புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, October 16, 2005

காதலை ஏமாற்று

"போன வருஷம்
இதே திருவிழாவில்தான்
உன் வித்தியாசமான
முகபாவனைகளைப் பார்ப்பதற்காக
வேண்டுமென்றே காணாமல்போய்.....
என்னைத் தேடிய உன் விழிகளைக்
கூட்டத்தில் இருந்து ரசித்தேன்.
அதேபோல் இந்த வருஷமும்....."
என்று மனதில் பேசிக்கொண்டே
அருகில் பார்த்தேன்.
உன்னைக் காணவில்லை!

ஒருமணிநேரத் தேடுதலுக்குப்பின்
என் முதுகு பற்றிய நீ,
"இவ்வளவு நேரமாய்
எங்கே போனீங்க?...."
என்று ஏதோ சொல்ல
எத்தனித்தாய்.
உன்னை மார்பில் சாய்த்து
கண்ணீர் துடைத்தபோது
நடிக்கத் தெரியாத
உன் விழிகள் சொல்லின:
"இவளும்
உன்போலத்தான்
ஏமாற்றப் பார்க்கிறாள்!".

தோளில் கைபோட்டுக்கொண்டு
வீடு திரும்புகையில்
வாயில் சொல்லாமல்
மனதில் சொன்னேன்:
"அடுத்த வருஷம்
நாம் முந்திக்கொண்டு
முதலில் காணாமல் போகவேண்டும்!".
-ஞானசேகர்

1 comment:

premkalvettu said...

போகி என்னய்யா நீயுமா!!???