புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Monday, October 24, 2005

பெண்பாவம்

Fathers want their sons to follow their footsteps. Mothers want their daughters to live the life what they missed.

பக்கத்தில் திரும்பிப் பார்க்க
பார்க்க மனமில்லாதவளாய்
ஒரு தாய் படுத்திருக்க
முதல் மூச்சுக்காற்றை
உள்ளிழுக்கக் கஷ்டப்பட்டு
பீறிட்டு அழுது போனாய்!

ஒரு வாரம் கழித்து
மீண்டும் பள்ளி செல்ல
"ஒக்காந்த நீ
எப்ப எந்திருச்ச?" என்று
பயல்கள் கிண்டல் செய்ய
கூனிக் குறுகிப் போனாய்!

மூவேழுக்குள் பெண்களெல்லாம்
பிள்ளைகள் பெற்றிருக்க
முதிர்கன்னி பயம் வந்துவிட
அவசர அவசரமாய்
அதிக விலை கொடுத்து
ஒரு மாப்பிள்ளை கட்டிப் போனாய்!

ஆபத்தான காலம் என்று
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்
பச்சை பிள்ளை போல
மண்டியிட்டு மன்றாடும்
கணவனின் காமத்தை
இயற்கை மீறி தணித்துப் போனாய்!

உயிர் கொடுத்த அப்பா
உயிர் பிரிந்து போய்விட
கஞ்சி ஊத்தா மகனெல்லாம்
சுடுகாடு கடைசிவரை போய்வர
அப்பாவுக்குச் செல்லப்பிள்ளை
முச்சந்தியில் திரும்பிப் போனாய்!

குடிகார புருஷன்
கிணற்றில் தவறி விழுந்து
மூச்சுத்திணறி செத்துப்போக
அமங்கலி பட்டத்துடன்
தம்பி கல்யாணத்துக்குப்
போகாமலே இருந்து போனாய்!

தன் பிள்ளைக்கு
முதல் ஆசிர்வாதம்
அக்கா கையால் என்று
தம்பி கேட்டுக் கொள்ள
வீட்டுக்குத் தூரம் என்று
ஆசிர்வாதம் மறுத்துப் போனாய்!

ஒதுக்கப்பட்டது நீதான்!
நகைக்கப்பட்டது நீதான்!
விற்கப்பட்டது நீதான்!
அடக்கப்பட்டது நீதான்!
மறுக்கப்பட்டது நீதான்!
நசுக்கப்பட்டது நீதான்!

உயிர் சுமக்கப் பெண்ணுக்கு
இயற்கை தரும் அங்கீகாரம்
உன் மகளுக்கும் திறக்கப்பட
ஊர் முழுக்கச் சொல்கிறாயே
நீ கூடவா உணரவில்லை
ஒரு பெண்ணின் சோகம்?
-ஞானசேகர்

4 comments:

Anonymous said...

the women u mention r less than 15%, in our generation middle and high class women mostly not suppressed,they know how to escape from men.but considering low class people u did a good job.

premkalvettu said...

நல்ல கவிதை..

"ஒக்காந்த நீ
எப்ப எந்திருச்ச?"


முதிர்கன்னி பயம் வந்துவிட
அவசர அவசரமாய்
அதிக விலை கொடுத்து
ஒரு மாப்பிள்ளை கட்டிப் போனாய்!


இந்த வரிகள் அழகாய் அமைந்துள்ளது..

இயற்கை நேசி|Oruni said...

உயிர் கொடுத்த அப்பா
உயிர் பிரிந்து போய்விட
கஞ்சி ஊத்தா மகனெல்லாம்
சுடுகாடு கடைசிவரை போய்வர
அப்பாவுக்குச் செல்லப்பிள்ளை
முச்சந்தியில் திரும்பிப் போனாய்!//

அட்டகாசமா இருக்கு, எப்பொழுதும் போலவே!


குழம்பிப் போய் விட வேண்டாம், நேசிதான் ... தெக்கிக்காட்டான் :-).

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையா எழுதி இருக்கீங்க..