புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, May 30, 2020

மலர்ந்தே தீரும்

ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:।
லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா
‍- பகவத் கீதை 5:10

தாங்கும் திரள்களில்
தப்பி மேலேறும்
அசட்டுத் துளிகளை
உச்சியில் நிறுத்தி
எல்லையெல்லாம் உருட்டித் தாலாட்டி
நாடி நரம்பெல்லாம் தழுவி முறுக்கி
மின்னும் பல நிறங்களாய் ஒளியூட்டி
பரிசுத்த வடிவமாய்க் காட்டி பரப்பி
கசடெல்லாம் அவற்றோடு ஒட்டி ஒட்டி
காற்றலை மோதிச்
சாயும் சமயத்தில்
கோளவுரு கசட்டுத் துளிகளை
அலங்கோலமாய் மீண்டும்
திரளுக்குள் தள்ளுமாம் தாமரை!

-‍ ஞானசேகர்

No comments: