஓது சாது

தோசை
-------
கோவை கோதை
கைமை தூவை
கையை பூவை
தீவை மாவை
துவை துவை
சாதா தேவை

பத்தும் செய்யும்
---------------
நாசா பைசா
கோவா கோவை
வைகை கை வை
யாதுமே சேவை
காசே தேவை

மது
---
தீது தூதை
போதை பாதை
நாயா பேயா
சாயாதேயா

பிரளயத்தின் கடைசி நாள்
-----------------------
நாதா தேவா
தாதா தேவா
தாதை தேவா
தாதைதாதை தேவா
மூதாதை தேவா
வாவா தேவா

காவா தீமை
கூவா கூகை
சேதா மைமா
நோகா நோவா

பேதை பாதை
ஐமை பைமை 
ஊமை ஊதை
வாகை தீவை
காவா தேவா
சாவா தேவா
வாவா தேவா

- ஞானசேகர்