புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, October 22, 2005

இதுதான் காதலா?

(இந்தியாவில் எல்லோராவிலும் (மஹாராஷ்ட்ரா), சித்தன்னவாசலிலும் (தமிழ்நாடு) மட்டும்தான் சமணர்களின் ஓவியங்கள் உள்ளன. சித்தன்னவாசலில் ஒருகாலத்தில் சமணர்கள் மறைவாய்த் தவம் செய்த குகைகள், இன்றைய நாளில் காதலர்கள் மறைவாய்க் கலவி செய்யும் புகல்கள்)

பல்லாண்டுகள் அழியாமல் இருந்த
சித்தன்னவாசல் ஓவியங்களைப் பார்த்து
நீ அதிசயித்தாய்.
உன்னை அங்கேயே விட்டுவிட்டு
மலையில் அலைந்து
ஓவியங்களில் உபயோகிக்கப்பட்ட
மூலிகைகள் கொண்டு வந்தேன்.
அவற்றை வைத்து நீ
நம் பெயர்களைப்
பாறையில் எழுதினாய்.
சில நாட்கள் கழித்து
மீண்டும் அங்கே வந்தோம்.
பாறையில் நம் பெயர்கள் இல்லை.
சோகத்துடன் கீழிறங்குகையில்
சமணர் படுக்கைகளில்
குத்திக் குதறப்பட்ட
சில காதலர்களின்
அழியாத பெயர்கள் இருந்தன.
என்ன செய்ய?
உண்மைக் காதலுக்கு
உருப்படியான சாட்சிகள் இருப்பதில்லை.
-ஞானசேகர்

1 comment:

ILA (a) இளா said...

ரசித்தவைகளில் நமக்குள் ஒரு ஒற்றுமை- தபூ சங்கர். நல்ல பதிவுகள், வாழ்த்துக்கள்