புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, October 06, 2013

ஆணுக்கான‌ தீட்டுத்துணிகள்

எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை
- கனிமொழி 

தாலியறுத்த பெண்ணொருத்தி
தாங்காத் துயரம் கொண்டு
பொட்டு மஞ்சள் குங்குமம்
முடிச்சிட்டு முச்சந்தி இட்டதை

தம்பி நீங்கள் அதைக்
கையால் எடுக்கவும் இல்லை
காலால் மிதிக்கவும் இல்லை
இன்னாருக்கென‌ இட்டதும் இல்லை
போகிற பாதையில்
இந்தக் காலால் எத்திவிட்டு
அந்தக் காலால் தட்டிவிட்டு
கடந்து போன தோசம்
எட்டு மாதமாய் வாட்டுகிறது

தம்பி நீங்கள் அதைக்
கண்ணால் பார்த்தும் செய்யவில்லை
மனதால் அறிந்தும் செய்யவில்லை
நடக்க வேண்டுமென இருந்திருக்கிறது
நடந்து க‌டந்து போய் இருக்கிறீர்கள்

தம்பி உங்களுக்கு
இந்த எட்டு மாதமாய்
தொட்ட காரியம் துலங்காமல் போகிறது
பட்ட காரியம் பஸ்பமாய்ப் போகிறது
சிந்தனை குரங்காய்த் தாவுகிறது
சொந்தம் தாமரைத் தண்ணீராய் நழுவுகிறது
சபையில் பேச்சு எடுபடாமல் போகிறது
பயிருக்குப் பாய்ச்சினால் பதருக்குப் போகிறது
அரசன் போல் மனதிருந்தும்
ஆண்டி போல் மனஸ்தாபம்

தம்பி உங்களுக்கு
உள்ள‌ கண்டம் மூன்று
தலைக்கு வந்தது ஒன்று
தலைப்பாகையோடு போனது
வாகனத்தில் வந்த ஒன்று
வணங்குகிற தெய்வத்தால் போனது
மூன்றாவதாய் ஒன்று மீதமுண்டு
முறித்து விட பரிகாரம் ஒன்றுமுண்டு
மூன்றூற்றியொன்று தட்சணை
பொட்டு மஞ்சள் குங்குமம்
அம்மனுக்கு ஒரு சேலை
கையை மடக்கிவிட்டு
சந்தேகம் ஏதுமெனில் தயங்காமல் கேளு தம்பி.

- ஞானசேகர்

2 comments:

Anonymous said...

வணக்கம்

ஆனுக்கான தீட்டுத்துணி விளக்கம் பற்றி பதிவு மிக அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Philosophy Prabhakaran said...

கவிதை நன்றாக இருந்தது...

உங்களுக்கு கைவசம் ஒரு தொழிலும் இருக்கிறது போல :)