புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, October 14, 2005

கோவிந்தா! கோவிந்தா!

தெரிந்த பூமியைப் பார்க்க மறந்ததும்,
தெரியாத கடவுளைத் தேடி அலைந்ததும்தான்
தமிழன் செய்த தவறு!
-வைரமுத்து


"போனா போகட்டும்
கோழிக்குஞ்சுதானே?
'கருடா! கருடா!' என
துதிபாடிய வாயால்
ஏன் இவ்வளவு
கெட்ட வார்த்தைகள்?"

"பருவமழ பொய்ச்சாலும்
கறவமாடு ரெண்டையும் வித்து
கடனக்கொஞ்சம் வாங்கி
நாமுழுக்கக் கால்கடுக்க நின்னு
கண்ணு சிமுட்டுன நேரத்துல
பெருமாளப் பாத்த திருப்(ப)தியெல்லாம்
ஏழுமல தாண்டிப் போச்சுது
களவுபோன வீட்டப் பாத்தப்ப!"
-ஞானசேகர்