புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, October 21, 2005

காதல்

இவை இரு தலைப்புகளில் எழுதப்பட்ட ஒற்றைக் கவிதைகள். ஒரு தலைப்பு கவிதையின் மேலே, மற்றொன்று 'காதல்'.

சாமியார்
---------
கையில் விலங்குகள்
காலில் பக்தர்கள்!

கனடா (Canada)
------
இங்கு
ஒன்றுமில்லை!

சனிக்கிரகம்
-----------
அர்த்தமற்ற
மூன்று வளையங்கள்!

நகம்
-----
கடித்துத் துப்பினாலும்
சதைதான் வேண்டும்
என்கிற பிடிவாதம்!

ஆண்தேனீ
---------
பெண்ணை விட்டிருந்தேன்
கொட்டிப் பார்த்தது!
பெண்ணைப் பிடித்திருந்தேன்
சுற்றிச் சுற்றி வந்தது!

சுனாமி
------
உள்வாங்கி
வெளிகொடுத்து
உள்வாங்கிப் போனது!

அகராதி
-------
ஒரு வார்த்தைக்குப்
பல அர்த்தங்கள்.
பல வார்த்தைகளுக்கு
ஒரே அர்த்தம்.
உறுவார்த்தை வரும்வரை
உற்ற துணைவன்!

தமிழ்
-----
தனக்குமுன் மூத்த ஐவர் இருக்க
கல்லும் மண்ணும் இல்லாதபோதே
வாள் செய்துவிட்டு
மெல்ல செத்துக்கொண்டிருக்கும்
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"
என்ற திரைகடலோடும் திரவியம்!

பெண்
-----
வரலாறு பார்த்தும்
தானே பட்டும்
இன்னும் திருந்தாத
பலியும் பழியும்
செய்து வரும்
செம்மறி ஆடுகள்!

-ஞானசேகர்