புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, May 01, 2013

Non-stop கொண்டாட்டம்

'டெல்லி பேருந்தில்
ஒரு பெண்ணை
ஆறு பேர் உந்த‌'
என்றார் கவிஞர்.

பலமாகக் கைத்தட்டியது
கவியரங்கக் கூட்டம்.

ஆதரவு சொல்லுக்காகவா
அல்லது பொருளுக்காகவா
எனது குழப்பத்தினூடே
வந்து விழுந்து கொண்டிருக்கின்றன‌
சொற்களும்
பொருள்களும்
கைத்தட்டல்களும்
குழப்பங்களும்.

- ஞானசேகர்