புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, June 05, 2019

மனதின் குரல்

555
சமர்
சத்யா
திரைப்படங்களின் வில்லன்கள்
மிகவும் ஆபத்தானவர்கள்

நாயகர்களை அவர்கள்
உடலில் உதைப்பதுமில்லை
வெட்டிக் கொல்வதுமில்லை
அண்டி வருவதுமில்லை

சீசரின் மனைவி போல‌
சந்தேகத்திற்கு அப்பால்
இருந்து கொள்கிறார்கள்

நாயகர்கள்
எப்போது சிரிக்க வேண்டும்
எவ்வளவு கண்ணீர் வடிக்க வேண்டும்
யாரைச் சிநேகிக்க வேண்டும்
யார்யாரை வெறுக்க வேண்டும்
எதை நுகர வேண்டும்
எதைப் புசிக்க வேண்டும்
எதைப் புணர‌ வேண்டும்
யாரை அடிக்க வேண்டும்

எந்த வரிசையில்
எத்தனை கொடுத்து
எவ்வளவு நேரம் நிற்க வேண்டும்

யார் கதாநாயகன்
யார் வில்லன்
எல்லாவற்றையும் வில்லன்களே தீர்மானிக்கிறார்கள்
நாயகர்களின் புத்தியில் அமர்ந்தபடி

நம் அன்றாட வாழ்விலும்
அவர்களைக் காணலாம்

மஞ்சள்நிற உடையுடன்
விசில் போடச் சொல்லியபடி

நீலநிறச் சட்டையுடன்
யூடியூப் வீடியோவில் பேசியபடி

பிரதமர் அலுவலகத்தில் இருந்து
ஆல் இந்தியா ரேடியோவில் பேசியபடி

உங்கள் கையடக்கச்
செல்பேசியில் எங்கும் நிறைந்தபடி

- ஞானசேகர்

No comments: