புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, August 19, 2018

ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட மரணங்கள்

ஐந்தாவது தலாய் லாமா
மரணித்த செய்தி
உலகிற்குத் தெரியும் முன்
பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன.

இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஜார்ஜ்
இறந்த செய்தி
அமெரிக்கக் காலனியை அடைய
ஆறு வாரங்கள் ஆயின‌.

தஞ்சை மாமன்னர் இராசராசசோழன்
உடல்நலக் குறைவுற்றதை
இலங்கையில் மகன் இராசேந்திரச்சோழன் அறிய‌
ஒரு மாதம் ஆனது.

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்
சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைய
இலண்டன் மக்களுக்குப்
பன்னிரண்டு நாட்கள் தேவைப்பட்டன.

இவர்கள் எல்லாரையும் விட‌
மேலானவர்கள் நாங்கள்
இறப்பு நிகழும் முன்னே
மரணச்செய்தி சொல்லிவிடும்
BREAKING NEWS ஊடகங்களால்.

– ஞானசேகர்
(Gabriel Garcia Marquez அவர்களின் Chronicle of a Death Foretold என்ற தலைப்பும் பொருத்தமாய் இருக்கும்)

No comments: