புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, April 27, 2013

கையறுநிலை


அழகு யுவதிகளின் அங்கங்களை
நினைவுகளின் அடுக்குகளில்
அவசர அவசரமாகத் 
தேடித் தேடி
ஏதொன்றும் கிட்டாமல் சலித்துப் போய்
தவியாய்த் தவித்துப் போய்
அடங்காமை ஆரிருள் உய்த்துப் போய்
உச்சத்திற்கும் உச்சிக்கும் இடையே
சூரியன் கிட்டாத சூரியகாந்தியாய்
நாணி நிலன்நோக்கி
நிர்கதியாய் நிற்கும் தருணம்.


- ஞானசேகர்

No comments: