புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Thursday, June 21, 2018

எண்வழி தனிவழி

நல்ல எண்ணம்
நல்ல நம்பிக்கை
நல்ல பேச்சு
நல்ல செயல்
நல்ல வாழ்க்கை
நல்ல முயற்சி
நல்ல சிந்தனை
நல்ல நோக்கம்

எட்டு வழிகள்
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையில் இருக்கச் சொன்னார்
பௌத்த சமயத்தில் புத்தர்.

சென்னைக்கும் சேலத்துக்கும்
இடையில் இல்லாததால்
போராடிக் கொண்டிருக்கிறோம்
அபத்த சமயத்தில் நாங்கள்.

- ஞானசேகர்

1 comment:

Ethirajulu Bros said...

இந்த பதிவுக்கு நிர்வாணம் என்று எதற்கு பெயர் சூட்டினீர்?