புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, December 07, 2011

க'பாலம்'

மேலெல்லாம் ஓடும்
விழித்தே உறங்கும்
நீரிலே மிதக்கும்
சமிக்ஞை செய்யும்
கவசங் கேட்கும்
உயிர்ப் பிடிக்கும்

பக்க வாதஞ் செய்யும்
கடப்பதற்(கு) கப்பங் கேட்கும்
வேகம் தடை செய்யும்
அடைத்து நிறுத்தும்
ஓடினால் பள்ளமாகும்
ஓடாவிட்டால் குள்ளமாகும்

மூலையில் முடங்கும்
மூளையன்ன நம்மூர்ச் சாலை!

- ஞானசேகர்