புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, March 13, 2020

பேதங்களே வேதங்களாய்

மூன்றுபேர் குதித்தால்தான்
மற்றவர்கள் பத்திரமாக
தரையிறங்க முடியுமென
விமானி அறிவித்தபின்
அந்த மூவரைக்
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தார்கள்.

வாழ்க மன்னர் என
காற்றில் கரையும் முத்தமிட்டு 
முதலாமவன் குதித்தான்.

ஓங்குக புரட்சி என
இரத்தத் துளியில் திலகமிட்டு
இரண்டாமவன் குதித்தான்.

ஜெய் ஸ்ரீ ராம் என
வானூர்தி அதிரக் கத்திவிட்டு
பாகிஸ்தான்காரனைத் தள்ளிவிட்டான் மூன்றாமவன்.

- ஞானசேகர்

1 comment:

Maximous said...

Good job by the third person