புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Monday, October 08, 2018

டாஸ்மாக்

பாதயாத்திரைப் பக்தர்களுடன்
பகவான் தானும் நடப்பதாக‌
தண்ணீர்ப் பந்தல் வைக்கிறார்கள்
பாதையோரப் பக்தர்கள்.

பாதையோரப் பக்தனாக‌
பகவான் தாகம் தீர்ப்பதாக‌
தண்ணீர்ப் பந்தல் நுழைகிறார்கள்
பாதயாத்திரைப் பக்தர்கள்.

- ஞான‌சேகர்

No comments: