புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Thursday, April 07, 2022

பொருநர் சீர்

அரசு வேலை கிடைத்தால்
உயிரே காணிக்கை என
வேண்டிக் கொண்ட ஒருவன்
மன்னார்குடி பேஸன்சரில் பாய்ந்து
நேர்த்திக் கடன் முடித்ததைச்

சிரசற்று கரும்புகைசூடி
சாபவிமோசனம் பெற்ற
கிங்கணனொருவன்
வேலைக்குத் திரும்பியதாகக்
கொண்டாடினார்கள்.

- ஞானசேகர்

No comments: