புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, January 19, 2016

தொந்தி சரியச் சுமந்து பெற்றவள்


மேற்கே பலரும்
பிணங்கள் பலதும்
சொந்தமாக்கிக் கொண்டதால்
இனிமேல் அழைக்க வேண்டாம்
'மம்மி' என்று!

மேற்கே ஒருத்தரும்
கிழக்கே ஒருத்தரும்
சொந்தமாக்கிக் கொண்டதால்
இனிமேல் அழைக்க வேண்டாம்
'மாதா' என்று!

வடக்கே ஒருத்தரும்
விலங்குகள் பலரும்
சொந்தமாக்கிக் கொண்டதால்
இனிமேல் அழைக்க வேண்டாம்
'அம்மா' என்று!

வடக்கே ஒருத்தரும்
சாமிகள் சிலதும்
சொந்தமாக்கிக் கொண்டதால்
இனிமேல் அழைக்க வேண்டாம்
'அன்னை' என்று!

நான்கு திசைகளிலும்
நாய்பாடு படுவதால்
இனிமேல் அழைக்க வேண்டாம்
'தாய்' என்று!

மொழி சொல்லித் தந்தவளை
முகம் பார்த்து அழைக்க
மொழி சொல்லும் வார்த்தைகள்
முகம் சுழிக்க வைப்பதால்
மீண்டும் வாய்க்குமா
கருவறை பாஷைகள்?

- ஞானசேகர்